பதிவாளர் பட்டறை?

தொடர்ச்சியான அலுவல்கள் இருந்ததால் வலைப்பதிவாளர்பட்டறையில் தொடர்ந்து பங்குபற்றாத இயலாத நிலை. அதிகபட்சம் அரைமணிநேரம் மட்டுமே பட்டறையில் சுற்றிவரமுடிந்தது. அரங்கத்தில் ஒரே ஒரு அமர்வினை மட்டுமே கேட்டேன். அதுவும் தலைப்பு ஈர்த்ததால்.

'வலைப்பதிவாளர்களின் சமூக அக்கறை'. ராமகிருஷ்ணன் என்பவர் பேசினார். (அவர்தான் ரஜினிராம்கி என்று ஒரு நண்பர் சொன்னார். சரியா என்று தெரியவில்லை.) அவர் பேசியதன் சாராம்சம் இதுதான். 2004ல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வலைப்பதிவாளர்கள் நிதி திரட்டிக்கொடுத்தது, கல்வி மற்றும் மருத்துவச்செலவுகளுக்காக நிதி திரட்டிக்கொடுத்தது ஆகியவற்றைப் பட்டியலிட்ட ராமகிருஷ்ணன் இதைத்தான் சமூக அக்கறை என்றார்.

இதற்குப்பெயர் மிடில்கிளாஸ் மனிதாபிமானமே தவிர சமூக அக்கறையல்ல. இயற்கைப்பேரழிவுகளோ அல்லது வறுமையோ வெறுமனே இயறகை மாற்றங்களால் மட்டும் ஏற்படுவதில்லை, அதற்குப் பின்னால் அகோரமான மூலதனப் பசியும் வல்லரசுகளின் சுரண்டலும் முதலாளித்துவக் கொடூரமும் உறைந்திருக்கின்றன. இதுபற்றிப் பேசுவதும் பேசச்செய்வதுமே சமூக அக்கறை. நிதி திரட்டித் தருவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதற்குப் பெயர் சமூக அக்கறையில்லை என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

மாலன் பேசியதில் உள்ள சர்ச்சைகளை தொடர்ச்சியாக ஈழத்தமிழ்த்தோழர்கள் எழுதிவருகிரார்கள். ராஜீவ் கொலைக்குற்றவாளிகளுக்கான தீர்ப்பின்போது மாலன் எப்படி நடந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். மாலன் மற்றும் ஹிந்துராம் போன்ற பார்ப்பனர்களின் ஈழப்போராட்டத்திர்கு எதிரான மனோநிலையைக் கண்டறிந்துகொள்வது ஒன்றும் கடினமானதில்லை.

டீக்கடையில் கிழியுதுன் தேசியப் பொய்மை


ஈரோடு, கோவை, திண்டுக்கல், தென்னாற்காடு மாவட் டங்களில் ‘இரட்டைக் குவளை’ முறை அமுலி லுள்ள தேனீர்க் கடைகள் மற்றும் தலித் மக்களை அனுமதிக்காத கோயில்களின் பட்டி யலை - பெரியார் திராவிடர் கழகத் தோழர் கள் தயாரித்துள்ளனர். அந்தப் பட்டியலை, இங்கு வெளியிடுகிறோம்.


பாபு, த/பெ. ராமசாமி, பாபு டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638503.

முருகேஷ், த/பெ. ரங்கசாமி, முருகன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம்௬38 503.

அழகிரிசாமி (கண்ணன்), கண்ணன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல் சத்தி வட்டம் - 638 503.

வெங்கடேஷ், த/பெ. செட்டியார், வெங்கடேஷ் டீ ஸ்டால், கடைவீதி சாலை, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுந்தரமூர்த்தி, த/பெ. வெள்ளேகவுண்டர், சுந்தரமூர்த்தி டீ ஸ்டால், அம்மன் கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

ராமசாமி, த/பெ. கருப்பண முதலியார், ராமசாமி டீ ஸ்டால், பாரஸ்ட் ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

சஞ்சீவி, சஞ்சீவி டீ ஸ்டால், கடைவீதி ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

இராசு, இராசு டீக்கடை, புது மேட்டூர், ஆயில் மில் அருகில், சத்தி ரோடு, தவிட்டுப்பாளையம், அந்தியூர் அஞ்சல், பவானி வட்டம்.

