கவிதை ஒன்றுகூடல் உரையாடல் நிகழ்வு இரண்டு
இடம்: சென்னை AICUF அரங்கம்,
நாள்: 26 ஜுன் 2009, வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை
முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.
பன்முக வாசிப்பு
பெயல் மணக்கும் போது - அ.மங்கை
வ.ஐ.ச ஜெயபாலன்
எனக்கு கவிதை முகம் - அனார்
செல்மா பிரியதர்சன்
சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி
மனோன்மணி
இருள் யாழி - திருமாவளவன்
யாழன் ஆதி
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை - தீபச் செல்வன்
அரங்க மல்லிகா
தனிமையின் நிழற்குடை - த. அகிலன்
சுகுணா திவாகர்
புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன - மஜீத்
சந்திரா
நாடற்றவனின் குறிப்புகள் - இளங்கோ
சோமிதரன்
கருத்தாளர்கள்
அ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
வெள்ளிக்கிழமை ஃபோர் டூ நைன் கொஞ்சம் கஷ்டம். இருந்தாலும் வரமுயற்சிக்கிறேன்.
லக்கி, டவுசருக்கு மேல் இன்னொரு டவுசர் அணிந்து செல்லவும்...
நண்பரே நலமா? நான் நறுமுகய் . எனது பணி தமிழ் இலக்கிய மாற்று எழுத்தாளர்களை இணையத்தில் ஊக்கப்படுத்தும் முகமாக அவர்களது வலைப்பூக்களை தொகுத்து வலையிதழாக காட்சிக்கு வைப்பது. இது மற்ற திரட்டிகள் போல உங்கள் பதிவுகளை ஒரு சில நிமிடங்கள் அல்லது மணித்துளிகள் முன்னிறுத்திவிட்டு பின்பு மறையும் "நட்சத்திர" தி(வி)ரட்டி அல்ல... 365 நாட்கள், 56 வாரங்கள், 12 மாதங்கள், 4 பருவகாலங்கள் உங்களின் கடைசி பதிவை தன் அகத்தில் தாங்கி வளர்க்கும் தாய் போன்றது! இதன் இணைப்பை நீங்கள் உங்கள் உங்கள் வலைப்பூவில் இணைத்தால் மிகவும் மகிழ்வேன்!
அன்புடன்..
"நறுமுகய்"
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்மானம் வலைச்சிற்றிதழ்
நடைபெற்ற நிகழ்வின் தொகுப்பினை முடிந்தால் வலைப்பதிவேற்றுங்கள்....