சிறப்பு கரகாட்டம் : வரவணையான்

முத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)
அசுரன் : நான் சிவப்பு மனிதன்
லிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை அரெ யொஉ அ .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)
நெ தெ பெஒப்லெ : பாரதவிலாஸ்
இட்லிவடை ; கேண்டீன் இன்சார்ஜ்
ஞானவெட்டியான் :
ஈழபாரதி : புலியாட்டம்
வஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்
ஜெயராமன் : அய்யர் தி கிரேட்
டோண்டு ராகவன் : நான் அவனில்லை
விடாதுகருப்பு : திராவிடன், தமிழன்
குழலி ; தமிழிசை

வெற்றிகரமாய் நூறாவது பதிவு


ஏப்ரல் 14, 2006ல் ஆரம்பித்து இதோ மார்ச் 7, 2007 வரை ஆச்சு நூறுபதிவுகள்.

வலையுலகை அறிமுகப்படுத்திய செந்தில்
என் பதிவைப் படிக்கும் பாவத்திற்கு ஆளானவர்கள்
பொறுப்பாய்ப் படித்துப் பின்னூட்டமிடும் கருத்து கந்தசாமிகள் மற்றும் மாமிகள்
தமிழ்மணம்
ஆகியோர்க்கு
சியர்ஸ்!!!

வலைப்பதிவாளர்களுக்கான விருதுகள் அறிவிப்பு





கதையளப்பு 1




தமிழ்ச்சமூகத்தில் வாழ்வதே நெருக்கடியானதுதான். படிக்கும்போது என்ன படிக்கிறாய் என்று கேட்பார்கள். சொன்னால் 'ஏன் அந்த கோர்ஸ் கிடைக்கலையா' என்பார்கள். பிறகு என்ன வேலை பார்க்கிறாய் என்று கேட்பார்கள். வேலைபார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கல்யாணம் ஆகலையா என்பார்கள். அந்த எழவையும் பண்ணியபிறகு 'ஒரு வருஷமாச்சு இன்னும் குழந்தை பிறக்கலையா' என்பார்கள். கடைசியாக இன்னும் நீ சாகலையா என்பதைத் தவிர அடுத்தவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே கழிவதுதான் தமிழ் வாழ்க்கை.


இத்தகைய அவஸ்தைகளுக்கு மத்தியில் அரசும் தமிழ்ச்சினிமாக்காரர்களும் இலக்கியவாதிகளும்தான் ஏதாவது காமெடி பண்ணி நம்மை ரிலாக்ஸ் ஆக்குவார்கள். அந்தவகையில் அரசு வழங்கும் 'காமெடி டைம்' விருதுகள் திடீரென்று இந்த வருடத்திற்கான சிறந்த சினிமா என்று அருணாச்சலத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். கனகாவுக்கு கலைமாமணி விருது கொடுப்பார்கள். வைரமுத்து, மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுப்பார்கள். அந்த வரிசையில் அடுத்த சாகித்ய அகாடமி விருது குத்திசைக்கவிஞர் பேரரசுக்குக் கொடுக்கப்படவிருக்கிறது என்று 'நம்பத்தகாத' வட்டரங்கள் தெரிவிக்கின்றன.


இதைவிடக் காமெடி, அருணாச்சலத்தைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கும்போது சினிமாக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் சாகித்திய அகாடமி விருதை வைரமுத்துவுக்குக் கொடுத்துவிட்டால் இலக்கிய வியாதிகளுக்கு வருமே கோபம்.
சுந்தரராமசாமி, சுந்தரராமசாமி என்று ஒருவர் இருந்தார். அவர் மூன்று நாவல்கள் எழுதினார், சில சிறுகதைகள் எழுதினார், பல கவிதைகள் எழுதினார், அப்புறம் எழுத்தாளர்களோடு சேர்ந்து தோசை சாப்பிட்டார், அவர்களுக்கு வீட்டிலேயே சாப்பாடு ஆக்கிப் போட்டார், சினிமா போஸ்டர்களை வெறித்து வெறித்துப் பார்த்தார், (இவையெல்லாம் நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. சு.ரா இறந்தபோது அவருக்கு எழுத்தாளர்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரைகளைப் படியுங்கள்), அவ்வப்போது சரக்கடித்தார், ஜவுளிக்கடை நடத்தினார், டைட்டானிக் ஹீரோ, ரஜினிகாந்த் ஆகியோரின் போஸ்களில் புதுவை இளவேனில் என்னும் தலித்தை வைத்து போட்டோ எடுத்து கண்காட்ச்சியும் நடத்தினார், காலச்சுவடு என்னும் இலக்கியக் கம்பெனியை ஆரம்பித்து அதை இந்து வாரிசுரிமை அடிப்படையில் தன் மகனை மேனேஜராக நியமித்தார், கடைசியில் செத்தும் போனார். இத்தகைய சாதனைகளுக்கு நியாயமாக அவருக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்திருக்க வேண்டும்.


ஆனால் வருடாவருடம் அவருக்கு அந்த விருது கிடைக்காது. உடனே தேர்வுக்கமிட்டியில் அரசியல், அரசாங்கத்திற்கு அறிவு கிடையாதுது என்கிற ரீதியில் கண்டனங்கள் எழும். அவருடைய இலக்கியக் கம்பெனியான காலச்சுவடுவில் எழுத்தாளர்கள் கட்டுரை எழுதுவார்கள். சாகித்திய அகாடமி விருதுக்குத் தகுதியானவர்கள் யார் என்று அவர்கள் எழுதும் பட்டியலில் வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு எல்லோருடைய பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் பெயர் 'சுந்தரராமசாமி'. ஆனால் கடைசிவரை அவருக்கு இந்தக்கொடுப்பினை கிடைக்கவில்லை. இந்தவருடம் புலம்ப அவருமில்லை. பெரியார் நெஞ்சில் முள்ளோடு செத்துப்போனதைப்போல சு.ராவின் நெஞ்சில் தைத்த முள் 'சாகித்திய அகாடமி விருது'.


சரி, அதுபோகட்டும். நம்முடைய வலைப்பதிவாளர்கள் சு.ராவை விட நன்றாக எழுதுகிறார்கள். (என்ன பின்னூட்டம் பாலா மட்டும் சு.ரா மாதிரி கேணத்தனமாக எழுதுவார்). இவர்களுக்கு விருதுகள் கொடுக்கப்படவேண்டியதுதானே ஞாயம்? ஆனால் எனக்கு இந்த ஸ்டார் குத்துவது போன்ற குத்துவேலைகள் எல்லாம் தெரியாது. போனமுறை சந்தித்தபோது ஒரு நண்பர் புலம்பினார். 'போனமுறை சிறந்த வலைப்பதிவாளரைத் தேர்ந்த்கெடுக்கும் குழுவின் ஜூரி பத்ரி. அவர் முகமூடியைத் தேர்ந்தெடுத்தார். இந்த வருடம் முகமூடி ஜூரி, அவர் பத்ரியைத் தேர்ந்தெடுக்கிறார்' என்று.ஆகமொத்தம் இன்னும் ஒரு இருபதாண்டுகளுக்கு பத்ரியும் முகமூடியும் மட்டுமே விருது பெறும் அதிர்ஷ்டசாலிகள் என்பதால் நாமே இந்த விருதுகளைக் கொடுத்தால் என்ன தோன்றியது. இந்த விருதுகள் தனித்துவமிக்க பட்டங்களாகவும் இருக்கும். சிலவிருதுகள் தமிழ்ச்சமூகத்திற்குச் சேவைசெய்தவர்களின் பெயர்களைத் தாங்கியதாகவுமிருக்கும். இனி விருதுகள்....


செந்தில் - கண்ணதாசன் விருது( கவிதைகளுக்கு அல்ல, குடிப்பதற்கு மட்டும்)

யெஸ்.பாலபாரதி - மொக்கைவேந்தன்

லக்கிலுக் - அனானிச்செம்மல்

நாமக்கல் சிபி - மிஸ்டர் ஒயிட்
(பல சமயங்களில் 'வித்தியாசமான' பதிவுகள் என்ற பெயரில் ஒண்ணுமேயில்லாத பதிவைப் போடுவதால்)

தூயா - மசால்மாமணி

தமிழ்நதி - கண்ணீர்க்காவியக் கலைஞி
(கனடாவில் இவர் இருந்தபோது மக்களுக்குச் சிறந்த தொண்டாற்றியதற்காக கனடிய அரசே இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவர் செய்த தொண்டு - சிலகாலம் கவிதைகள் எழுதாமல் இருந்தது)

பொன்ஸ் - குழந்தை எழுத்தாளர்

விடாதுகருப்பு - வசைஞானி

உணர்வுகள் - வெள்ளாளவேங்கை

ராம.கி - தனித்தமிழ்ச்சித்தப்பா
(ஏற்கனவே மறைமலையடிகள் தனித்தமிழ்தந்தையாக இருப்பதால்)

பெயரிலி - இடாலோகந்தசாமி

பொட்டிக்கடை சத்யா - டாக்டர் ராஜசேகர் விருது
( எவனா இருந்தா எனக்கென்ன, எங்கடா உங்க எம்.எல்.ஏ, இதுதாண்டா போலிஸ், நாந்தாண்டா பேமானி போன்ற 'மரியாதையான' படங்களை எடுத்தவர்)

செந்தழல் ரவி - இயக்குனர் கர்ணன் விருது
(பல 'ஏ' படங்களை வெளியிடுவதால்)

குழலி - சமூகநீதி ஸ்பெசலிஸ்ட்


ஓகை - 'பார்' பாரி

சின்னக்குட்டி - வலையுலகப் பயாஸ்கோப்

கொசுபிடுங்கி - துப்பறியும் சாம்பு

கதையளப்பு 2 : இன்னும் ஞாபகத்திற்கு வரும் பெயர்களைத் தொடர்ந்து எழுதுகிறேன். டோண்டுராகவன் அவர்களை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொளவில்லை. இலவசமாகக் கிடைக்கிறார் என்பதற்காக எவ்வளவுதூரம்தான் அடிப்பது?


