இந்துத்துவவாதிகள்தான் இந்தியத்தேசியத்தின் காவலர்களா?
/9:42 PM
arunagiri said...
பூங்காவில் பொய் பூக்கத்தொடங்கி, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் இன்று காழ்ப்புக் காடாக மாறி விட்டிருக்கின்றது.
இடதுசாரித்தனம் என்பது பற்றிய வரலாற்றுப்புரிதலும் சிந்தனை அறிவும் எள்ளளவும் இல்லாத கூட்டம் ஒன்று ஈவேராவின் வெறுப்புக் குப்பைகளை ஆசிரியர் குழு என்ற முகமூடியில் விதைத்து வருகிறது.
சிறுகுழுக் கலாசாரப்பாதுகாப்பு, சூழலியற்கண்ணோட்டம், மகளிர் மேம்பாடு போன்ற இடதுசாரி சிந்தனைகளை இயல்பாகவே கொண்டுள்ளது இந்து மரபு என்பதனை அடிக்கோடிட்டது இடதுசாரி இந்துத்துவம் என்ற எனது திண்ணைக் கட்டுரை.
இடதுசாரித்தனம் என்பது மார்க்ஸிஸ்டுகளின் வெற்று கோஷங்களிலும், மாவோயிஸ்டுகளின் வன்கொலைவெறியிலும், பொய்பூக்கும் பூங்காவின் பெரியாரிச மடைமையிலும் இல்லை.வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் பசுமையின் மீதான பரிவில் இருப்பது அது. மொழியையும் நாட்டையும் பெண்களாய் உருவகித்து உயர்விப்பது இடதுசாரிச் சிந்தனை.
எங்கோ உள்ள தீவின் கரும்புத்தோட்டத் தொழிலாளர்களின் கஷ்டங்களுக்காகக் கண்ணீர் சிந்தியது இடதுசாரி உள்ளம்.
முன்னும் பின்னும் முரண்படப்பேசி,
ஆதிக்க சக்திகளுக்கு அடிவருடிக்கொடுத்து, ஆங்கிலேயருக்கு கால் பிடித்து விட்டு, பொறுக்கித்தனமும் ரவுடித்தனமும் தினமும் செய்து 'நாயும் பிழைக்கும் இந்தப்பிழைப்பு' என்பதற்கேற்ப அரசியல் மைனர் வேலை நடத்தி வந்த பெரியாரிசத்துக்கு
தேசியம் கேவலமாகத்தான் தெரியும்.
இந்த மண்ணாங்கட்டிகளுக்கு வலதுசாரித்தனம் பற்றிய அறிவும் கிடையாது இடதுசாரித்தனம் குறித்த தெளிவும் கிடையாது. முள்ளமாரித்தனம் உண்டென்று சொல்லுங்கள், ஒப்புக்கொள்கிறேன்.
9:42 PM
Vajra said...
பூங்கா, அதன் தலை முதல் வால்வரை புரையோடிக்கிடக்கிறது இந்திய தேசிய எதிர்ப்பு. சே குவேரா போன்ற போதை மருந்துக்கு அடிமையானவனையெல்லாம் ஹீரோ வாக்கும் இந்த கூட்டம் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் கூடாரம். அவர்கள் ஸ்டராடர்ஜி பட்டிக்காட்டில் வேலை செய்யாததால் வலையில் recruitment செய்துகொண்டிருக்கிறார்கள்.
தேசவிரோதம் என்று மொண்ணையாகச் சொன்னால் போதாது. மக்கள் விரோதம், இந்து மத விரோதம், இந்திய யூனியனுக்கு எதிரி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
They are basically the mouth piece of Separatist groups and naxalites.
இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் தயவு செய்து பூங்கா வலையிதழுக்கு தங்கள் படைப்புகளை வெளியிட சம்மதம் தெரிவிக்காமல் இருக்கும்படி கேட்டுக்கொள்வது தான் இப்போது நாம் செய்யக்கூடிய ஒன்று. கண்டிப்பதனால் ஒன்றும் நேரப்போவதில்லை.
10:18 PM
Hari said...
சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, மார்க்ஸீயம், கம்யூனிஸம், பார்பனீய பண்பாட்டு ஆதிக்கம் இப்பிடி ஏதாவது ஒரு தலைப்பு வைத்தால் உடனே அது பூங்காவில் பூக்கும். சுத்த அடிவருடித்தனம். இந்திய தேசியம் பேசுவதை வெறுக்கும் இவர்கள் தங்கள் இந்திய பாஸ்போர்ட்டை எரிக்கட்டும்.
சீனாவிற்கோ, ரஷ்யாவிற்கோ, ஏன் பாகிஸ்தானிற்கோ செல்லட்டும்.
Jataayu, I stand with you
10:18 PM
Anonymous said...
தமிழ் திரட்டியின் நிர்வாகிகள்தானே இந்த நச்சு வனத்தையும் நடத்துகிறார்கள் ? இந்திய தேசியத்தில் அக்கறை உள்ள பதிவர்கள் எல்லோரும் ஏன் தங்களது கடுமையான கண்டனங்களை இந்த நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கக் கூடாது ? இவர்களது இழிவான நோக்கங்களை இனம் கண்டு அன்றே இவர்களைப் பற்றி பல பதிவர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். எனினும் தங்கள் பதிவுகள் நீக்கப் படுமோ என்ற அச்சத்தில் பல பதிவர்களும் இவர்களது தேசத் துரோக போக்கைக் கண்டும் காணாதது போல் செல்கிறார்கள். துணிந்து கண்டித்த உங்களது துணிவிற்குப் பாராட்டுதல்கள். "எனி இந்தியன்" என்ற பெயர் இருப்பதால் அந்த இணைய புததகக் கடையையே புறக்கணிக்க வேண்டும் என்று எழுதிய தீவீர இந்திய வெறுப்புப் பிண்டங்கள்தான் இன்று இந்த நச்சுப் பூங்காவை நடத்துபவர்கள். இத்தனைக்கும் இந்தியாவின் கல்வி நிலையங்களில் படித்து விட்டு வந்து, இந்தியாவின் தலைச்சிறந்த கல்வியையை பெற்று விட்டு இன்று ஊண்ட வீட்டுக்கே துரோகம் செய்யும் நன்றி இல்லாத ஜென்மங்கள் இவர்கள். இன வெறுப்பு, இந்திய வெறுப்பு, இந்து வெறுப்பு இவை மூன்றுமே இவர்களின் தாரக மந்தீரங்கள். இவர்களை எதிர்த்து நான், பி கே சிவகுமார், லெப்டினட் வந்தியத்தேவன், முகமூடி போன்றோர் தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் இத்தனை வருடங்கள் இந்தத் இந்திய தேசத் துரோகிகளை எதிர்த்து எழுதியதை இன்று நீங்களும் புரிந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி, உங்களைப் போன்ற உணர்வு ஒவ்வொரு பதிவருக்கும் ஏற்பட்டு இவர்களுக்கு கடுமையான கண்டனங்கள்ளையும் எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டும். இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசிடம் இவர்களது தேசத் துரோக நடவடிக்கைகளை எடுத்துச் சென்று இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டியது நம் அனைவரது கடமையுமாகும்.
அன்புடன்
ச.திருமலை
11:02 PM
ஜடாயு said...
// குழலி / Kuzhali said...
பார்ப்பனிய எதிர்ப்பு என்பது இந்திய தேசிய எதிர்ப்பா? //
இப்படி நான் சொல்லவில்லை. நான் மேற்கோள் காட்டியிருக்கும் பதிவு தான் இப்படிச் சொல்லியது.
// அப்படியே இந்திய தேசியத்தை எதிர்த்தால் தான் என்ன தவறு... இந்திய தேசியத்தை எதிர்ப்பதற்கான நியாயங்கள் இருக்கத்தானே செய்கின்றன. //
இங்கே உங்கள் முகத்திரை கிழிகிறது. ஸோ, உண்மையில் இந்திய தேசியத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் எதிரி. இதை நேரடியாகச் சொல்லாமல் பார்ப்பனீயம், அது இது என்று ஏன் ஜல்லியடிக்க வேண்டும்?
இந்தியர்களுக்கு தேசத்துராகிகளை இனம் காண வசதியாக இருக்கும் இல்லையா?
