கடவுளைக்கொன்றவன்


கண்ணப்பநாயனாரின்கண்களை நசுக்கி
தாண்டவமாடத்
தொடங்கினான் ருத்ரன்.
சித்தார்த்தன் தன் பயணத்தைத் தொடங்கியிருந்தான்.
அவனின் ஒரே ஒரு மௌனப்புன்னகையில்
அங்குலிமாலாவின் கழுத்து
மலர்களால் நிறைந்தது.
சரயுநதிக்கரையில்
கிருஷ்ணனின் பிணம்
மிதக்கத் தொடங்கியபோது
என் தங்கை
புத்தனைப் பிரசவித்திருந்தாள்.

1 உரையாட வந்தவர்கள்:

  1. Osai Chella said...

    naan rasiththa aazamaana varikaL!