கதையளப்பு 3 : நான் எது எழுதினாலும் இதுதான் பின்நவீனத்துவமா, பின்ப்நவீனத்துவக் கவிதையா, ஒன்னுமே புரியலை என்றெல்லாம் எழுதி சமயத்தில் நாம் எழுதுவதுதான் பின்நவீனத்துவமா என்று எனக்கே கன்ப்யூஸ் ஆகும் அளவிற்குப் பின்னூட்டமிட்டு அனானிகள், சுனாமிகள், பாலாகக்ள், போலிபாலாக்கள், போலி பாலாவுக்குப் போலி பாலாக்கள் பீதியைக்கிளப்புவதால் இந்த ஜாலியான பதிவு. இதை யாராவது பின்நவீனப்பதிவா என்று கேட்டால்....அழுதுடுவேன். நீங்களும் எனக்கு விருதுகள் வழங்கி வஞ்சம்தீர்த்துக்கொள்ளலாம்.

சுழல்கிறது சுடர்

நண்பர் ஓசை செல்லா இப்போது என் கையில் சுடரைத் தந்திருகிறார். காண்க..

http://osaichella.blogspot.com/2007/02/blog-post_11.html

உங்கள்எழுத்துக்களுக்கு inspiration யார்?

கவிதைக்கு யவனிகாசிறீராம். மற்றபடி கட்டுரைகளுக்கு பெரியார், அ.மார்க்ஸ், சாருநிவேதிதா போன்ற பலர்.


2. தமிழ் சினிமாக்களின் கதாநாயகர்கள் இவ்வளவு செயற்கைத் தனமாக இருக்க யார் காரணம்?


தமிழ்ச்சினிமாவே செயற்கையாக இருக்கும்போது கதாநாயகர்கள் மட்டும் பாவம் என்ன செய்வார்கள்?


3. கவிதையின் விதை ?

ஏதோ ஒரு பொறி, அல்லது ஈரத்துளி, அல்லது சிலவேளை முத்தச்சிலிர்ப்பு.


4. நிதர்சனத்தின் நிசப்தங்கள் என்ற தலைப்பில் சில வரிகள்எழுதுங்களேன்?


நிசப்தமாய்க் கிடக்கிறது இரவு.
ஒருவேளை சுவர்க்கோழி மட்டுமே
அந்த இரவைச் சிதைத்துக்கொண்டிருக்கலாம்.
என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது.
தெரியும் நிலையில் இல்லை நான்.
பின்னிரவின் உறக்கத்தில்
சிவப்பாய்க் கவிந்த
கொடுங்கனவின் இடையில்
விழித்து அலறுகிறேன்.
இப்போது இரவு சிதைந்திருக்கிறது.
சுவர்க்கோழியோ அடங்கியிருக்கிறது.

(அவசரத்தில் எழுதியதால் முழுமை அடையாமல் போயிருந்திருக்கலாம்.)

5. "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" ... அடுத்து என்ன மாற்றம் நிகழ்த்தப் படவேண்டும் என்று நினைக்கிறீர்? ( சமூக மற்றும் இலக்கியக் தளங்களில் ....)


சமூகத்தளங்களில் சாதி ஒழிப்பு, ஆணாதிக்க ஒழிப்பு, தேசியம், ஏகாதிபத்தியம் என்னும் இரு ஆதிக்கப் பெருங்கதையாடல்களிருந்து விடுதலை பெற்று அன்பு, அன்பை மட்டுமே முன்நிபந்தனையாகக் கொண்ட சமூகம் உருவாகுதல், மொத்தத்தில் சுதந்திரம் அடைந்த தன்னிலைகளை உருவாக்குவது. இலக்கியத்தைப் பொறுத்தவரை இன்னும் அதிகமான விளிம்புநிலைமக்களின் வாழ்க்கை பதிவு செய்யப்படவேண்டும். அறிவின் சேகரம் அதிகரிக்கவேண்டும். சமத்துவமும் மனிதவிடுதலையும் நோக்கியதாகவும் சக உயிர்களை நேசிப்பதற்கான மார்க்கமாகவும் இலக்கியம் மாறவேண்டும்.

நன்றி செல்லா.

இப்போது சுடரை வரவணையான் கைகளுக்கு மாற்றுகிறேன். செந்திலிடம் அய்ந்துகேள்விகள்...

1. இன்னமும் திராவிட இயக்கத்திற்கான தேவைகள் இருப்பதாக நினைக்கிறீர்களா?

2. தமிழ்த்தேசியம், ஈழப்பிரச்சினை குறித்து உங்கள் நிலைப்பாடு...

3. காதல் வந்தால் சொல்லி அனுப்புவீர்களா?

4. வலையுலகின் இயங்குதளம் என்னவாய் இருப்பதாய் உணர்கிறீர்கள்?

5. பொதுவாக நீங்களும் நானும் பலசமயம் கொண்டாட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தியே வந்திருக்கிறோம். ஆனால் எதுவித வலியையோ அல்லது துயரத்தையோ எதிர்கொள்ளாத மேம்போக்கான மனம் மட்டும்தான் இதை வலியுறுத்துகிறு என்பதாக உணர்ந்திருக்கிறீர்களா?

உலகச்சினிமாவும் உள்ளூர்ச்சினிமாவும்














பைசைக்கிள் தீவ்ஸ் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக சினிமாக்களில் முக்கியமான ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த சினிமாவும் கூட.

ஆனால் எனக்கு ராம்கோபாலன் என்று ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு உலக சினிமா என்றாலே எரிச்சல் வரும். "அதென்ன உலக சினிமா? அப்ப தமிழ்நாட்டில் எடுப்பதென்ன செவ்வாய்க்கிரக சினிமாவா?" என்பார்.

ஒருமுறை அவருடன் பைசைக்கிள்தீவ்ஸைப் பார்க்க நேர்ந்தது. எங்களுக்கு அது பத்தாவதோ அதற்கு மேலோ. ஆனால் நண்பருக்கு அதுதான் முதல்முறை. நண்பரும் எந்தக் கமெண்டும் அடிக்காமல் படத்தைக் கவனமாகப் பார்த்துக்கொண்டு வந்தார். எங்களுக்கோ ஒரே ஆச்சரியம்.
படம் முடிந்ததும் நண்பரிடம் படம் எப்படியிருக்கிறது என்று கேட்டோம்.

நண்பர் சொன்னார், "என்ன பெரிய பொல்லாத சினிமா? ஒருத்தன் சைக்கிளைத் தொலைச்சிட்டு தேடிக்கிட்டிருக்கான். நான்கூடத்தான் நாலைந்து சைக்கிளைத் தொலைச்சிருக்கேன்".


தேபோல இன்னொரு சம்பவம். 'பாசமலர்' படத்தின் பிரிவியூ காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு வெள்ளைக்காரர்களும் பிரிவியூ காட்சிக்கு வந்திருந்தார்கள். ஆனால் படத்தில் சப்டைட்டில் போடவில்லை. 'கைவீசம்மா கைவீசு, மலர்ந்தும் மலராத, வாராயோ தோழி வாராயோ, ஆனந்தா என் கண்ணை...இத்யாதி இத்யாதிகளெல்லாம் தமிழிலேயே ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் வெள்ளைக்காரர்களோ படத்தை ஒன்றிப்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவ்வப்போது விசும்பல் சத்தம் வேறு. படம் முடிந்ததும் பெருங்குரலெடுத்து அழத்தொடங்கிவிட்டார்கள்.


வெளியே வந்து இயக்குனரைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டார்கள். சிவாஜிகணேசனின் கையைப் பிடித்து குலுக்கோ குலுக்கென்று குலுக்கிவிட்டார்கள். சுற்றியிருந்தவர்களுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.

