என்றான பிறகு...

பூக்களால் நாம்பேசிக்கொண்டிருந்த
பொழுதுகளில்நம் கடிதங்களே
வாசமடித்தனஎழுத்துப்பிழைகளோடு.
பேருந்து தவிர்த்துசுட்டுவிரல்
பிடித்து நடைபயணித்த பொழுதுகள்கவிதை
எழுதுவதற்காய்வீணடித்த பொழுதுகளை
விடச் சுகமானவை.
அன்றொருநாள் பேருந்தில்படாமல்
அமர்ந்தபோது நீ கேட்டாய்"நான் ஒன்றும்
தீண்டத்தகாதவள் இல்லையே?"
இன்று நான் படாமல்உன்
சுடிதாரைச் சுருட்டிக்கொண்டு
விலகி அமர்ந்ததன்
காரணம்விளங்கவேயில்லை எனக்கு.
நான் பரிசளித்த சாவிவளையம்வாங்க
மறுத்த நீவீடு
சென்றுஅழுதிருக்கலாம்
யாருமறியாது.
சூழலால் நீ என்னை உதறினாயெனினும்நீ
என்னை நிராகரித்ததை
விடவும்அதிர்ச்சியாயிருக்கிறதுநீ
யாரிடம் பொய் சொல்கிறாய்?


ஒரு குறிப்பு : தினம் ஒரு பதிவை யாருக்காவது சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன். முதல் பதிவு 'ரெண்டுலார்ஜ் வலதுசாரி' பாலபாரதிக்கு

அடுத்த வலைப்பதிவாளர் சந்திப்பு

டீ, போண்டா (அ) செமினார் பிஸ்கட்,
அப்புறம் பெரிசுகளின்
அறிவுரை இம்சைகள்
எல்லாம் முடிஞ்சா
ஈகிள் பார்.
அடுத்தநாள் காலையில்
முதல் வேலை
'வலைப்பதிவாளர் சந்திப்பு'- பதிவு
போடணும்.
வரப்போகும் பின்னூட்டங்கள்
வருவதற்கு முன்பே தெரியும்
" ஆகா நான் அன்று
சென்னையில்தானே இருந்தேன்.
ஒரு அருமையான கூட்டத்தை
மிஸ் பன்ணிட்டேன்"

கணவன் என்ற மிருகம்

விசாரிப்புகள் ஏதுமற்று
அருகில் படுத்துக்கொண்ட
உன் கரங்கள்
என் இராவுடையைத் துளைத்துக்கொண்டு
நெளிந்து தீர்கின்றன.
வட்டுடையின் கொக்கியைக்
கழற்றவும் அவகாசமற்ற
உன் தீவிரத்தால்
தனங்களில் அரும்பிநிற்கின்றன
உன் பதிவின் கசப்பாய்
சில ரத்தத்துளிகள்.
எல்லாம் முடிந்து எழுந்த நீ
உணவு மேசையில்
உருட்டிய பாத்திரங்கள்
வந்து விழுந்தன
என் செவிப்பறையின் மெல்லியபுலன்களில்.
ஒரு ஆணுறை போலவே
என்னைப் பொருத்தியும்
கலைத்தும் போட்டு
களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
எனக்குப் பசித்தது.

ஆதிக்கசாதி நாய்களுக்கு...

நேற்று எம்
முன்னோரின் பெயர் சூட்டவும்
வழித்தெறிந்தீர்கள் பேருந்துகளிலிருந்து
உங்கள் தலைவன்களின் பெயர்களை.

இன்று நாங்கள்
இழுப்பதற்கெனக் கைவைத்தால்
நடுத்தெருவில் நாதியற்று
விட்டுப்போயிருக்கிறீர்கள்
சாமியையும் தேரையும்.

நாளை உம் தெருக்களில்
அத்துமீறி நுழைகையில்
கைவிட்டுப் போவீரோ
உம் தெருக்களை.

" ஈராக் நீதிபதி ஒரு குடிகாரர்" - ஜெயலலிதா தாக்கு!

