ஈழத்தோழர்களிடம் சூடுபட்ட 'சைவ'ப்பூனை



'மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்' - வள்ளலார் சி.ராமலிங்கர்

உணர்வுகள் என்னும் வலைப்பதிவின் எழுத்துக்களில் வெளிப்பட்ட சைவ வெள்ளாளப் பாசிசக்கூறுகளை அடையாளப்படுத்தியிருந்தேன். அதற்குப் பதில் என்னும் பெயரில் ஆரூரான் ஒரு கதையொன்று விரித்துள்ளார்.
இனி உளறல்களுக்குப் படிக்க...
http://unarvukal-unarvukal.blogspot.com/2007/02/blog-post_19.html
அந்தப் பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள் முக்கியமானவை. குறிப்பாக சார்வாகனின் பின்னூட்டம் என் மனதைக் கவர்ந்தது.
இதில் குறிப்பிலும் குறிப்பான ஒன்று உணர்வுகளின் உளறல்களை மறுத்து வாதிட்டவர்கள் அனைவரும் ஈழத்தமிழர்கள். ஒரே ஒரு ஈழத்தமிழர் கூட உணர்வுகளின் சாதியச் சதிராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பது உண்மையாகவே நெகிழ்வாயிருக்கிறது.
/ Ramani said... /சோழ இளவரசனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு, பிரபாகரன் எதற்காக சோழனின் புலிக்கொடியைத் ஈழத்தமிழர்களின் விடுதலையின் கொடியாக்கினார், அது தமிழ் வீரத்தின் அடையாளம், இப்பொழுது நீங்கள் சோழ இளவரசனை மட்டும் அவமதிக்கவில்லை அவனது புலிக்கொடியையும் சேர்த்துத் தான்.
ஆறுமுகநாவலரின் சாதி அட்டகாசம் மட்டும் கண்ணுக்குத் தெரிகின்ற ஒரு ஈழத்தமிழனுக்கு "யாழ்நகர் பிறந்து தமிழ்காத்தான் எங்கள் நாவலன் இறவாப் புகழ் போர்த்தான்" என்று புகழப்படும் நாவலரது தமிழ்த் தொண்டுகளை உணர முடியவில்லை என்பது கவலைக்குரியது, /
நாவலரின் தமிழ்த்தொண்டை மறுப்பதற்கில்லை. அதானாலேயே, "சும்மா வந்த ஆறுமுகத்துக்கு நாவலன் பெயர் கொடுத்தனுப்பியதாக அலட்டிக்கொள்ளும் சீமான்களோடு இன்னமும் கருவிக்கொண்டிருக்கவேண்டியிருக்கின்றது (சேச்சே எல்லாம் உவே சாமிநாதருடன்தான் சிலருக்கு இங்கே ஆரம்பிக்கவேண்டும் ;-)) ஆனால், அவருடைய சாதி வெறியை அதற்காக அதேயளவு மறுப்பதற்கில்லை. அவரின் சீர்திருத்த சைவத்தின் பண்பாட்டுக்குறிகள் சீர்திருத்துவ கிறீஸ்துவத்தினை (புரொட்டஸ்தாந்து) அதன் வழியிலேயே எதிர்க்கும் அதே வேளையிலே அவருடைய வேளாளவிழுமியங்களை, தமிழகத்திலே பிராமணர்களின் விழுமியங்களே அளவுகோல்மட்டத்து சமூகவிழுமியக்கோவை ஆனதுபோல ஆக்கியதென்பதும் உண்மை. நாடகங்கள், கூத்துகளைக் குறித்து அவரின் பார்வை எங்கிருந்து வந்தது? (சிவத்தம்பி யாழ்ப்பாணம் குறித்து எழுதிய நூலிலே இதைச் சுட்டியிருக்கின்றார்).
சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன். எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டின் அரசர்களுக்கு இலங்கையின் சிங்கள அரசர்களோடுதன் மணக்கொடுக்கல்வாங்கல்கள் இருந்தன. தொண்டைக்காஞ்சியான், மதுரைப்பாண்டியன், காவேரிச்சோழன் எவனையும் எடுத்துப்பாருங்கள். ஆனால், ஈழத்தமிழர்களின் பெயர்களோடு இணைந்திருப்பது, அவ்வரசர்களின் படையாட்களாக வந்தவர்களின் சமூகப்பெயர்களே. வன்னிமை தொடக்கம் ஒவ்வொன்றாய்த் தேடுங்கள். போங்கள். பிரபாகரன் புலிக்கொடியை ஈழக்கொடியாக்கினால், அதற்காக சோழ இளவரசர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொடர்பிருக்கிறதென்று அர்த்தமா? அப்படியாகப் பார்த்தால், வரதராஜப்பெருமாள் மாகாணசபையிலே நந்திக்கொடியை ஏற்றியதைப் பார்த்திருக்கிறேன். அப்போது ஈழத்தமிழருக்கும் மகேந்திரபல்லவனுக்கும் பேரர் பூட்டன் உறவா? செவிவழிக்கதைகளையும் ஆதாரத்துடனான வரலாற்றையும் கொஞ்சம் உமி, அரிசி பிரித்து நாம் பேச வேண்டாமா? மருமக்கள் முறையிலே சொத்தினைப் பிரித்தல், உணவுப்பழக்கவழக்கம், உடைப்பழக்கவழக்கம் உட்பட்ட பண்பாடு, சொற்பயன்பாடு எல்லாவற்றையும் பார்த்தால், சேரருக்கும் மலையாளிகளுக்குமே ஈழத்தவர் நெருங்கி வருவார். ஈழவருக்கும் ஈழத்தவருக்கும் ஒரே அடியா என்று ஓர் ஆய்வு செய்து பார்க்கவேண்டாமா? குமரி எல்லை கிட்டவா? காவேரித்துறை கிட்டவா? ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தினாலே பின்பட்டவர்கள். வழக்கம்போல, அவர்களை நெடுங்கால ஈழச்சரித்திரத்துள்ளே இழுக்காதீர்கள். அவர்களைச் சோழரோடும் தொடர்பு படுத்தாதீர்கள்.