சப்டைட்டிலே போடவில்லையே, இந்த வெள்ளைக்காரர்களுக்கு என்ன இழவுதான் புரிந்தது, இப்படி உணர்ச்சிவசப்படுகிறார்கள்? பிறகு ஒருவாறாகத் தயங்கித் தயங்கி அவர்களிடமே கேட்டுவிட்டார்கள். "படம் உங்களுக்குப் புரிந்ததா?"

அவர்களுக்கோ கோபம் வந்துவிட்டது. 'எங்களை என்ன மடையர்கள் என்றா நினைத்தீர்கள்?" என்று காச்மூச்சென்று கத்திவிட்டு கடைசியில் பாசமலர் படத்தைப் பற்றிச் சொனார்களாம்.

"A beautiful love story"


ரி, விளையாட்டு போதும். ஒரு சீரியசான தகவல். தமிழில் அதிகம் விற்கும் சினிமா பத்திரிகை எது தெரியுமா? எம்.ஜி.ஆர். ரசிகன்.

நீங்களும் ஹீரோ/ஹீரோயின் தான்

து சாருநிவேதிதா ஆரம்பித்துவைத்த ஆட்டம்தான். ஒவ்வொரு எழுத்தாளரையும் ஏதாவதொரு சினிமா நட்சத்திரங்களோடு ஒப்பிடுவது. உதாரணத்திற்கு சுந்தரராமசாமி - 'மாயாபஜார்' எஸ்.வி.ரங்காராவ் (கல்யாண சமையல்சாதம்...)


சில பல வலைப்பதிவாளர் சந்திப்புகளில் வலைப்பதிவாளர்களைச் சந்தித்தபோது சில நட்சத்திரங்களை நினைவுபடுத்தினார்கள். எனவே இந்தப் பதிவு. இது தனிப்பட்டமுறையில் யாரையும் புண்படுத்தும் பதிவு அல்ல. எனவே யாரும் கோபிக்கவேண்டாம். (போதுமடா பில்டப், இதுவரை நீ செய்த அட்டூழியத்தையே நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. இப்போது மட்டும் என்ன என்று நீங்கள் முனங்குவது கேட்கிறது. கூல்டவுன், கூல்டவுன்)


சிவஞானம்ஜி - சிவாஜிகணேசன்.

தருமி - ரகுவரன்

ஞானவெட்டியான் - 'பட்டினத்தார்' டி.எம்.எஸ். சௌந்தராஜன்.

ஜி.ராகவன் - ஜெமினிகணேசன்

முத்து தமிழினி - சரத்பாபு

லக்கிலுக் - (அந்தக்கால) சந்திரசேகர்

குழலி - முரளி

டோண்டு ராகவன் - வி.கே.ராமசாமி

மா.சிவகுமார் - விவேக்

யெஸ்.பாலபாரதி - கே.பாக்யராஜ்
(அப்பாடா ஒருவழியாப் பழிவாங்கியாச்சு)

பொன்ஸ் - அருணா

அகிலன் - தனுஷ்

ரோசாவசந்த் - ஜெய்சங்கர்

ஓகை - எஸ்.வி.சுப்பையா

(எஸ்.வி.சுப்பையா ஷில்பா செட்டியின் ரசிகரா என்று தெரியாது. ஆனால் ஓகை அம்மணியின் தீவிர ரசிகர். ஷில்பா அவமானப்படுத்தப்பட்டபோது வீட்டிலேயே மம்தாபானர்ஜி ரேஞ்சுக்கு உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நேற்றுதான் ஷில்பா போட்டியில் வென்றவுடன் பழச்சாறு சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். என்ன, பழச்சாறு மூன்று வருடங்களுக்கு முன்பு பூமிக்கடியில் புதைக்கப்பட்டது)

'ஆலமரம்' திரு - விக்ரம்

ப்ரியன் - அஜித்குமார்

வரவணையான் செந்தில் - (லவ்டுடே) விஜய்

சுகுணாதிவாகர் - கமல்ஹாசன்
(சாரி கொஞ்சம் ஓவர்)

நீங்களும் பட்டியலைத் தொடரலாம்.

(பொன்ஸ்+பாலபாரதி)- செந்தில் = பாலா?

திகாலை 10 மணியிருக்கும், வலையுலகின் பிதாமகன் பாலபாரதியிடமிருந்து போன் வந்தது. நானாவது எழுந்து பத்துநிமிடமிருக்கும். ஆனால் தலயோ இன்னும் தூக்கக் கலக்கத்திலேயே பேசினார்.


"பெனாத்தல் சுரேஷ் அமீரகத்திலிருந்து வந்திருக்கார். உன்னைப் பார்க்கணுங்கிறார்"

"எதும் விசேசம் உண்டா?"

"அதெல்லாம் கிடையாது. மதியம் உட்லேண்ட்ஸில் சைவச் சாப்பாடு".

"சைவச்சாப்பாடா? அதுக்கு நான் தி.நகர் அக்கா கடையிலேயே சாப்பிட்டுக்குவேன். நான் வரலை".

"யோவ், உன்னையெல்லாம் ஒரு மனுசனா நினைச்சு ஒருத்தர் பார்க்கணுங்கிறாரு. வரமாட்டியா?"

அப்புறம் என்ன கேள்வி?

"சரி, எத்தனை மணிக்கு?"

"மதியம் 1 மணிக்கு"


தியம் ஒரு மணி. பாபா (அதுதான் பாலபாரதி) தான் வாக்களித்தபடி அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இருந்தார். கூட இருந்தவர்கள் 'திராவிடத்துத் திருவிளக்கு' லக்கிலுக்கும் 'வலையுலகின் தங்கமங்கை' பொன்ஸும். ஒருவழியாகப் பெனாத்தல் சுரேசும் பெனாத்தாமல் வந்து சேர்ந்தார்.


ட்லேண்ட்ஸ் ஓட்டல். அங்குதான் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன.முதல் அதிர்ச்சியை ஆரம்பித்து வைத்தவர் பொன்ஸ்.

"முதல் முதலில் இங்குதான் வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தது"

ஆகா அந்த துயரம் இங்கதான் ஆரம்பிச்சுச்சா?

லக்கிலுக்கும் தன் கணக்குக்கு ஒரு சரவெடியைக் கொளுத்திப் போட்டார்.

"அடித்தட்டு மக்களுக்காகத்தான் கலைஞர் ஆட்சிக்கே வர்றார்"

"இதைக் கலைஞர் கேட்டால் அவருக்கே ஹார்ட் அட்டாக் வந்திடும்" என்று ஈனக்குரலில் முணங்கினேன்.

ஒருவழியாக டிபன் அயிட்டங்கள் வந்துசேர சாப்பிட ஆரம்பித்தோம்.
திடீரென்று பொன்ஸின் கடைவாயிலிருந்து பற்களுக்குப் பதில் தந்தங்கள் முளைத்து 'யானைப்பசிக்கு சோளப்பொறியா' என்கிற ரீதியில் சாப்பிட ஆரம்பித்தார். (பொன்ஸ், நீங்கள் சாப்பிட்டது நாலு தோசை, ரெண்டு சோளாபூரி, மூன்றரை போண்டா (அந்த அரை போண்டா பக்கத்து அப்பாவி லக்கிலுக்கின் பிளேட்டில் சுட்டது) என்பதை யாருக்கும் சொல்லமாட்டேன்)

பிறகு பாபாவும் பொன்ஸும் சேர்ந்து மற்றவர்களைக் கலாய்க்க ஆரம்பித்தனர்.

நான் by birth நல்லவன் என்பதாலும் அமைதியான டைப், யாரையும் ஓட்டத் தெரியாது என்பதாலும் அமைதியாக இருந்தேன்.

இருவரும் ஓட்டிய ஓட்டில் லக்கிலுக் 'ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்' என்ற ரேஞ்சில் "வேலையிருக்கிறது" என்று சொல்லி எஸ்கேப் ஆனார்.

அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் இன்னொரு அப்பாவி, புளியமரம் தங்கவேலு. பாவம் அவர் சுந்தரராமசாமியின் ரசிகர். தோசையின் 'விரிவும் ஆழமும் தேடி', 'சாம்பாரோடு ஒரு உரையாடல்' நடத்திக்கொண்டிருந்தார்.

இந்தக் கலாட்டாக்களுக்கு மத்தியில்தான் பொன்ஸும் பாபாவும் என் தலையில் அந்த எம்டன் குண்டைப் போட்டார்கள்.

"உங்க எழுத்துக்காகவெல்லாம் உங்கள் பதிவைப் படிக்கிறதில்லை (அது தெரிஞ்சதுதானே) பின்னால் வரும் பாலாவின் கமெண்டுகளுக்காகத்தான் படிக்கிறோம்" என்றார்கள். (அடப்பாவிகளா!)


