வலைப்பதிவாளர்களுக்கான விருதுகள் அறிவிப்பு





கதையளப்பு 1




தமிழ்ச்சமூகத்தில் வாழ்வதே நெருக்கடியானதுதான். படிக்கும்போது என்ன படிக்கிறாய் என்று கேட்பார்கள். சொன்னால் 'ஏன் அந்த கோர்ஸ் கிடைக்கலையா' என்பார்கள். பிறகு என்ன வேலை பார்க்கிறாய் என்று கேட்பார்கள். வேலைபார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கல்யாணம் ஆகலையா என்பார்கள். அந்த எழவையும் பண்ணியபிறகு 'ஒரு வருஷமாச்சு இன்னும் குழந்தை பிறக்கலையா' என்பார்கள். கடைசியாக இன்னும் நீ சாகலையா என்பதைத் தவிர அடுத்தவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே கழிவதுதான் தமிழ் வாழ்க்கை.


இத்தகைய அவஸ்தைகளுக்கு மத்தியில் அரசும் தமிழ்ச்சினிமாக்காரர்களும் இலக்கியவாதிகளும்தான் ஏதாவது காமெடி பண்ணி நம்மை ரிலாக்ஸ் ஆக்குவார்கள். அந்தவகையில் அரசு வழங்கும் 'காமெடி டைம்' விருதுகள் திடீரென்று இந்த வருடத்திற்கான சிறந்த சினிமா என்று அருணாச்சலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். கனகாவுக்கு கலைமாமணி விருது கொடுப்பார்கள். வைரமுத்து, மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுப்பார்கள். அந்த வரிசையில் அடுத்த சாகித்ய அகாடமி விருது குத்திசைக்கவிஞர் பேரரசுக்குக் கொடுக்கப்படவிருக்கிறது என்று 'நம்பத்தகாத' வட்டரங்கள் தெரிவிக்கின்றன.


இதைவிடக் காமெடி, அருணாச்சலத்தைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கும்போது சினிமாக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் சாகித்திய அகாடமி விருதை வைரமுத்துவுக்குக் கொடுத்துவிட்டால் இலக்கிய வியாதிகளுக்கு வருமே கோபம்.
சுந்தரராமசாமி, சுந்தரராமசாமி என்று ஒருவர் இருந்தார். அவர் மூன்று நாவல்கள் எழுதினார், சில சிறுகதைகள் எழுதினார், பல கவிதைகள் எழுதினார், அப்புறம் எழுத்தாளர்களோடு சேர்ந்து தோசை சாப்பிட்டார், அவர்களுக்கு வீட்டிலேயே சாப்பாடு ஆக்கிப் போட்டார், சினிமா போஸ்டர்களை வெறித்து வெறித்துப் பார்த்தார், (இவையெல்லாம் நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. சு.ரா இறந்தபோது அவருக்கு எழுத்தாளர்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரைகளைப் படியுங்கள்), அவ்வப்போது சரக்கடித்தார், ஜவுளிக்கடை நடத்தினார், டைட்டானிக் ஹீரோ, ரஜினிகாந்த் ஆகியோரின் போஸ்களில் புதுவை இளவேனில் என்னும் தலித்தை வைத்து போட்டோ எடுத்து கண்காட்ச்சியும் நடத்தினார், காலச்சுவடு என்னும் இலக்கியக் கம்பெனியை ஆரம்பித்து அதை இந்து வாரிசுரிமை அடிப்படையில் தன் மகனை மேனேஜராக நியமித்தார், கடைசியில் செத்தும் போனார். இத்தகைய சாதனைகளுக்கு நியாயமாக அவருக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்திருக்க வேண்டும்.


ஆனால் வருடாவருடம் அவருக்கு அந்த விருது கிடைக்காது. உடனே தேர்வுக்கமிட்டியில் அரசியல், அரசாங்கத்திற்கு அறிவு கிடையாதுது என்கிற ரீதியில் கண்டனங்கள் எழும். அவருடைய இலக்கியக் கம்பெனியான காலச்சுவடுவில் எழுத்தாளர்கள் கட்டுரை எழுதுவார்கள். சாகித்திய அகாடமி விருதுக்குத் தகுதியானவர்கள் யார் என்று அவர்கள் எழுதும் பட்டியலில் வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு எல்லோருடைய பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் பெயர் 'சுந்தரராமசாமி'. ஆனால் கடைசிவரை அவருக்கு இந்தக்கொடுப்பினை கிடைக்கவில்லை. இந்தவருடம் புலம்ப அவருமில்லை. பெரியார் நெஞ்சில் முள்ளோடு செத்துப்போனதைப்போல சு.ராவின் நெஞ்சில் தைத்த முள் 'சாகித்திய அகாடமி விருது'.


சரி, அதுபோகட்டும். நம்முடைய வலைப்பதிவாளர்கள் சு.ராவை விட நன்றாக எழுதுகிறார்கள். (என்ன பின்னூட்டம் பாலா மட்டும் சு.ரா மாதிரி கேணத்தனமாக எழுதுவார்). இவர்களுக்கு விருதுகள் கொடுக்கப்படவேண்டியதுதானே ஞாயம்? ஆனால் எனக்கு இந்த ஸ்டார் குத்துவது போன்ற குத்துவேலைகள் எல்லாம் தெரியாது. போனமுறை சந்தித்தபோது ஒரு நண்பர் புலம்பினார். 'போனமுறை சிறந்த வலைப்பதிவாளரைத் தேர்ந்த்கெடுக்கும் குழுவின் ஜூரி பத்ரி. அவர் முகமூடியைத் தேர்ந்தெடுத்தார். இந்த வருடம் முகமூடி ஜூரி, அவர் பத்ரியைத் தேர்ந்தெடுக்கிறார்' என்று.ஆகமொத்தம் இன்னும் ஒரு இருபதாண்டுகளுக்கு பத்ரியும் முகமூடியும் மட்டுமே விருது பெறும் அதிர்ஷ்டசாலிகள் என்பதால் நாமே இந்த விருதுகளைக் கொடுத்தால் என்ன தோன்றியது. இந்த விருதுகள் தனித்துவமிக்க பட்டங்களாகவும் இருக்கும். சிலவிருதுகள் தமிழ்ச்சமூகத்திற்குச் சேவைசெய்தவர்களின் பெயர்களைத் தாங்கியதாகவுமிருக்கும். இனி விருதுகள்....


செந்தில் - கண்ணதாசன் விருது( கவிதைகளுக்கு அல்ல, குடிப்பதற்கு மட்டும்)

யெஸ்.பாலபாரதி - மொக்கைவேந்தன்

லக்கிலுக் - அனானிச்செம்மல்

நாமக்கல் சிபி - மிஸ்டர் ஒயிட்
(பல சமயங்களில் 'வித்தியாசமான' பதிவுகள் என்ற பெயரில் ஒண்ணுமேயில்லாத பதிவைப் போடுவதால்)

தூயா - மசால்மாமணி

தமிழ்நதி - கண்ணீர்க்காவியக் கலைஞி
(கனடாவில் இவர் இருந்தபோது மக்களுக்குச் சிறந்த தொண்டாற்றியதற்காக கனடிய அரசே இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவர் செய்த தொண்டு - சிலகாலம் கவிதைகள் எழுதாமல் இருந்தது)

பொன்ஸ் - குழந்தை எழுத்தாளர்

விடாதுகருப்பு - வசைஞானி

உணர்வுகள் - வெள்ளாளவேங்கை

ராம.கி - தனித்தமிழ்ச்சித்தப்பா
(ஏற்கனவே மறைமலையடிகள் தனித்தமிழ்தந்தையாக இருப்பதால்)

பெயரிலி - இடாலோகந்தசாமி

பொட்டிக்கடை சத்யா - டாக்டர் ராஜசேகர் விருது
( எவனா இருந்தா எனக்கென்ன, எங்கடா உங்க எம்.எல்.ஏ, இதுதாண்டா போலிஸ், நாந்தாண்டா பேமானி போன்ற 'மரியாதையான' படங்களை எடுத்தவர்)

செந்தழல் ரவி - இயக்குனர் கர்ணன் விருது
(பல 'ஏ' படங்களை வெளியிடுவதால்)

குழலி - சமூகநீதி ஸ்பெசலிஸ்ட்


ஓகை - 'பார்' பாரி

சின்னக்குட்டி - வலையுலகப் பயாஸ்கோப்

கொசுபிடுங்கி - துப்பறியும் சாம்பு

கதையளப்பு 2 : இன்னும் ஞாபகத்திற்கு வரும் பெயர்களைத் தொடர்ந்து எழுதுகிறேன். டோண்டுராகவன் அவர்களை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொளவில்லை. இலவசமாகக் கிடைக்கிறார் என்பதற்காக எவ்வளவுதூரம்தான் அடிப்பது?


கதையளப்பு 3 : நான் எது எழுதினாலும் இதுதான் பின்நவீனத்துவமா, பின்ப்நவீனத்துவக் கவிதையா, ஒன்னுமே புரியலை என்றெல்லாம் எழுதி சமயத்தில் நாம் எழுதுவதுதான் பின்நவீனத்துவமா என்று எனக்கே கன்ப்யூஸ் ஆகும் அளவிற்குப் பின்னூட்டமிட்டு அனானிகள், சுனாமிகள், பாலாகக்ள், போலிபாலாக்கள், போலி பாலாவுக்குப் போலி பாலாக்கள் பீதியைக்கிளப்புவதால் இந்த ஜாலியான பதிவு. இதை யாராவது பின்நவீனப்பதிவா என்று கேட்டால்....அழுதுடுவேன். நீங்களும் எனக்கு விருதுகள் வழங்கி வஞ்சம்தீர்த்துக்கொள்ளலாம்.

'புனித'க்குடும்பத்தின்பின்னுள்ள வன்முறை - மார்க்சிய அம்பேத்கரியப் பெரியாரியப் புரிதல்கள்














பெற்றோர் பராமரிப்புச்சட்டத்தை விமர்சிக்கத் தொடங்கும்போதே கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன. அன்பும் பாசமுமற்ற கல்நெஞ்சர்களாய் சித்தரிக்கும் மனோபாவம் ஒருபுறமென்றால் இன்னொருபுறம் 'மாதா பிதா தெய்வம்' போன்ற பெருங்கதையாடல்களுக்குப் பழக்கப்பட்டிருக்கும் அடிமைத்தன்னிலை புறச்சூழலிலிருந்து எழும் கேள்வியின் வெப்பத்தைத் தாங்கவியலாது நடுங்குகிறது.

குடும்பம் என்னும் அமைப்பின் தோற்றம், நியாயப்பாடு, அவை நிலைபெறுவதற்கான காரணங்கள் ஆகியவற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் மார்க்சிய மூலவர்களில் ஒருவராகிய ஏங்கெல்ஸ் நுட்மாக விபரித்திருப்பார். பொதுவாகச் சமூக உறவு என்பதே உற்பத்தி உறவுகளின் அடிப்படையிலானது. புற எதார்த்தத்தில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் குடும்ப உறவுகளில் இது மறைமுகமாய்த் தொழிற்படுவதால் இந்த இயங்கியல் அறியப்படாமற்போகிறது.

வேட்டைக்காலத்தினின்று மனித சமூகம் அடுத்து நுழையும் உற்பத்தியில் ஈடுபடும் காலகட்டத்தின்போது ஏற்படும் உபரியே மூலதனமாகவும் அதன் விளைவாகவே வர்க்கங்களும் தோன்றுகின்றன என்பது மார்க்சியத்தின் அடிப்படை. தாய்வழிச் சமூகத்தினின்று இந்தகாலகட்டத்தில்தான் ஆண்தலைமையிலான குடும்பம் என்னும் அமைப்பு உருவாகிறது என்கிறது வரலாற்றுப்பொருள்முதல்வாதத்திலான பார்வை.

சமூகத்தின் உழைப்புப் பண்டமாக மாற்றப்பட்டு அதன்விளைவாய் உருவாகும் உபரியே மூலதனமாய் மாறுவதைப்போலவே குடும்பத்தின் கூட்டு உழைப்பால் ஏற்படும் நுகர்வு கழித்த உபரி என்பது சொத்தாய் மாறுகிறது. சமூகத்தில் மூலதனத்தின் அடிப்படையில் உற்பத்தி உறவுகள் அமையும்போது குடும்பத்தில் சொத்தின் அடிப்படையில் உற்பத்தி உறவுகள் அமைகின்றன. வர்க்கச்சுரண்டலுக்கு அடிப்படையான தனிச்சொத்தைப் பாதுகாக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் குடும்பத்தின் சொத்தைப் பாதுகாக்கும் ஆவலிலிருந்தே தொடங்குகிறது.

இந்தியச்சமூகத்தில் குடும்பத்தின் இன்னொரு அடிப்படையாய் விளங்குவது சாதி. அகமணமுறை சாதியைப் பாதுகாப்பதை பாபாசாகேப் அம்பேத்கர் நுட்மாய் விபரிக்கின்றார். அது ரத்தக்கலப்பை மறுத்து சாதியத்தூய்மையை வலியுறுத்துகிறது. இந்தியக்குடும்பங்கள் இருவகையான உற்பத்திமுறைகளில் கவனம் செலுத்துகின்றன. முதலாவது பொருள் உற்பத்தி. இது தனிச்சொத்தைப் பாதுகாக்கிறது. இரண்டாவது இன உற்பத்தி. இது சாதியைக் காப்பாற்றுகிறது. கலப்பைத் தடுத்து தன் சாதியைக் காப்பாற்றும் நுண்களனாகவே குடும்பம் என்னும் அமைப்பும் திருமணம் என்னும் ஏற்பாடும் இன உற்பத்திமுறையும் இங்கு இருக்கிறது.

.
எனவே இந்தியச்சூழலில் குடும்பம் என்பது பொருளியல் அடிப்படைகளோடு கலாச்சார அடிப்படைகளோடும் சேர்ந்து விவாதிக்க வேண்டிய பொருளாகிறது. ஆனால் மார்க்சியப் பேராசானகளுக்குப்பிறகு குடும்பம் குறித்த நுண்கேள்விகளும் விசாரணைகளும் அதற்குப்பின் வந்த மார்க்சிய நடைமுறையாளர்களால் எழுப்பப்படவில்லை. இன்னொருவகையில் குடும்பம் என்பது பெண்களின் மீது வன்முறையையும் அதிகாரத்தையும் செலுத்தும் ஒடுக்குமுறைக்கருவியாகவும் இயங்குகிறது. ஏனெனில் ஏங்கெல்ஸ் சொல்வதைப் போல 'குடும்பம் என்பதே அரசின் நுண்வடிவம்தான்'.

குடும்பம் என்பது தந்தை வழி ஆணாதிக்கச்சமூக மதிப்பீட்டின் விளைபொருள் என்பதால் அது ஆண்தலைமையைக் கோரும், பெண்தன்னிலைகளையொழிக்கும் வன்முறை அமைப்பாகவே தோற்றம் கொள்கிறது. எனவே வன்முறை என்பது அரசின் நிழலுருதோற்றமாகவும் அதிகார உற்பத்திக் களனாகவும் திகழ்வதைப் பிற்காலத்தில் தோன்றிய பெண்ணியலாளர்கள் தெளிவாக உணரத்தலைப்பட்டனர்.

அவர்கள் மார்க்சியத் தொடர்ச்சியில் அறுபட்ட குடும்பம் குறித்த உரையாடல்களைத் தேடத்தலைப்பட்டனர். அதோடு பொருளாதார அடிப்படையோடு கலாச்சார, பால்சார்ந்த அடையாளங்களோடு குடும்பம் என்னும் நிறுவனத்தின் அடிப்படை இருப்பை அணுகினர். குடும்பம் என்னும் நிறுவனத்தின் இருப்பு வன்முறையில் தங்கியிருப்பதை அடையாளம் கண்டனர்.