இப்பின்னூட்டம் தோன்றுமென நம்புகிறேன். அல்லாவிடினும், கவலையில்லை.
February 19, 2007 9:19 PM சீலன் said... தலைவர் பிரபாகரன் கூட ஐயர் வைத்து அருந்ததி பார்த்துத் தான் திருப்போரூரில் திருமணம் செய்து கொண்டார்,
அது 84 இல்.. 2007 இல் ஐயரே இல்லாமல் தான் புலிகளிடத்தில் திருமணம் நடக்கின்றது. காலத்திற்கு ஏற்ப மாற பிரபாகரனால் முடிகிறது. ஆனால் ஒரு சிலரால்.... (தில் இருந்தால் இந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்கவும்)
February 19, 2007 9:21 PM Anonymous said... Another very good article. I understand you might have done heavey home work. Nice effort, well said...
February 19, 2007 9:27 PM கரு.மூர்த்தி said... மிகமிக ஆழ்ந்த அருமையான கட்டுரை , மிதக்காமல் நிதானமாக இருக்கும் போது அவர் படிக்கட்டும் , திரும்ப வருகிறேன் .
February 19, 2007 9:29 PM தமிழ்நதி said... உணர்வுகள்! நீங்கள் ஒரு கருத்தை முன்வைக்கும்போது அதை ஈழத்தமிழர்கள் அத்தனை பேருடைய கருத்தும் என்ற தொனிப்பட வைக்கிறீர்கள். அது சரியல்ல. தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துண்டு. குறிப்பாக,
"ஈழத்தில் எந்த முஸ்லீமும் தன்னைத் தமிழனாகக் கருதுவதில்லை. அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அவ்வளவுதான்."
"புத்தர் எங்களுக்குப் பாசிசத்தின் அடையாளம்"
"நாற்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழர்கள் விட்டொழித்த சாதீயத்தையும்"
"அதை விட எங்களின் அழுக்கை மற்றவர்களிடம் காட்டக் கூடாதென்ற மரியாதை கூடத் தெரியவில்லை."
போன்ற அபத்தமான கருத்துக்களுடன் ஈழத்தமிழர் என்பதற்காக எல்லோரும் உடன்படுவார்கள் என்பதில்லை.
உங்களுக்கெதிராகக் கருத்துச் சொல்பவர்களை நீங்கள் வசைபாடுவது வழமை என்பதறிந்தும் பேசாதிருக்க முடியவில்லை. காரணம் உங்கள் கருத்துக்களை நீங்கள் ஒரு இனத்துக்கேயுரியதெனப் பொதுமைப்படுத்துகிறீர்கள். அது பிடிக்காமல்தான் இந்தப் பின்னூட்டம்.
February 19, 2007 9:29 PM unarvukal said... //சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள்.//
திரு.ரமணி,
இப்பொழுது நேரமாகி விட்டது நாளைய பதிவைப் பாருங்கள்.
நன்றி.
February 19, 2007 9:35 PM unarvukal said... தமிழ்நதி,
என்னுடைய கருத்துக்கள் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் தானிருக்குமல்லவா, முடிந்தால் உங்களின் அனுபவத்தை எதிர்க்கருத்தாக எழுதுங்கள்.
February 19, 2007 9:38 PM Ramani said... பார்த்துக்கொண்டிருக்க எனக்கும் நேரமில்லை ராசா. விரும்பிய நேரத்திலே போடுங்கள். எனக்கும் நேரம் கிடைத்தால் பாக்கிறேன்.
February 19, 2007 9:39 PM Anonymous said... This post has been removed by a blog administrator. February 19, 2007 9:48 PM ஏமாறாதவன் said... அய்யா,
தங்கள் பதிவுகள் உணர்வுகள் என்னும் வைரம் பூசிய உண்மை என்னும் வாளாக இந்த ஆதிக்கவெறியரகளை தாக்குகிறது.
தங்கள் தமிழக ஈன சாதி ஆதிக்க கட்டுப்பாட்டுக்காக இவர்கள் பார்ப்பன, தலித் முஸ்லிம் என்று சாதி கூறு போட்டு அரசியல் செய்கிறார்கள். இந்த மிதக்கும் அபத்தங்களை சாக்கடையில் தூக்கியெறியுங்கள். ஈழத்து மக்களின் சமுதாய சமத்துவ பாண்மையும் உணரவும் ஏற்கவும் இந்த "வெளி"க்கி களுக்கு தெரியாது. அல்ல.. புரியாது
February 19, 2007 9:57 PM ரூபன் said... //Ramani said... பார்த்துக்கொண்டிருக்க எனக்கும் நேரமில்லை ராசா. விரும்பிய நேரத்திலே போடுங்கள். எனக்கும் நேரம் கிடைத்தால் பாக்கிறேன்.//
