மேகம் நழுவிய தடயம்




என் மனசு இருட்கிடங்கு.
ஒருநாள் வெடிக்க
ஒளியாய்ச் சிதறினேன்.
------------------


கனவின் சாம்பலில்
மக்கிக்கிடந்தன சிறகுகள்.
கிளறிப்பார்த்த கோழியின் கால்களில்
தட்டுப்பட்டது
அதன் சிறகுகள்.

-------------------

வலி மிகுதியாய்க் கொண்டே வருகிறது.
அழவேண்டும்போல இருக்கிறது.
அழுவதற்கும் கையாலாகாத மனம்
மட்டுமே இப்படிக்
கவிதைகள் எழுதுகிறது.

------------------------

கொலை குறித்தும்
தற்கொலை குறித்தும்
யோசித்துக்கொண்டிருப்பவனின் மனம்
ஒரு மதுக்கோப்பைக்குள்ளும்
புத்தகத்துக்குள்ளும்
அல்லது சுய மைதுனத்திற்குள்ளும்
தற்கொலையோ
கொலையோ செய்து முடிக்கிறது
இப்போது பிணமாய்
மிஞ்சியிருப்பதெல்லாம்
சில திரவத்துளிகள் மட்டுமே.

-----------------------

1 உரையாட வந்தவர்கள்:

  1. முல்லை அமுதன் said...

    kavithai puthiya sinthanaiyaith tharukirathu.
    paaraadukkal.
    ivan.
    http://kaatruveli-ithazh.blogspot.com/