சமூகத்தின் இன உற்பத்திக்கு பெண்ணின் இருப்பு அடிப்படையாக அமைந்தது. பொருளுற்பத்தி என்பது ஆணைச்சார்ந்ததாக புராதனப்பொதுமைச்சமூகத்தின் பின்னான சமூக இருப்பு அமைந்தது. உற்பத்தி உறவுகள் வர்க்கங்களை உருவாக்கியதைப் போலவே இன உற்பத்தி தந்தைவழி ஆணாதிக்கச் சமூகத்தை உற்பத்தி செய்தது. உற்பத்திக்குக் காரணமான உழைக்கும் பாட்டாளிகள் அடிமையாய் இருப்பதைப்போலவே இன உற்பத்தியின் மூலகமான பெண்னும் அடிமையாய்த் தேங்கிப்போனாள்.

இத்தகைய புரிதல்களின் தொடர்ச்சியை நாம் பெரியாரிடம் கண்டுகொள்ளலாம். அவர் திருமணம் என்பது கிரிமினல் குற்றம் என்றும் சட்டபூர்வமான விபச்சாரம் என்றும் கதையாடினார். இன உற்பத்தியின் அடியாழத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். பெண்களைக் கருப்பையை அகற்றும்படி பரிந்துரைத்தார். மார்க்சிய மூலவர்களுக்குப் பின் தேங்கிப்போன குடும்பம் குறித்த உரையாடல்களை தமிழ்ச்சூழலில் முன்னெடுத்தவர் என்று பெரியாரைச் சொல்லலாம். மேலும் பெண் கல்வி, சொத்துரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போன்ற மேலோட்டமான சீர்திருத்தங்களைத் தாண்டி பெண்மீதான ஒடுக்குமுறையின் மூலகமாய் விளங்கும் குடும்பம், திருமணம் ஆகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பியவரும் அவரே.

அதோடு நில்லாது ஊழல், ஒழுக்கக்கேடு, அதிகாரச்சீரழிவு, பேராசை ஆகியவற்றின் இருப்பும் குடும்பத்தின் மீதான பற்றுறுதியிலேயே தங்கிருப்பதை அவர் சரியாக அடையாளம் கண்டார். 'ஒருவன் யோக்கியனாக இருக்க முடியாததற்குக் காரணம் குடும்பமே' என்றார். மேலும் மனிதன் என்பவன் சமூகப்பிராணி. ஆனால் அவனது செயல்பாடும் கவனமும் உழைப்பும் குடும்பவெளிகளுக்குள்ளேயே முடக்கப்படும் அவலத்தை ஒழுங்கவிழ்த்தார். பொதுவெளியில் செயற்படும் அனைவரையுமே குடும்பம் என்னும் மாயப்பிசாசு கண்ணுக்குத் தெரியாத தன் நுண்ணியக்கண்ணிகளின் வழியே கட்டிப்போடுகிறது.

90களில் இத்தகைய விவாதங்களை நிறப்பிரிகை இதழ் முன்னெடுத்தது. தீவிரப்பெண்னியத்தின் தொடர்ச்சியாய் 'குடும்ப உடைப்பு' என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்து உரையாடலை விரித்தது. ஆனால் சனாதனக்கருத்தியலாளர்கள் இந்தக் கருத்தாக்கத்தை பதட்டத்துடனும் வன்முறையுடனுமே எதிர்கொண்டனர். இந்தியக்கலாச்சரமனத்தின் அதிகாரவிருப்பும் அடிமைமனோபாவமும் அனைத்து இந்தியச்சமூக உயிரியின் அடிமனத்தில் தங்கித்தான் போயிருக்கிறது. ஆனால் அதன் மறுவிளைவாய் குறைந்தபட்சம் குடும்ப ஜனநாயகம் என்னும் கருத்தாக்கம் மேலெழுந்து அதுகுறித்து விவாதிக்கத் தலைப்பட்டனர். ஆனால் கடந்த ஆறேழு ஆண்டுகளில் அத்தகைய உரையாடல்கள் ஏதும் நிகழாமல் தமிழ் அறிவுவெளியும் அரசியற் பரப்பும் தேங்கிப்போயுள்ளது.

இது உலகமயத்தின் காலம். ஆனால் பேராசான் காரல்மார்க்ஸ் சரியாகச்சொன்னதைப்போலவே 'முதலாளித்துவம் தோன்றும்போதே உலகமயமாகத்தான் தோன்றியது'. பொருளாதாரவெளிகளில் அன்னியமுதலீட்டை ஆதரிக்கும், வரவேற்கும் அரசும் ஆளும்வர்க்கமும் தனது அடிப்படைச் சமூக அமைப்பு சிதைபடாமல் காத்துத் தக்கவைத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறது. ஏனெனில் அதன் இருப்பே அதில்தான் தங்கியுள்ளது. வெளியில் நிலவும் எல்லாச் சமூக வன்முறைகளும் குடும்பத்தைப் பாதிக்கவும் பிரதிபலிக்கவும் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் சாதிய, முதலாளித்துவ, ஆணாதிக்க வன்முறை குடும்பத்திலேயே பயிற்றுக்கவும் பழக்கப்படுத்தப்படவும் படுகின்றன. மாற்றத்தை எதிர்நோக்கிப் போராடும் யாரும் குடும்ப அமைப்பை விசாரணைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும். ஏனெனில் குடும்பம் பாதுகாப்பைத் தருவதுபோன்ற மாயையில் சமரசத்தையும் அடிபணிதலையுமே ஈன்றளிக்கிறது. அதுவும் நெகிழ்வற்ற மூடுண்ட இந்தியக்குடும்ப அமைப்பைக் கேள்வி கேட்காமல் பார்ப்பனீய முதலாளித்துவ ஆணாதிக்கக் கருத்தியல்களை எதிர்கொள்ளவியலாது.

தாதாசினிமா vS போலிஸ் சினிமா - அதிகாரத்தை விசாரணை செய்தல்



2006 தீபாவளியையொட்டித் தமிழகத்தில் அதிகமான தாதாப் படங்கள் வெளிவந்தன. இவை பெரும்பாலும் 'சிட்டி ஆப் த காட்' என்கிற மேற்கத்தியப் படத்தின் தழுவல் என்று பரவலாக பேசப்பட்டது.

தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவரும் 'கோகுலம் கதிர்' என்கிற மாத இதழ் 'தாதாக்களின் பிடியில் தமிழ்ச்சினிமா' என்று தலைபபிட்டு இந்த தாதாப் படங்களை விமர்சித்திருந்தது. 'புதிய பார்வை' என்னும் நடுவாந்திர இலக்கியப்பத்திரிகையும் 'தமிழ்ச்சினிமாக்களில் தாதாக்கள்' என்ற தலைப்பில் இதையொட்டிய விமர்சனங்களை முன்வைத்தது. என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் போலீஸ்சினிமாக்கள் குறித்து இத்தகைய கடுமையான விமர்சனங்கள் வருவதில்லை என்பதை நாம் அவதானிக்கலாம்.

அறிவுஜீவிகள் என்று சொல்லப்படுபவர்களிலிருந்து பொதுப்புத்தியால் நிறைக்கப்பட்ட பொதுமனம் வரை திரைவன்முறை குறித்து அலறும் இந்த மனோபாவத்திற்கு அடிப்படையாக நான் கருதுவது
1. போலீஸ்காரர்களிடம் அடிவாங்காத, சாதி/மத/ இனக்கலவரங்களால் பாதிக்கப்படாத அல்லது குறைந்தபட்சம் அதைப் பார்த்தேயிராத நடுத்தர வர்க்கமனம் மட்டுமே இந்த திரை வன்முறையைக் கண்டு அலறுகிறது.
2. இந்தியச்சமூகம் என்பதே வன்முறையானதுதான். ஆனால் அந்த வன்முறை கட்புலனாகாத வன்முறை. அரூவமான வன்முறைக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும் இந்தியமனம் தூலமான வன்முறையைக் கண்டதும் அதைப் புரிந்துகொள்ளமுடியாமல் (அ) ஏற்றுக்கொள்ள முடியாமல் அலறுகிறது.

தமிழில் முதன்முதலில் என்கவுண்டரை அறிமுகப்படுத்தியது சீவலப்பேரி பாண்டி. அதற்கு முன்னும்கூட ஏராளமான போலீஸ் சினிமாக்களும் தாதா சினிமாக்களும் வந்திருந்தபோதிலும் அவையெல்லாம் தமிழ்ச்சினிமாவின் கமர்சியல் பார்முலாவுக்குள் அடங்குபவையே. நாலு தாதாப் படங்கள் வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக தாதாப் படங்கள் வருவதும் ஆறு போலிஸ் படங்கள் வெற்றிபெற்றால் அடுத்தடுத்து போலீஸ் படங்கள் வருவதுமானதே தமிழ்ச்சினிமாவின் சூத்திரவிதி.

முதன்முதலாக என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்கிற சொல்லாடலைத் தமிழ்த்திரையில் அறிமுகப்படுத்தி அதை நியாயப்படுத்தியது கௌதம்மேனனின் 'காக்க காக்க'. போலிஸ் ஆவி உடலில் புகுந்த கௌதமின் அடுத்த படமாகிய 'வேட்டையாடு விளையாடு' படமும் இதேவகைப்பட்டதே.

போலிஸ்காரர்களும் அவர்களது குடும்பங்களும் தாதாக்களால் துன்புறுவது, மிரட்டப்படுவது, போலிஸ் என்கவுண்டர் என்ற பெயரில் தன்போக்கில் தீபாவளித் துப்பாக்கி போல சகட்டுமேனிக்குச் சுட்டுப்போடுவதுமாக கௌதமின் படங்கள் அடிப்படைத் தர்க்கங்களையும் தொலைத்தவை. வேட்டையாடு விளையாடு படத்தில் ராகவன் என்னும் போலிஸ் அதிகாரியின் முதல்மனைவியை எம்.எல்.ஏவின் ஆட்கள் கொலைசெய்துவிட கொஞ்சமும் நம்பவியலாது அந்த எம்.எல்.ஏவை சுட்டுக்கொல்லும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.

அவரது இரண்டு படஙக்ளுக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் இல்லை. முதல் படத்தில் கதாநாயகனின் பெயர் அன்புச்செல்வன் என்ற நல்ல தமிழ்ப்பெயரென்றால் இரண்டாவது படத்தில் வில்லன்களின் பெயர்கள் அழகிய தமிழ்ப்பெயர்கள், அந்தப் படத்தில் ஜோதிகா காதலி என்றால் இந்தப் படத்தில் இரண்டாம் காதலி என்பதுபோன்ற சில்லறை விஷயங்களைத் தவிர. ஹாரிஸ்ஜெயராஜின் இசை, தாமரையின் கவித்துவ வெளிகளுக்கு அழைத்துச்செல்லும் வரிகள் என்பதைத் தவிர்த்துவிட்டால் அடிப்படைத் தர்க்கங்களுமற்ற சினிமாக்கள்தான் கௌதமுடையவை.

பட்டியல், ஆச்சார்யா, புதுப்பேட்டை, டான்சேரா என்னும் நான்குப் படங்களை இப்போதைக்கு உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் காணப்படும் சில ஒற்றுமைகள்
1. இந்தப் படங்கள் என்கவுண்டரின் பின்னுள்ள மோசடியையும் வன்முறையையும் தோலுரிக்கின்றன.
2. தாதாக்கள் உருவாவதற்கான நியாயமான சூழல் காரணங்களை விபரிக்கின்றன.
3. நியாயவான்களகவே போலிஸ் அதிகாரிகளைச் சித்தரிக்கும் போலிஸ் படங்களுக்கு மாறாக தாதாக்களுக்கும் போலிஸ் மற்றும் அரசியல்கட்சிகளுக்கிடையேயான தொடர்பை அம்பலப்படுத்துகின்றன.
4 பொதுவாக இதற்குமுன் வந்த தாதாப்படங்களில் எல்லாம் தாதாக்கள் பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு உதவும் சமூகக்காவலர்களாகவே இருப்பார்கள். உதாரணம் : நாயகன், ரஜினியின் பல படங்கள். ஆனால் இந்தப் படங்கள் அப்படியான மக்கள்காவலர்களாக தாதாக்களைக் காட்டாமல் அவர்களின் எதார்த்தமான இருப்பையே காட்டுகிறது.

இவற்றினிடைக் காணபப்டும் சில வித்தியாசங்களையும் தொகுத்துக்கொள்ளலாம்.

1. முடிவு. இப்படத்தின் எல்லா முடிவுகளும் ஒரேமாதிரியான்வையல்ல. வெவ்வேறுவகையான சாத்தியங்களை உள்ளடக்கியவை.பட்டியலின் இறுதிமுடிவு கூலிப்படையினர் மற்றும் தாதாக்களின் பாதுகாப்பற்ற இருப்பைக் காட்டுகிறது. மேலும் அதிகாரவர்க்கம் தனக்குத் தேவையானபோது உறபத்தி செய்துகொள்ளவும் தேவையில்லாதபோது தீர்த்துக்கட்டவும்ம்முடியும் என்பதை அப்பட்டமாக முகத்தில் அறைகிறது.டான்சேராவில் தாதா போலீசால் சுட்டுக்கொல்லப்படுகிறான். புதுப்பேடையிலோ அரசியல் அதிகார மய்யத்தை நோக்கி நகர்கிறான்.

2. சமூகப்பின்னணி. பெரும்பாலும் தாதாக்களும் கூலிப்படையினரும் விளிம்புநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.பட்டியலில் குறிப்பிட்ட சாதியப்பின்னணி சுட்டப்படவில்லையாயினும் இரண்டு இளைஞர்களும் அனாதையாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். சேராவிலும் பீப்பிரியாணிக்கடை வைக்க அனுமதிக்கப்படும் அளவிற்கு ஒரு சாதி, புதுப்பேட்டையில் மீனவர், ஆச்சாரியாவில் மட்டும்தான் தாதாவாகும் இளைஞன் பார்ப்பனர். ஆனாலும் பார்ப்பனர்களாலேயே ஒதுக்கப்படும் உஞ்சவிருத்திப்பார்ப்பனர். பசிக்காக ஒரு முஸ்லீம் பெரியவரிடம் பன் வாங்கிச் சாப்பிட்டதற்காகவே அவனும் அவனது குடும்பமும் பார்ப்பனர்களால் ஒதுக்கப்படுகிறது. கடைசியில் நிர்க்கதியாக அந்த இளைஞன் நிற்கும்போது அந்த முஸ்லீம் பெரியவரே அந்த இளைஞனை அழைத்துச்செல்கிறார்.
முஸ்லீம்களைத் தேசவிரோதிகளாகவும் குண்டுவைப்பவர்களாகவும் மட்டுமே சித்தரிக்கும் தமிழ்ச்சினிமாக்களுக்கு மத்தியில் முஸ்லீம் தன்னிலையை இணக்கமாக அணுகியதைப் பாராட்டத்தான் வேண்டும். மேலும் கதாநாயகன் பார்ப்பனராக இருந்தபோதும் எந்தவிடத்திலும் பார்ப்பனீயத்தை நியாயப்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.

3.நகைச்சுவை . இந்த நான்குப்படங்களிலும் ஆச்சாரியாவில் மட்டுமே நகைச்சுவைக்காட்சிகள் வருகின்றன. ஒருவேளை விறுவிறுப்பான படத்தின் வேகத்திற்கு நகைச்சுவை என்பது தடையாக இருக்கலாம் என்று மற்றப் படங்களின் இயக்குனர்கள் நினைத்திருக்கலாம். அதேநேரத்தில் கவுதமின் போலிஸ் படங்களிலும் நகைச்சுவை இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆச்சாரியாவில் வரும் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பும் பார்ப்பனரான ஆச்சாரியாவையும் அதிகார வர்க்கத்தின் ஏவல்நாய்களான போலிஸ்துறையினரையும் படம் முழுவதும் பகிடி பண்ணித்தீர்க்கிறார்.