What kind of attitude is this? You asked him the question and now you behave like this. """"சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்.""""
I think aaruran live in Canada and it is midnight there, that's why he probably can't answer to you now.
February 19, 2007 10:09 PM Ramani said... /What kind of attitude is this? You asked him the question and now you behave like this. """"சோழ இளவரசனுக்கு ஈழத்தமிழருக்கும் என்ன தொடர்பென்று நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன்.""""
I think aaruran live in Canada and it is midnight there, that's why he probably can't answer to you now/
ruban or whover you are, why don't you use the same logic to me?
February 19, 2007 10:37 PM சார்வாகன் said... இந்த பின்னூட்டத்தை நீர் போடலாம் போடாமல் விடலாம் ஆனால் நான் ஒன்று கேட்கிறன் உமக்கு ஈழம்தொடர்பான தற்போதைய நிலவரங்கள் தெரியுமா? பிரபாகரன் அய்யர் வைத்து தாலி கட்டினாப்போல அது சரியா(அவர் செய்தாப்போல அது சரியெண்டிறீரோ)? அட அவரே அது பிழை எண்டு தன்ர போராளிகளுக்கெல்லாம் உறுதி மொழி எடுத்துக்கொண்டு தாலிகட்டினா சரி எண்டிறார் நீர் எண்ணண்டா புலிகளுக்கு சைவ முத்திரை குத்திக்கொண்டிருக்கிறீர்.
நீங்கள் யாழ்ப்பாணத்து உயர்சைவவேளாள குல மனோநிலையிலை நிண்டு கொண்டு கதைக்கிறதை கைவிடுங்கோ சரியொ.
முஸ்லிம்கள் தமிழற்ற முதுகில குத்தினவங்கள் சரி. தமிழர் ஒரு சொப்பின் பாக்கோட முஸ்லிம்களை ஓட ஓட விரட்டேல்லயோ அப்ப அதை எண்ணண்டு சொல்லுவீர்.அப்ப நீர் பேசிறது தமிழ் இனவாதம் எண்டு சொன்னால் ஏற்றுக்கொள்ளுவீரோ? நீர் சொன்னாலும் சொல்லாட்டியும் முஸ்லீம்கள் ஒரு தனிப்பட்ட இனம்.நீர் உப்படி தமிழ் இனவாதம் பேசிக்கொண்டிருந்தார் எல்லா இனத்தவனும் அவனவன் இனவாதம் கதைப்பது சரியெண்டாகும் தெரியுமோ?
நீர் உம்மட தனிப்பட்ட கருத்துக்களை எல்லாம் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் கருத்தெண்டிறமாதிரி சொல்லி எல்லா ஈழத்தமிழரயும் சிந்திக்கதெரியாதவங்கள் எண்டு நினைக்கப்போறாங்கள் மற்றவங்கள்.
திராவிடத்தில ஈழத்தமிழருக்கு உடன்பாடும் நம்பிக்கையும் இல்லையோ இல்லாமலோ பின்ன திராவிடன் இலங்கேஸ்வரனை ஆரியன் இராமன் வெல்லுறதோ என்று இராமாயணத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கிறார்கள் அங்கே நீர் எத்தனையாம் ஆண்டு.இருந்தனீர்? சும்மா கேள்விப்படுகிற மாய வதந்திகளை வைச்சக்கொண்டு கதைக்க வெளிக்கிடக்கூடாது.அல்லது நீர் எதன்வாயிலாக அங்க நடக்கிற விசயங்களை அறிஞ்சு கொள்ளுறனீர்? இதற்கான விடைகளை நீர் இந்த பின்னூட்டத்தை வெளியிட்டால் தாரும் நான் தங்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.
சைவத் தமிழர் எண்டிறீர் புலிகள் பொங்கல் விழாவைத்தவிர வேறேந்தப் பண்டிகையையும் ஏற்றுக்கொள்ளுறேல்லை எண்டாவது தெரியுமொ உங்களுக்கு சும்மா சைவக்கதையும் எங்களிடம் சாதி ஒழிஞ்சு போச்சு தெண்டு மேற்பூச்சுக்களை நம்பி வெளிக்கிடாதேஙகோ கதைக்க.
February 20, 2007 12:27 AM தமிழ்நதி said... "என்னுடைய கருத்துக்கள் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் தானிருக்குமல்லவா, முடிந்தால் உங்களின் அனுபவத்தை எதிர்க்கருத்தாக எழுதுங்கள்."
நான் சொல்லவேண்டியதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். அபத்தங்களை விபரித்தால் அன்றேல் விரிவாக எழுதினால் அது'விரிவான அபத்தமாகவே'இருக்குமல்லால் வேறொன்றுமல்ல. நீங்கள் ஈழத்தமிழர்களிடையே சாதீயப்பிரச்சனை இல்லை என்பதும், முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல என்பதும், புத்தர் பாசிசத்தின் அடையாளம் என்பதும், உள்ளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளிக்காட்டக் கூடாது மூடிவைக்க வேண்டும் என்பதும்... அது உங்களுடைய அனுபவத்தினூடே பெற்றது என்பதும்... என்ன சொல்ல? நல்லவேளை எனது அனுபவங்கள் அபத்தமான புரிதல்களுக்கு, முடிவுகளுக்கு இட்டுச்செல்லவில்லை என்பதையிட்டு மகிழ்வடைகிறேன்.