சோகமாக ஆபிஸ் வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்தால் வந்தது செந்திலின் பிளாக். அங்கேதான் பாலாவுக்கு 'அந்த' கொடுமை நேர்ந்தது.

பாலாவின் பெயரில் போலி அனானி பின்னூட்டங்கள்.

முதலில் மூன்றுபேர்தான் ஆரம்பித்திருந்தார்கள். பிறகு பத்து, பதினைந்துபேர்கள். மூத்திரச்சந்திலெல்லாம் பாலாவைத் துரத்தி துரத்தி அடித்திருந்தார்கள்.

பாலா, பீலா, பேலா என்று ஆரம்பித்து பஃகலா வரை பகரவரிசையில் கிட்டத்தட்ட 125 போலி பாலாக்களின் பின்னூட்டங்கள்.

'பாலாவே ஒரு போலி. போலிக்கு இன்னொரு போலியா' என்று மற்றொரு போலி அனானி வந்து புலம்பியிருந்தார்.

கடைசியில் 'பொருதடக்கை வாளெங்கே, மணிமார்பெங்கே, போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத பருவயிரத் தோளெங்கே, எங்கே' என்று உண்மையான பாலாவைத் தேடவேண்டியிருந்தது.

என்ன கொடுமை செந்தில் இது?

பாலா எவ்வளவு நல்லவர். இனிய நண்பர். நான் பதிவைப் போட்டு நானே படிக்கிறேனோ இல்லையோ முதல் ஆளாக வந்து படித்து கமெண்டும் போடுபவர். அவர் 'வெளியே மிதக்கும் அய்யா' என்று அழைத்தால் காதில் தேன் வந்து பாயாதா?


ஏன் செந்தில் ஏன்? என்னதானிருந்தாலும் பாலா ஒரு so called மனிதன் இல்லையா?

நானும் இந்த 'பிராணிவதை'யைத் தடுத்து நிறுத்த எவ்வளவோ முயன்றேன். ஆனால் முடியவில்லை. எல்லாம் எல்லை மீறிவிட்டது.


செந்திலும் by birth நல்லவர்தான். ஆனால் கடல்கடந்த பொட்டிக்கடை சத்யாவின் 'கூடாநட்புதான் அவரை இப்படி ஆக்கியிருக்க வேண்டும்.

ஒரு அபாய அறிவிப்பு


















பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நிறையபேர் வெளிநாடுகளிலிருந்து சென்னை வருவதாக லக்கிலுக், பாலபாரதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வலைப்பதிவாளர் சந்திப்பு என்னும் ஆபத்து ஏற்படும் அறிகுறிகள் தெரிகின்றன. சென்னையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நான் ஊருக்கு எஸ்கே...ப்)

பாலா

பாலாவை நீங்கள் பார்த்திருக்காவிட்டாலும் பாலாவைப்போன்ற பலரைப் பார்த்திருப்பீர்கள். மழைத்துளிகளைப் போல திடுமென வீழ்ந்து பூமியெங்கும் ஒன்றாய், பத்தாய், நூறாய்ப் பல்கிப் பெருகியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பீதியூட்டப்படட் வசவுகளை நீங்கள் எதிர்கொண்டிருக்கக்கூடும். எதிர்மொழி பற்றிய கவலையற்ற அவர்களது உரையாடலில் நீங்கள் பங்குபெறாததுகூடப் பிரச்சினையில்லை. ஆனால் நீங்கள் ஆரோக்கியமான மனநிலையிலிருப்பதாய்க் கற்பித்து அவர்களை மனநோயாளிகள் என்று அழைக்கத்தொடங்கினீர்கள். அப்படி மனநோயாளி என்று அழைக்கப்பட்டவன் தான் பாலா.


பதிமூன்று வயது வரை பாலாவின் வாழ்க்கை இயல்பாகத்தான் இருந்தது. தாயும் தந்தையுமற்ற அவனை மாமாதான் வளர்த்தார். அவனுக்கு எல்லாமே மாமாதான். அவர் அன்புப்பிழம்பாய் இருந்தார். ஆனால் அந்த மாமா ஒருநாள் தன்னைவிட வயது குறைந்த பக்கத்து தெரு ஜெயாவைத் திருமணம் செய்துகொண்டதுதான் அவனால் தாங்கமுடியவில்லை. அது ஜெயாவிற்கும் மாமாவிற்குமான விவகாரம் என்றும் சிந்திக்க முடியவில்லை அவனால்.


சுற்றிக்கொண்டிருந்த பூமி அவன கால்களுக்கடியில் நழுவிக்கொண்டிருந்தது. என்ன உலகம் இது, துயரங்களின் விளைநிலமாய் மாறியிருக்கிறது.


அன்றிலிருந்து பாலா மாமாவைப் பார்ப்பதில்லை.பக்கத்து தெருவான சங்கரன் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கினான். பெண்களையும் காதலையும் வெறுக்க முயன்றான். எப்போதும் காவிவேட்டியே அணிந்திருந்தான்.


அவன் வசிக்கும் சங்கரன் தெருவிலுள்ள கழிப்பறையில் எதார்த்தமாய்த்தான் அதைத் தொடங்கினான். மாமாவை இழந்த சுய இரக்கம் உடலெங்கும் தகித்தது. கழிப்பறையில் எழுதினான், "மாமா ஏன் இப்படிச் செய்தாய், ஏன் என்னைக் கைவிட்டாய்?".

சிறிதுநேரத்தில் சுய இரக்கம் கோபமாய் மாறியது. 'மாமா நீ ஒரு தே....பையன்" என்று எழுதினான். அப்படியும் அவனது ஆத்திரம் அடங்கவில்லை. இந்த வயதில் உனக்கு சுகம் கேட்குதா? 'மாமா ஜெயாவை...' என்று ஆரம்பித்து அவர்களுக்கிடையிலான அத்தனை சரசங்களையும் கற்பனையிலும் கழிவறையிலும் எழுதித்தீர்த்தான்.


இப்படியே தொடர்ந்தது. கொஞ்சநாட்களில் மாமாவைத் திட்டுவதை நிறுத்திவிட்டான். மாமா இப்போது அவனது மனதில் இல்லை. ஜெயாதான் இருந்தாள். எழுதத்துவங்கினான், 'நான் ஜெயாவை...'

மாமாவின் இடத்தில் தன்னை இருத்திக்கொண்ட பாலா போகப்போக ஜெயாவின் இடத்தில் வேறுபல பெண்களையும் இருத்தத்தொடங்கினான். கோயில் குருக்களின் மனைவி, பக்கத்துவீட்டு விமலா, 8ம் வகுப்புப் படிக்கும் ஆனந்தி, பால்கார புவனா என்று பலரோடும் தன்னை இணைத்து தானே எழுத ஆரம்பித்தான்.

இப்போது கழிவறையில் எழுதுவதே அவனது பணியாகிப்போனது. விளையாட்டாய், யுத்தமாய், சவாலாய், தவமாய் எழுத ஆரம்பித்தான், எழுதினான். இப்போது வீட்டிலிருக்கும் நேரத்தைவிட கழிவறையில்தான் அதிகநேரம் இருந்தான். முன்பு காலை ஒருமுறை, இரவு ஒருமுறை என்று போனவன் இப்போது உணவுக்கு முன், உணவுக்குப் பின் என்று பாலா கழிபப்றை போய்வந்தான்.

ஆனால் காலம் மனசாட்சியற்றதுதானே. அவனது இன்னொரு உலகமும் இடிந்து விழுந்தது. அந்த கொடிய காலையில் அவன் பார்க்கும்போதே நகராட்சி வாகனம் கழிப்பறையை இடிக்க ஆரம்பித்திருந்தது.

பாலாவின் உடல் நடுங்கியது. நெஞ்சில் பாரம் அதிகரித்தது. இப்போது அவன் உலகங்கள் ஏதுமற்றவன். ஆவேசம்வந்தவனாய்த் தரையில் குத்தவைத்து காற்றில் எழுததுவங்கினான், 'நான் லலிதாவை...'

கேட்கக்கூடாத கேள்விகள்









எனக்கு ராஜா என்று ஒரு நண்பன் இருந்தான். கல்லூரி நண்பன். சைவப்பிள்ளைமார்த்தனத்துக்கேயுரிய பிள்ளைப்பூச்சிக் குணத்தோடு இருந்தான். தினமும் காலையில் பிள்ளையார் கோயிலுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டுத்தான் காலேஜுக்கே வருவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். காலேஜ் விட்டவுடனே மணியடித்தவுடன் வீட்டிற்கு ஓடி விடும் டைப். (நாங்கள் அவரவர் ஆளை வழியனுப்பிவிட்டுத்தான் வீட்டிற்குப் போவோம்)

ஆனால் அவனிடம் நான் ஒருநாள் கேட்ட கேள்வி அவன் சுபாவத்தையே புரட்டிப்போட்டது. தன் தலைப்பிரட்டை வாழ்க்கையிலிருந்து வெளியேறினான்.