இந்தப்படத்தில் பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக 'புதுப்பேட்டை' படத்தின் மிகப்பெரிய பலவீனம் பாலகுமாரனனின் வசனம். மற்றொன்று அரசியல்வாதிகளைப் பற்றிய ஆழமான மேலோட்டமான சித்தரிப்புகள். அரசியல் தலைவர்களின் ஊழல்களையும் அதிகார முறைகேடுகளையும் அவை சுட்டிக்காட்டுகின்றன என்றபோதிலும் அவை மேலெழுந்தவாரியான தெலுங்குப்படங்களையொத்த சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. ஆயுத எழுத்து போன்ற படங்களிலும் இத்தகைய சித்தரிப்புகளே இருந்தன. இதைவிட ஆர்.கே.செல்வமணியின் சில படங்களும், மணிவண்ணனின் 'அமைதிப்படை' போன்ற ஒரு சில படங்களும் நுட்பமாகச் சித்தரித்திருப்பதை இங்குக் கவனத்திற்கொள்ளலாம்.

இந்த தாதாப் படங்கள் விளிம்பு நிலையிலிருந்து வந்த கதைமாந்தரையே களனாகக் கொண்டிருப்பதால் சில எதிர் அரசியல் கூறுகளும் தென்படுகின்றன. குறிப்பாக புதுப்பேட்டையில் 'எங்க ஏரியா உள்ள வராதே..' பாடலைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதேபோல இன்னொரு பாடலான 'வர்றியா..'.

'வர்றியா' என்னும் ஒற்றை விளிச்சொல் இளைஞர்கள் விபச்சாரத்திற்குப் பெண்களை அழைப்பதாகத் தொடங்கி, விபச்சாரப் பெண்கள் இளைஞர்களை அழைப்பதாக தொடர்ந்துப் பின் பொதுவான அழைப்பாக விரிந்து கடைசியில் அது போலிஸ்காரனை நோக்கி முடிகிறது.

இதேபோல டான்சேரா படத்தின் ஆரம்பக்காட்சியில் வேலைவெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞனிடம் அவனது நண்பர்கள் 'பசிக்கிறது' என்கிறார்கள். உடனே 'வாங்க, கோமாதா சாப்பிடலாம்' என்று அழைத்துச்செல்கிறான். கடைசியில் அவன் பீச்சில் பீப்பிரியாணிக்கடைதான் வைக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவச்சொல்லாடல்களே நிறைந்த தமிழ்த்திரை வெளியில் கோமாதாவைச் சாப்பிடுவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத கலகம்.

ஆனால் இதை அடிப்படையாக வைத்து தாதாச் சினிமாக்களை மாற்றுச்சினிமாக்களாகவோ, தாதாக்களை அதிகாரத்திற்கான எதிர்நிலை முன்னுதாரணங்களாகவோ நாம் கட்டமைத்துவிடமுடியாது. ஏனெனில் தாதாக்கள் இந்த சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதோடு அதிகாரவர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படுகிறார்கள் என்பதும் உண்மை.

அவர்கள் அதிகாரவர்க்கத்தைக் காக்கும் சேவகர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் தேவை முடிந்துவிட்டதென்றோ அல்லது காட்டிக்கொடுப்பார்கள் என்றோ தோன்றும்போதோ அதே அதிகாரவர்கக்ம் அவர்களைத் தீர்த்துக்கட்டுகிறது. ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் கடந்த ஜெயலலிதா அரசால் திமுக தலைவர் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது அதைக்கண்டித்துப் பேரணி நடந்தது. அப்போது திமுகவினரைப் பேரணியிலேயே வெட்டியது அயோத்தியாகுப்பம் வீரமணி கும்பல்தான் என்பதும் அதற்குப்பின்னணியில் ஆளும் அதிமுக அரசு இருந்தது என்பதும் ஊரறிந்த ரகசியம். ஆனால் அதே வீரமணியத்தான் அதிமுக அரசு என்கவுண்டர் மூலம் தீர்த்துக்கட்டியது.

மேலும் தாதாக்களும் கூலிக்கொலையினரும் விளிம்புநிலைச் சமூகங்களிலிருந்தே வந்தவர்களாக இருந்தபோதும் அவர்கள் பலசமயங்களில் அந்தச்சமூகங்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.பல போராட்டங்களை ஒடுக்கவும் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். நடுத்தரவர்க்கத்தினர் மட்டுமின்றி விளிம்புநிலை மகக்ளும்கூட தாதாகக்ளின் மீது ஆத்திரமே கொள்கின்றனர். கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கோட்டையான சென்னையில் பாதி இடங்களை அதிமுக கைபப்ற்ற முடிந்ததன் ரகசியங்களிலொன்று அது எண்கவுண்டர் மூலம் பல ரவுடிகளை 'ஒழித்துக்கட்டி அமைதியை நிலைநாட்டியது'மாகும்.

எனவே குறைந்தபட்சம் ஹிட்ச்ஹாக்கின் பிளாக்மெயிலைப்போல போலிசின் அதிகாரத்தையும் தந்திரத்தையும் அம்பலப்படுத்தும் படங்களாவது தமிழ்ச்சூழலில் வரவேண்டும். எண்கவுண்டர், போலிசு, ராணுவம் போன்ற அதிகார நிறுவங்களுக்கு எதிரான பரப்புமுறையை மக்களிடம் கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் நம்மால் அதிகாரத்திற்கெதிரான சிறு உடைப்புகளையாவது நிகழ்த்தமுடியும்.

( 10.02.2007 அன்று புதியகாற்று இதழால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தமிழ்ச்சினிமா அகமும் புறமும்' என்னும் கருத்தரங்கில் பேசிய பேச்சின் சுருக்கம்)

பெற்றோர் பராமரிப்புச்சடட்ம் - ஒரு பிள்ளையின் பார்வையிலிருந்து


பொறுப்பின்மையைச் சமன்செய்தலும் கடமைகளை ஒழுங்குபடுத்தலும்

நேற்று இரவு எட்டுமணியளவில் சன்நியூஸ் பார்க்கும்போது அந்த கெட்டசெய்தி வந்துசேர்ந்தது. பெற்றோர்களைப் பராமரிக்காத குழந்தைகளுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம். அபராதம் சில லட்சங்களில் என்று கேட்டதாக நினைவு. ஆனால் காலையில் தினத்தந்தி படிக்கும்போதுதான் தெளிவானது மூன்றுமாதங்கள் சிறைத்தண்டனை அல்லது அய்யாயிரம் அபராதம்.
நினைவுகள் முன்னும் பின்னும் அலைவுறுகின்றன. 12ம் வகுப்புப் படிக்கும்வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. பள்ளியில் முதல் அல்லது இரண்டாம் மாணவன். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என பல போட்டிகளில் பரிசுகள். பெற்றோருக்கு ஆனந்தமாய்த்தானிருந்தது. ஆனால் பள்ளி இறுதியிலேயே கண்ட கண்ட தடிமனான புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து படிப்பின் மீது மரியாதை போயிற்று.
பின் கல்லூரிக்காலம். காந்திகிராமம் என்னும் சனாதனக்கோட்டையில் முதல்முதலில் மாணவர் உரிமைகளுக்காக போராட்டம். காலையில் பிரேயரோடு ஆரம்பித்துக் கல்லூரி கேண்டீனில் ஆம்லேட் கூடப் போடாத வைதீக நிறுவனம். 16 ஆண்டுகளுக்கு முன்புதான் ஸ்டிரைக்கே நடந்தது. அதுவும் நான்டீச்சிங் ஸ்டாப்பின் போராட்டம். அதற்குபின் முதல் மாணவர் போராட்டம். அதுவும் முதலாமாண்டு படிக்கும்போதே. போராட்டம் என்னவோ வெற்றிபெற்றது. ஆனால் ஒரு செமஸ்டர் தவிர எல்லா செமஸ்டரிலும் அரியர் போட்டார்கள். அதுவும் பிஸிக்ஸ் டிபார்ட்மெண்ட். நான் கேள்விப்பட்ட வரை எல்லாப் பிசிக்ஸ் டிபார்ட்மெண்டும் இப்படித்தான் இருக்கிறது போலும். அங்கே மிருகங்களைப் பழக்குபவர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
நான் லேபிற்குள் நுழையும்போதெல்லாம் 'வாய்யா பகத்சிங்' என்றுதான் அழைப்பார்கள். ஆனால் முட்டையே போடாத கேண்டீனை வெள்ளைச்சட்டை போட்டு தி.க தோழர்கள் தந்திரமாய் எடுத்து பிறகு கருப்புச்சட்டை போட்டு பெரியார் படங்களுடன் படுஜோராய் கேண்டினை நடத்த ஆரம்பித்தபிறகு இயக்கத்தில் சேர்ந்து தி.கவின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆனேன். அதற்குப் பிரகு என்ன பொதுக்கூட்டம், பிரச்சாரம், போராட்டம், போலிஸ் மிரட்டல்.. இந்த நிகழ்வுகளால் வீட்டில் பிரச்சினைகள் வரத்தொடங்கின. குடும்பம் என்பது நரகமாகிப் போனது.
ஆனால் பின்னால் கூடப் படித்தவர்கள் எம்.சி.ஏவெல்லாம் படித்து அமெரிக்காவில் செட்டிலானதைப் பார்க்கும்போது நம்மையெறியாமல் வயிற்றெரிச்சல் கிளம்பும். படித்துவிட்டு வேலையில்லாமல் அலைந்த தருணங்களில் இன்னும் திட்டுவிழும். இந்த கொள்கைப் புண்ணாக்கெல்லாம் சேர்ந்து அவர்களைக் கூடுதலாக கோபப்படுத்தும்.
நான் ஒருமுறை கவிதையே எழுதியிருந்தேன், 'சதா முணுமுணுக்கும் தகப்பனின் கழுத்தை நெறிக்க வேண்டும்'. செந்திலுக்கு மிகவும் பிடித்த கவிதை வரி. அவருடன் வாசு என்று ஒரு நண்பர் இருக்கிறார். அவர் தவமாய்த் தவமிருந்து படம் முடிந்து வெளியே வந்தவுடன் காறித்துப்பினாராம். சேரனின் முகத்தில் தெறித்த எச்சில். இந்திய மகன்களுக்கு அப்பன்கள் எப்போதும் எதிரிகள்தான் போலும்.
இப்போது நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. ஏதோ ஓரளவிற்குச் சம்பாதிப்பதனால் பழைய பிரச்சினைகள் இல்லை. தகப்பனின் முணுமுணுப்பைக் கேட்கமுடியாவிட்டாலும் நிராகரிக்காமல் இருக்க முடிகிறது. என்னதானிருந்தாலும் அவரும் சக உயிரிதானே. ஊருக்கெல்லாம் மனிதநேயத்தையும் அன்பையும் உபதேசித்துவிட்டு நம்முடன் வாழும் சக உயிரை வெறுப்பது எவ்வளவு சரி?
என்ன, அவ்வப்போது 'நம் சாதிக்குள்தான் திருமணம் செய்யவேண்டும்' என்கிற அரிப்புகள் மற்றும் இன்னபிற நுட்பமாய்த் தொழிற்படும் சாதிய மனநிலை, முஸ்லீம் விரோதப் போக்கு ஆகியவைக்ளில் எல்லாம் முட்டிக்கொள்ளும்
ஆனால் 'கடைசிக்காலத்தில் காப்பாற்ற வேண்டும்' என்பதைக் கேட்கும்போது எரிச்சல்தான் வருகிறது. நீங்கள் பிராய்லருக்குக் கறிக்கோழியா வளர்த்தீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் மேலைச்சமூகங்களைப் போல சிறுவயதிலேயே சம்பாதித்துப் பழகியசமூகமில்லை நம் சமூகம். இருபத்தைந்து வயது வரை அப்பன்காசில்தான் சோறு சாப்பிட்டு வளரும் பிள்ளைகள் தன் பெற்றோருக்கு சோறுபோட மறுப்பது அறவியல் அநீதிதான்.
ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம் குடிமகன்களுக்கான கடமைகளை ஒழுங்குபடுத்தியிருக்கிறது, உறுதி செய்திருக்கிறது அரசு. அதன் வேலையே அதுதான். பொது இடத்தில் புகை பிடிக்காதே, ஹெல்மெட் மாட்டிக்கொள் என்பதுபோலத்தான் இது. ஆனால் அரசு மட்டும் தன் கடமைகளை நிறைவேற்றுகிறதா என்ன?
மக்கள்நல அரசு (welfare state) என்பது முதலளித்துவக் கருத்தாக்கம்தான் என்பார் பேராசான் காரல்மார்க்ஸ். இருந்தபோதும் மக்கள் நல அரசு சில கடமைகளையாவது செய்தது. மக்களின் சில அடிப்படை உரிமைகளையாவது நிறைவேற்றியது. ஆனால் உலகமயமாக்கலுக்குப் பிறகு அரசு தன் கடமைகளைத் தட்டிக்கழிப்பதிலேயே கருத்தாயிருக்கிறது. மானியங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீக்கப்பட்டிருக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால் உள்நாட்டுத் தொழில்கள் நசிகின்றன. இனி 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்' என்றெல்லாம் கதை சொல்ல முடியாது. பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைகள் மட்டுமே தன் உடல்நலத்தையும் மனநலத்தையும் இழந்து கைநிறையச் சம்பாதிக்கமுடியும் என்னும் நிலை உருவாகியிருக்கிறது. 'கால் காசு உத்தியோகமானாலும் கவர்மெண்ட் உத்தியோகம்' என்னும் பழம்பெருமையும் புண்ணியவதி ஜெயலலிதாவின் தயவால் தகர்ந்துவிட்டது. முதல்வன் படத்தில் போகிற இடமெல்லாம் டைப்ரைட்டர் மிஷினோடு சென்று எல்லோருக்கும் டிஸ்மிஸ் ஆர்டர் வழங்கிய அர்ஜூனை ரசித்து நூறுநாட்கள் ஓடவைத்த தமிழக மக்கள்தான் அதேவேலையை ஜெயலலிதா செய்தபோது விக்கித்துநின்றார்கள்.
தனிநபர் வருமானமே இல்லாத அல்லது நுகர்வுக் கலாச்சாரத்தில் தனது வருமானத்தையும் இழந்து மேலும் கடன்வாங்கிக் குவிக்கும் பரிதாப மகன்கள் என்ன செய்ய ஏலும் என்று தெரியவில்லை. நினைத்துப்பார்க்கிறேன். நாளை நானும் பெற்றோர்களைப் பராமரிக்காத குற்றத்திற்காக சிறையிலடைக்கப்படலாம். அங்கே உட்கார்ந்து வாரமலர் பாணியில் இப்படிக் கவிதை எழுதலாம்.
"அம்மா
பத்துமாதம் என்னைக்
கருவறையில் சுமந்த
உனக்காக
நான் மூன்றுமாதம்
சிறையில்
இருக்கக் கூடாதா என்ன?"