தவிர, இந்த விளம்பர விளையாட்டுக்களில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது. நன்றி. ஒரேயொரு கேள்வி. பெரும்பாலும் உங்களுக்குச் சார்பாகப் பின்னூட்டமிடுகிறவர்களின் பெயர்களைத் தொடர்ந்தால் url not found என இல்லாத ஊரில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவது எப்படி?
February 20, 2007 1:34 AM unarvukal said... //ஒரேயொரு கேள்வி. பெரும்பாலும் உங்களுக்குச் சார்பாகப் பின்னூட்டமிடுகிறவர்களின் பெயர்களைத் தொடர்ந்தால் url not found என இல்லாத ஊரில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவது எப்படி?//
தமிழ்நதி,
ஒவ்வொரு பின்னூட்டத்திற்குப் பின்னாலும் யாரோ பின்னணியில் உள்ளனர் என்பது மட்டும் உண்மை. தனக்குத்தானே பின்னூட்டம் இடும் பழக்கம் என்னிடம் இல்லை. பின்னூட்டங்களைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை.
யாருடனும் போட்டிக்காகவும், பிரபலமடையவும் நான் பதிவுகள் செய்வதில்லை. உம்முடைய நோக்கம் அதுபோல் தானிருக்கிறது. என்னுடைய பதிவுகளின் தரத்தை எனக்குச் சார்பான எத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை வைத்துக் கணிக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் கிடையாது.
நன்றி.
February 20, 2007 5:52 AM bala said... //என்னுடைய பதிவுகளின் தரத்தை எனக்குச் சார்பான எத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை வைத்துக் கணிக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் கிடையாது//
உணர்வுகள் அய்யா,எனக்குத் தெரிந்து உங்களுக்கு மட்டுமல்ல,நிறைய பேருக்கு இந்த சிறுபிள்ளைத்தனம் கிடையாது,லக்கியைத் தவிர.ஆனா லக்கி தான் சிறு குழந்தை ஆயிற்றே,அதனால் பரவாயில்லை.
பாலா
February 20, 2007 6:08 AM Hanuman said... //யாருடனும் போட்டிக்காகவும், பிரபலமடையவும் நான் பதிவுகள் செய்வதில்லை. உம்முடைய நோக்கம் அதுபோல் தானிருக்கிறது. என்னுடைய பதிவுகளின் தரத்தை எனக்குச் சார்பான எத்தனை பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதை வைத்துக் கணிக்கும் சிறுபிள்ளைத்தனம் என்னிடம் கிடையாது.//
சரியான வாதம்கிறுக்கன் எல்லாம் பின் நவீனதுவம் பீ மலம் கழிசடை போன்ற வார்த்தையை போட்டு எழுது நீயும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லி கொடுத்து திரியாரானுங்க.
ஆருரான் அடிச்சி ஆடுங்க
February 20, 2007 6:42 AM கொழுவி said... //நாற்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழர்கள் விட்டொழித்த சாதீயத்தையும்//
நாற்பது வருடங்களுக்கு முன்பு ஈழத்தை விட்டு வெளியேறியவர்களின் குழந்தைகள் அவ்வாறு தான் சொல்லுவார்கள். சமாதான காலங்களிலாவது ஈழத்துக்குப் போய் நிலவரங்களை அறிந்து வந்திருக்கலாம். இணையத்தில் ஈழத்தை அறிந்தவர் பாடு இதுதான்.(தில் இருந்தால் இந்தப் பின்னூட்டத்தையும் விடவும்.)
February 20, 2007 10:07 AM unarvukal said... பின்னூட்டங்களைத் திருத்தும் வழி தெரியவில்லை. அதனால் தயவுசெய்து கடுஞ்சொற்களை உங்கள் பின்னூட்டத்தில் பாவிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
February 20, 2007 10:23 AM Hanuman said... //பின்னூட்டங்களைத் திருத்தும் வழி தெரியவில்லை. அதனால் தயவுசெய்து கடுஞ்சொற்களை உங்கள் பின்னூட்டத்தில் பாவிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.//
என் முதல் பின்னோட்டத்தை இது குறிப்பதாயின் ஒரு விளக்கம்
தமிழ்நதியின் எழுத்தை மெருகேற்ற இந்த மிதக்கும்வெளி(?) பீ குசு மலம் எல்லாம் போட்டு எழுத்தில் கடுகை தாளிப்பது போல் இருக்கவேண்டும் என்று அறிவுரை(?) சொன்னதை நான் குறிப்பிட்டேன்
.
/