அவனிடம் எப்போதும் ஒரு சைக்கிள் இருக்கும். அது எப்போதும் பளபளப்பாக இருக்கும். ஒருநாள் பேருந்துநிலையம் வரை செல்ல வேண்டுமென்று அவன் சைக்கிளை இரவல் கேட்டேன். ஆனால் அவன் தரமறுத்தான்.

"எங்கப்பா காலையில எழுந்திருச்சி சைக்கிளை துடைச்சு வைப்பார். நான் சைக்கிளெல்லாம் தரமுடியாது"

"பஸ்டாண்ட் வரைக்கும்தாண்டா. போய்ட்டு வந்திடுறேன்"

"இல்லை. எங்கப்பா காலையில எழுந்திருச்சி சைக்கிளைத் துடைச்சி வச்சிருக்கிறார்"

"பத்து நிமிஷத்தில வந்திருவேன்"

"இல்லை. எங்கப்பா காலையில..."

"உங்கப்பா சைக்கிளைத் தினம் துடைச்சுவைப்பாரா?"

"ஆமாம்"

"துடைச்சு வைப்பார். ஆனா ஓட்ட மாட்டாரா?"

"ஆமாம்"

"அப்புறம் எப்படிடா நீ பொறந்தே?"


நாங்கள் திண்டுக்கல்லில் தலைகீழ் இலக்கிய அமைப்பு என்று ஒரு இலக்கிய அமைப்பு நடத்திவந்தோம். அப்போது பெரியார் பற்றிய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். தலைமை அ.மார்க்ஸ். அப்போதுதான் மார்க்ஸ் முதன்முதலில் அறிமுகம்.
கூட்டத்திற்கு முன்பு நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் வந்தார் ஒரு தமிழ்த்தேசியத் தோழர். தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியில் இருந்தார்.வந்தவுடனேயே மார்க்ஸை நோக்கி, "நீங்கள் நாட்டு விடுதலையில் நாட்டங்கொண்டவர்தானே தோழர்?" என்று ஆரம்பித்தார். அப்போதே மார்க்ஸ் எங்களை ஒருமாதிரியாகப் பார்த்தார்.


நாங்கள் 'டீ குடிக்கப்போகிறோம்" என்று ஒவ்வொருவராய்த் தப்பித்து வெளியே வந்துவிட்டோம். ஆனால் தமிழ்த்தேசியத் தோழரோ 'டீ குடிக்கமாட்டேன், தேனீர்தான் குடிப்பேன்' என்று பிடிவாதமாய் மார்க்சுடன் அமர்ந்துவிட்டார்.


கிட்டத்தட்ட அரைமணி நேரம் தனித்தமிழில் தமிழ்த்தேசிய வீரவுரைகளை ஆற்றியிருக்கிறார். ஒருகட்டத்தில் மார்க்ஸ் அவரிடம் கேட்டாராம்.

"உங்கள் பெயர் என்ன தோழர்?"
"என்னுடைய உண்மையான பெயர் ஆரோக்கியதாஸ். ஆனால் தமிழில் தமிழ்மன்னன் என்று மாற்றிக்கொண்டேன்"

மார்க்ஸ் சொன்னாராம், "நியாயப்படி பார்த்தால் நீங்கள் உடல்நல அடிமை என்றல்லவா வைத்திருக்க வேண்டும்?"

பொதுவுடைமை இயக்கத்தோழர் ஜீவாவை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை சமதருமக்கட்சி என்று ஆரம்பித்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வந்தவர். சு.ம.இயக்கத்திற்கு முன்பு அவர் தனித்தமிழ்ப்பற்றாளராக இருந்தார். தனித்தமிழிலேயே பேசுவார், எழுதுவார்.
ஒருநாள் மறைமலையடிகளைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றாராம். அடிகளாரின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது மறைமலை அடிகள் கேட்டாராம், "யாரு போஸ்ட்மேனா?"

அன்றிலிருந்து ஜீவா தனித்தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டார் (ஆதாரம் பொன்னீலன் எழுதிய 'ஜீவா என்றொரு மானுடன்)


'தென்மொழி' என்ற இதழை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியாது. பெருஞ்சித்தனாரின் இதழ். அந்த இதழ் முழுக்க தனித்தமிழில்தான் இருக்கும்.

தனித்தமிழ் என்றால் நீங்களும் நானும் நினைக்கும் அளவிற்கல்ல, தனித்தமிழோ தனித்தமிழில் இருக்கும்.உதாரணமாக அவர்கள் நடத்தும் மாநாட்டிற்கு கருணாநிதி வருகிறார் என்றால் 'கருணாநிதி' என்று அழைப்பிதழில் போடமாட்டார்கள். கருணை என்பது வடமொழி. 'அருள்நிதி என்றுதான் எழுதுவார்கள்.

எம்.ஜி.ஆர் - ம.கோ.இரா, ராமதாஸ் - மாலடிமை (மால்_ திருமால், ராமன் திருமாலின் அவதாரம், தாஸ் - தாசன் - அடிமை)

இப்படித் தமிழ்ப்'படுத்துவது' எனக்கு என்னவோ போலிருக்கும். உங்கள் பெயரை தனித்தமிழில் மாற்றிக்கொள்வது சரி. ஊரான் பெயரை மாற்றுவது சரியா? 'பாட்ஷா' படத்தில் 'ஆட்டோக்காரன்' பாட்டில் ரஜினி பாடுவாரே "பிரசவத்துக்கு இலவசமா வர்றேம்மா, உண் பிள்ளைக்கொரு பேருவச்சுத் தர்றேம்மா"பிரசவத்திற்கு இலவசமாக வந்தால் ஆட்டோக்காரர் பிள்ளைக்கு பேர் வைப்பாரா என்ன?
குழப்பமாக இருந்தது.

நான் ஒருமுறை தென்மொழிப்பற்றாளரிடம் கேட்டேன்.
"அய்யா, பொள்ளச்சி மகாலிங்கம் தமிழ்த்தேசிய முதலாளிதானே?"
"ஆம் அதிலென்ன அய்யம்?"
"மகாலிங்கத்தை மாநாட்டிற்குக் கூப்பிடுவதில் தவறில்லையே?"
"தவறொன்றுமில்லை அய்யா"
" பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பெயரை தனித்தமிழில் எப்படிப் போடுவீர்கள்?"

சாவுக்கும் சர்வே

சதாம் கொல்லப்பட்டது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா, வருத்தமளிக்கிறதா என்று ஒரே சர்வேயாம். கேவலமாக இருக்கிறது. எல்லாப் பிணங்களையும் மேட்டராகவும் ஸ்டோரியாகவும் கவரேஜாகவும் நியூஸாகவும் பார்க்கும் மீடியாக்கார புத்தி. நல்லவேளை பத்திரிகைக்கார நாய்ப்பிழைப்பிலிருந்து மீண்டாகிவிட்டது.