ஈழத்தோழர்களிடம் சூடுபட்ட 'சைவ'ப்பூனை



'மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்' - வள்ளலார் சி.ராமலிங்கர்

உணர்வுகள் என்னும் வலைப்பதிவின் எழுத்துக்களில் வெளிப்பட்ட சைவ வெள்ளாளப் பாசிசக்கூறுகளை அடையாளப்படுத்தியிருந்தேன். அதற்குப் பதில் என்னும் பெயரில் ஆரூரான் ஒரு கதையொன்று விரித்துள்ளார்.
இனி உளறல்களுக்குப் படிக்க...
http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_19.html
அந்தப் பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் முக்கியமானவை. குறிப்பாக சார்வாகனின் பின்னூட்டம் என் மனதைக் கவர்ந்தது.
இதில் குறிப்பிலும் குறிப்பான ஒன்று உணர்வுகளின் உளறல்களை மறுத்து வாதிட்டவர்கள் அனைவரும் ஈழத்தமிழர்கள். ஒரே ஒரு ஈழத்தமிழர் கூட உணர்வுகளின் சாதியச் சதிராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பது உண்மையாகவே நெகிழ்வாயிருக்கிறது.
/ Ramani said... /சோழ இளவரசனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு, பிரபாகரன் எதற்காக சோழனின் புலிக்கொடியைத் ஈழத்தமிழர்களின் விடுதலையின் கொடியாக்கினார், அது தமிழ் வீரத்தின் அடையாளம், இப்பொழுது நீங்கள் சோழ இளவரசனை மட்டும் அவமதிக்கவில்லை அவனது புலிக்கொடியையும் சேர்த்துத் தான்.
ஆறுமுகநாவலரின் சாதி அட்டகாசம் மட்டும் கண்ணுக்குத் தெரிகின்ற ஒரு ஈழத்தமிழனுக்கு "யாழ்நகர் பிறந்து தமிழ்காத்தான் எங்கள் நாவலன் இறவாப் புகழ் போர்த்தான்" என்று புகழப்படும் நாவலரது தமிழ்த் தொண்டுகளை உணர முடியவில்லை என்பது கவலைக்குரியது, /
நாவலரின் தமிழ்த்தொண்டை மறுப்பதற்கில்லை. அதானாலேயே, "சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலன் பெயர் கொடுத்தனுப்பியதாக அலட்டிக்கொள்ளும் சீமான்களோடு இன்னமும் கருவிக்கொண்டிருக்கவேண்டியிருக்கின்றது (சேச்சே எல்லாம் உவே சாமிநாதருடன்தான் சிலருக்கு இங்கே ஆரம்பிக்கவேண்டும் ;-)) ஆனால், அவருடைய சாதி வெறியை அதற்காக அதேயளவு மறுப்பதற்கில்லை. அவரின் சீர்திருத்த சைவத்தின் பண்பாட்டுக்குறிகள் சீர்திருத்துவ கிறீஸ்துவத்தினை (புரொட்டஸ்தாந்து) அதன் வழியிலேயே எதிர்க்கும் அதே வேளையிலே அவருடைய வேளாளவிழுமியங்களை, தமிழகத்திலே பிராமணர்களின் விழுமியங்களே அளவுகோல்மட்டத்து சமூகவிழுமியக்கோவை ஆனதுபோல ஆக்கியதென்பதும் உண்மை. நாடகங்கள், கூத்துகளைக் குறித்து அவரின் பார்வை எங்கிருந்து வந்தது? (சிவத்தம்பி யாழ்ப்பாணம் குறித்து எழுதிய நூலிலே இதைச் சுட்டியிருக்கின்றார்).
சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன். எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டின் அரசர்களுக்கு இலங்கையின் சிங்கள அரசர்களோடுதன் மணக்கொடுக்கல்வாங்கல்கள் இருந்தன. தொண்டைக்காஞ்சியான், மதுரைப்பாண்டியன், காவேரிச்சோழன் எவனையும் எடுத்துப்பாருங்கள். ஆனால், ஈழத்தமிழர்களின் பெயர்களோடு இணைந்திருப்பது, அவ்வரசர்களின் படையாட்களாக வந்தவர்களின் சமூகப்பெயர்களே. வன்னிமை தொடக்கம் ஒவ்வொன்றாய்த் தேடுங்கள். போங்கள். பிரபாகரன் புலிக்கொடியை ஈழக்கொடியாக்கினால், அதற்காக சோழ இளவரசர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொடர்பிருக்கிறதென்று அர்த்தமா? அப்படியாகப் பார்த்தால், வரதராஜப்பெருமாள் மாகாணசபையிலே நந்திக்கொடியை ஏற்றியதைப் பார்த்திருக்கிறேன். அப்போது ஈழத்தமிழருக்கும் மகேந்திரபல்லவனுக்கும் பேரர் பூட்டன் உறவா? செவிவழிக்கதைகளையும் ஆதாரத்துடனான வரலாற்றையும் கொஞ்சம் உமி, அரிசி பிரித்து நாம் பேச வேண்டாமா? மருமக்கள் முறையிலே சொத்தினைப் பிரித்தல், உணவுப்பழக்கவழக்கம், உடைப்பழக்கவழக்கம் உட்பட்ட பண்பாடு, சொற்பயன்பாடு எல்லாவற்றையும் பார்த்தால், சேரருக்கும் மலையாளிகளுக்குமே ஈழத்தவர் நெருங்கி வருவார். ஈழவருக்கும் ஈழத்தவருக்கும் ஒரே அடியா என்று ஓர் ஆய்வு செய்து பார்க்கவேண்டாமா? குமரி எல்லை கிட்டவா? காவேரித்துறை கிட்டவா? ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தினாலே பின்பட்டவர்கள். வழக்கம்போல, அவர்களை நெடுங்கால ஈழச்சரித்திரத்துள்ளே இழுக்காதீர்கள். அவர்களைச் சோழரோடும் தொடர்பு படுத்தாதீர்கள்.
இப்பின்னூட்டம் தோன்றுமென நம்புகிறேன். அல்லாவிடினும், கவலையில்லை.
February 19, 2007 9:19 PM சீலன் said... தலைவர் பிரபாகரன் கூட ஐயர் வைத்து அருந்ததி பார்த்துத் தான் திருப்போரூரில் திருமணம் செய்து கொண்டார்,
அது 84 இல்.. 2007 இல் ஐயரே இல்லாமல் தான் புலிகளிடத்தில் திருமணம் நடக்கின்றது. காலத்திற்கு ஏற்ப மாற பிரபாகரனால் முடிகிறது. ஆனால் ஒரு சிலரால்.... (தில் இருந்தால் இந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்கவும்)
February 19, 2007 9:21 PM Anonymous said... Another very good article. I understand you might have done heavey home work. Nice effort, well said...
February 19, 2007 9:27 PM கரு.மூர்த்தி said... மிகமிக ஆழ்ந்த அருமையான கட்டுரை , மிதக்காமல் நிதானமாக இருக்கும் போது அவர் படிக்கட்டும் , திரும்ப வருகிறேன் .
February 19, 2007 9:29 PM தமிழ்நதி said... உணர்வுகள்! நீங்கள் ஒரு கருத்தை முன்வைக்கும்போது அதை ஈழத்தமிழர்கள் அத்தனை பேருடைய கருத்தும் என்ற தொனிப்பட வைக்கிறீர்கள். அது சரியல்ல. தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துண்டு. குறிப்பாக,
"ஈழத்தில் எந்த முஸ்லீமும் தன்னைத் தமிழனாகக் கருதுவதில்லை. அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அவ்வளவுதான்."
"புத்தர் எங்களுக்குப் பாசிசத்தின் அடையாளம்"
"நாற்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழர்கள் விட்டொழித்த சாதீயத்தையும்"
"அதை விட எங்களின் அழுக்கை மற்றவர்களிடம் காட்டக் கூடாதென்ற மரியாதை கூடத் தெரியவில்லை."
போன்ற அபத்தமான கருத்துக்களுடன் ஈழத்தமிழர் என்பதற்காக எல்லோரும் உடன்படுவார்கள் என்பதில்லை.
உங்களுக்கெதிராகக் கருத்துச் சொல்பவர்களை நீங்கள் வசைபாடுவது வழமை என்பதறிந்தும் பேசாதிருக்க முடியவில்லை. காரணம் உங்கள் கருத்துக்களை நீங்கள் ஒரு இனத்துக்கேயுரியதெனப் பொதுமைப்படுத்துகிறீர்கள். அது பிடிக்காமல்தான் இந்தப் பின்னூட்டம்.
February 19, 2007 9:29 PM unarvukal said... //சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள்.//
திரு.ரமணி,
இப்பொழுது நேரமாகி விட்டது நாளைய பதிவைப் பாருங்கள்.
நன்றி.
February 19, 2007 9:35 PM unarvukal said... தமிழ்நதி,
என்னுடைய கருத்துக்கள் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் தானிருக்குமல்லவா, முடிந்தால் உங்களின் அனுபவத்தை எதிர்க்கருத்தாக எழுதுங்கள்.
February 19, 2007 9:38 PM Ramani said... பார்த்துக்கொண்டிருக்க எனக்கும் நேரமில்லை ராசா. விரும்பிய நேரத்திலே போடுங்கள். எனக்கும் நேரம் கிடைத்தால் பாக்கிறேன்.
February 19, 2007 9:39 PM Anonymous said... This post has been removed by a blog administrator. February 19, 2007 9:48 PM ஏமாறாதவன் said... அய்யா,
தங்கள் பதிவுகள் உணர்வுகள் என்னும் வைரம் பூசிய உண்மை என்னும் வாளாக இந்த ஆதிக்கவெறியரகளை தாக்குகிறது.
தங்கள் தமிழக ஈன சாதி ஆதிக்க கட்டுப்பாட்டுக்காக இவர்கள் பார்ப்பன, தலித் முஸ்லிம் என்று சாதி கூறு போட்டு அரசியல் செய்கிறார்கள். இந்த மிதக்கும் அபத்தங்களை சாக்கடையில் தூக்கியெறியுங்கள். ஈழத்து மக்களின் சமுதாய சமத்துவ பாண்மையும் உணரவும் ஏற்கவும் இந்த "வெளி"க்கி களுக்கு தெரியாது. அல்ல.. புரியாது
February 19, 2007 9:57 PM ரூபன் said... //Ramani said... பார்த்துக்கொண்டிருக்க எனக்கும் நேரமில்லை ராசா. விரும்பிய நேரத்திலே போடுங்கள். எனக்கும் நேரம் கிடைத்தால் பாக்கிறேன்.//
What kind of attitude is this? You asked him the question and now you behave like this. """"சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்.""""
I think aaruran live in Canada and it is midnight there, that's why he probably can't answer to you now.
February 19, 2007 10:09 PM Ramani said... /What kind of attitude is this? You asked him the question and now you behave like this. """"சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்.""""
I think aaruran live in Canada and it is midnight there, that's why he probably can't answer to you now/
ruban or whover you are, why don't you use the same logic to me?
February 19, 2007 10:37 PM சார்வாகன் said... இந்த பின்னூட்டத்தை நீர் போடலாம் போடாமல் விடலாம் ஆனால் நான் ஒன்று கேட்கிறன் உமக்கு ஈழம்தொடர்பான தற்போதைய நிலவரங்கள் தெரியுமா? பிரபாகரன் அய்யர் வைத்து தாலி கட்டினாப்போல அது சரியா(அவர் செய்தாப்போல அது சரியெண்டிறீரோ)? அட அவரே அது பிழை எண்டு தன்ர போராளிகளுக்கெல்லாம் உறுதி மொழி எடுத்துக்கொண்டு தாலிகட்டினா சரி எண்டிறார் நீர் எண்ணண்டா புலிகளுக்கு சைவ முத்திரை குத்திக்கொண்டிருக்கிறீர்.
நீங்கள் யாழ்ப்பாணத்து உயர்சைவவேளாள குல மனோநிலையிலை நிண்டு கொண்டு கதைக்கிறதை கைவிடுங்கோ சரியொ.
முஸ்லிம்கள் தமிழற்ற முதுகில குத்தினவங்கள் சரி. தமிழர் ஒரு சொப்பின் பாக்கோட முஸ்லிம்களை ஓட ஓட விரட்டேல்லயோ அப்ப அதை எண்ணண்டு சொல்லுவீர்.அப்ப நீர் பேசிறது தமிழ் இனவாதம் எண்டு சொன்னால் ஏற்றுக்கொள்ளுவீரோ? நீர் சொன்னாலும் சொல்லாட்டியும் முஸ்லீம்கள் ஒரு தனிப்பட்ட இனம்.நீர் உப்படி தமிழ் இனவாதம் பேசிக்கொண்டிருந்தார் எல்லா இனத்தவனும் அவனவன் இனவாதம் கதைப்பது சரியெண்டாகும் தெரியுமோ?
நீர் உம்மட தனிப்பட்ட கருத்துக்களை எல்லாம் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் கருத்தெண்டிறமாதிரி சொல்லி எல்லா ஈழத்தமிழரயும் சிந்திக்கதெரியாதவங்கள் எண்டு நினைக்கப்போறாங்கள் மற்றவங்கள்.
திராவிடத்தில ஈழத்தமிழருக்கு உடன்பாடும் நம்பிக்கையும் இல்லையோ இல்லாமலோ பின்ன திராவிடன் இலங்கேஸ்வரனை ஆரியன் இராமன் வெல்லுறதோ என்று இராமாயணத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கிறார்கள் அங்கே நீர் எத்தனையாம் ஆண்டு.இருந்தனீர்? சும்மா கேள்விப்படுகிற மாய வதந்திகளை வைச்சக்கொண்டு கதைக்க வெளிக்கிடக்கூடாது.அல்லது நீர் எதன்வாயிலாக அங்க நடக்கிற விசயங்களை அறிஞ்சு கொள்ளுறனீர்? இதற்கான விடைகளை நீர் இந்த பின்னூட்டத்தை வெளியிட்டால் தாரும் நான் தங்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.
சைவத் தமிழர் எண்டிறீர் புலிகள் பொங்கல் விழாவைத்தவிர வேறேந்தப் பண்டிகையையும் ஏற்றுக்கொள்ளுறேல்லை எண்டாவது தெரியுமொ உங்களுக்கு சும்மா சைவக்கதையும் எங்களிடம் சாதி ஒழிஞ்சு போச்சு தெண்டு மேற்பூச்சுக்களை நம்பி வெளிக்கிடாதேஙகோ கதைக்க.
February 20, 2007 12:27 AM தமிழ்நதி said... "என்னுடைய கருத்துக்கள் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் தானிருக்குமல்லவா, முடிந்தால் உங்களின் அனுபவத்தை எதிர்க்கருத்தாக எழுதுங்கள்."
நான் சொல்லவேண்டியதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். அபத்தங்களை விபரித்தால் அன்றேல் விரிவாக எழுதினால் அது'விரிவான அபத்தமாகவே'இருக்குமல்லால் வேறொன்றுமல்ல. நீங்கள் ஈழத்தமிழர்களிடையே சாதீயப்பிரச்சனை இல்லை என்பதும், முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல என்பதும், புத்தர் பாசிசத்தின் அடையாளம் என்பதும், உள்ளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளிக்காட்டக் கூடாது மூடிவைக்க வேண்டும் என்பதும்... அது உங்களுடைய அனுபவத்தினூடே பெற்றது என்பதும்... என்ன சொல்ல? நல்லவேளை எனது அனுபவங்கள் அபத்தமான புரிதல்களுக்கு, முடிவுகளுக்கு இட்டுச்செல்லவில்லை என்பதையிட்டு மகிழ்வடைகிறேன்.
தவிர, இந்த விளம்பர விளையாட்டுக்களில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது. நன்றி. ஒரேயொரு கேள்வி. பெரும்பாலும் உங்களுக்குச் சார்பாகப் பின்னூட்டமிடுகிறவர்களின் பெயர்களைத் தொடர்ந்தால் url not found என இல்லாத ஊரில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவது எப்படி?
February 20, 2007 1:34 AM unarvukal said... //ஒரேயொரு கேள்வி. பெரும்பாலும் உங்களுக்குச் சார்பாகப் பின்னூட்டமிடுகிறவர்களின் பெயர்களைத் தொடர்ந்தால் url not found என இல்லாத ஊரில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவது எப்படி?//
தமிழ்நதி,
ஒவ்வொரு பின்னூட்டத்திற்குப் பின்னாலும் யாரோ பின்னணியில் உள்ளனர் என்பது மட்டும் உண்மை. தனக்குத்தானே பின்னூட்டம் இடும் பழக்கம் என்னிடம் இல்லை. பின்னூட்டங்களைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை.
யாருடனும் போட்டிக்காகவும், பிரபலமடையவும் நான் பதிவுகள் செய்வதில்லை. உம்முடைய நோக்கம் அதுபோல் தானிருக்கிறது. என்னுடைய பதிவுகளின் தரத்தை எனக்குச் சார்பான எத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை வைத்துக் கணிக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் கிடையாது.
நன்றி.
February 20, 2007 5:52 AM bala said... //என்னுடைய பதிவுகளின் தரத்தை எனக்குச் சார்பான எத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை வைத்துக் கணிக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் கிடையாது//
உணர்வுகள் அய்யா,எனக்குத் தெரிந்து உங்களுக்கு மட்டுமல்ல,நிறைய பேருக்கு இந்த சிறுபிள்ளைத்தனம் கிடையாது,லக்கியைத் தவிர.ஆனா லக்கி தான் சிறு குழந்தை ஆயிற்றே,அதனால் பரவாயில்லை.
பாலா
February 20, 2007 6:08 AM Hanuman said... //யாருடனும் போட்டிக்காகவும், பிரபலமடையவும் நான் பதிவுகள் செய்வதில்லை. உம்முடைய நோக்கம் அதுபோல் தானிருக்கிறது. என்னுடைய பதிவுகளின் தரத்தை எனக்குச் சார்பான எத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை வைத்துக் கணிக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் கிடையாது.//
சரியான வாதம்கிறுக்கன் எல்லாம் பின் நவீனதுவம் பீ மலம் கழிசடை போன்ற வார்த்தையை போட்டு எழுது நீயும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லி கொடுத்து திரியாரானுங்க.
ஆருரான் அடிச்சி ஆடுங்க
February 20, 2007 6:42 AM கொழுவி said... //நாற்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழர்கள் விட்டொழித்த சாதீயத்தையும்//
நாற்பது வருடங்களுக்கு முன்பு ஈழத்தை விட்டு வெளியேறியவர்களின் குழந்தைகள் அவ்வாறு தான் சொல்லுவார்கள். சமாதான காலங்களிலாவது ஈழத்துக்குப் போய் நிலவரங்களை அறிந்து வந்திருக்கலாம். இணையத்தில் ஈழத்தை அறிந்தவர் பாடு இதுதான்.(தில் இருந்தால் இந்தப் பின்னூட்டத்தையும் விடவும்.)
February 20, 2007 10:07 AM unarvukal said... பின்னூட்டங்களைத் திருத்தும் வழி தெரியவில்லை. அதனால் தயவுசெய்து கடுஞ்சொற்களை உங்கள் பின்னூட்டத்தில் பாவிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
February 20, 2007 10:23 AM Hanuman said... //பின்னூட்டங்களைத் திருத்தும் வழி தெரியவில்லை. அதனால் தயவுசெய்து கடுஞ்சொற்களை உங்கள் பின்னூட்டத்தில் பாவிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.//
என் முதல் பின்னோட்டத்தை இது குறிப்பதாயின் ஒரு விளக்கம்
தமிழ்நதியின் எழுத்தை மெருகேற்ற இந்த மிதக்கும்வெளி(?) பீ குசு மலம் எல்லாம் போட்டு எழுத்தில் கடுகை தாளிப்பது போல் இருக்கவேண்டும் என்று அறிவுரை(?) சொன்னதை நான் குறிப்பிட்டேன்
.
/