வீட்டிலும் டென்ஷன், வெளியிலும் டென்ஷன். சற்று ரிலாக்ஸாக டி.வி. பார்க்கலாம் என்று டிவியைப் போட்டால், ஜெயாடிவி செய்திகள்.
" முன்னாள் தமிழக முதல்வர், புரட்சித்தலைவி, அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி. ஜெயலலிதா இன்று காலை விடுத்த அறிக்கை.
'ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்குத் தூக்கு தண்டனை விதித்த நீதிபதி குடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்துதான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று எனக்கு நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. கறுப்பு எம்.ஜி.ஆர், பச்சை எம்.ஜி.ஆர் என்று தனக்குத் தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு மனிதரைப் பார்த்துத்தான் நீதிபதி கெட்டுவிட்டார். இதன் பின்னணியில் கருணாநிதியின் மைனாரிட்டி திமுக அரசு இருக்கிறது என்றும் தெரிகிறது. சிக்கன்குனியாவையே கட்டுப்படுத்தமுடியாத கருணாநிதியின் மைனாரிட்டி அரசு மரணதண்டனையையா தடுக்கப்போகிறது? முன்னாள் அதிபர்கள், முன்னாள் முதல்வர்கள் என அனைவரையும் பழிவாங்கத்துடிக்கும் சதியின் ஒரு அங்கம்தான் இது என்பதை மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்"
இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது:-
"முதல்கில் என்னைக் குடிகாரன் என்றார் அந்த அம்மா. இப்போது ஈராக் நீதிபதியைக் குடிகாரன் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவர் நிதானத்தை இழந்திருக்கிறார் என்று தெரியவில்லையா? அவர் அறிக்கை விடுவதற்கு முன்பு பாரின் ஜின் குடிப்பார் என்று எனக்கும் நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. இரண்டு கட்சிகளையும் நீங்கள் மாறி மாறிப் பார்த்துவிட்டீர்கள். ஒருமுறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஈராக்கில் மொத்தம் 53 நீதிமன்றங்கள் இருக்கு. ஆனால் ஒயின்ஷாப்போ 3021தான் இருக்கு...."
இன்று முரசொலியில் வெளிவந்த கருணாநிதியின் கவிதை
உடன்பிறப்பே
மதுமயக்கம் மதுமயக்கம் என்று
மதிமயக்கத்தால் உளறுகின்றார் ஒரு அம்மையார்.
மைனாரிட்டி அரசு என்று நம்மையும் ஏசுகின்றார்.
புயலொன்று இப்போது தன் புடவைக்குள்
இருக்கிறது என்ற மமதையும் கூட.
வங்கக்கடற்கரையில் உறங்கும்
நம் அண்ணன் அறிவான்
நாம் பங்கமற்றவர்கள் என்பதை"
இந்த கடிதம் குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ அளித்த பேட்டி
" கோபாலபுரத்தார் என்னையும் தேவையில்லாமல் வம்பிக்கிழுத்திருக்கிறார். வம்புச்சண்டைக்குப் பயப்படாத வரிப்புலி மதிமுக என்பதை அவர் மறந்துவிட்டார். இன்று ஈராக் நீதிமன்றம் வரை கோபாலபுரத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. சதாம் தவறாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்படித்தான் கிரேக்கத்திலே ஸ்பார்ட்டகஸ் தண்டிக்கப்பட்டார். ரோமாபுரியிலே சாக்ரடிஸ் தண்டிக்கப்பட்டார். கலிலியோ தண்டிக்கப்பட்டார். ஏன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே வைகோ பொய்க்குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டானே..(ஆ ஊ யேய்..ம்ம்ம்(கர்ஜிக்கிறார்))
இந்த தொல்லை தாங்காமல் திநகர் இந்திபிரச்சாரசபாதெரு பக்கம் வாக்கிங் போனால் அங்கே வாசலில் நின்றுகொண்டு சன் டிவிக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறாஎ விஜய.டி.ராஜேந்தர்.
" அனனிக்கு ஈராக் மக்கள் சொன்னாங்க சதாம், சதாம்
இன்னைக்கு ஈராக் நீதிபதி சொல்றார் கதம், கதம்.
நீதிபதி அடிச்சது சரக்கா?
அம்மா சொல்றதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?
கலைஞர்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க அம்மா
அதெல்லாம் வெறும் சும்மா"
அப்போது அந்த பக்கமாக வந்த சிம்பு டென்ஷனாகி.." லூஸு அப்பா,லூஸு அப்பா, லூஸு அப்பா லூஸுத்தனமா உளறி ஏன்யா உயிரை எடுக்கிறே...(பாடிக்கொண்டிருக்கும் போதே நயன் தாராவிடமிருந்து போன் வர ஜெர்க் ஆகிறார்.)
போனில் நயன்: காப்பாத்துங்க..காப்பாத்துங்க. சரத்குமார் அடுத்த படத்திலயும் ஜோடியா நடிக்க கூப்பிடறார்.

