வலைப்பதிவாளர்களுக்கான விருதுகள் அறிவிப்பு





கதையளப்பு 1




தமிழ்ச்சமூகத்தில் வாழ்வதே நெருக்கடியானதுதான். படிக்கும்போது என்ன படிக்கிறாய் என்று கேட்பார்கள். சொன்னால் 'ஏன் அந்த கோர்ஸ் கிடைக்கலையா' என்பார்கள். பிறகு என்ன வேலை பார்க்கிறாய் என்று கேட்பார்கள். வேலைபார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கல்யாணம் ஆகலையா என்பார்கள். அந்த எழவையும் பண்ணியபிறகு 'ஒரு வருஷமாச்சு இன்னும் குழந்தை பிறக்கலையா' என்பார்கள். கடைசியாக இன்னும் நீ சாகலையா என்பதைத் தவிர அடுத்தவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே கழிவதுதான் தமிழ் வாழ்க்கை.


இத்தகைய அவஸ்தைகளுக்கு மத்தியில் அரசும் தமிழ்ச்சினிமாக்காரர்களும் இலக்கியவாதிகளும்தான் ஏதாவது காமெடி பண்ணி நம்மை ரிலாக்ஸ் ஆக்குவார்கள். அந்தவகையில் அரசு வழங்கும் 'காமெடி டைம்' விருதுகள் திடீரென்று இந்த வருடத்திற்கான சிறந்த சினிமா என்று அருணாச்சலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். கனகாவுக்கு கலைமாமணி விருது கொடுப்பார்கள். வைரமுத்து, மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுப்பார்கள். அந்த வரிசையில் அடுத்த சாகித்ய அகாடமி விருது குத்திசைக்கவிஞர் பேரரசுக்குக் கொடுக்கப்படவிருக்கிறது என்று 'நம்பத்தகாத' வட்டரங்கள் தெரிவிக்கின்றன.


இதைவிடக் காமெடி, அருணாச்சலத்தைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கும்போது சினிமாக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் சாகித்திய அகாடமி விருதை வைரமுத்துவுக்குக் கொடுத்துவிட்டால் இலக்கிய வியாதிகளுக்கு வருமே கோபம்.
சுந்தரராமசாமி, சுந்தரராமசாமி என்று ஒருவர் இருந்தார். அவர் மூன்று நாவல்கள் எழுதினார், சில சிறுகதைகள் எழுதினார், பல கவிதைகள் எழுதினார், அப்புறம் எழுத்தாளர்களோடு சேர்ந்து தோசை சாப்பிட்டார், அவர்களுக்கு வீட்டிலேயே சாப்பாடு ஆக்கிப் போட்டார், சினிமா போஸ்டர்களை வெறித்து வெறித்துப் பார்த்தார், (இவையெல்லாம் நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. சு.ரா இறந்தபோது அவருக்கு எழுத்தாளர்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரைகளைப் படியுங்கள்), அவ்வப்போது சரக்கடித்தார், ஜவுளிக்கடை நடத்தினார், டைட்டானிக் ஹீரோ, ரஜினிகாந்த் ஆகியோரின் போஸ்களில் புதுவை இளவேனில் என்னும் தலித்தை வைத்து போட்டோ எடுத்து கண்காட்ச்சியும் நடத்தினார், காலச்சுவடு என்னும் இலக்கியக் கம்பெனியை ஆரம்பித்து அதை இந்து வாரிசுரிமை அடிப்படையில் தன் மகனை மேனேஜராக நியமித்தார், கடைசியில் செத்தும் போனார். இத்தகைய சாதனைகளுக்கு நியாயமாக அவருக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்திருக்க வேண்டும்.


ஆனால் வருடாவருடம் அவருக்கு அந்த விருது கிடைக்காது. உடனே தேர்வுக்கமிட்டியில் அரசியல், அரசாங்கத்திற்கு அறிவு கிடையாதுது என்கிற ரீதியில் கண்டனங்கள் எழும். அவருடைய இலக்கியக் கம்பெனியான காலச்சுவடுவில் எழுத்தாளர்கள் கட்டுரை எழுதுவார்கள். சாகித்திய அகாடமி விருதுக்குத் தகுதியானவர்கள் யார் என்று அவர்கள் எழுதும் பட்டியலில் வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு எல்லோருடைய பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் பெயர் 'சுந்தரராமசாமி'. ஆனால் கடைசிவரை அவருக்கு இந்தக்கொடுப்பினை கிடைக்கவில்லை. இந்தவருடம் புலம்ப அவருமில்லை. பெரியார் நெஞ்சில் முள்ளோடு செத்துப்போனதைப்போல சு.ராவின் நெஞ்சில் தைத்த முள் 'சாகித்திய அகாடமி விருது'.