மற்றபடி உணர்வுகளை ஆதரித்து ஜால்ரா போடவர்கள் எல்லாம் எல்லோருடைய பதிவிலும் போய் சாதியத்திற்கும் பார்ப்பனீயத்தீரற்கும் ஆலோலம் போடும் தமிழ்நாட்டுப் பார்ப்பனக்குஞ்சுகள். இவர்கள் சாதிவெறியர்களை ஆதரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

அதிலும் ஹனுமான் என்னும் ஒரு இந்துத்துவ வானரம் தன்பாட்டிற்கு வந்து குரங்காட்டம் ஆடியிருக்கிறது. தமிழ்நதியின் எழுத்துகக்ளை நான் தவறாக வழிநடத்துவதாகவும் கிறுக்கன் என்றும் பலவாறாகப் பிதற்றியிருந்தது.
பெயரிலி, மதிகந்தசாமி, நிவேதா, வசந்தன், அற்புதன், சயந்தன் போன்ற பல தனித்துவமிக்க பதிவாளர்களைப் போலவே தனக்கென எழுத்தாளுமை கொண்டவர் தமிழ்நதி. அவரது பல பதிவுகள் ஈழத்தமிழர்களையும் தாண்டி படித்துப் பாராட்டப்பட்டவை. மேலும் தமிழ்நதியின் எல்லாப் பதிவுகளையும் நான் வரன்முரறையின்றிப் பாராட்டியதுமில்லை. அவரது பல கவிதைகள் வெறும் ஸ்டேட்மேண்டாக முடிந்துபோகிற போதாமை போன்ற பலகுறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

குறிப்பாக அவரது 'அந்த எசமாடன் கேக்கட்டும்' சிறுகதை விளிம்புநிலையிலிருந்து பேசியதாலேயே அதுபற்றி எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எதிர் அழகியல் தொடர்பான அந்தக் கட்டுரையைப் பலரும் பாராட்டவே செய்தனர்.ஆனால் நான் தமிழ்நதியின் படைப்பொன்றைப் பாராட்டியதாலேயே அவர் சாதியை எதிர்க்கிறார் என்கிற ரீதியில் கிறுக்கத்தனமாய் எழுதிச்சென்றிருக்கிறது அனுமான் குரங்கு.

தமிழ்நதி சொன்னதே போலவே அதன் வால் யூ.ஆர்.எல்லைத் தொடர்ந்துபோனால் அது இருக்குமிடமே தெரியவில்லை. வரலாற்றின் துயர்மிக்கக் காலங்களில் ஈழத்தில் தன் வாலால் தீ பற்ற வைத்தது அனுமான் குரங்கு. அந்த ஈழத்து நெருப்பின் மிச்சமும் நந்தனை எரித்த சைவ நெருப்பின் மிச்சமும் ஜோதியில் அய்க்கியமாக ஜோராய் எரிகிறது சா'தீ'. அண்ணாமலைக்கு அரோகரா.

சரி இனி உணர்வுகளின் உளறல்களைப் பார்ப்போம்.

/இவருடைய வெறுப்பெல்லாம் இந்து மதத்தில் தான், அப்படியென்றால் இவர் யாராக இருப்பார், இவருடைய உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. இந்த மாதத்தில் இத்தனை தமிழர்களை மதமாற்றம் செய்தேன் எனக் கணக்குக் காட்டாது விட்டால், இவருக்கு வெளிநாட்டிலிருந்து மாதாந்தம் வரும் காசோலை சொல்லாமல், கொள்ளாமல் நின்று விடலாம். :)/

ஆகமொத்தம் நான் முஸ்லீம் என்றே முடிவுகட்டிவிட்டார் ஆரூரன்பிள்ளை(யார்?). நான் பிறந்த சாதியையும் மதத்தையும் நன்கு அறிந்த நெருங்கிய நண்பர்கள் இதற்கு வாயால் சிரிக்கமாட்டார்கள்.

/பார்ப்பனர்கள் தமிழர்களா இல்லையா என்று நான் ஏன் நிரூபிக்க வேண்டும், பார்ப்பனர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அவர்களுக்குப் பின்னால் வந்த முஸ்லிம்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளும் போது, அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? /

தன் பதிவுமுழுக்க முஸ்லீம்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்றே சைவத்திமிரில் எழுதிச்செல்கிறார். உங்கள் இந்துப் பார்ப்பனீய வெள்ளாள சாதிக்கொடுமை தாங்கமாட்டாமல்தான் முஸ்லீம்களாய் மாறியவர்கள் பறையரும் பள்ளரும் அருந்ததியரும். எங்கோ கனடாவில் அமர்ந்துகொண்டு எங்கள் முஸ்லீம் சகோதரர்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறீர்களே, இதற்குப் பெயர்தான் வெள்ளாளக் குசும்பா? (எல்லாப் புலம்பெயர்ந்த தமிழர்களையும் இழிவுபடுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. அப்படி உங்களைப் புண்படுத்துவதாகக் கருதினால் மன்னிக்க வேண்டுகிறேன். )

/மிதக்கும் ஐயா, எங்களுக்கும் பிராமணர்களுக்கும் பிரச்சனைகளில்லை என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். /

அதுசரி உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது? மதுரை ஆதினத்திற்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன பெரிய சண்டை வந்துவிடப் போகிறது. ஈழத்தில் பார்ப்பன ஆதிக்கம் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியாது. அதெற்கெல்லாம் சேர்த்துத்தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறீர்களே?

/பசும்பொன் தேவரின் நினைவு மண்டபத்துக்கு ஒரு மைல் தள்ளி நின்றாவது மிதக்கும் அண்ணாச்சியால் சாதியை எதிர்த்து துண்டுப் பிரசுரம் கொடுக்க முடியுமா? /

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சாதிக் கலவரம் நடந்தபோது திராவிடர்கழக மாணவரணி சார்பில் வாயிற்கூட்டம் நடத்திக் கள்ளர்வெறியர்களிடம் கல்லடி பட்ட அனுபவங்கள் எனக்கு உண்டு. சிங்களக் காடையர்களுக்கெதிராக துப்பாக்கி தூக்கி களத்தில் இறங்கிய அனுபவங்கள் உங்களுக்கு உண்டா?

/ஈழத்தமிழர்களின் தமிழ்மரபுக்கு அடிப்படை பெளத்த மரபென்று, யாராவது நல்ல மது வெறியிலுள்ள ஈழத்தமிழர்களுக்குக் கூடச் சொல்லிப் பாரும், அவரே காறித்துப்பி விட்டு எழுந்து போய்விடுவார்/

உறுபசி போக்க உணவுப்பாத்திரம் சுமந்து திரிந்த மணிமேகலையை, போரை மறுத்த அசோகரை, தியானத்திற்கு இடையூறாய் இருக்கிறதென்று இமைகளை வெட்டியெறிந்த தம்மகீர்த்தியைத் தந்தது பவுத்தமரபு. ஆனால் உங்கள் சைவமரபோ பிள்ளைக் கறியை ருசித்து அடியாரின் மனைவியைத் தனக்குக் கூட்டிக் கொடுக்கக் கேட்ட 'அற்புத மர'பு.

ஏதோ சந்திரிகா செய்யும் பாவங்களுக்கெல்லாம் சங்கமித்திரைதான் காரணம் என்று சொல்வதுபோல இருக்கிறது உங்கள் வாதம். ஜே.வி.பி ஒரு இனவெறி பிடித்த அடிப்படைவாத இயக்கமாக இருக்கிறது என்பதற்காக காரல்மார்க்சைக் குற்றம் சொல்ல மடையனுக்குத்தான் தெரியும். புத்தரை மறுத்து சைவமரபை வலியுறுத்த விரும்புபவனுக்கு மதுவெறி தேவையில்லை. சைவ வெள்ளாள சாதிவெறி போதையே போதும்.

கடைசியாக நீங்களும் நானும் பேசும் மொழி ஒன்றாக இருந்து தொலைப்பதனால் ஒரு தனிப்பட்ட கேள்வி. சகமனிதனையே மனிதனாக அங்கீகரிக்காத இந்துமதத்தையும் சைவ வெள்ளாள சாதித்திமிரையும் தூக்கிப் பிடிக்கும் உங்களுக்கு சிங்களப்பேரினவாதத்தை எதிர்ப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

கடவுள் என்று ஒன்று இருந்தால் அது அல்லாஹ்வாக இருக்கட்டும்



பிலாலுக்கும் மால்கமுக்கும்....

இரு தசாப்தங்களாய்
மனு போட்டும் வரவில்லை
சுடுகாட்டுப்பாதை

பிணங்களுக்காய்ச் சண்டைபோட்டு
பிணங்களானோம்.

உப்புக்கரிக்கும்
காலத்தின் சுவையில்
முளைத்த முடிவின் இறுதியில்
வரவே முடியாத
சுடுகாட்டுப் பாதையில்
அலறியடித்து
வந்துசேர்கிறார்கள்
உங்கள் ஆதினங்களும் அமைச்சர்களும்.

நாமெல்லோரும் ஒன்று
என்னும்
உன் வார்த்தைகளுக்கு அடியில்
நசுங்கிப்போனதென்னவோ
'நான்' மட்டும்தான்.

எனக்கு வேண்டும் நான்.

கலிமாக்களுக்கும் ஹதீஸ்களுக்கும் பின்னும்
காய்ச்சிச் சூடேறிய ஈயமும்
நாக்கில் அழுந்த இறங்கும்
ஆயுதமும்
இல்லைஎன்பதே போதுமானதாயிருக்கிறதெனக்கு.
ஒரு சேவலின் உச்சிக்கொண்டையாய்
மைக் கொண்டு
பாங்கு ஓதும் பள்ளிவாசல் குளத்தில்
நான் கழுவிக் கரைய வேண்டும்
என்னின் முந்தையக் கறைகளை.

அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது


மூணாம் பார்வை
எல்லாம் இயல்பாகத்தானிருந்தது
சாணம் போட்டபடி நகரும்
எருமைமாடுகளின் தடங்களைத் தொடர்ந்து
பறையனொருவன்
ஊர்த்தெருவைக் கடக்கும்வரை.

ஊரைப்பிளந்து
ஓடியநதி
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு ரத்தச்சாட்சியமாய்.

அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது

ரண்டாம் பார்வை
அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது
அமைதியாய்
மௌனத்தைச் சுமந்து.

மரம் அனுப்பும்
முத்தச்சருகுகளை சுமந்தபடி
செ ல் லு ம்
அதன் சலசலப்புகளை
மட்டுமே கேட்டறிவீர்கள்.

அதன் அடிவயிற்றில்
புதைந்த மௌனம்
மௌனமும் மௌனமானது.

சிலநேரங்களில் நதி
அபூர்வமாய்ச் சிரிக்கக்கூடும்
சிறுவர்கள் தன் முகத்தில்
சிறுநீர்கழிக்கும்போதும்
சிலிர்ப்பூட்டும்படி
மீன்கள் தொடையை
உரசிக் கடக்கும்போதும்.

அந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது

வெறுப்பின் வழி உன்னை வந்தடைந்ததாய் சொன்னாய்.
தாயின் மடியை மூத்திரத்தால் நனைக்கும் குழந்தை.
தாய் நீ.

பேசும்போது உன் முகம் பார்த்துபேசுவதில்லை என்று கோபித்தாய்.
கடவுளின் முகம்
யாரும் பார்த்தில்லை சகி
இறை நீ.

உன்னிடம் பேசியபிறகு
மரியாதைக்கான அடையாளமாய்த்
தேங்கிநிற்கும்
சில கண்ணீர்த்துளிகள்
வலி நீ.

எப்போதேனும் உன் மீது
கல்லெறிந்து பார்க்க
ஆசை வரும்.
நதி நீ.

காதலைக் கதைத்தல்

உன் சுடிதார் துப்பட்டா
தனக்குச் சிறகாக வேண்டி வண்ணத்துப்பூச்சிகள் தவமிருந்தபொழுதுகளில்
சந்தித்தேன் உன்னை.
உன் கன்னக்கதுப்புகளில்
ஒளிந்திருந்த புறா
நீ சிரிக்கும்போது மட்டும் சிறகசைத்தது.
என் சொற்புலங்களை
ஆக்கிரமித்து நகரமறுத்த நீ
உன் பார்வைகளை
வேறு எங்கேனும்
நகர்த்தியிருக்கலாம்
அல்லது நானாவது....
உனக்குக் கண்களை வழங்கிய
காலம் எவ்வளவு கொடுமையானது
.பிரியத்துக்கும் பிரியமானவளே!
உன்னோடு பேசமுடியாது
உதடுகடித்து
வார்த்தைகளை விழுங்கியபோது
சிதைந்துபோனது
உனக்கான முத்தங்களும்தானடி.
காற்றில் அலைபாயும்
உன்பச்சைத் தாவணியாய்ப்
படபடக்கும் காதலைக்
கட்டுப்படுத்த இயலாது
கைபிசைந்து நின்று
கூந்தலில் புதைந்த
மலர்களில் மனசழிந்து
உன் அதரங்களில்
வழியும்புன்னகையை
உண்டுயிர்த்து
உன் கொலுசின் மணிகளை
பனித்துளிகளோடு ஒப்பிட்ட பொழுதுகள்
எத்துணை இனிமையாயிருந்தன.
உன் கணுக்கால்களில் தெரிந்த
மஞ்சள் வெடிப்புகளைக்
கணக்கிட்டபடிநகர்ந்துகொண்டிருந்தது
என்னின் விரயமான பகல்களும்
கனவுமயமான இரவுகளும்.
உன் நினைவு ஆட்டும்
நேர்க்கோட்டு வழி
அசைந்துகொண்டிருக்கிறேன்
வெறும்பிம்பமாய் மட்டும்.
கொஞ்சமும் இரக்கமற்று
சட்டென நகர்ந்துபோகும்
காலத்தைக் கொல்லடி
குறைந்தபட்சம் உன்பார்வையாலோ
புன்னகையாலோ.