மற்றபடி உணர்வுகளை ஆதரித்து ஜால்ரா போடவர்கள் எல்லாம் எல்லோருடைய பதிவிலும் போய் சாதியத்திற்கும் பார்ப்பனீயத்தீரற்கும் ஆலோலம் போடும் தமிழ்நாட்டுப் பார்ப்பனக்குஞ்சுகள். இவர்கள் சாதிவெறியர்களை ஆதரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

அதிலும் ஹனுமான் என்னும் ஒரு இந்துத்துவ வானரம் தன்பாட்டிற்கு வந்து குரங்காட்டம் ஆடியிருக்கிறது. தமிழ்நதியின் எழுத்துகக்ளை நான் தவறாக வழிநடத்துவதாகவும் கிறுக்கன் என்றும் பலவாறாகப் பிதற்றியிருந்தது.
பெயரிலி, மதிகந்தசாமி, நிவேதா, வசந்தன், அற்புதன், சயந்தன் போன்ற பல தனித்துவமிக்க பதிவாளர்களைப் போலவே தனக்கென எழுத்தாளுமை கொண்டவர் தமிழ்நதி. அவரது பல பதிவுகள் ஈழத்தமிழர்களையும் தாண்டி படித்துப் பாராட்டப்பட்டவை. மேலும் தமிழ்நதியின் எல்லாப் பதிவுகளையும் நான் வரன்முரறையின்றிப் பாராட்டியதுமில்லை. அவரது பல கவிதைகள் வெறும் ஸ்டேட்மேண்டாக முடிந்துபோகிற போதாமை போன்ற பலகுறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