கட் பண்ணினால் ராதிகா வீடு (பின்ன என்ன சரத்குமார் வீடா?)
சரத் சோகமாக புடவைகளை அயர்ன் செய்துகொண்டிருக்கிறார். ராதிகா உள்ளே வந்து " ஆபிஸ் போகணும். புடவையை அயர்ன் பண்ணிணீங்கினா இல்லையா?
சரத் : ஏன் ராது விரட்டுறே? நான் தான் வேலைப்பளு அதிகமாயிருக்குன்னு கட்சியில இருந்துகூட விலகிட்டேனே. நயன் தாரா வேற என்னோட நடிக்க மாட்டேங்குது. ராது வேற யாரை ஜோடியாப் போடலாம்?
ராதிகா : யாரை வேணும்னாலும் போடுங்க. படம் என்ன ஓடவாப்போகுது?

அப்சாலுக்கு நீங்கள் உதவ வேண்டுமா?

அப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டும் என்ற பொதுப்புத்தியின் இரைச்சல் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அப்சால் விவகாரம் குறித்து தமிழில் ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக்கிறது.
நூலின் பெயர் : முகம்மத் அஃப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?
இந்நூலிலுள்ள மொழிபெயர்ப்புக்கட்டுரைகளை எழுதியவர் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தவரும் ,தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம், பெண்ணியம், சிறுபான்மையினர் பிரச்சினைகள், இந்துத்துவ எதிர்ப்பு ஆகியவற்றிற்காக தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்துள்ள என் நேசத்துக்கிரிய நண்பன் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
விலை : ரூ 25
புத்தகம் வேண்டுவோர் கவனத்திற்கு:
கருப்புப்பிரதிகள்,
45அ இஸ்மாயில் மைதானம்,லாயிட்ஸ் சாலை, சென்னை- 5
செல் : 944272500
நூலின் முக்கியப் பகுதிகள்...

. 'காவலில் வைக்கப்பட்டோர் மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கழகம் (spdpr)என்னும் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலே இந்நூல் அமைந்துள்ளது. நூலிலிருந்து சில பகுதிகள்..
"நான் மரணதண்டனையை ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் விஷ ஊசி மூலம் மட்டுமே கொல்லப்பட வேன்டுமெனவும் என் வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் கூறியதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மூலம் அறிந்தேன். என் வழக்கறிஞரின் இக்கூற்று என் மேல் முறையீட்டையே கேலிக்குரியதாக்கிவிட்டது."
- அப்சால் எஸ்.ஏ.ஆர்.கீலானிக்கு வழக்காடுவதற்கான அகில இந்திய குழுவிற்கு எழுதிய கடிதம்

"நீதிவிசாரணை தொடங்கும் முன்பே காவல்துறையினர் அவரைச் சித்திரவதை செய்தார்கள். வாயில் மூத்திரம் கூட அடித்தார்கள். இவற்றை நான் வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஆனால் சந்தர்ப்பச்சூழ்நிலை என்னை இதைச் சொல்ல வைத்துவிட்டது. என் ஆறுவயது மகனுக்காக இதைச் செய்கிறேன்"
- அப்சாலின் மனைவி தபஸ்ஸூம் குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில்..

"நீதிவிசாரணை முழுவதும் அப்சால் தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கக்கோரி நீதிபதியைக் கேட்டுக்கொண்டே இருந்தார். வழக்குரைஞர்கள் பலரின் பெயரையும் கூட அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அவர்களனைவரும் அவருக்காக வாதிட மறுத்துவிட்டர்கள். நேர்மையான நீதிவிசாரணையை உறுதி செய்வதைக் காட்டிலும் ஒரு காஷ்மீரியைச் சாகவிடுவதே பெரிய தேசபக்தி என இந்திய வழக்குரைஞர்கள் நினைத்ததற்காக அப்சாலையா குற்றம் சாட்ட இயலும்?
-காஷ்மீர் தலைவர்களின் கூட்டுத்தீர்மானத்தில்...