சரி, அதுபோகட்டும். நம்முடைய வலைப்பதிவாளர்கள் சு.ராவை விட நன்றாக எழுதுகிறார்கள். (என்ன பின்னூட்டம் பாலா மட்டும் சு.ரா மாதிரி கேணத்தனமாக எழுதுவார்). இவர்களுக்கு விருதுகள் கொடுக்கப்படவேண்டியதுதானே ஞாயம்? ஆனால் எனக்கு இந்த ஸ்டார் குத்துவது போன்ற குத்துவேலைகள் எல்லாம் தெரியாது. போனமுறை சந்தித்தபோது ஒரு நண்பர் புலம்பினார். 'போனமுறை சிறந்த வலைப்பதிவாளரைத் தேர்ந்த்கெடுக்கும் குழுவின் ஜூரி பத்ரி. அவர் முகமூடியைத் தேர்ந்தெடுத்தார். இந்த வருடம் முகமூடி ஜூரி, அவர் பத்ரியைத் தேர்ந்தெடுக்கிறார்' என்று.ஆகமொத்தம் இன்னும் ஒரு இருபதாண்டுகளுக்கு பத்ரியும் முகமூடியும் மட்டுமே விருது பெறும் அதிர்ஷ்டசாலிகள் என்பதால் நாமே இந்த விருதுகளைக் கொடுத்தால் என்ன தோன்றியது. இந்த விருதுகள் தனித்துவமிக்க பட்டங்களாகவும் இருக்கும். சிலவிருதுகள் தமிழ்ச்சமூகத்திற்குச் சேவைசெய்தவர்களின் பெயர்களைத் தாங்கியதாகவுமிருக்கும். இனி விருதுகள்....


செந்தில் - கண்ணதாசன் விருது( கவிதைகளுக்கு அல்ல, குடிப்பதற்கு மட்டும்)

யெஸ்.பாலபாரதி - மொக்கைவேந்தன்

லக்கிலுக் - அனானிச்செம்மல்

நாமக்கல் சிபி - மிஸ்டர் ஒயிட்
(பல சமயங்களில் 'வித்தியாசமான' பதிவுகள் என்ற பெயரில் ஒண்ணுமேயில்லாத பதிவைப் போடுவதால்)

தூயா - மசால்மாமணி

தமிழ்நதி - கண்ணீர்க்காவியக் கலைஞி
(கனடாவில் இவர் இருந்தபோது மக்களுக்குச் சிறந்த தொண்டாற்றியதற்காக கனடிய அரசே இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவர் செய்த தொண்டு - சிலகாலம் கவிதைகள் எழுதாமல் இருந்தது)

பொன்ஸ் - குழந்தை எழுத்தாளர்

விடாதுகருப்பு - வசைஞானி

உணர்வுகள் - வெள்ளாளவேங்கை

ராம.கி - தனித்தமிழ்ச்சித்தப்பா
(ஏற்கனவே மறைமலையடிகள் தனித்தமிழ்தந்தையாக இருப்பதால்)

பெயரிலி - இடாலோகந்தசாமி

பொட்டிக்கடை சத்யா - டாக்டர் ராஜசேகர் விருது
( எவனா இருந்தா எனக்கென்ன, எங்கடா உங்க எம்.எல்.ஏ, இதுதாண்டா போலிஸ், நாந்தாண்டா பேமானி போன்ற 'மரியாதையான' படங்களை எடுத்தவர்)

செந்தழல் ரவி - இயக்குனர் கர்ணன் விருது
(பல 'ஏ' படங்களை வெளியிடுவதால்)

குழலி - சமூகநீதி ஸ்பெசலிஸ்ட்


ஓகை - 'பார்' பாரி

சின்னக்குட்டி - வலையுலகப் பயாஸ்கோப்

கொசுபிடுங்கி - துப்பறியும் சாம்பு

கதையளப்பு 2 : இன்னும் ஞாபகத்திற்கு வரும் பெயர்களைத் தொடர்ந்து எழுதுகிறேன். டோண்டுராகவன் அவர்களை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொளவில்லை. இலவசமாகக் கிடைக்கிறார் என்பதற்காக எவ்வளவுதூரம்தான் அடிப்பது?