குறிப்பாக அவரது 'அந்த எசமாடன் கேக்கட்டும்' சிறுகதை விளிம்புநிலையிலிருந்து பேசியதாலேயே அதுபற்றி எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எதிர் அழகியல் தொடர்பான அந்தக் கட்டுரையைப் பலரும் பாராட்டவே செய்தனர்.ஆனால் நான் தமிழ்நதியின் படைப்பொன்றைப் பாராட்டியதாலேயே அவர் சாதியை எதிர்க்கிறார் என்கிற ரீதியில் கிறுக்கத்தனமாய் எழுதிச்சென்றிருக்கிறது அனுமான் குரங்கு.

தமிழ்நதி சொன்னதே போலவே அதன் வால் யூ.ஆர்.எல்லைத் தொடர்ந்துபோனால் அது இருக்குமிடமே தெரியவில்லை. வரலாற்றின் துயர்மிக்கக் காலங்களில் ஈழத்தில் தன் வாலால் தீ பற்ற வைத்தது அனுமான் குரங்கு. அந்த ஈழத்து நெருப்பின் மிச்சமும் நந்தனை எரித்த சைவ நெருப்பின் மிச்சமும் ஜோதியில் அய்க்கியமாக ஜோராய் எரிகிறது சா'தீ'. அண்ணாமலைக்கு அரோகரா.

சரி இனி உணர்வுகளின் உளறல்களைப் பார்ப்போம்.

/இவருடைய வெறுப்பெல்லாம் இந்து மதத்தில் தான், அப்படியென்றால் இவர் யாராக இருப்பார், இவருடைய உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. இந்த மாதத்தில் இத்தனை தமிழர்களை மதமாற்றம் செய்தேன் எனக் கணக்குக் காட்டாது விட்டால், இவருக்கு வெளிநாட்டிலிருந்து மாதாந்தம் வரும் காசோலை சொல்லாமல், கொள்ளாமல் நின்று விடலாம். :)/

ஆகமொத்தம் நான் முஸ்லீம் என்றே முடிவுகட்டிவிட்டார் ஆரூரன்பிள்ளை(யார்?). நான் பிறந்த சாதியையும் மதத்தையும் நன்கு அறிந்த நெருங்கிய நண்பர்கள் இதற்கு வாயால் சிரிக்கமாட்டார்கள்.