// .. இன்று அமெரிக்காவின் கீழுள்ள இந்த அரசில் தான் இந்தியர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. அமெரிக்க தேசியம் தான் உலகின் மிக //
நீங்கள் இந்திய தேசத்திற்கு எதிரானவர் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால் இந்த வாதமே அர்த்தமற்றது. இந்தியா நாசமாய்ப் போக வேண்டும் என்று நினைக்கும் உங்களிடம் அதன் ஒற்றுமை, முன்னேற்றம், இறையாண்மை இவை பற்றி மேலே சொன்னது போன்ற அபத்தங்களின் அடிப்படையில் நான் வாதம் புரிய விரும்பவில்லை.
11:17 PM
அரவிந்தன் நீலகண்டன் said...
தமிழ்மணத்திரட்டியின் சேவையை நாங்கள் பெறுகிறோம். அதே போல தமிழ்மணமும் எங்கள் பதிவுகளை பெறுகிறது. ஆனால் பூங்கா என்பதை பொறுத்தவரையில் அது கெட்ட நாற்றமடிக்கும் இடதுசாரி வெறியர்களின் தொழுவமே அன்றி வேறல்ல. அதனை நடத்துபவர்கள் மனிதகுல விரோதிகள். சக மனிதர்களை கொன்று தின்று இரத்தம் குடிக்கும் மார்க்சிய கொலைகாரர்களின் இரத்தம் இவர்கள் கைகளிலும் நாற்றமெடுக்கிறது. உக்ரைனிலும் சீனாவிலும் இறந்த குழந்தைகளின் இரத்தத்தையும் திபெத்தில் கொல்லப்பட்ட/படும் பௌத்தர்களின் இரத்ததையும், மேலும் பாரதத்தின் ஆந்திரா முதல் சட்டீஸ்கர் வரையிலும் கொல்லப்படும் வனவாசிகளுடைய இரத்தத்தையும் நக்கி சப்புகொட்டியபடி விகாரமாக இளிக்கும் மிருகங்களே பூங்காவின் ஆசிரியக்குழுவில் இருப்பதாக நான் கருதுகிறேன். அவர்களுக்கு குறைந்தபட்ச மனிதத்தன்மைகூட இல்லை என கூறுகிறேன்.
11:20 PM
Hari said...
வன்னிய நாடு கேட்காமல், தனி தமிழ் தேசம் கேட்குமளவுக்கு இறங்கி வந்திருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சிக்குறியது. யார் கண்டார், சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்பார்களே, அது போல தான் இதுவும் என்று நினைக்கிறேன்.
பிரிவினைவாதத்திற்க்கு இவர்கள் உடனே காரணமாக கொள்வது காவிரி. தனி தமிழ் தேசம் குடுத்துவிட்டால் மட்டும் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமா? உங்கள் தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்க்கு செய்த காரியங்களின் பலனைத் தான் நாம் எல்லோரும் அனுபவிக்கிறோம். பிரச்சனை என்னவென்று தெளிவில்லையா இல்லை தெரிந்து கொள்ள விருப்பமில்லையா?
11:21 PM
அரவிந்தன் நீலகண்டன் said...
குழலி நீங்கள் இப்படிப்பட்ட மாங்கா மடையர் என நான் நினைக்கவில்லை. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
11:25 PM
ஜடாயு said...
அரசியல், சமூகம், மதம் பற்றிய விஷயங்களில் கருத்து வேறுபாடு என்பது இருக்கலாம். ஆனால் இந்திய தேசத்தின் இறையாண்மையைக்கு ஊறு விளைவிக்கும் கருத்துக்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்தும், அவற்றைப் பரப்பியும் வருவது ஏன் என்று சொல்ல இந்தியர்களைப் பெரும்பான்மை படைப்பாளர்களாகவும், வாசகர்களாகவும் கொண்ட ஒரு ஊடகம் கடமைப் பட்டுள்ளது.
இங்கே நடக்கும் விவாதத்தின் அடிப்படையில் தமிழ்மணம் மற்றும் அதன் ஆசிரியர் குழுவுக்கு ஒரு கேள்வியை வைக்கிறேன் -
இந்திய தேசத்தின் இறையாண்மை, இந்திய அரசியல் அமைப்பு, இந்திய ஜனநாயகம் இவற்றுக்கு எதிரானதா தமிழ்மணம்?