போட்டி வலைப்பதிவாளர் மாநாடு - நிகழ்ச்சி நிரல்

காலை 9.00 - 10.00
குத்துவிளக்கில் சிகரெட் கொளுத்தி மாநாட்டைத் தொடங்கி வைப்பவர் : யெஸ்.பாலபாரதி
வரவேற்புரை : கெட்டசெய்தி இந்தியா
( வரிவிலக்கிற்காக)
தலைமையுரை : சிவஞானம்ஜி (மூத்தவலைப்பதிவாளர்)
காலை 10.00 - 11.00
தமிழிசை
இயக்குனர் பேரரசுவின் தமிழிசைப்பாடல்கள்
பாடுபவர் : குழலி
காலை 11.00 - 12.00
கலைநிகழ்ச்சிகள்
பழைய சொம்பு ஆட்டம் : 'நாட்டாமை' முத்துதமிழினி
சிறப்பு கரகாட்டம் : வரவணையான்
புலிவேஷ ஆட்டம் : கொழுவி, ஈழபாரதி
நண்பகல் 12.00 - 2.00
கருத்தரங்கம்
'பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் பின்னூட்டம் போடுவது எப்படி?' ' - 'பின்னூட்டம்' பாலா
என்னை மிரட்டிய நெடுங்குழை காதன் - சமீபத்திய ஆய்வு
- டோண்டு ராகவன்
பாகிஸ்தானாகி வரும் கராச்சி
- ஜடாயு
ஆவி அமுதாவும் அமெரிக்க மறுகாலனியாதிக்கமும்
- அசுரன் & ராஜ்வனஜ்
ரமணிசந்திரன் நாவல்கள் - ஒரு பின் நவீனத்துவ ஆய்வு
- சுகுணாதிவாகர்
மதியம் 2.00 - 4.00
உணவு இடைவேளை
சைவ உணவுக்கு அணுகவும் : இட்லிவடை
( சாப்பிட வருபவர்களை ரகசியமாக படம் பிடிக்கும் வசதி உண்டு)
சரக்கு மற்றும் அசைவ உணவுகளுக்கு : வரவணையான் (எ) செந்தில்
( கார்டு உள்ளவர்கள் மட்டுமே அணுகவும் (ரேசன் கார்டு அல்ல) அல்லது புரவலர்களுடன் அணுகவும்.)
மாலை 4.00 - 5.00
புத்தக வெளியீட்டு விழா
'போலி டோண்டுவின் பொன்மொழிகள்'
வெளியிடுபவர் : ஆப்பு ( தலைமை கணிப்பொறியாளர், போலி டோண்டு இயக்கம்)
பெற்றுக்கொள்பவர் : விடாதுகருப்பு (பெரியார் பூனைப்படை)
பொ(ப)ன்னாடை அணிவித்துக் கௌரவப்படுத்தப்படுபவர்கள் : டோண்டுராகவன், மாயவரத்தான், ஹரிஹரன், ஜடாயு, ஜயராமன், வஜ்ரா மற்றும் பலர்.
மாலை 5.00 - 6.00
இலவச மருத்துவ முகாம்
பெத்தடின் ஊசி வினியோகம் : ஹரிஹரன்
(மாதவிடாயால் அவதியுறும் பெண்களுக்கு விபூதிமருந்தும் உண்டு)
மாலை 6.00 - 8.00
திரைப்படவிழா
(உலகத்தரம் வாய்ந்த தமிழ்ச்சினிமாக்களைத் திரையிடும் முதல் முயற்சி)
திரையிடப்படும் படங்கள் : பாசப்பறவைகள், கண்ணம்மா
- sponsered by லக்கிலுக்
ஆய்வுரை : பாரதியின் கண்ணம்மா, பாரதி கண்ணம்மா, கலைஞரின் கண்ணம்மா - ஒரு திராவிட ஒப்பாய்வு
- முத்துகுமரன்
திரையிடப்படும் படங்கள் : நாளைநமதே, தாய்மீது சத்தியம், ஆடிவெள்ளி
- sponsered by பொன்ஸ்
ஆய்வுரை : ஆடிவெள்ளியும் ஆனைகளின் அடிமைத்தன்னிலையும்
-ரோசாவசந்த்
இரவு 8.00 - 10.00
ஸ்பெசல் நாடகம்
டோண்டு மற்றும் போலிடோண்டு இணைந்து மிரட்டும் 'கண்ணாமூச்சி ரே ரே'
(தம்மடிக்க, சரக்கடிக்க, கடலைபோட அரங்கில் அனுமதி உண்டு)
நாள் : 32.13.3006
இடம் : கோவிந்தாபுரம்,
கேரளா, பாகிஸ்தான்.
அனைவரும் வருக! அல்வா தருக!

நோட்டிஸ் உபயம் : ஓகை, 'புளியமரம்' தங்கவேலு, முத்துதமிழினி.

எனக்கு பிடித்த ஏழரை

எல்லோரும் 'ஆறிப்போன ஆறு' எழுதுகையில் நான் எனக்குப் பிடித்த ஏழரையை எழுதுகிறேன். இதில் ஏழரையாவது விஷயம், எனக்கு அரைகுறையாகப் பிடிக்கும் (அ) சில பிரச்சினைகள் இருக்கலாம் (அ) பிடிக்... எனக் கொள்க.


பிடித்த அழகிகள்

1. தீபா (5வது படிக்கும்போது காதலித்த பெண்)
2. ஜெய்சிறீ (கல்லூரி படிக்கும்போது காதலிதது. எல்லாம் காதலித்ததான், பட்ட அல்ல)
3. முருகேஸ்வரி ( ஆறாவது டீச்சர்)

(சாரி பட்டியல் ஏழரையைத் தாண்டும் என்று நினைக்கிறேன். (முதல்லேயே இப்படியா?)

பிடித்த நடிகர்கள்

1. எம்.ஆர்.ராதா
2.சிவாஜி (வசந்த மாளிகை, புதிய பறவை, அந்த நாள் போன்ற படங்களுக்காக. நிச்சயமாக கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மனுக்காக அல்ல)
3. சந்திரபாபு
4. ரங்காராவ்
5. பாலையா
6. தலைவாசல் விஜய்
7 . ரஜினிகாந்த்
7 1/2 . கமல்ஹாசன்

அழகில் பிடித்த நடிகைகள்

1. வாணிசிறீ
2. ராதா
3. ரஞ்சிதா
4. விந்தியா
5. குஷ்பு
6. கௌதமி
7 ஐஸ்வர்யாராய்
7 1/2 சினேகா


நடிப்பில் பிடித்த நடிகைகள்

1. சாவித்திரி
2. பத்மினி (சித்திக்காக)
3. ராதிகா
4. குஷ்பு
5. சிம்ரன்
6. ஜோதிகா
7. ?

தமிழில் பிடித்த படங்கள்

1. அவள் அப்படித்தான்
2. வீடு
3.அந்த நாள்
4. காதல் கொண்டேன்
5. புதுப்பேட்டை
6 மறுபடியும்
7 உதிரிப்பூக்கள்
7 1/2 பாட்ஷா

பிடித்த உலகத்திரைப்படங்கள்

1. சில்ட்ரன் ஆப் ஹெவன்
2. பைசைக்கிள் தீவ்ஸ்
3 . டிரீம்ஸ் (குரோசோவா)
4 . செவென் சாமுராய்
5. பிளாக்மெயில் (ஹிட்ச்காக்)
6. அசேசினேசன் ஆப் மால்கம் எக்ஸ்
7. பிளாக் (இந்தி)
7 1/2 டைட்டானிக்

பிடித்த எழுத்தாளர்கள்

. அ.மார்க்ஸ்
2. ஷோபாசக்தி
3. பெரியார் ஈ.வெ.ரா
4. சாருநிவேதிதா
5. ப.சிங்காரம் (புயலிலே ஒரு தோணி)
6. ரவிக்குமார்
7. அழகியபெரியவன்
7 1/2 . அசோகமித்திரன்

பிடித்த கவிஞர்கள்

1. செல்வி சிவரமணி (இலங்கை)
2. என்.டி.ராஜ்குமார்
3 மாலதி மைத்ரி
4. பிரேதா பிரேதன்
5. யவனிகா சிறீராம்
6. சுகுணாதிவாகர்
7 மகாதேவன் ("ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது)
7 1/2 பாரதி

பிடித்த வலைப்பதிவுகள்

1.தமிழ்நதி
2. ராஜ்வனஜ்
3. அசுரன்
4. மரைக்காயர்
5. ஆப்பு
6. ரோசாவசந்த்
7. வரவணையான்
7 1/2. டூண்டு (எ) போலி டோண்டு

ஒரு பின்குறிப்பு : இது முழுமையான பட்டியல் அல்ல. பதிவுகளை யாராவது ஒரு பதிவாளருக்கு dedicate செய்யலாம் என்றிருந்தேன். ஆனால் தோழர்கள் தமிழ்நதியும் மதி. கந்தசாமியும் சீரியசான பதிவுகளைப் படிக்கும்போது இதுமாதிரியான dedicationsகள் disturb செய்கிறது என்று எழுதியிருந்தார்கள். ஆனால் இது சும்மா ஜாலியான பதிவுதானே என்பதால் dedicated to என் பிரியத்துக்கும் முத்தங்களுக்குமுரிய வரவணையான் (எ) செந்திலுக்கு

சென்னையில் போட்டி வலைப்பதிவாளர் சந்திப்பு



என்னடா வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்து ஒரு மாசமாச்சே, இன்னும் யாரும் ஆரம்பிக்கலையே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஆரம்பிச்சாட்டாருய்யா.. லக்கிலுக் ஆரம்பிச்சுட்டாரு.

இந்த வ.ப. சந்திப்பு என்றாலே எனக்கு 'தி..திக்' என்றிருக்கும். முதல் 'திக்' இந்த மீட்டிங்கைச் சாக்காக வைத்துக்கொண்டு வரவணையான்(எ) செந்தில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறியோ, டிரெய்ன் ஏறியோ, டிக்கெட் எடுத்தோ, எடுக்காமலோ வந்து "குஷ்புவைப் பேட்டி எடுங்க, குஷ்புவைப் பார்க்கணும்", 'சினேகா வீடு எங்கே இருக்கிறது?' 'ரகசியா சென்னையில்தான் இருக்கிறாரா?', 'நமீதாவின் ஷூட்டிங் ஸ்பாட் எது?' என்றெல்லாம் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார். ஒருவழியாக குவார்ட்டர் பீடிங் பாட்டிலை வாங்கிக்கொடுத்து அவரைச் சமாதானப்படுத்த வேண்டும்.