/பார்ப்பனர்கள் தமிழர்களா இல்லையா என்று நான் ஏன் நிரூபிக்க வேண்டும், பார்ப்பனர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அவர்களுக்குப் பின்னால் வந்த முஸ்லிம்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளும் போது, அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? /

தன் பதிவுமுழுக்க முஸ்லீம்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்றே சைவத்திமிரில் எழுதிச்செல்கிறார். உங்கள் இந்துப் பார்ப்பனீய வெள்ளாள சாதிக்கொடுமை தாங்கமாட்டாமல்தான் முஸ்லீம்களாய் மாறியவர்கள் பறையரும் பள்ளரும் அருந்ததியரும். எங்கோ கனடாவில் அமர்ந்துகொண்டு எங்கள் முஸ்லீம் சகோதரர்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்கிறீர்களே, இதற்குப் பெயர்தான் வெள்ளாளக் குசும்பா? (எல்லாப் புலம்பெயர்ந்த தமிழர்களையும் இழிவுபடுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. அப்படி உங்களைப் புண்படுத்துவதாகக் கருதினால் மன்னிக்க வேண்டுகிறேன். )

/மிதக்கும் ஐயா, எங்களுக்கும் பிராமணர்களுக்கும் பிரச்சனைகளில்லை என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். /

அதுசரி உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது? மதுரை ஆதினத்திற்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன பெரிய சண்டை வந்துவிடப் போகிறது. ஈழத்தில் பார்ப்பன ஆதிக்கம் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியாது. அதெற்கெல்லாம் சேர்த்துத்தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறீர்களே?

/பசும்பொன் தேவரின் நினைவு மண்டபத்துக்கு ஒரு மைல் தள்ளி நின்றாவது மிதக்கும் அண்ணாச்சியால் சாதியை எதிர்த்து துண்டுப் பிரசுரம் கொடுக்க முடியுமா? /

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சாதிக் கலவரம் நடந்தபோது திராவிடர்கழக மாணவரணி சார்பில் வாயிற்கூட்டம் நடத்திக் கள்ளர்வெறியர்களிடம் கல்லடி பட்ட அனுபவங்கள் எனக்கு உண்டு. சிங்களக் காடையர்களுக்கெதிராக துப்பாக்கி தூக்கி களத்தில் இறங்கிய அனுபவங்கள் உங்களுக்கு உண்டா?

/ஈழத்தமிழர்களின் தமிழ்மரபுக்கு அடிப்படை பெளத்த மரபென்று, யாராவது நல்ல மது வெறியிலுள்ள ஈழத்தமிழர்களுக்குக் கூடச் சொல்லிப் பாரும், அவரே காறித்துப்பி விட்டு எழுந்து போய்விடுவார்/

உறுபசி போக்க உணவுப்பாத்திரம் சுமந்து திரிந்த மணிமேகலையை, போரை மறுத்த அசோகரை, தியானத்திற்கு இடையூறாய் இருக்கிறதென்று இமைகளை வெட்டியெறிந்த தம்மகீர்த்தியைத் தந்தது பவுத்தமரபு. ஆனால் உங்கள் சைவமரபோ பிள்ளைக் கறியை ருசித்து அடியாரின் மனைவியைத் தனக்குக் கூட்டிக் கொடுக்கக் கேட்ட 'அற்புத மர'பு.

ஏதோ சந்திரிகா செய்யும் பாவங்களுக்கெல்லாம் சங்கமித்திரைதான் காரணம் என்று சொல்வதுபோல இருக்கிறது உங்கள் வாதம். ஜே.வி.பி ஒரு இனவெறி பிடித்த அடிப்படைவாத இயக்கமாக இருக்கிறது என்பதற்காக காரல்மார்க்சைக் குற்றம் சொல்ல மடையனுக்குத்தான் தெரியும். புத்தரை மறுத்து சைவமரபை வலியுறுத்த விரும்புபவனுக்கு மதுவெறி தேவையில்லை. சைவ வெள்ளாள சாதிவெறி போதையே போதும்.