தமிழ்மணம் என்ற வலைதிரட்டியில் தங்கள் பதிவுகளை இணைத்திருக்கும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியப் பதிவர்கள் அனைவரும் கூட்டாகவோ அல்லது தங்கள் பதிவுகளிலோ தமிழ்மணத்திடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று கோருகிறேன்.
11:31 PM
அரவிந்தன் நீலகண்டன் said...
ஓகோ அன்புமணிராமதாஸும் மாறனும் பாலுவும் ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் தான் பின்புறத்தில் பெவிகால் போட்டு ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களோ? இப்படி பச்சையாக புளுக உங்களுக்கு வெட்கமாயில்லையா குழலி? அது எங்கே இருக்கப்போகிறது...ஈவெரா கும்பலுக்குதான் மானம் ரோசம் எல்லாம் கிடையாதே...கோவிலுக்கு போன பொண்டாட்டியை நண்பர்களிடம் 'ஊருக்கு புதிசா வந்த தாசி' என சொல்லுகிற கீழ்த்தர புத்தி உள்ளவனை பகுத்தறிவு தந்தை என்கிற ஆசாமிகளுக்கு இந்தியா மீது எப்படி பாசம் வரும்./
தமிழ்மணப்பூங்கா தனது ஆசிரிய உரையில் சில இடதுசார்புக் கருத்துக்களை வெளியிட்டதால் அது இந்தியத் தேசியத்திற்கு எதிராகச் செயல்படுகிறது என்று பதிவெழுதியுள்ள ஜடாயு என்கிற இந்துப்பாசிஸ்டிற்கு ஆதரவாக பிற பாசிஸ்ட்கள் எழுதியுள்ள பின்னூட்டங்கள்.
இந்தப் பின்னூட்டங்களின் சாராம்சம் இதுதான். ' இந்தியத் தேசியம் என்பது புனிதமானது, அதைக் கேள்வியே கேட்கக்கூடாது. அதை விமர்சிக்கும் 'பிரிவினைவாதிகள்' அபாயமானவர்கள். தமிழ்த்தேசியவாதிகளும், மார்க்சியர்களும் பெரியாரியர்களும் ஜனநாயகத்திலும் மக்களின் நலனிலும் அக்கறையற்றவர்கள். வன்முறை விரும்பிகள். சரி, சில ஆதாரங்களைப் பார்ப்போம்...
இந்துத்துவவாதிகளின் தேசபக்தி யாருக்கானது?
"பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பதே தேசபக்தியாகவும் தேசியமாகவும் சொல்லப்பட்டது. இந்தப் பிற்போக்குத்தனமான பார்வை பல்வேறு அழிவை நோக்கிய விளைவுகளுக்கு வித்திட்டது"
- கோல்வால்கர் (கோல்வால்கரின் சிந்தனைக்கொத்துகள் பக்கம் 143)
"இந்துச்சமூகத்தை ஒழிக்கவிரும்புபவர்கள் சாதி, பெண்ணடிமை, கல்லாமை ஆகியவற்றைச் சாடுவர். தர்மன், அர்ஷன், புலிகேசி ஆகியோரது காலத்தில் இவையெல்லாம் (சாதி, பெண்ணடிமைத்தனம் முதலியன) இருக்கத்தான் செய்தன. ஆனாலும் அன்று நாம் வெற்றிகள் குவித்தோம். எனவே இன்றைய இழிவுகளுக்குக் காரணம் மேற்கூறியவையல்ல, தேசிய உணர்வு இல்லாததே இதற்கெல்லாம் காரணம்"
- மேற்குறித்த நூல்
"சனநாயகம், சமத்துவம் என்ற பெயர்களில் இங்கே திறமையின்மை தலைவிரித்தாடுகிறது. உதவி, மான்யம் என்ற பெயரில் தேசச்சொத்துக்கள் விரயமாக்கப்படுகின்றன. இந்துதர்மம் நிலைநாட்டப்படவேண்டும். இந்துதர்மத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இந்துதர்மத்தை ஏற்றுக்கொண்டு இந்துமயமாகவேண்டும்"
- அதேநூல்
இந்தியாவைத் துண்டாடியது யார்?