அடுத்து ஆரம்பிக்கும் வ.ப.ச என்னும் இம்சை. அங்கே பல 'திக்..திக்'கள். 'கலந்துரையாடல்' என்று சொல்லிவிட்டு மூன்றுபேர் மட்டுமே மாறிமாறிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதில் சில பெரியவர்கள் 'நைன்டி பார்ட்டி செவனில்...'என்று ஆரம்பித்துவிடுவார்கள். திடீரென்று ஒரு பெரியவர் மூன்று நிமிடம் வெளியே போய்வந்துவிட்டு, "இப்பதான் அவன் என்னைப் போனில் கூப்பிட்டு மிரட்டினான்" என்று பார்வையாளர்களை 'வஞ்சிக்கோட்டை கிழவன்(?)' ரேஞ்சுக்குப் பெருமிதமாகப் பார்ப்பார். உடனே அனுதாப அலை பலமாக அடிக்க ஆரம்பித்துவிடும். பார்வையாளர்கள் 'த்சோ..த்சோ' என்பார்கள்.

இதற்கிடையில் டீ,போண்டா, செமினார்பிஸ்கெட்கள் பறிமாறப்படும். (செமினார் பிஸ்கட்ஸ்: சென்னைப் பல்கலைக்கழகத்தின் பக்கத்துக்கடைகளில் கேட்டால் சொல்வார்கள் செமினார் பிஸ்கெட் என்றால் என்னவென்று. மேரிபிஸ்கட்தான் அது. உலகத்திலேயே படு மட்டமான மண்ணு போன்ற டேஸ்ட் உடைய பிஸ்கெட் அது. பல்லுப்போன கிழவர்களுக்கென்றே தயாரிக்கப்படுவது. எல்லா செமினார்களிலும் இது கட்டாயம் உண்டு). அப்போதே சில வலைப்பதிவர்கள் 'போண்டா எப்படி இருந்தது?' என்பது போன்ற 'சுவையான' பதிவுகளை எழுதுவதற்குத் திட்டமிடுவார்கள். (ஏன் தான் போண்டா, இட்லி, வடை, போன்ற சாம்பார் விஷயங்களில் மூழ்குகிறார்களோ?)

திடீரென்று 'தெகல்கா' ரேஞ்சுக்கு யாராவது ரகசியமாக வீடீயோ மற்றும் போட்டோ எடுப்பார்கள். கூட்டத்தில் இருக்கும் பலரும் பள்ளிகொண்ட சீதாராமையா, சாருமஜும்தார் ரேஞ்சுக்கு போட்டோவுக்குத் தலைமறைவாவார்கள். "என்னைக்கொன்னுடாதீங்க' தொனியில் 'போட்டோ எடுத்துடாதீங்க" என்று அபயக்குரல் எழுபுவார்கள்.எனக்கு அப்போதே கடுப்பாகி விடும். 'ஏன் தான் அடைச்ச கடையாப் பார்த்து உடைச்ச சோடா வாங்கறாங்களே'ன்னு இருக்கும்

செந்திலோ சீக்கிரத்தில் கூட்டத்தை விட்டு வரமாட்டார். கூட்டம் முடிந்தாலும்( போண்டா சாப்பிட்டதும் அதற்குமுன் சீரியஸாகப் பேசிய விஷயத்தை அம்பேல் என்று விட்டுவிடுவார்கள்) அனானி, யுனானி என்று விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும். ஒருவழியாக இந்த தொல்லையிலிருந்து மீண்டதும்தான் 'ஒளிமயமான எதிர்காலம்' ஆரம்பிக்கும். 'பாருக்குப் போகலாம்' என்றவுடனேயே லக்கிலுக், முத்துதமிழினி, பாலபாரதி, வரவணையான் கண்கள் பிரகாசிக்க ஆரம்பித்துவிடும்.

"கார்டு அக்செப்ட் பண்ற பாருக்குப் போங்கள்" என்பார் செந்தில்.
பாருக்குப் போனவுடன் தான் தெரியும் கார்டு இருப்பது முத்துவிடம்தான் என்று. செந்திலிடம் இருப்பதெல்லாம் பழைய விசிட்டிங்கார்டுகள்தான். அதிலும் பாதி கம்பெனியின் அட்ரெஸ்கள் மாறியிருக்கும். சரியாகப் பில் கொடுக்கும் நேரத்தில், வராத போனை அட்டெண்ட் செய்யப் போய்விடுவார் செந்தில்.(ஆனால் 'ஆலமரம்' தங்கவேலு, ஓகை போன்ற 'நல்ல உள்ளங்கள்' நன்கொடை வழங்கும்போது மட்டும் ஆஜராகிவிடுவார்)

'நாட்டாமை' முத்துதமிழினியோ ஆலமரத்தின்கீழ்தான் அமர்ந்து குடிக்கவேண்டும் என்று அடம்பிடிப்பார். ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தியவுடன் தான் கொண்டு வந்திருந்த பழையசெம்பில் சரக்கை ஊற்றிக்குடிக்க ஆரம்பிப்பார்.

உண்மையில் வ.ப.ச.க்குப் பின்னான பார் சந்திப்பில்தான் தீவிரமான விவாதங்களும், கருத்துப்பரிமாற்றங்களும் நடக்கின்றன. மனம் விட்ட உரையாடல் சாத்தியமாகிறது. உறவும் பலப்படுகிறது. 1947 பெரியவர்களும் பெரும்பாலும் வரமாட்டார்கள் என்பதால் பயமின்றிப் பேசலாம்.

ஆகையால் மக்களே, இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் மிகச்சமீபத்தில்(1871ஓ 2025ஓ அல்ல) பாரிலேயே வலைப்பதிவாளர் சந்திப்பு நடத்தலாம் என்றிருக்கிறோம். இதற்காக எங்கள் பேரவைத் தோழர்களும் கடுமையாக உழைக்கவிருக்கிறார்கள்.
செந்திலும் உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். (உதவி என்ன பெரிய உதவி! முத்துதமிழினியை எப்படியாவது அமுக்கிட்டு வந்தால் போதும் - இது வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த செந்திலின் மனசாட்சி)

மீட்டிங்கில் போண்டா, செமினார் பிஸ்கெட்களுக்கு தடா. கோமாதா விருந்து (அதாங்க மாட்டுக்கறி) கட்டாயம் உண்டு. இது 'போட்டி' வலைப்பதிவாளர் சந்திப்பு என்பதால் கோமாதா போட்டி உண்டு.( போட்டி : சென்னையில் முட்டை கலந்த குடல்கறி). கோமாதா சாப்பிடத் தயங்குபவர்களுக்கு ஒரு டம்ளர் (அ) ஒரு டபரா கோமியம் வழங்கப்படும்.

ஒரு பின்குறிப்பு : தலித் இலக்கியத்தின் ஆரம்பகட்டங்களில் மகாராஷ்டிரத்தில் அர்ஜுன்டாங்ளே போன்ற தலித் இலக்கிய முன்னோடிகள் தலித் கவியரங்கங்களை பேருந்துநிலையங்களிலும், கட்டணக்கழிப்பிடங்களிலும் நடத்தினார்கள். அதேபோல நாமும் வலைப்பதிவாளர் சந்திப்பை நடத்த முயற்சிக்கலாம். பேருந்து நிலையத்தில் நடத்தினால் இன்னும் வசதி, யாராவது 1947 கதையை ஆரம்பித்தால் அப்படியே பஸ் ஏறி வீட்டிற்கு எஸ்கேப் ஆக வசதியாக இருக்கும்.

dedicated to 'கோல்டன் ஈகிள் பாரில் நடந்த 'ஒரிஜினல்' வலைப்பதிவாளர் சந்திப்பில் ஓவராகக் குடித்து மட்டையான லக்கிலுக்கிற்கு.

" ஈராக் நீதிபதி ஒரு குடிகாரர்" - ஜெயலலிதா தாக்கு!