ஒருகாலத்தில் (1975) மகாவீர்ஜெயந்தியைக் காரணம் காட்டி மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று இயக்கம் நடத்திய பாரதிய ஜனசங் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி இன்று அப்சால் தூக்கிலிடபப்ட வேண்டுமென்பதற்காக குடியரசுத்தலைவரைச் சந்திக்கிறார். பாகிஸ்தானால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சரப்ஜித்சிங்கிற்கு ஆதரவாக வாதாடியவர்கள் இன்று மன்னிப்புக்கு எதிராக ஒரு இயக்கமே நடத்துகின்றனர்.
- அ.மார்க்ஸ்
அப்சாலுக்கும் மரணதண்டனைக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் நீங்கள் உதவ விரும்பினால் spdpr முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்.
163, வசந்த் என்க்ளேவ், புதுடெல்லி 110057
மின்னஞ்சல் : rona358@gmail.com phone : 011 26152680

அப்சாலுக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்!

(04.11.06)மாலை சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் 'மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்'தின் சார்பில் அப்சலுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தை ஒருங்கிணைத்தவர் மார்க்சியம், இருத்தலியம், அம்பேத்கரியம் ஆகியவை குறித்து தமிழில் தொடர்ந்து எழுதி வருபவரும் 'பெரியார்-ஆகஸ்ட்15', 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' ஆகிய முக்கிய ஆவண நூல்களை எழுதியவருமான தோழர் எஸ்.வீ.ராசதுரை.
இக்கூட்டத்தில் எஸ்.வீ.ஆரோடு பல நூல்களை எழுதியவரும் பெண்ணியம், காந்தியம் ஆகியவற்றில் புதிய உரையாடல்களைத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவருமான தோழர்.வ.கீதா, மரணதண்டணை ஒழிப்பை தொடர்ந்து வலியுறுத்திவரும் முன்னாள் நீதிபதி சுரேஷ், தமிழக முதல்வர் கலைஞரின் மகள் கவிஞர்.கனிமொழி, நக்சல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மரணதண்டனைக் கைதியும் இப்போதைய தமிழ்-தமிழர் இயக்கத்தின் தலைவருமான தோழர்.தியாகு, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப்நய்யார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மரணதண்டணையை ஒழிக்கக்கோரியும் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழங்க்கக்கோரியும் இவர்கள் ஆற்றிய உரைகளின் சில துளிகள்:
கூட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் எஸ்.வி.ஆர் , மரணதண்டனைக்கு எதிரான போராட்டத்தின் நீண்ட வரலாற்றைக் கூறி, அப்சாலுக்கு கருணை காட்ட வேண்டுமென்று பகத்சிங்கின் பேரன் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், "ராஜேந்திரசிங்கின்(சமீபத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்) மீதான மரணதண்டனை தீர்ப்பினையும் எதிர்ப்பீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் மும்பைக் கலவரம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு பால்தாக்கரேக்கும் மோடிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டால் அதையும் எதிர்ப்போம்" என்றார் உறுதியாக.
எழுத்தாளர் வ.கீதா இது வெறுமனே மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமில்லை, முஸ்லீம்கள் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியே என்றார்.
நீதியரசர் சுரேஷ், உலக அளவில் மரணதண்டனை குறித்த சட்டங்கள் குறித்தும் அதற்கு எதிரான இயக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
கவிஞர்.கனிமொழி " பெரும்பாலும் பெண், சொத்து ஆகியவைகளை மய்யமாகக் கொண்டே கொலைகள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை திட்டமிடாமல் உணர்ச்சி வேகத்தில் நடப்பவை. ஆனால் அரசோ திட்டுமிட்டு மரணதண்டனை என்னும் பெயரில் ஒரு கொலையை அரங்கேற்றுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். 'தனஞ்செயனின் கடைசி நிமிடங்கள்' என்னும் நூலிலிருந்து சில வரிகளை வாசித்துக் காட்டினார். "கற்பிக்கப்பட்ட போலித்தேசியத்தின் பெயரால் முஸ்லீம்கள் பழிவாங்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்த கனிமொழி, "நம்முடைய பண்டைய இலக்கியங்களை எடுத்துக்கொண்டோமென்றால், சிலப்பதிகாரம் குறித்தும் கண்ணகி குறித்தும் நமக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கண்ணகி தவறாக தண்டனை அளிக்கப்பட்ட கோவலனுக்காகவே மதுரையை எரிக்கிறாள். இப்போது நாமும் அப்சாலுக்குத் தூக்கு வழங்கப்படும்போது மவுனம் சாதித்தோமென்றால் நம்மையும் யார் எரித்தாலும் தவறில்லை" என்றார் ஆவேசமாக.
பிரபல பத்திரிகையாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப்நய்யார், "பாராளுமன்றம் தாக்கப்பட்டபோது நானும் அந்த கட்டிடத்தின் உள்ளேதான் இருந்தேன். அப்போதே பல எம்.பி.க்கள் ஆவேசப்பட்டார்கள். ஆனால் அப்போதும் நான் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் எல்லையில் 10லட்சம் மக்கள் கொல்லப்பட்டதைக் கண்கூடாகப்பார்த்தவன் நான். மரனத்தின் வலி எனக்குத் தெரியும். ஆனால் பத்திரிகைகள் மக்கள் மத்தியில் நஞ்சையே விதைத்து வருகின்றன. நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதற்கு முன்பே பத்திரிகைகளில் விசாரணை நடத்தி தீர்ப்பும் வழங்கிவிடுகிறார்கள்" என்றார்.
பெரியார் திராவிடர்கழகத்தலைவர் கொளத்தூர்மணி, "நீதிபதிகளோ நீதித்துறையோ பாரபட்சமற்றவையல்ல. ஜெயேந்திரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பிணை வழங்கப்பட்டது. ஆனால் மதானிக்கோ குற்றபப்த்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின்பும் பிணை வழங்கப்படவிலலை" என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியவர் "அமெரிக்காவில் செப்டம்பர்11 தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட ஜகாதியாமுகையா என்பவருக்கே ஆயுள்தண்டனைதான் வழங்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதக் கதையாடலக்ளை அவிழ்த்துவிட்ட அமெரிக்காவிலேயே அந்த நிலை. ஆனால் இந்தியாவில் மட்டும் அப்சாலுக்கு மரணதண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்? " என்று கேள்வியெழுப்பினார்.
கூட்டத்தில் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழக்கக்கோரிய மனுவில் கையெழுத்துகளும் வாங்கப்பட்டன.