கதையளப்பு 3 : நான் எது எழுதினாலும் இதுதான் பின்நவீனத்துவமா, பின்ப்நவீனத்துவக் கவிதையா, ஒன்னுமே புரியலை என்றெல்லாம் எழுதி சமயத்தில் நாம் எழுதுவதுதான் பின்நவீனத்துவமா என்று எனக்கே கன்ப்யூஸ் ஆகும் அளவிற்குப் பின்னூட்டமிட்டு அனானிகள், சுனாமிகள், பாலாகக்ள், போலிபாலாக்கள், போலி பாலாவுக்குப் போலி பாலாக்கள் பீதியைக்கிளப்புவதால் இந்த ஜாலியான பதிவு. இதை யாராவது பின்நவீனப்பதிவா என்று கேட்டால்....அழுதுடுவேன். நீங்களும் எனக்கு விருதுகள் வழங்கி வஞ்சம்தீர்த்துக்கொள்ளலாம்.

26 உரையாட வந்தவர்கள்:

  1. வரவனையான் said...

    ஹாஹஹஹா


    அப்படியே தொடருங்க சுகுணா இன்னும் நிறைய பேரு இருக்காங்க

  2. Pot"tea" kadai said...

    இடாலோ கால்வினோ தெரியும், அவருடைய இன்விசிபுள் சிட்டீஸ் வாசித்திருக்கிறேன். அது யாருப்பா இடாலோ கந்தசாமி?

    -அப்பாவி டீக்கடையான்

  3. தமிழ்நதி said...

    நான் விருது வழங்குவதாக இருந்தால் உங்களுக்கு ஒன்றல்ல மூன்று விருதுகள் தருவேன். கருணையினால் அல்ல கடுப்பினால்.

    சொதப்பும் வெளி
    பாலாவின் காதலர்
    பின்நவீனத்துவப் பேய்க்குசும்பன்

    எசமாடன் சொல்றான்...:
    இன்னாய்யா உதார் காட்ற..மவ்னே!மாட்ன..எலும்ப எண்ணித் தெருநாய்க்குப் போட்ருவேன்.ஆம்மா..சொல்லிப்புட்டேன்

  4. மாசிலா said...

    சர்தான் போய்யா!
    ஹூம்!
    :-)

  5. Anonymous said...

    யோவ் வரவனை என்ன சிரிப்பு..எனக்கு என்ன பட்டம் குடுத்திருக்காங்க?? புரியலை..முதல்ல அதை சொல்லுங்க..அப்புற சிரிங்க

  6. சபாபதி சரவணன் said...

    மிக லேசான பதிவு.

    Template மாற்றமுடியுமா என்று பாருங்களேன். உங்கள் பதிவிற்கு வந்து போனால் தலைவலி நிச்சயம் வருகிறது. (Template மட்டுமே காரணம்) :)

  7. சின்னக்குட்டி said...

    //சின்னக்குட்டி - வலையுலகப் பயாஸ்கோப்//

    நமக்கு உது குலதொழில் இல்லைங்க....

    குடிமக்கள் வைச்சிருக்கிறவங்கள் சேத்திட போறாங்க:-)

  8. Anonymous said...

    Ithu Sun TV rating mathiri irrukku.

  9. லக்கிலுக் said...

    வெளியே மிதக்கும் அய்யா,

    உங்கள் நண்பர் பாலாவுக்கு "பின்னூட்ட சூறாவளி" பட்டம் வழங்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

    லக்கிலுக்

  10. bala said...

    //பொன்ஸ் - குழந்தை எழுத்தாளர்//

    வெளியே மிதக்கும் அய்யா,

    நியாயமாப் பாத்தா இந்த பட்டம் லக்கிக்கு கிடைக்கணும்.பட்டத்தை மாத்தி கொடுங்கய்யா.

    பாலா

  11. மிதக்கும்வெளி said...

