என்றான பிறகு...

பூக்களால் நாம்பேசிக்கொண்டிருந்த
பொழுதுகளில்நம் கடிதங்களே
வாசமடித்தனஎழுத்துப்பிழைகளோடு.
பேருந்து தவிர்த்துசுட்டுவிரல்
பிடித்து நடைபயணித்த பொழுதுகள்கவிதை
எழுதுவதற்காய்வீணடித்த பொழுதுகளை
விடச் சுகமானவை.
அன்றொருநாள் பேருந்தில்படாமல்
அமர்ந்தபோது நீ கேட்டாய்"நான் ஒன்றும்
தீண்டத்தகாதவள் இல்லையே?"
இன்று நான் படாமல்உன்
சுடிதாரைச் சுருட்டிக்கொண்டு
விலகி அமர்ந்ததன்
காரணம்விளங்கவேயில்லை எனக்கு.
நான் பரிசளித்த சாவிவளையம்வாங்க
மறுத்த நீவீடு
சென்றுஅழுதிருக்கலாம்
யாருமறியாது.
சூழலால் நீ என்னை உதறினாயெனினும்நீ
என்னை நிராகரித்ததை
விடவும்அதிர்ச்சியாயிருக்கிறதுநீ
யாரிடம் பொய் சொல்கிறாய்?


ஒரு குறிப்பு : தினம் ஒரு பதிவை யாருக்காவது சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன். முதல் பதிவு 'ரெண்டுலார்ஜ் வலதுசாரி' பாலபாரதிக்கு

5 உரையாட வந்தவர்கள்:

  1. இளங்கோ-டிசே said...

    நல்லதொரு படைப்பு.

  2. பாரதி தம்பி said...

    //'ரெண்டுலார்ஜ் வலதுசாரி' பாலபாரதி//

    சொல்லவேயில்லை...

  3. ரவி said...

    கலக்கல் !!!

  4. Pot"tea" kadai said...

    கவிதை நன்று!

    //"ரெண்டுலார்ஜ் வலது" பாலபாரதி//

    :-))

  5. Anonymous said...

    be cool, everything is a question of texts, discourse,narratives and deconstruction.Deconstruct everything including life and
    relationships.Be a true post-modern :).