சீதாபாலம்


அணிலைத் தடவித் தடவி
மரத்துப்போன
ராமனின் விரல்கள்
சமைத்த பாலம்
வானரங்களின் துணையோடு மீட்டுவந்து
விட்டுப்போனானொரு பாம்புகள் நெளியும் வனாந்திரத்தில்.
நேற்று முதல்நாள் பார்த்தேன்
பாலத்தில் பிளாஸ்டிக் குப்பைகளைப்
பொறுக்கிக்கொண்டிருந்தாள் சீதா.
"குரங்கை வைத்துப் பாலம் சமைத்தவனைவிட
புஷ்பகவிமானத்தில் கடத்திப்போனவனையே நம்பியிருக்கலாமே"
என அழுதாள் பெருங்குரலெடுத்து.
மீட்பிற்கும் கடத்தலுக்குமான
வித்தியாசங்கள் மங்கும் புள்ளியில்
அசோகவனத்தில் கண்ணீரில் நனைந்த
பெருமுலைகளை வர்ணித்த கம்பனையும்
'சாண்டையக்குடிக்கி' என்று திட்டத்தவறவில்லை அவள்.
அவள் யோனியில் பெருக்கெடுத்த
உதிரத்தில்
உடைந்துவிடும்போலிருந்தது பாலம்.
சில நாவற்பழங்களைத் தந்து
ஆறுதல்படுத்திச் சொன்னேன்.
"சீதா இந்தா
உன் கணவனின் பெயரெழுதிய பிரதிகள்.
துடைக்க
வைத்துக்கொள்".

22 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    பார்ப்பன் பெரு மரபின் மீதியாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் சீதைகள் பற்றிய நல்ல பதிவு.

  2. லக்கிலுக் said...

    :-((((((((((

  3. Anonymous said...

    Chumma Adhirudu.............

  4. Ayyanar Viswanath said...

    :)

  5. Anonymous said...

    :) :)
    -aathirai

  6. மாசிலா said...

    //"சீதா இந்தா
    உன் கணவனின் பெயரெழுதிய பிரதிகள். துடைக்க
    வைத்துக்கொள்."//

    ராமன் மார்க் டாய்லெட் பேப்பருங்களா. அந்த காலத்திலேயே வெஸ்டர்ன் டைப்லதான் வாழ்ந்து வந்திருக்காங்க. பலே பலே! யெபா, படே ஆசாமிங்கதான் போங்க!
    ;-D

  7. Anonymous said...

    sirappaaana vaarthaigalai....laaavakamaay payanpadutha yaaRidam katRu kondaai thaozhaaa??

  8. Anonymous said...

    The flow of poetry was better, but couldn't really comprehend whatever you tried to convey. Rama and Sita both are Kshatriyas and not brahmins if at all you wanted to cross swords with brahminism with your poem. Infact Ravana is a brahmin and you've dropped a line of praise for him.
    Oh!! may be I got it all wrong. It was just a poem defaming a Hindutva mascot called Rama. Or may you are trying to be anti Aryan with this drawing light on the plight of Aryan women. What is it all about Mr. Midhakkum Veli??

  9. மிதக்கும்வெளி said...

    ஆதிரை, நீங்கள் யார்? எனக்கு அந்தப் பெயர் பிடிக்கும். கவிதைகளை எழுத எங்கு கற்றுக்கொள்வது, தோழா? அனானி நண்பரே, ராமன் சத்திரியன் என்பது எனக்கும் தெரியும். ஆனால் ராவணனை பார்ப்பனன் என்று எப்படிக்குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

  10. Anonymous said...

    ஆதிரை என்பது முகமூடி பெயர். அவ்வளவுதான்.
    தொடர்ந்து அனானியாகவே இருந்து வருகிறேன்.
    -aathirai

  11. Anonymous said...

    Hey Suguna,
    Its pretty surprising that one like you who gives much importance to substantiating notes for details, is not aware the Ravana is hailed at a great Brahmin in Puranas. Well, I am not interested in divulging details of his birth here as you can just Google for it and find them out easily. But take care next time comrade!!! ;). To fight against Religion and caste, one has to know these better than the follower.
    -RAAJI

  12. Anonymous said...

    என்னுடைய 'பேசப்படாதவள்' கவிதையைப் பொலிட்டிக்கல் ஸ்டேட்மெண்ட் என்றீர்கள். ஆனால் இதுவும் அப்படித்தானே இருக்கிறது. கோட்பாடு என்பதும் விமர்சனம் என்பதும் பக்கச்சார்புடைத்துதானா? முழுமையான கோட்பாட்டுப்புரிதலின் அடிப்படையிலானதுதானா உங்கள் விமர்சனமும்?

  13. Anonymous said...

    வெளியே மிதக்கும் அய்யா,

    என்ன ரொம்ப நாளா உங்க ட்ரேட் மார்க் குசு கவிதைகளை எழுதாம ம க இ க கும்பலை நோக அடிக்கறீங்க?வலையுலக ஓ என் ஜி சி என்று தோழர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் உங்களுக்கே gas தீர்ந்துவிட்டதா?

  14. dondu(#11168674346665545885) said...