எத்தனைகாலம் பியர்போத்தல்களோடு பேசிக்கொண்டிருப்பது?

காதலற்றுக் கழிகிறது காலம்..
நண்பகல் வெறுமையைப் போல
மயான வெம்மையைப் போல..
ஒற்றைக் காகத்தின் தனிமையைப் போலவும்.
இந்த காலத்தை என்ன செய்வது?
கொலுசொலி, சிணுங்கல்,
பொய்க்கோபம், வாழ்த்தட்டைகள்,
சின்னச்சின்ன பரிசுகள்
பிரிவின் வாதை,
நெகிழ்வின் கண்ணீர்..
எதைக்கொண்டு நிரப்புவது
இந்த காலத்தை?
பதில்சொல்லுங்களேன் எவளாவது.

தோழர் டூண்டு

வன்மத்தின் மொழியிலிருந்து
வார்த்தைகளை உருவுகிறாய்.
வன்மத்தின் திசையிலிருந்து
விலகவே விரும்புகிறேன் நான்.
ஆனாலும் வன்மத்தின் ஆதி
உன்னிலிருந்து தொடங்கியதில்லை
என்பதை உணர்கிறேன் நான்
மெய்யாலும் மெய்யாலுமே..
காற்றைக்கிழிக்கும்
உன் இரைச்சலினூடே
எத்தனை ஓசைகள்
எனக்குக்கேட்கின்றன?
கணவாய்களில் கனைக்கும்
ஆடுகளின் மேய்ச்சல் ஓசை,
கருப்பு ரத்தங்களால் நிரம்பி வழியும்
ஆதி மதுக்குடுவைகள்
உடைந்து நொறுங்கும் ஓசை,
ஸ்வஸ்திக் ஒரு காற்றைப் போல்
ஆம் காற்றைப் போலவே
திசைகளை விழுங்கும் வேளை
தென் திசையில் மண்டியிட்டு
அன்னியப் பாதங்களுக்கு
முததமிட்ட ஓசை
இன்னமும்..இன்னமும்
ஆனாலும் நான்
உன் காலடிகளைப் பின்பற்றமுடியாது
மெய்யாலும் மெய்யாலுமே
நீ வெற்றிபெற்ற கணம்தான் எது?
உன்னோடு கைகுலுக்கலாமா
வேண்டாமா என்று நான் குழம்பிய கணமா?.