கடைசியாக நீங்களும் நானும் பேசும் மொழி ஒன்றாக இருந்து தொலைப்பதனால் ஒரு தனிப்பட்ட கேள்வி. சகமனிதனையே மனிதனாக அங்கீகரிக்காத இந்துமதத்தையும் சைவ வெள்ளாள சாதித்திமிரையும் தூக்கிப் பிடிக்கும் உங்களுக்கு சிங்களப்பேரினவாதத்தை எதிர்ப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

9 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    பழைய புராணங்கள், சில ஆராய்ச்சி நூல்கள் என்பவற்றை அறிந்திருக்கிற அளவுக்கு அவருக்க ஈழத்து நடப்புக்கள் தெரியாது.
    அதைவிட மிகக் கேவலமான முறையில் பின்னூட்டங்களை ஒளித்துவைத்துக்கொண்டிருக்கிறார்.
    முக்கியமான பல பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை.
    இதிலிருந்தே தெரிகிறது இவரின் கருத்துக்கு இவரிடம் எவ்வளவு நம்பிக்கையிருக்கிறதென்று.

    இதோ இந்த மறுப்புப் பதிவையும் வாசித்துப் பாருங்கள்.

    ஆட்டக்கடிச்சு மாட்டக் கடிச்சு பிரபாகரனையும்...

  2. Anonymous said...

    அங்கிருந்து எடுத்த பின்னூட்டங்களை அப்படியே இங்குப் பிரதி பண்ணியிருக்கலாமே?
    ஏன் பிறகு எழுத்துருமாற்றியில் போட்டு மாற்றினீர்கள்?
    ஆங்கில எழுத்துக்கள் convert பண்ணப்பட்டுள்ளதே?

    பதிவைத் திருத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.
    அவர் பல பின்னூட்டங்களை அனுமதிக்கவில்லை போல் தெரிகிறது. வன்னியன் பதிவில் பெயரிலியும் சொல்லியுள்ளார். அவையும் வெளிவந்திருந்தால் இன்னும் சரியான விவாதமாக இருந்திருக்கும்.

  3. அற்புதன் said...

    வணகம்,

    இந்தப் பதிவையும் பாருங்கள்.

    http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_21.html

    ஈழத்தில் சாதியம் பற்றி புலிகள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று.

  4. மிதக்கும்வெளி said...

    /அங்கிருந்து எடுத்த பின்னூட்டங்களை அப்படியே இங்குப் பிரதி பண்ணியிருக்கலாமே?
    ஏன் பிறகு எழுத்துருமாற்றியில் போட்டு மாற்றினீர்கள்?
    ஆங்கில எழுத்துக்கள் convert பண்ணப்பட்டுள்ளதே?/

    மாற்றியாகி விட்டது, சரிதானே?

  5. மிதக்கும்வெளி said...

    /
    இந்தப் பதிவையும் பாருங்கள்.

    http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_21.html

    ஈழத்தில் சாதியம் பற்றி புலிகள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று/




    வாசித்தேன். நன்றி. உங்கள் 'பின்நவீனத்துவப் பேப்படங்காட்டுதல்' பதிவு படித்தேன். விவாதம் தொடங்கவேண்டிய நல்ல பதிவு அது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது சோகமானதுதான்.

  6. Anonymous said...

    மிதக்கும்வெளி,

    இப்பதிவுக்கு தொடர்புடைய இன்னொரு பதிவு இது :

    http://dravidatamils.blogspot.com/2007/01/blog-post_25.html

    திராவிட இயக்கத்தின் மீது 'தமிழ் சைவ' இயக்கத்தின் பெயரால் சேறு வீச முயலும் நவீன பார்ப்பனீயவாதிகளின் உண்மையான நோக்கத்தைக் கட்டவிழ்க்கும் பதிவு அது.

  7. Anonymous said...

    இப்பதிவுக்கு தொடர்புடைய இன்னொரு பதிவு இது :

    http://www.satiyakadatasi.com/?p=81#comments

  8. மிதக்கும்வெளி said...

    நியோ அதைப் படித்தேன். அது ஒரு மோசமான பதிவு. திராவிடத்தமிழர்களுக்கு விரைவில் மறுப்பு எழுதுகிறேன்.

  9. மிதக்கும்வெளி said...

    அனானி

    அது நம்ம ஷோபாசக்தியுடையதுதானே. இப்போது 'வேலைக்காரிகளின் புத்தகம்' என்ற பெயரில் கட்டுரைத் தொகுப்பாகவே வந்திருக்கிறதே (கருப்புப்பிரதிகள் வெளியீடு)