    ராவணன் பார்ப்பனனே. பிரம்மாவின் பேரன் முறை ராவணனுக்கு. ராவணன் கும்பகருணன் இருவரும் வைகுந்தத்தில் துவாரபாலகர்களாக இருந்து சாபத்தால் அரக்கர்களாக மாற, விஷ்ணுவிடம் ஒவ்வொரு பிறப்பிலும் அவர் கையாலேயே கொல்லப்பட வேண்டும் என வரம் பெற்றவர்கள்.
    ராவணன் மற்றும் கும்பகருணனை கொன்றதற்காக ராமர் பிரும்மஹத்தி தோஷத்தை நீக்க பிராயச்சித்தம் யுத்தத்துக்கு பிறகு செய்கிறார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  15. மிதக்கும்வெளி said...

    டோண்டு,

    ராமாயணம் என்பது ஒற்றைப் பிரதியல்ல. பல்வேறு ராமாயணங்கள் வழக்கில் நிலவிவருகின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமான வால்மீகி மற்றும் கம்பராமாயணத்தின் அடிப்படையில் ராவணன் பார்ப்பனர் அல்ல. நீங்கள் சொல்லும் கதை மிகச் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் அது எந்த ராமாயணம் என்று சொல்ல முடியுமா?

  16. dondu(#11168674346665545885) said...

    வால்மீகி ராமாயணத்தில் உத்திர காண்டத்தில் ராவணனின் பிறப்பு விலாவாரியாகக் கூறப்பட்டுள்ளது. ராவணனை கொன்றதற்காக ராமர் பிராயச்சித்தம் செய்ய வேண்டியதாயிற்று.

    கம்ப ராமாயணத்தில் உத்திர காண்டம் கிடையாது. அது ஒட்டக்கூத்தரால் எழுதப் பெற்றது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  17. மிதக்கும்வெளி said...

    நன்றி டோண்டு,

    நான் தகவலைச் சரிபார்க்கிறேன்.

  18. Anonymous said...

    // மாசிலா said...
    ////"சீதா இந்தா
    உன் கணவனின் பெயரெழுதிய பிரதிகள். துடைக்க
    வைத்துக்கொள்."////

    ராமன் மார்க் டாய்லெட் பேப்பருங்களா.
    //
    பக்தர்கள் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதிக் குவித்த காகிதக் குப்பைகளை வேறு என்ன செய்வதாம்.

  19. koothanalluran said...

    'சாரு நிவேதிதா' ஸ்டைல்

    ஜமாயுங்கள்

  20. Anonymous said...

    :)
    Waste of Time

  21. வீரமணி said...

    வணக்கம் திவா, "சீதாபாலம்" மிக நல்ல............. நல்ல............ந...ல்..ல.... ந......ல் .....ல கவிதை.............டி.ஆர் .பாலு படுற கஷ்டத்துக்கும் கைபர் போலன் பார்ட்டிகள் படுத்துற கஷ்டத்துக்கும் நல்லா..........நாலு வார்த்தையை நச்சின்னுபோட்டிங்க போங்க சேது சமுத்திர திட்டம் தடையில்லாம நடக்க ராமனின் நண்பன் கட்டின பாலந்தான் எடைஞ்சலா இருக்கு அதுக்கு ஒரு நல்ல நாட்டு வெடிகுண்டு...தொட்ருங்கள்..................என் ஓட்டு உங்களுங்கு எப்போதும்..........

    நிறைய அன்புடன்
    வீரமணி

  22. Anonymous said...

    இந்தி பேசும் OBC 'தமிழர்கள்'!!!!

    பார்ப்பான் ன்னு சொல்லறவங்க இந்தி ஜாதிகளுக்கு தமிழகத்துல இடஒதுக்கீடு கொடுக்கறத நியாப்படுத்தறாங்க!!!

    தமிழ் நாட்டுல பீஹார் போன்ற மாழிலத்திலிந்து சாலை போன்ற பணிக்கு வந்து பெருகிவறாங்க..

    பார்ப்பான் பார்ப்பான் கூவுற நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக இந்தி இந்திக்காரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறது …அதுக்கு என்ன சொல்லுவீங்க!!!

    தமிழ் பேசற பார்ப்பான் இல்லேனா தமிழ்நாடு நல்லா இருக்கும் சொல்லிறீங்க….இந்தி பேசுறவங்க வந்தா தமிழ்நாடு உருப்பிடுமோ??
    உன்ன வந்து ஆட்டிப்படைக்கிறவன் பாப்பான் இல்ல…இந்திக்கார..10 வருஷம் பொறுங்க…மஹாரஷ்டிரா ல நடக்குறுது வரும் தமிழ் நாட்டில…அப்பவும் பாப்பான் பாப்பான் ன்னு கூவினா, உன்ன இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க இந்திக்காரங்க… தமிழ் ன்னு சொல்லி இடஒதுக்கீடு வாங்கிடுவாங்க…

    இப்பவே 10 இந்தி ஜாதிகள் தமிழ் நாட்டுல இடஒதுக்கீடு வாங்கறாங்க…

    உத்தப்புரத்து பாப்பான் வரல…இரட்டை தம்ளர் முறைல பார்ப்பான் வரல…’தமிழ்’ கட்சிக ஏற்பாடு…இந்திகாரன் கூப்பிட்டு வேல தர்றாங்க நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக…Madras Airportக்கு போய் பார்!!!