என் உள்ளங்கை கதகதப்பன்றி தருவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது?

அழுந்திப் பதிந்த தடங்களின் வழி
பொசியும் நீரின்
கதைகேட்டுக் குமைந்து
பிணங்களோடு படுத்துறங்கி
கனவின் மார்பில் கால் உதைத்து எழுந்து
நள்ளிரவின் சுவர்களில்
அலறி அடிந்து
நகங்களில் கசியும்
குருதியை அடக்கி கீழுதட்டைக் கடித்துக வலி மறைக்கும் வித்தைகளைக் கற்றதெல்லாம் உன்னிடமிருந்து
என்று நான் சொல்லும்
மொழி புரியுமா எனத் திகைத்துச்சொல்லும்
வார்த்தைகளின் நிணத்தில்
தோய்த்தெடுத்த இதம்.
மின்னலை விழுங்கி
உயிர்த்த குழந்தை நீ.

முரளிமனோOகர் - ஒரு பின்நவீனத்துவ சிறுகதை முயற்சி(?)


ஆசிரியன் இறந்துவிட்டான். இறந்துபோன ஆசிரியனை எல்லோரும் சேர்ந்து மொத்திக்கொண்டிருந்தார்கள். ஆசிரியனோ, 'நான் அதுவாக நினைத்து எழுதவில்லை, இதுவாகத்தான் எழுதியிருக்கிறேன்' என்று விளக்கங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அது, இது என்கிற பைனரிகளைத் தாண்டி அதுவும் இதுவுமற்ற ஒன்று ஆகியவற்றில்தான் கவனம் செலுத்துவது பின்நவீனத்துவம் என்பதால் யாரும் விளக்கங்களைக் கேட்கத்தயாராயில்லை.

இது ஒரு பின்நவீனச்சிறுகதை என்பதால் நான்லீனியர் முறையில்தான் எழுதவேண்டுமென்று தமிழகத்தின் பின்நவீன எழுத்தாளர்களாகிய வரவணையான், சாருநிவேதிதா, புஷ்பாதங்கதுரை ஆகியோர் தெரிவிக்கின்றனர். ஆனால் ஈழத்தின் புகழ்மிக்க இலக்கியவாதிகளான பெயரிலி, டிசேதமிழன், நிவேதா, தமிழ்நதி, பி.எச்.அப்துல்ஹமீது போன்றோர் நோன்லீனியர் முறையில்தான் எழுத வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். கடைசியில் இந்திய ஈழ இலக்கிய ஒப்பந்த முறையில் நாநோ முறையில் எழுதுவது என்று தீர்மானமாயிற்று.

இந்த ஒப்பந்தம் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்ததென்றும், இனி, 'புகலிட இலக்கியம்தான் தமிழ் இலக்கியத்திற்குத் தலைமை தாங்கமுடியும்' என்று எஸ்.பொ கதைக்கமுடியாது, கதைதான் விடமுடியுமென்று வசந்தன் என்ற எழுத்தாளர் எழுதுகிறார். நநோவோ நேநோவோ தமிழில்தான் பெயர்வைக்கவேண்டுமென்றும் இல்லையேல் மதுக்கடைகளைப் பூட்டும் போராட்டம் நடத்தப்போவதாகவும் மருத்துவர் ராமதாசு அறிவித்துள்ளார். மதுக்கடைகளைத் திறந்துவைப்பதாலேயே இதுபோன்ற புதிய சிந்தனைகள், உளறல்கள், குழப்பங்கள் உண்டாகின்றன என்பது அவரது எண்ணம் (அ) கண்டுபிடிப்பு.

சரி, கதை தொடங்குகிறது. இல்லையில்லை கதை எங்கிருந்தும் தொடங்குவதில்லை. கதை ஏற்கனவே இருக்கிறது என்று மறுபடியும் குறுக்கிடுகிறது பி.ந. வரலாற்றின் அடுக்குகளில் காலம் நழுவிப்பின் செல்லும்பொது கட்டபொம்மன் வாளைச்சுழற்றிக்கொண்டிருக்கிறான்.
வெள்ளைப்பரங்கியரிடமிருந்த வந்த சேதி அவனைக் கோபமுறச்செய்திருந்தது. 'ஆனால் அவன் இஸ்ரேலோடு கள்ள உறவு வைத்திருக்கிறான்' என்னும் ரகசியக்குரல்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே புரவியேறிப்பறந்தான் கட்டபொம்மன். குதிரையை முணுமுணுப்புடன் குளிப்பாட்டிகொண்டிருந்தான் முகமதுயூனூஸ்.

"யாருக்கு வேலைபார்த்தாலும் வேலைபார்க்கலாம், ஆனால் இந்த எழுத்தாள நாய்களுக்கு மட்டும் வேலைபார்க்கக்கூடாது, அதுவும் பின்நவீன எழுத்தாளன்களுக்கு.." என்று புலம்பிக்கொண்டிருந்தான். விதி வலியது என்பதால் அவன் செர்வாண்டீஸ் என்ற பி.ந. எழுத்தாளனிடம் வேலைபார்த்துக்கொண்டிருந்தான். செர்வாண்டீசோ தன் ஆதித்தாயின் தொன்மத்தடங்களைத் தேடியலைவதால் அதற்கெனவே குதிரை வளர்த்துவந்தான். அதைப் பராமரிக்கும் பொறுப்புதான் யூனூசுக்கு.

திடீரென்று முகமதுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. கட்டபொமன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த நேரமும் ஹிட்லர் தூக்கிலிடப்பட்ட நேரமும் ஒரே நட்சத்திரத்திலேயே அமைந்திருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்ட செர் உடனடியாக ஜெர்மனுக்குக் கிளம்பிவிட்டான். (ஒருபுறம் இஸ்ரேலை ஆதரிப்பது, மறுபுறம் யூதர்களைக் கொலைசெய்யும் இட்லரை ஆதரிப்பது அவனின் இரட்டைவேடத்தையே காட்டுகிறது என்று முனிவேலுக்கவுண்டர் என்ற எழுத்தாளர் 'குகை இருட்டு' என்ற இலக்கியப்பத்திரிகையில் எழுதியிருந்தார்.)

அரவிந்தன் ஆலகண்டன் பள்ளியில் படிக்கும்போதே தகப்பன்காளி என்னும் தன் தந்தையின் கையெழுத்தைப் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் போட்டிருந்தார் என்று எழுத்தாளர் முரளிமனோகர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு எழுதிய அரவிந்தனோ முரளிமனோகரின் ஹாபியே மொட்டைக்கடிதாசி எழுதுவதுதான் என்றும் அப்படி ஒருமுறை 'வெடிகுண்டு இருக்கிறது' என்று போலீஸ்டேசனுக்கு எழுதிய மொட்டைக்கடிதாசியில் தெரியாமல் கடைசியில் 'அன்புடன் முரளிமனோகர்' என்று எழுதி மாட்டிக்கொண்டார் என்றும் பதிலுக்குக் குற்றம் சாட்டியிருந்தான்.

இந்த இலக்கியச் சண்டைகளில் சுவாரசியமாகிப்போன முகமதுயூனூஸ் தானும் எப்படியாவது வம்புபேசி எழுத்தாளனாவது என்று கங்கணம் கட்டிகொண்டான். இதற்காக செர்வாண்டீசின் பழைய கையெழுத்துப்பிரதிகளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

அதில் 'டட்ச் ட்ரீட் ஒரு கட்டவிழ்ப்பு' என்ற கட்டுரையில் முரளிமனோகருக்கும் திராவிட விழியான் என்ற எழுத்தாளருக்கும் நடந்த விவாதத்தை முன்வைத்து ஒரு கட்டுரை வரைந்திருந்தான்.

திராவிட விழியான் : டட்ச் ட்ரீட் முறையில் எனக்கொரு சந்தேகம் இருக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு செட் மசாலா போண்டா, ஒரு பாஸந்தி, ஒரு மசால் தோசை சாப்பிடுகிறீர்கள்.
நான் வெறும் மெதுவடை மட்டுமே சாப்பிடுகிறேன். வரும் பில்லை சரிபாதியாக பகிர்ந்துக் கொண்டால் அது நியாயமாகுமா?
அவரவர் சாப்பிட்டதற்கு ஏற்ப அவரவர் தொகையை தருவதே முறை

முரளிமனோகர் : யார் என்ன சாப்பிட்டாலும் பில் மொத்தமாகப் பகிர்ந்து கொள்ளப்படும். ஆகவே யார் வருவதாக இருந்தாலும் வயிற்றில் இடம் வைத்து கொண்டு வாருங்கள் என்று ஒவ்வொரு முறையும் கூறுவேன். இதில் ஒளிவு மறைவே இல்லை.

முரளிமனோகரின் இந்த சொல்லாடல்கள் சமூகசமத்துவத்தை மறுக்கின்றன. சமமற்றவர்களுக்கான சமமற்ற வாய்ப்புகள் என்னும் சமூகநீதியை மறுப்பதால் இது அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தேயாகும்' என்று கட்டவிழ்த்திருந்தான் செர்வாண்டீஸ்.

திடீரென்று செர்வாண்டீசின் பிரதிகளில் தோன்றிய முரளிமனோOகர் 'அந்த பன்னாடைக்கு டட்ச் ட்ரீட்டெல்லாம் தெரியாது, அவனுக்குத் தெரிந்ததெல்லாம்...' என்று கெட்டவார்த்தையில் திட்ட ஆரம்பித்திருந்தார். எப்படி இங்கே போலிமுரளிமனோகர் வந்தார் என்பது முகமது யூனூசுகுத் தெரியவில்லை. ஆனால் பிந்தையப் பிரதிகள் முழுவதையுமே முரளிமனோOகரே எழுத ஆரம்பித்திருந்தார்.

பின்நவீனத்துவ எழுத்தாளன் என்பவன் சினிமாவுக்கு வசனம் எழுதவேண்டும் அல்லது ஏதாவது வாரப்பத்திரிகையில் கிசுகிசு எழுதவேண்டும் என்று நிர்நிர்மாணம் அடிப்படை விதி எண் (295) கூறுவதால் முகமது யூனூஸ் மிட்நைட்கழுகார் என்ற புனைபெயரில் ஒரு வாரப்பத்திரிகையில் எழுதிய கிசுகிசு.

தமிழாய் மணக்கும் ஒரு இணைய இதழ் தன் திரட்டியில் வரும் கட்டுரைகளைத் தொகுத்து 'தி பார்க்' என்ற பெயரில் தொகுப்பாய்க் கொண்டு வருவது தெரிந்ததே. இந்தவாரம் 'தி பார்க்' இதழோடு டூண்டோ சிறப்பிதழ் ஒன்று இலவச இணைப்பாய் வழங்கவுள்ளது'.

பார்ப்பனர்களை ஆதரிக்கும் பாசிச 'உணர்வுகள்'.


மீபகாலமாக 'உணர்வுகள்' என்னும் ஈழத்தமிழர் ஒருவரின் பதிவுகளில் கேட்கும் பாசிசக்கூச்சல்களுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. அவரது பதிவுகள் முழுக்க சைவம், முருகன், வேள்ளாளம் என விபூதிவாசனையே வீசுகிறது. அவசரமாக எழுதுவதால் விரிவாக எழுதமுடியவில்லையெனினும் ஒரு சில கருத்துக்கள் மட்டும்...

ஜடாயு என்னும் இந்துத்துவவாதிக்கு எழுதும் மறுப்பில் வேதம் என்னும் சொல் தமிழில் வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது என்கிறார். முதலில் வேதம் எப்படி 'மறை' யானது? மறைக்கப்படவேண்டியது என்னும் குறிப்பிலேயே மறை என்னும் சொல் உருவானது. கடைசியில் முஸ்லீம்களின் குர்-ஆன் கூட திருமறையாகிப்போனது. திருக்குறள் உலகப்பொதுமறையானது.

செந்தமிழ்-கொடுந்தமிழ் விவாதங்களில் ஜடாயும் உணர்வுகளும் போட்டுக்கொள்ளும் சண்டையோ சகிக்கமுடியாததாயிருக்கிறது. கொடுந்தமிழ் என்னும் பிரிப்பே கரையோரத்தில் வாழும் விளிம்புநிலைமக்களின் மொழியைக் குறிப்பிடுவதற்காக உருவானது. செந்தமிழ் என்பது செம்மையான மேன்மக்கள் பேசும் மொழி. ஜடாயுக்கும் உணர்வுகளுக்கும் எது செந்தமிழ் என்பதை 'நிறுவு'வதில்தான் போட்டியே தவிர விளிம்புநிலைமக்களின் மொழிகளைப் பற்றியதல்ல.

கடைசியாக பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்பதை நிரூபிக்க அவர் முயற்சிக்கும் வாதங்களோ அப்பட்டமான பார்ப்பனச்சார்பு கொண்டதாகவும் முஸ்லீம் மற்றும் கிறித்துவ விரோதமுடயதாகவுமிருக்கின்றன. சமஸ்கிருதத்தை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? அரபியை ஏன் எதிர்ப்பதிலை< லத்தினை ஏன் எதிர்க்கவில்லை? என்கிற புளித்துப்போன ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கேட்கும் கேள்விகளையே உணர்வுகளும் கேட்கிறார்.

அய்யா, தெளிவாகக் கேட்டுக்கொள்ளுங்கள். சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி என்பதால் மட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை, அதற்கு மாற்றாக தமிழ்வழிபாட்டை நிறுவ முயலவில்லை. சமஸ்கிருதம் என்பது எங்கள் உழைக்கும் மக்களை, பார்ப்பனரல்லாத திராவிட மக்களை அடக்கி ஒடுக்கும் பார்ப்பனீயத்திற்கன குறியீடு என்பதாலேயே எதிர்க்கிறோம். அரபிமொழியிலோ லத்தீன் மொழியிலோ எங்களை வேசிமகன் என்று சொல்லவில்லை அய்யா.
பார்ப்பனர்கள் பேசும் அவாள் இவாள் பாசைகளை வட்டாரவழக்குகளோடு ஒப்பிடுவதே அபத்தமானது. அடிபடையில் நீங்கள் முன்வைக்கும் செந்தமிழே வட்டாரவழக்குகளை மறுப்பது. பன்மைத்துவ அடையாளங்களை அழித்து ஒற்றைப்பாசிச அடையாளத்தை நிறுவ எத்தனிப்பது. சரி, அதுபோகட்டும். வட்டாரவழக்குகள் என்பதிலேயும் ஒவ்வொரு சாதிக்கும் கூட தனித்தனிப் பேச்சுவழக்குகள் உள்ளன. ஆனால் தமிழ்நாடு முழுவதும் பார்ப்பனர்கள் பேசும் தமிழ் ஒன்றே. எனவே அவை வட்டாரவழக்குக் கணக்கில் கொண்டுவரமுடியாது.
மேலும் மொழிசிறுபான்மையினரான தெலுங்கு, கன்னடம் பேசும் சாதிகள் பேசும் மொழியும் ஒரேபடித்தானவையல்ல. அருந்ததியர் பேசும் தெலுங்கிற்கும் நாயுடுகள் பேசும் தெலுங்கிற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. மேலும் மொழிச்சிறுபான்மையினர்கூட தன்னைப்போல வேற்றுமொழி பேசுபவர்களைச் சந்தித்தாலே பிறமொழி பேசத்தொடங்குகின்றனர். ஆனால் பார்ப்பனர்களோ கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பலரும் இருக்கும் அவையிலேயே ஆத்துப்பாசை பேசத்தொடங்குகிறார்கள். இதற்குப்பெயர் சிறுபான்மையினருக்கான அடையாளச்சிக்கலோ, தனித்துவத்தைக் காக்கும் வேட்கையோ அல்ல, சாதித்திமிர் மட்டுமே. (சன்டிவியில் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் பேசும் உமாவின் மொழியை உதாரணமாகச்சொல்லலாம்).

