மதியம் ஞாயிறு, ஏப்ரல் 16, 2006

அ.தி.மு.க.க்கு இல்லை அரசியல் தீண்டாமை

திருமாவளவனுக்கு சில கேள்விகள்!
கருணாநிதி உங்களை கூட்டணியில் சேர்க்காவிட்டால் 'அரசியல் தீண்டாமை' என்று முழங்கும் நீங்கள் ,தேவர் ஓட்டு போய்விடும் என்று புதிய தமிழகத்தை அ.தி.மு.க கூட்டணியில் சேர்க்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?செ.கு.தமிழரசன் எம்.ஜி.ஆர்.காலத்திலிருந்தே அ.தி.மு.க.வை ஆதரித்து வந்தவர்.ஆனால் அவருக்கு ஒரு சீட்டு கூட தரப்படாதைப் பற்றி உங்கள் கருத்து...?மேலும்,நீங்கள்,வைகோ,ஜெ மூவரும் மதுரையில் பேசுவதாக இருந்த கூட்டத்தை ,தேவர் ஓட்டு பாதிக்கும் என்ற உளவுத்துறையின் ரிப்போர்ட்டையொட்டி,ரத்து செய்தாரே?இது அரசியல் தீண்டாமையாக உங்களுக்குத் தோன்றவில்லையா

மதியம் சனி, ஏப்ரல் 15, 2006

வனம்

நீயுமற்று நானுமற்று நீண்டுகிடக்கும் பெருவெளி
பெருவெளியின் பரப்பெங்கும் பெய்துகிடக்கும் பேரமைதி
அமைதியை கொத்தித் தின்னும்
பறவைகளின் கீச்சொலி.
பல்கிப்பெருகும் வண்டுகளின்
அளவற்ற காமத்தால்
நனைந்தது வனம்
.உருகி வழியும் மாம்சம்
எரிந்துகொண்டிருக்கும் தீயில்
வீழ்ந்த வேளை
தேவதூதர்களின் வருகையால்
அதிர்ந்தது வனம்
பின் எப்போதும்காடு அலறிக்கொண்டேயிருந்தது

மதியம் வெள்ளி, ஏப்ரல் 14, 2006

கசிவு


நீங்கள் ஒரு குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பனியொத்த உதடுகளை நிமிண்டுகிறீர்கள்.
இப்போது குளித்து முடித்த
அதன் தேகத்தை தழுவுகிறீர்கள்.
கன்னததில் அழுந்த முத்தமிடுகிறீர்கள்.

இப்போதுநீங்கள் ஒரு கலவியை முடித்துவிட்டீர்கள். - சுகுணாதிவாகர்

ஒரு சில சொற்கள்....


நாம் மிதந்து கொண்டிருக்கிறோம்

சில நேரங்களில் இணைந்தும்...

சில நேரங்களில் விலகியும்....

invitation

i m sugunadiwakar 4m tamilnadu.i m poet&write some political articles.