    /இடாலோ கால்வினோ தெரியும், அவருடைய இன்விசிபுள் சிட்டீஸ் வாசித்திருக்கிறேன். அது யாருப்பா இடாலோ கந்தசாமி?
    /

    இவர் நம்மூரு இடாலோகால்வினா

  12. மிதக்கும்வெளி said...

    /சொதப்பும் வெளி/

    இது நல்லாயிருக்கு

  13. மிதக்கும்வெளி said...

    /சர்தான் போய்யா!
    ஹூம்!/


    உங்கள் பெருமூச்சின் காரணம் என்னவோ?

  14. மிதக்கும்வெளி said...

    தூயா

    எங்கடை ஊரில் கலைமாமணி விருது எண்டு ஒண்ணு கொடுப்பாங்க. அதுக்கும் கொம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பதவிக்கும் ஒரே ஒரு வித்தியாசம். கொம்யூனிஸ்ட் தலைவர் பதவி சாவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்படுவது. கலைமாமணி விருது மண்டையப் போடுவதற்கு அஞ்சாண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்படுவது. அந்தக் கலைமாமணி விருது போல நீங்கள் ஆற்றிய புரியாணிச்சேவைக்காக மகிழ்ந்து கொடுக்கப்பட்டது.

  15. மிதக்கும்வெளி said...

    / உங்கள் பதிவிற்கு வந்து போனால் தலைவலி நிச்சயம் வருகிறது. (Template மட்டுமே காரணம்) :) /

    அதுமட்டும்தான் காரணமா?

  16. யாழினி அத்தன் said...

    லிஸ்டில் உங்களை நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்.

    ரொம்ப தன்னடக்கமோ?

  17. சோமி said...

    வரவனையான் சொன்னது போல இனும் நிறையப் பேர் இருகிறார்கள்.
    விருதுகளுக்காக காத்துக் கொண்டு!

    அம்மா ஆட்சியின் இறுதியில் கலைமாமணி விருதுகொடுத்தவர் பட்டியலைப் பருங்கண்ணா....

    சு.ரா வுக்கு கனடாவில கிடைத்த இயல் விருது போல ஏதாவது முயல் விருது கொடுத்து உங்கள் சேவையை பாராட்டலாமெண்டு நினைக்கிறன்.( நீங்கள் யிலும் எனக்கு சைட் டிஸ்களை தெளிவாய் எடுத்துகொடுது அளவாக பெக் ஊத்தி கொடுத்ததால்தான் இந்த விருதை நான் கொடுகிறன் எண்டு யாரவது தவறாக நினைத்துவிடக்கூடது)

  18. சோமி said...

    சு.ரா வுக்கு கனடாவில கிடைத்த இயல் விருது போல ஏதாவது முயல் விருது கொடுத்து உங்கள் சேவையை பாராட்டலாமெண்டு நினைக்கிறன்.( நீங்கள் யிலும் எனக்கு சைட் டிஸ்களை தெளிவாய் எடுத்துகொடுது அளவாக பெக் ஊத்தி கொடுத்ததால்தான் இந்த விருதை நான் கொடுகிறன் எண்டு யாரவது தவறாக நினைத்துவிடக்கூடது)

  19. Anonymous said...

    இட்லிகந்தசாமி என்பதை முன்னிடுகிறேன்

  20. PRINCENRSAMA said...

    ஹா!ஹா!ஹா!

    //டோண்டுராகவன் அவர்களை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொளவில்லை. இலவசமாகக் கிடைக்கிறார் என்பதற்காக எவ்வளவுதூரம்தான் அடிப்பது?//

    நான் ரொம்ப ரசிச்சது இதைத்தான்..

    வருகிறேன். அடுத்த வருட விருதுகளில் நம் பெயரும் இடம்பெறவேண்டாமா?

  21. மிதக்கும்வெளி said...

    This comment has been removed by the author.

  22. Anonymous said...

    இதெல்லாம் ஓவர்

  23. Anonymous said...

    oh very nice

  24. Anonymous said...

    ///அடுத்தவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே கழிவதுதான் தமிழ் வாழ்க்கை.///

    இதெல்லாம் உங்களுக்கே அதிகமா தெரியல?

    நன்றி
    உங்கள் பாலா.

  25. Anonymous said...

    அருமை !!! இப்படிக்கூட எழுதலாமோ !!! :))

    தழல்

  26. Anonymous said...

    dondu!! Chella?? Doondu $$