"இஸ்லாமியர் பெரும்பான்மையுள்ள சிந்துக்கு அப்பாலுள்ள பகுதிகளும் வடமேற்கு மாகாணமும் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டு, அங்கு ஒரு முசல்மான் அரசு உருவாக்கப்படவேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கும் இங்குள்ள முஸ்லீம்கள் அங்கும் போய்விடவேண்டும்.
_ பரமானந்தர் (1933ல்...)
"இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருதவேண்டியதில்லை. இந்து - முஸ்லீம் என இருதேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன"
- சாவார்க்கர் (1937ல்...)
ஆனால் இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்ததோ லாகூர்மாநாட்டில் 1940ல்தான்.
இந்துத்துவமும் சனநாயகமும்
"இன்றைய பசி, பட்டினி, பஞ்சம், அதர்மம் ஆகியவற்றிற்குக் காரணம் இந்திய அரசியல் சட்டத்திலுள்ள சனநாயக அம்சங்கள்தான்"
- முத்தானந்தா
"பிரிட்டிஷார் இந்திய ஆட்சியை நேபாளமன்னரிடம் கொடுத்துவிடுவது நல்லது"
- சாவர்க்கர்.
" உலகமெங்குமுள்ள இந்துக்களின் இதயத்தில் ஆட்சி செலுத்துபவர் நேபாளமனன்ர் வீரேந்திரர்"
- பாபர்மசூதி இடிக்கப்படட் 1992, டிசம்பர் 6ல் ஆர்.எஸ்.எஸ் இதழான பஞ்ச ஜன்யம் இதழின் புகழாரம்.
ஏகாதிபத்தியமும் இந்துத்துவமும்
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பாரதீயஜனதாக் கட்சியின் ராஜ்யசபைத்தலைவர் சிக்கந்தர்பகத் அமெரிக்கக் காங்கிரசில் பேசினார். அமெரிக்க வெளியுறவுக்கொள்கையை உருவாக்குவதில் பங்குவகிக்கும் 'சர்வதேச அமைதிக்கான கார்னெஜி அறக்கட்டளை' அவரை வரவேற்றது.
மேற்கண்ட கூற்றுக்கள் பேரா. அ.மார்க்சின் 'இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு' நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இனி எனது சில கருத்துக்கள்
இந்தியத்தேசியம் என்பதே அடிப்படையில் பார்ப்பனீயக் கருத்தியல், இந்தியத்தேசம் என்பது பார்ப்பனீயக் கட்டமைப்பு. எனவே இந்தியத்தேசியத்தை விமர்சிக்காமல் பார்ப்பனீயத்தை விமர்சிக்க முடியாது.
இந்தியா என்பது எந்த வரையறையின்படியும் ஒரு நாடு இல்லை. பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பே. அந்த கூட்டமைப்பு என்பதும் உரிமைகளை மதிக்கிற, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்கிற புரிந்துணர்வுடன்கூடிய கூட்டமைப்பாக இருக்கவேண்டும். ஆனால் இந்திய அரசு, போலீசு, ராணுவம் ஆகியவை அந்தத் தன்மையில் அமையாததால் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை ஆதரிக்கவேண்டியது சனநாயகச் சக்திகளின் கடமை.
தமிழ்த்தேசியம் உள்ளிட்ட தேசிய இனங்களின் தேசியம் இந்துமத ஒழிப்பு, சாதி எதிர்ப்பு பார்ப்பனீய எதிர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தாதுபோனால் அதுவும் இந்தியத்தேசியம் பார்ப்பனீயத்தேசியமாக இருப்பதைப்போலவே ஒரு துணைப்பார்ப்பனீயமாகவே இருக்கும்.
தேசியம், தேசபக்தி என்பதை குறியீடுகள், போர்வெறி, கண்மூடித்தனமான விசுவாசம் ஆகியவற்றிலிருந்து பிரித்து மக்கள் நலன், உழைக்கும் மகக்ளின் வாழ்க்கை ஆகியவற்றோடு பொருத்திப்பார்க்கிறோமெனில் இந்துத்துவமும் இந்துத்துவ இயக்கங்களும் வெளியிலிருந்துவந்த ஏகாதிபத்தியச் சக்திகளுக்குச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மகக்ளின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைக் காட்டிக்கொடுக்கிற தேசவிரோத இயக்கங்களே.