ஈழத்தில் பார்ப்பன ஆதிக்கம் கிடையாது. உங்களுக்குப் பார்ப்பன எதிர்ப்பு தேவைப்படாமலிருக்கலாம். ஆனால் இங்கு எங்களுக்குப் பார்ப்பன் ஆதிக்கம் சுமையாயிருக்கிறது. எனவே பார்ப்ப்ன எதிர்ப்ப்பு மிகமிக அவசியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பார்ப்பன மற்றும் சிங்களை மரபிற்கு எதிராகக் கட்டமைக்கவிரும்பும் தமிழ்மரபிற்கு அடிநாதமாக இருக்கவேண்டியது இங்கு நீண்டகாலமாய்ச் செல்வாக்கு செலுத்திய பவுத்த சமண மரபே தவிர சைவ மரபு அல்ல.

தோழர்களுக்கு : ஏதோ சமஸ்கிருத எதிர்ப்பு, தனித்தமிழ், ஈழம் என்று பேசியவுடனே புல்லரித்து உணர்வுகள் போன்ற தூய்மைவாத அடிப்படைவாதப் பதிவாளர்களை ஆதரித்துவிடாதீர்கள். அடிப்படையில் இவர் பேசும் சைவத் தமிழ்த்தேசியத்திற்கும் இந்துப்பாசிசத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர் கட்டமைக்கவிரும்பும் தமிழ்த்தேசியம் என்பது தலித்விரோத, முஸ்லீம்விரோத தமிழ்ப்பாசிசக் கருத்துநிலைதான்.

நீ அகதி, நானோ தேசமறுப்பாளன்


முதலில் நாம் கைகுலுக்கிக்கொள்வோம்.
அது நம்மிருவரின்
பண்பாட்டிற்குப்பொதுவானது
என்று சொல்லப்பட்டது.
உன் வலியை என்னால்
உணரமுடிகிறது.
ஆனால் என்னால் உணரமுடிகிறது
என்பதை உன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
சிறை என்பது கம்பிகளுக்கும் அப்பால்
விரிந்துகிடக்கிறது என்று வாதிடத்தொடங்குவாய்.
உண்மைதான்.
உன் தலைக்குமேல் எப்போதும்
சுற்றிக்கொண்டிருக்கிறது
ஒரு கருப்புநிற காகம்.
உன் காலடிச்சுவடிகளில் சேகரிக்கமுடிகிறது
சப்பாத்துகளின் இடுக்குகளிலிருந்து
தெறித்துவிழுந்த மணல்துகள்களை.
குலுக்கிய கைகளினிடைப்
பாவிப்பரவிய உன் நடுக்கம்
சொல்கிறதுஎன் மொழி மீதான
உன் இகழ்ச்சியும்
என் சொகுசு வாழ்க்கை மீதான
உன் பரிகாசமும்.
நான் ஆறுதல்களையோ நம்பிக்கைகளையோ
கொண்டுவரவில்லை.
என் அன்பைச் சொல்ல விரும்புகிறேன்
அவ்வளவுதான்.
அடிப்படையிலேயே நாமிருவரும்
வேறானவர்கள்.
உனது எதிர்பார்ப்பு
உன் தேசத்திற்கான விடுதலை.
எனக்கோ தேசத்திடமிருந்து விடுதலை.

தொலைவு



ஒரு துரோகிக்கும்
மாவீரனுக்குமான தொலைவு
அடையாளத்துக்காய்
நாய் சிறுநீர் பெய்துபோகும்
இருமின்கம்பங்களுக்கிடையிலான
தொலைவுதான்.
அந்த மின்கம்பங்களில் ஏதாவதொன்றில்தான்
என் அக்கா
விபச்சாரி என்று பெயர்மாட்டப்பட்டு
கொலைசெய்யப்பட்டிருந்தாள்.

காதலை ஆதரிப்போம்!














காதல் என்பது சமூக இருப்பில் தவிர்க்கமுடியாத பாத்திரத்தை எப்போதும் வகித்துவருகிறது.உலகின் எல்லா தத்துவங்களும் வரலாறுகளும் காதலைத் தவிர்த்துவிட்டு நகரமுடியவில்லை. உலகின் சிறந்த சிந்தனையாளர்கள் காதல்வயப்பட்டே வாழ்ந்திருக்கிறார்கள். மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதங்கள்,நாகம்மையின் மறைவுக்கு பெரியார் ஈ.வெ.ரா எழுதிய இரங்கல் கடிதம் ஆகியவை உலகின் தலைசிறந்த இலக்கியப்பிரதிகளில் ஒன்றாய் ஆகக்கூடிய இயல்பைக்கொண்டுள்ளன. நீட்சே தன் வாழ்க்கையில் மூன்றுமுறை காதலித்து மூன்றுமுறையும் தோற்றுப்போனவன்.

காதல் என்பது வாழ்வின் ஆதாரமாகவும் மனித இயல்பின் ஆகப்பெரிய உச்சமாகவுமிருக்கிறது. இன்னொருவகையில் பார்த்தால் இந்தியச்சமூகத்தில் காதல் என்பது அரசியல் நடவடிக்கையாகவும் இருக்கிறது. "அகமணமுறை இந்தியச்சமூகத்தில் சாதியைத் தீவிரமாகப் பாதுகாத்துவருகிறது" என்கிறார் பாபாசாகேப் அம்பேத்கர். சாதியின் இருப்பைக் கேள்விகுள்ளாக்குவதாகவும் ஒற்றைப் பண்பாட்டை மறுக்கக்கூடியதாகவும் காதல் இருந்துவருகிறது. எனவேதான் சாதியை மறுக்கும் யாவரும் காதலை ஒத்துக்கொள்கின்றனர்.

ஆனால் காதலர் தினத்திற்கு இருசாராரிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. சிவசேனா போன்ற இந்துத்துவ இயக்கங்களும் மருத்துவர் ராமதாஸ் போன்ற தமிழ்க்கலாச்சாரவாதிகளும் காதலர்தினத்தை எதிர்க்கின்றனர். இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை காதலர்தினம் என்பது மேற்கத்தியப் பண்பாடு. ஆனால் அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை ஒருபோதும்முன்வைத்தவர்கள் அல்ல. கலாச்சாரத்தளத்தில் மட்டும் மேற்கத்தியப் பண்பாடு வேண்டாம் என்று கூக்குரலிடுவது சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் தந்திரமன்றி வேறில்லை.

ராமதாஸ்போன்ற கலாச்சாரப்போலீஸ்களைப் பொறுத்தவரை மந்திரக்கதைகளிலே ஏழுகடல், ஏழுமலை தாண்டி மந்திரவாதியின் உயிர் ஒரு குருவியின் உடலுக்குள் ஒளித்துவைத்திருபதைப் போல தமிழ்க்கலாச்சாரம் என்பது தொடைகளுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது என்பது அவர்களின் வாதம்.

மார்க்சியர்களும் காதலர்தினத்தை எதிர்க்கின்றனர. அதற்கு அவர்கள் சொல்லும்காரணம் காதலர்தினத்தின் மூலம் வாழ்த்தட்டைகள் ஆகியவற்றை ஏகாதிபத்தியம் சந்தைப்படுத்த முயல்கிறது, நுகர்வுக்கலாச்சாரத்திற்கு அடிமைப்படுத்த முயல்கிறது என்பது. ஆனால் இன்று உலகமயமாக்கல் யுகத்தில் எல்லாமே சந்தையாக மாறியிருக்கிறது. இதைக்காரணம் காட்டிக் காதலர்தினத்தை மறுப்பது நியாயமாகத் தெரியவில்லை.

நுகர்வுக்கலாச்சாரத்தைத் தவிர்த்து சமயப்பண்டிகைகளுக்கு மாற்றாக கதலர்தினத்தைக் கொண்டாடும் வழிமுறைகள் குறித்து யோசிக்கலாம்.
எபடியாயினும் காதல் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. நமது நாட்டார் தொனமங்கள் அனைவருமே காதலுக்காக சாதியை மறுத்து உயிர்விட்டவர்கள். காமமற்ற காதல், தெய்வீகக்காதல் போன்ற கற்பிதங்களிலிருந்து காதலை மீட்டெடுத்து நமக்கான காதலாக மாற்றுவோம். காலமெல்லாம் காதல் வாழ்க!

சுழல்கிறது சுடர்

நண்பர் ஓசை செல்லா இப்போது என் கையில் சுடரைத் தந்திருகிறார். காண்க..

http://osaichella.blogspot.com/2007/02/blog-post_11.html

உங்கள்எழுத்துக்களுக்கு inspiration யார்?

கவிதைக்கு யவனிகாசிறீராம். மற்றபடி கட்டுரைகளுக்கு பெரியார், அ.மார்க்ஸ், சாருநிவேதிதா போன்ற பலர்.


2. தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்கள் இவ்வளவு செயற்கைத் தனமாக இருக்க யார் காரணம்?


தமிழ்ச்சினிமாவே செயற்கையாக இருக்கும்போது கதாநாயகர்கள் மட்டும் பாவம் என்ன செய்வார்கள்?


3. கவிதையின் விதை ?

ஏதோ ஒரு பொறி, அல்லது ஈரத்துளி, அல்லது சிலவேளை முத்தச்சிலிர்ப்பு.


4. நிதர்சனத்தின் நிசப்தங்கள் என்ற தலைப்பில் சில வரிகள்எழுதுங்களேன்?


நிசப்தமாய்க் கிடக்கிறது இரவு.
ஒருவேளை சுவர்க்கோழி மட்டுமே
அந்த இரவைச் சிதைத்துக்கொண்டிருக்கலாம்.
என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது.
தெரியும் நிலையில் இல்லை நான்.
பின்னிரவின் உறக்கத்தில்
சிவப்பாய்க் கவிந்த
கொடுங்கனவின் இடையில்
விழித்து அலறுகிறேன்.
இப்போது இரவு சிதைந்திருக்கிறது.
சுவர்க்கோழியோ அடங்கியிருக்கிறது.

(அவசரத்தில் எழுதியதால் முழுமை அடையாமல் போயிருந்திருக்கலாம்.)

5. "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" ... அடுத்து என்ன மாற்றம் நிகழ்த்தப் படவேண்டும் என்று நினைக்கிறீர்? ( சமூக மற்றும் இலக்கியக் தளங்களில் ....)


சமூகத்தளங்களில் சாதி ஒழிப்பு, ஆணாதிக்க ஒழிப்பு, தேசியம், ஏகாதிபத்தியம் என்னும் இரு ஆதிக்கப் பெருங்கதையாடல்களிருந்து விடுதலை பெற்று அன்பு, அன்பை மட்டுமே முன்நிபந்தனையாகக் கொண்ட சமூகம் உருவாகுதல், மொத்தத்தில் சுதந்திரம் அடைந்த தன்னிலைகளை உருவாக்குவது. இலக்கியத்தைப் பொறுத்தவரை இன்னும் அதிகமான விளிம்புநிலைமக்களின் வாழ்க்கை பதிவு செய்யப்படவேண்டும். அறிவின் சேகரம் அதிகரிக்கவேண்டும். சமத்துவமும் மனிதவிடுதலையும் நோக்கியதாகவும் சக உயிர்களை நேசிப்பதற்கான மார்க்கமாகவும் இலக்கியம் மாறவேண்டும்.

நன்றி செல்லா.

இப்போது சுடரை வரவணையான் கைகளுக்கு மாற்றுகிறேன். செந்திலிடம் அய்ந்துகேள்விகள்...

1. இன்னமும் திராவிட இயக்கத்திற்கான தேவைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

2. தமிழ்த்தேசியம், ஈழப்பிரச்சினை குறித்து உங்கள் நிலைப்பாடு...

3. காதல் வந்தால் சொல்லி அனுப்புவீர்களா?

4. வலையுலகின் இயங்குதளம் என்னவாய் இருப்பதாய் உணர்கிறீர்கள்?

5. பொதுவாக நீங்களும் நானும் பலசமயம் கொண்டாட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியே வந்திருக்கிறோம். ஆனால் எதுவித வலியையோ அல்லது துயரத்தையோ எதிர்கொள்ளாத மேம்போக்கான மனம் மட்டும்தான் இதை வலியுறுத்துகிறு என்பதாக உணர்ந்திருக்கிறீர்களா?

எதிர் அழகியல் - தமிழ்நதியின் சிறுகதையை பின் மற்றும் முன் தொடர்ந்து...

விளிம்பின் மொழி

மீபத்தில் தமிழ்நதியின் சிறுகதையொன்றைப் படிக்க நேர்ந்தது.
இரண்டுகாரணங்களால் அந்தக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.
1. மய்யப்படுத்தப்பட்ட இலக்கியம், மய்யப்படுத்தப்பட்ட வரலாறு, மய்யப்படுத்தப்பட்ட அரசியல் ஆகியவற்றால் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறது.
2. ஈழத்தமிழர் ஒருவர் விளிம்புகளின் வாழ்க்கையை விளிம்புகளின் மொழியிலேயே நேர்த்தியாகக் கையாண்டிருப்பது.
சமீபத்தில் சாருநிவேதிதாவின் நாவல் 'ராசலீலா'வைப் படித்து முடித்திருக்கிறேன். (உயிர்மை வெளியீடு). இதில் கால்வாசி நாவல் மலம், மலச்சிக்கல், மலங்கழிப்பதிலுள்ள பிரச்சினை ஆகியவற்றைப் பேசுகிறது.
நாவலின் முக்கியக் கதாபாத்திரமான எழுத்தாளன் கண்ணாயிரம்பெருமாள் ஒரு தபால் அலுவலகத்தில் ஸ்டெனோவாகப் பணிபுரிபவன். 9.30 அலுவலகத்திற்கு காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து இரண்டு பேருந்துகள், ஒரு டிரெயின் ஆகியவற்றில் பயணித்து அலுவலகம் செல்பவன். இதனால் அவனால் சரிவரக் காலைக்கடன்களை முடிக்கமுடியாமல் போகிறது. இந்த அவஸ்தையைப் பலபக்கங்களில் பேசுகிறார் சாரு.