வீட்டிலும் டென்ஷன், வெளியிலும் டென்ஷன். சற்று ரிலாக்ஸாக டி.வி. பார்க்கலாம் என்று டிவியைப் போட்டால், ஜெயாடிவி செய்திகள்.
" முன்னாள் தமிழக முதல்வர், புரட்சித்தலைவி, அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி. ஜெயலலிதா இன்று காலை விடுத்த அறிக்கை.
'ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்குத் தூக்கு தண்டனை விதித்த நீதிபதி குடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்துதான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று எனக்கு நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. கறுப்பு எம்.ஜி.ஆர், பச்சை எம்.ஜி.ஆர் என்று தனக்குத் தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு மனிதரைப் பார்த்துத்தான் நீதிபதி கெட்டுவிட்டார். இதன் பின்னணியில் கருணாநிதியின் மைனாரிட்டி திமுக அரசு இருக்கிறது என்றும் தெரிகிறது. சிக்கன்குனியாவையே கட்டுப்படுத்தமுடியாத கருணாநிதியின் மைனாரிட்டி அரசு மரணதண்டனையையா தடுக்கப்போகிறது? முன்னாள் அதிபர்கள், முன்னாள் முதல்வர்கள் என அனைவரையும் பழிவாங்கத்துடிக்கும் சதியின் ஒரு அங்கம்தான் இது என்பதை மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்"
இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது:-
"முதல்கில் என்னைக் குடிகாரன் என்றார் அந்த அம்மா. இப்போது ஈராக் நீதிபதியைக் குடிகாரன் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவர் நிதானத்தை இழந்திருக்கிறார் என்று தெரியவில்லையா? அவர் அறிக்கை விடுவதற்கு முன்பு பாரின் ஜின் குடிப்பார் என்று எனக்கும் நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. இரண்டு கட்சிகளையும் நீங்கள் மாறி மாறிப் பார்த்துவிட்டீர்கள். ஒருமுறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஈராக்கில் மொத்தம் 53 நீதிமன்றங்கள் இருக்கு. ஆனால் ஒயின்ஷாப்போ 3021தான் இருக்கு...."
இன்று முரசொலியில் வெளிவந்த கருணாநிதியின் கவிதை
உடன்பிறப்பே
மதுமயக்கம் மதுமயக்கம் என்று
மதிமயக்கத்தால் உளறுகின்றார் ஒரு அம்மையார்.
மைனாரிட்டி அரசு என்று நம்மையும் ஏசுகின்றார்.
புயலொன்று இப்போது தன் புடவைக்குள்
இருக்கிறது என்ற மமதையும் கூட.
வங்கக்கடற்கரையில் உறங்கும்
நம் அண்ணன் அறிவான்
நாம் பங்கமற்றவர்கள் என்பதை"
இந்த கடிதம் குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ அளித்த பேட்டி
" கோபாலபுரத்தார் என்னையும் தேவையில்லாமல் வம்பிக்கிழுத்திருக்கிறார். வம்புச்சண்டைக்குப் பயப்படாத வரிப்புலி மதிமுக என்பதை அவர் மறந்துவிட்டார். இன்று ஈராக் நீதிமன்றம் வரை கோபாலபுரத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. சதாம் தவறாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்படித்தான் கிரேக்கத்திலே ஸ்பார்ட்டகஸ் தண்டிக்கப்பட்டார். ரோமாபுரியிலே சாக்ரடிஸ் தண்டிக்கப்பட்டார். கலிலியோ தண்டிக்கப்பட்டார். ஏன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே வைகோ பொய்க்குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டானே..(ஆ ஊ யேய்..ம்ம்ம்(கர்ஜிக்கிறார்))
இந்த தொல்லை தாங்காமல் திநகர் இந்திபிரச்சாரசபாதெரு பக்கம் வாக்கிங் போனால் அங்கே வாசலில் நின்றுகொண்டு சன் டிவிக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறாஎ விஜய.டி.ராஜேந்தர்.
" அனனிக்கு ஈராக் மக்கள் சொன்னாங்க சதாம், சதாம்
இன்னைக்கு ஈராக் நீதிபதி சொல்றார் கதம், கதம்.
நீதிபதி அடிச்சது சரக்கா?
அம்மா சொல்றதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?
கலைஞர்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க அம்மா
அதெல்லாம் வெறும் சும்மா"
அப்போது அந்த பக்கமாக வந்த சிம்பு டென்ஷனாகி.." லூஸு அப்பா,லூஸு அப்பா, லூஸு அப்பா லூஸுத்தனமா உளறி ஏன்யா உயிரை எடுக்கிறே...(பாடிக்கொண்டிருக்கும் போதே நயன் தாராவிடமிருந்து போன் வர ஜெர்க் ஆகிறார்.)
போனில் நயன்: காப்பாத்துங்க..காப்பாத்துங்க. சரத்குமார் அடுத்த படத்திலயும் ஜோடியா நடிக்க கூப்பிடறார்.

கட் பண்ணினால் ராதிகா வீடு (பின்ன என்ன சரத்குமார் வீடா?)
சரத் சோகமாக புடவைகளை அயர்ன் செய்துகொண்டிருக்கிறார். ராதிகா உள்ளே வந்து " ஆபிஸ் போகணும். புடவையை அயர்ன் பண்ணிணீங்கினா இல்லையா?
சரத் : ஏன் ராது விரட்டுறே? நான் தான் வேலைப்பளு அதிகமாயிருக்குன்னு கட்சியில இருந்துகூட விலகிட்டேனே. நயன் தாரா வேற என்னோட நடிக்க மாட்டேங்குது. ராது வேற யாரை ஜோடியாப் போடலாம்?
ராதிகா : யாரை வேணும்னாலும் போடுங்க. படம் என்ன ஓடவாப்போகுது?

தோழர் டூண்டு

வன்மத்தின் மொழியிலிருந்து
வார்த்தைகளை உருவுகிறாய்.
வன்மத்தின் திசையிலிருந்து
விலகவே விரும்புகிறேன் நான்.
ஆனாலும் வன்மத்தின் ஆதி
உன்னிலிருந்து தொடங்கியதில்லை
என்பதை உணர்கிறேன் நான்
மெய்யாலும் மெய்யாலுமே..
காற்றைக்கிழிக்கும்
உன் இரைச்சலினூடே
எத்தனை ஓசைகள்
எனக்குக்கேட்கின்றன?
கணவாய்களில் கனைக்கும்
ஆடுகளின் மேய்ச்சல் ஓசை,
கருப்பு ரத்தங்களால் நிரம்பி வழியும்
ஆதி மதுக்குடுவைகள்
உடைந்து நொறுங்கும் ஓசை,
ஸ்வஸ்திக் ஒரு காற்றைப் போல்
ஆம் காற்றைப் போலவே
திசைகளை விழுங்கும் வேளை
தென் திசையில் மண்டியிட்டு
அன்னியப் பாதங்களுக்கு
முததமிட்ட ஓசை
இன்னமும்..இன்னமும்
ஆனாலும் நான்
உன் காலடிகளைப் பின்பற்றமுடியாது
மெய்யாலும் மெய்யாலுமே
நீ வெற்றிபெற்ற கணம்தான் எது?
உன்னோடு கைகுலுக்கலாமா
வேண்டாமா என்று நான் குழம்பிய கணமா?.

பிளாக்கர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள்

வரவணையான் : ஆட்டோகிராப்

( இந்த படத்தின் கதாநாயகனின் பெயரும் செந்தில்தான். மேலும் அப்பாவின் கையெழுத்தை பிராக்ரஸ்ரிப்போர்ட்டில் போடுவது, சின்ன வயசிலேயே காதலித்து கெட்டுப்போவது, தண்ணியடிப்பது, தம்மடிப்பது என்று சகல கல்யாணகுணங்களும் நிரம்பியிருப்பது போன்றவை உபகாரணங்கள். மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று " எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்))

முத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)

அசுரன் : நான் சிவப்பு மனிதன்

லிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை are you a .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)

we the people : பாரதவிலாஸ்

இட்லிவடை ; ஜெமினிகணேசன் படங்கள் அனைத்தும்

ஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)

ஈழபாரதி : தர்மயுத்தம்

வஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்

ஜெயராமன் : அய்யர் தி கிரேட்

டோண்டு ராகவன் : நான் அவனில்லை

விடாதுகருப்பு : திராவிடன், தமிழன்

குழலி ; அய்யா, மறுமலர்ச்சி

கடவுளுக்கு எதிரானவர்கள் பார்ப்பனர்கள்

"பொதுவாக பார்ப்பனர்களைப் போல வேறு நாத்திகர்கள் இல்லை" என்பார் தோழர்.பெரியார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எல்லா பார்ப்பன அர்ச்சகர்களும் எல்லா அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்வது கடவுள் சிலை முன்னால்தான்.
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்றவை பெண் தெய்வங்கள்தானே? அதற்கு ஏன் ஒரு ஆண் பூசாரி சேலை மாற்றிவிடுகிறார்? ஏனென்றால் அதெல்லாம் வெறும் டுபாக்கூர் என்று அந்த பார்ப்பனருக்குத் தெரியும்.

இன்னொன்றை யோசித்துப் பாருங்கள். கடவுள் இந்த உலகில் அனைத்து உயிர்களையும் படைத்ததாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு உயிருக்கும் பற்களையும் கடவுள்தானே படைத்தார்? ஒவ்வொரு உயிரியின் உணவுப்பழக்கவழக்கத்திற்கு ஏற்றாற்போலத்தான் பற்கள் அமைப்பும் இருக்கிறது. மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த இயற்கைநியதிக்கு மாறாக மாமிசம் சாப்பிடாத ஒரு இனம் இருக்கிறதென்றால் அது பார்ப்பனர்கள்தான்.உலகில் மாமிசம் சாப்பிடாத இனக்குழுவும் இருக்கிறதா என்ன?

ஒரு சில சொற்கள்....


நாம் மிதந்து கொண்டிருக்கிறோம்

சில நேரங்களில் இணைந்தும்...

சில நேரங்களில் விலகியும்....