மலச்சிக்கல் என்பது வெறுமனே உடலியல் பிரச்சினையோ, மருத்துவப்பிரச்சினையோ அல்ல. உடலைக் காவுவாங்கும் மூலதனப்பசியினால் பாதிக்கப்படும் வர்க்கங்களின் பிரசினை. மேலும் இயற்கை உணவிலிருந்து நம்மைத் துண்டித்து இன்று உலகமயமாக்கல் நமது குடலுக்குள் திணிக்கும் மேற்கத்திய உணவுமுறைகள், நமது நிலங்களைச் சுரண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பசுமைப்புரட்சிப் பம்மாத்துகள் ஆகியவற்றோடும் தொடர்புடையது. குறிப்பாக இன்று கால்சென்டர்களில் பணிபுரிபவர்களின் நிலையை பொருத்திப்பார்க்கலாம்..
அதேபோல க.பெருமாள் மலமள்ளும் சாதியைச் சேர்ந்தவன். சிறுவயதில் மலமும் அள்ளியிருக்கிறான். வளர்ந்து அரசு ஊழியனாகிவிட்ட பெருமாளுக்கு அடிக்கடி ஒரு கனவு வரும்.ஊர்த்தெருக்களிலுள்ள பீயையெல்லாம் அள்ளிவாரிக் கூடையில் போட்டுவருகிறான். ஒரு பீச்சந்தில் முனிசிபாலிட்டி லாரி தயாராக நிற்கும் . அதில் கொண்டுபோய்க்கொட்டவேண்டும். அப்போது திடிரென்று லாரியின் கதவுகள் திறந்துகொள்கின்றன. ஒருலாரி லோடு மலமும் பெருமாளின் மீது சரிகிறது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பெருமாள் அலறுகிறான்.
இத்தகய சித்தரிப்புகள் சாரு போன்றவர்களின் எழுத்துகளிலேயே இடம்பெறும். சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்ற உன்னத தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளில் மறந்தும் இடம்பெறாது. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் நாயகர்கள் மலமே கழிக்கமாட்டார்கள். அவர்கள் இறப்பும் பிணியுமற்ற மேன்மக்கள்.
பெருமாள்முருகனின் பீ சிறுகதை (வேறுவேறு இதழில் வெளிவந்தது. பிறகு அடையாளம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'பீக்கதைகள்' தொகுப்பில் இடம்பெற்றது)யும் குறிப்பிடத்தக்கது .நான்கு இளைஞர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்கள். கம்யூனிசம் பேசிக்கழிக்கிறார்கள். உலக இலக்கியம், உலக சினிமாவை அலசுகிறார்கள். அவர்களிடத்தில் அழகான பூப்போட்ட கண்ணாடித்தம்ளர் ஒன்று இருக்கிறது. குடிக்கும்போது யார் அந்த டம்ளரைக் கைப்பற்றுவது என்று அவர்களிடத்தில் போட்டியே நடக்கும்.
இந்நிலையில் அவர்கள் வீட்டு செப்டிங்டேங்கில் ஒரு விரிசல் விழுந்து மலம் கசிய ஆரம்பிக்கிறது. அதைச் சரிசெய்யத் துப்புரவுத் தொழிலாளி வருகிறார். இடையில் அந்த பூப்போட்ட கண்ணாடித்தம்ளர் அந்த தொழிலாளியால் பயன்படுத்தப்படுகிறது. அதற்குப்பிறகு அந்த கண்ணாடித்தம்ளரை யாரும் தொடுவதே இல்லை. அந்த டம்ளரே அவர்களுக்கு மலமாகத் தெரிகிறது.
பெருங்கதையாடல்களின் சப்பாத்துகளினடியில் நசிபடும் விளிம்புகள்


லம், பீ, குசு போன்ற இடக்கரடக்கல் அமங்கல வார்த்தைகள் தமிழ்ச்செவ்விலக்கியங்களில் தடை செய்யப்பட்டிருந்தன. 1992இல் பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையொட்டி இங்கு தலித் இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குமுன் இங்கு இருந்த தீவிர இலக்கிய இதழ்களான மணிக்கொடி, எழுத்து போன்ற இதழ்களில் பார்ப்பன, வெள்ளாள, மற்றும் உயர்சாதி எழுத்தாளர்களே எழுதிவந்தனர்.
தலித் எழுத்துக்களை நிறப்பிரிகை, மேலும், ஆகிய இதழ்கள் வெளியிட்டன. பிறகு கேப்பியார், கவிதாசரண், தலித் ஆகிய இதழ்கள் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தன. இதை ஆதிக்க எழுத்தாளர்களின் பெருங்கதையாடல் மனங்கள் அசூயையுடனே எதிர்கொண்டன.சுந்தரராமசாமி தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என்றார். இன்றளவும் அசோகமித்திரன் (குமுதம் தீராநதி ஜனவரி 2007) தலித் இலக்கியம் பற்றிப் பேசும்போது "ஏதோ இப்போதுதான் தலித்துகள் படித்து என்னவோ எழுதிகொண்டிருக்கிறார்கள்" என்கிற ரீதியிலேயே பேசுகிறார்.

பெருங்கதையாடல்களைப் பொறுத்தவரை அவை மூன்றுபடிநிலைகளில் சிறுகதையாடல்களை ஒடுக்க முயல்கின்றன.
1. அவை இலக்கியமே அல்ல என்று நிராகரிப்பது.
2. அவை இலக்கியம்தான் ஆனால் அவற்றில் அழகியல் இல்லை என்று ஒதுக்குவது
3. இது புதிய சிந்தனையில்லை, இதை நாங்கள் ஏற்கனவே யோசித்துவிட்டோம்(அ) எழுதிவிட்டோம் என்று ஊத்திமூடுவது.
இதற்கு நல்ல உதாரணம் சுந்தரராமசாமி. அவர் அசோகமித்திரனைப் போல அப்பாவிப் பார்ப்பனர் அல்ல. தந்திரமான பார்ப்பனர் தமிழ் இலக்கியத்தில் பெருங்கதையாடல்களின் பிரம்மாண்டம்.

முதலில் தலித் இலக்கியத்தைச் சவடால் இலக்கியம் என்று ஒதுக்கிய சு.ரா. வே பிறகு 'தோட்டியின் மகன்' நாவலை நான் முதலிலேயே மொழிபெயர்த்துவிட்டேன்,. அது தலித் நாவல்தான் என்றார். ஒரு கேரளத்து வெள்ளாளரால் எழுதப்பட்டு பார்ப்பனரால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதி எப்படித் தலித்நாவல் ஆகும் என்று நாம் கேள்விகேட்டால் சு.ரா பதிலளிக்காமல் நழுவுவார்.
விளிம்பின் காலம்

ழகியல் என்பதே இயற்கையானதில்லை. அது கொடுக்கப்பட்டது (given). கட்டமைக்கப்படட்து(constructed). ஆதிக்க வர்க்கங்களே அழகியலைத் தீர்மானிக்கின்றன. இந்திய சாதியச் சூழலில் சுத்தம் x அசுத்தம் என்னும் எதிர்வுகளின் அடிப்படையிலேயே தீண்டாமை வரையறுக்கப்பட்டது. சுத்தமாக இருக்கும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்றும் மலம், சளி, வியர்வை ஆகியவற்றோடு தொடர்புடையவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள்.

இந்தவகையிலேயே அழகியலையும் புரிந்துகொள்ளமுடியும். தலித் இலக்கியப் பிரதிகள், நிலவும் அழகியலுக்கு மாற்றாக எதிர் அழகியலை முன்வைக்கின்றன. பீ, குசு, இன்னும் சில கெட்டவார்த்தைகள் என அழகியலுக்கு எதிரான சொல்லாடல்களைத் தங்கள் பிரதிகளில் தாரளமாய்ப் பிரயோகிக்கின்றன.
என்.டி.ராஜ்குமார், மதிவண்ணன், தய்.கந்தசாமி ஆகிய தலித்கவிஞர்களின் மொழி இப்படியே அமைகிறது. என்.டி.ராஜ்குமார் தனது தெறி, ஒடக்கு ஆகியக் கவிதை நூல்களில் இத்தகைய மொழிநடையையே கையாள்கிறார்.மதிவண்ணனின் நெறிந்து, இருட்டைப்புதைத்த வெளிச்சங்கள் ஆகிய பிரதிகளும் இதே மொழியையே பின்பற்றுகின்றன. உதாரணத்திற்கு மதியின் கவிதை ஒன்று..
"ஒரு ராஜ ரகசியத்தைக்
கேட்கும் பாவனையில்
பம்மிக்குழைந்து
பின் நேரடியாகவே
கேட்பாயென் சாதியை.
பிறகு நானிருந்த இடத்தில்
நாய்மோண்ட கல்லொன்றிருக்கும்"
மாதவிடாயால் பெண்கள் கோவிலுக்கு வரகூடாது என்னும் பார்ப்பனிய,இந்து,ஆண்தன்னிலைகளை இப்படியாகக் கேலிசெய்கிறார்.
"தீட்டாகும் நாளென்று
வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கிறாய்.
குறுகுறுப்புடன் பம்முகிறது கர்ப்பக்கிரகம்.
மீசை இழந்து நிற்கும் தேவனருகில்
தொடைகளைக் குறுக்கிச் சேர்த்து
சங்கடத்துடன் நின்றுகொண்டிருக்கின்றனர்
அந்த தேவியர் அரையிருட்டில்"
மதியின் கவிதைகள் "செத்தமாட்டீரலைச் சுட்டுத்தின்றுவிட்டு என் பாட்டன் இட்ட மணமும் குணமும் நிறைந்த குசுவிலிருந்து எடுத்துக்கொள்கிறேன் என் கவிதைக்கான கச்சாப்பொருளை" என்கின்றன."தமிழ் உனக்கு உயிர்மூச்சாக இருக்கலாம் ஆனால் அதைப் பிறர்மேல் விடாதே" என்று கவிதை எழுதி தமிழ்விரோதப் பார்ப்பனப் பெருங்கதையாடலை முன்வைத்த ஞானக்கூத்தனுக்கு எதிராக "நீ மட்டும் உன் குசுவை என் முகத்தின் மேல் விடலாமா?" என்று கேட்கிறார்.

தய்.கந்தசாமியுடனான ஒரு குடி உரையாடலின்போது விக்கிரமாதித்யன் என்ற வேளாளக் கவி "ப்ள்ளு பறைக்கெல்லாம் கவிதை வருமாடா" என்று வெள்ளாள இறுமாப்புடன் கேட்கிறார். இதற்குத் தன் கவிதையில் பதில் எழுதிய கந்தசாமி, தலித்துகளின் நீண்ட கவி மரபை விளக்கிவிட்டு "ஒன் தாடியிலெ என் பூலை வைக்க...' என்று முடிக்கிறார்.
இன்று தலித் இலக்கியத்தைத் தவிர்க்க முடியாமல் இந்தியாடுடே போன்ற மய்யநீரோட்ட ஊடகங்கள் வெளியிடுகின்றன. சு.ராவின் காலச்சுவடு என்னும் பார்ப்பனப் பத்திரிகை இதுவரை தலித் கவிதைகளை வெளியிட்டதிலையென்றாலும் தலித் படைப்பாளிகளின் நூல்களை விற்றுக் காசுபார்த்துக்கொண்டிருக்கிறது.எதிர் அழகியல், எதிர் அரசியல் ஆகியவற்றை முன்வைக்கும் சிறுகதையாடலாளர்கள் மய்யநீரோட்டத்தில் பங்கெடுப்பதோ, அதிகாரத்தை நோக்கி நகர்வதோ தவறு இல்லைதான். ஆனால் மய்யநீரோட்டத்தின் சந்தைக்கான பண்டமாக மாறிவிடாமலும் பெருங்கதையாடல்களால் செரிக்கப்படமலும் தங்களைக் காத்துக்கொள்ள தொடர்ந்து சமரசமற்ற பொராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.
இது காலம். street dog-அய் பறைநாய் என்று மொழி பெயர்த்த புதுமைப்பித்தனின் காலமில்லை, நாகர்கோவில் அக்கிரகார லவுகீக வாழ்க்கையை வாந்தியெடுத்த சுந்தரராமசாமிகளின் காலமில்லை. தஞ்சாவூர்ப் பார்ப்பன தன்னிலைகள் மட்டுமே தமிழ் உலகம் என்று இயங்கிவந்த தி,ஜானகிராமன்களின் காலமுமில்லை. இது தலித்துகளின் காலம், இது பெண்களின் காலம், பால்மீறிகளின் காலம், உதிரிகளின் காலம், தேசத்துரோகிகளின் காலம், அரசவிரோதிகளின் காலம், வேசிகளின் காலம், இது விளிம்புகளின் காலம். ஆதிக்கத் தன்னிலைகளின் முகத்திற்கு நேரே குசுவிடும் காலம். இப்போது தொடங்கியிருப்பது எழுத்தின் கலகம், கலக எழுத்து.
தயாராகவே இருக்கிறோம்
உங்கள் ஆதிக்கச் சன்னிதானங்கள்
அனைத்தையும் அடித்து நொறுக்க.
தயாராகவே இருக்கிறது
உங்கள் பீடங்களின் மீது
மூத்திரம் அடிக்க
எங்கள் குறி.

காற்றில் நடுங்கிக்கொண்டிருக்கிறது சுடர்



இப்போது மழைபெய்துகொண்டிருக்கிறது. மழையோடு பேச யாருமில்லை. தனியாக பெய்துகொண்டிருக்கிறது மழை. நேரம் செல்லச் செல்ல அதன் கூச்சல் அதிகரிக்கிறது. மீன்கள் செத்து மிதக்கும் குளமொன்றில் கால்பதித்து நீ நடந்துவந்த பாதையெங்கும் ரத்தச்சுவடுகள். வார்த்தைகள் மாமிசமாகும்போது தேவன் பிறக்கிறார். மாமிசம் வார்த்தைகளாக முயலும்போது தேவன் மரிக்கிறார். பறவைகளின் சிறகசைப்பில் பொங்கித் தெறிக்கிறது கடல். உடல்கள் மொழிபெயர்க்கப்படும் பின்னிரவு வேளை. ஒரு திரவகணத்தில் கடவுள் கால் தடுமாறிவிழுகிறார். சாக்கடையில் தத்தளிக்கின்றன பெங்குவின்கள். முத்தமிடக்குவியும் டால்பினின் உதடுகளில் ரத்தத்துளிகள். இருள் உதிக்கிறது. ஒளி நசிகிறது. காலம் கரைகிறது. காத்திருப்பின் தனிமை தகிக்கிறது. உன் தொடைகளில் வழியும் உதிரத்தின் மொழியில் ஒரு சொல் எடு. கன்றிச்சிவக்குமொரு அடிவானத்தின் மடியில் உதிர்வதற்குத் தயாராயிருக்கிறது என் பெயர் சூட்டிக்கொண்ட நட்சத்திரம். சன்னல்களில் துருப்பிடித்துக்கிடக்கிறது காலம். கோப்பை நிறைய ததும்பி வழிகிறது மரணம். எனக்கு அழவேண்டும்போல இருக்கிறது. ஒரு குழந்தையின் சிறுநீர்ச்சூட்டின் கதகதப்பு எனக்குள் மெல்ல இறங்குகிறது. வெடித்துச் சிதறுகிறேன் நான். இப்போது என் முகத்தில் வெதுவெதுப்பாய் வழிவது குழந்தையினுடையதா?...மழை முகத்தில் அறைகிறது. கண்ணீர் கன்னங்களில் வழிந்துகொண்டிருக்கிறது. நீ அழும்போதெல்லாம் மழைவந்துவிடுவதாய்ச் சொல்லியிருந்தாய். இப்போது மழைபெய்துகொண்டிருக்கிறது.

சந்தனாவுக்குச் சில சொற்கள்



கரையில் அலைகள் ஒதுங்கி
நெடுநாட்களாகிவிட்டது,
இப்போது ஒதுங்குவதெல்லாம்
பிணங்கள் மட்டுமே.
உரையாடலின் காலம் முடிந்துவிட்டது.
துப்பாக்கிகள் பேசத்துவங்கிவிட்டன.
இப்போது துப்பாக்கிகள் மட்டுமே
பேசிக்கொண்டிருக்கின்றன.
நீ ஆதர்சத்தோடு
துப்பாக்கிகளைத் தடவும்போது
நான் திடுக்கிட்டுப்போனேன்.
ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போலவோ
காதலனைத் தழுவுவதைப் போலவோ
பிரியமான புத்தகத்தை
முகர்ந்து பிரிப்பதைப் போலவோ
இல்லை அது.
நீ பிணங்களைத் தடவிக்கொண்டிருக்கிறாய்.
இன்னும் சிலபொழுதுகளில்
நீ பிணங்களைப் புசிக்கத் தொடங்கலாம்
அல்லது புணரத்துவங்கலாம்.
சந்தனா, நீ
துப்பாக்கிகளோடு பேசிப்பேசி
துப்பாக்கிகளாகவே மாறிப்போனாய்
மன்னிக்கவும் துவக்குகளாக.