சம்பத் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கிரி தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

மல்லிகா டீ ஸ்டால், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

இராயப்பன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சிவாயாள் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

முருகபவன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

ஆசனூர்க்காரர் டீக்கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாய் டீக்கடை, மசூதி பின்புறம், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

தங்கவேல், தங்கவேல் தேனீரகம், முதன்மைச் சாலை, அளுக்குளி அஞ்சல், கோபி வட்டம்.

முத்துசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

கந்தசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

வேலன் டீக்கடை, குள்ளம்பாளையம் பிரிவு, ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம்,கோபி வட்டம்.

ஜெயராணி டீக்கடை, வேலன் டீக்கடை எதிரில், ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம், கோபி வட்டம்.

சுப்ரமணியம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பி.எஸ். கிருஷ்ணன் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாரியூர் அம்மன் மகளிர் சுயஉதவிக்குழு டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கார்மேகம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

அசோக் டீ ஸ்டால், தாசம்பாளையம், ஈரோடு மெயின்ரோடு, கோபி வட்டம்.

முருகேசன், த/பெ. சின்னப்ப உடையார், முருகேசன் டீக்கடை, காராப்பட்டி,
கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

சின்ன அம்மணி டீக்கடை, க/பெ. கே.பி. ராஜா, கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

நாச்சிமுத்து டீக்கடை, எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சங்கீதா டீக்கடை, பேரூராட்சி அலுவலகம் அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

காளியப்பன் டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பொன்னுச்சாமி டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சின்னப்பன் (எ) காளையன், மாரனூர், ஊத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சக்தி தாலுக்கா.

சிந்து உணவகம் (தேனீர்க்கடை), குமாரசாமி, செண்பகப்புதூர் ஊராட்சி, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

பாலன் உணவகம் (தேனீர்க்கடை), மாரனூர், உத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

ராஜேந்திரன் தேனீரகம், வேடச்சின்னானூர் (பேருந்து நிறுத்தம் அருகில்) வேடச்சின்னானூர் ஊராட்சி செண்பகபுதூர் அஞ்சல், சத்தி வழி.

கோபால் தேனீர்க் கடை, விண்ணப்பள்ளி ஊராட்சி, பாலிபாளையம் அஞ்சல், சத்தி வட்டம்.

மாகாளி நாய்க்கர் தேனீர்க்கடை, புதுரோடு (பேருந்து நிலையம் அருகில்), செண்பகபுதூர் அஞ்சல், விண்ணப்பள்ளி ஊராட்சி, சத்தி
வழி.சிக்கரசம்பாளையம் (ஊராட்சி)

பொன்னம்மா உணவகம், சிக்கரசம்பாளையம் புதுகாலனி, பேருந்து நிலையம் அருகில், சிக்கரசம்பாளையம் அஞ்சல்சக்தி வட்டம் - 638 401. சிக்கரசம்பாளையம் ஊராட்சி

ராமசாமி தேனீரகம், குளத்தூர் பிரிவு, சிக்கரசம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 401.அரியப்பம்பாளையம் பேரூராட்சி

சின்னப்பன் டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

பழனிசாமி டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல்,சக்தி வட்டம் - 638 402.

தனலட்சுமி டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

மணி, டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

தமிழரசு டீ, உணவகம், (கோவில் அருகில்), பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

சிவகாமி டீ, உணவகம், (காலனி அருகில்), சதுமுகை அஞ்சல், தா.க. புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

முருகேசன், டி, உணவகம், காலனி அருகில், கெம்மநாய்க்கன்பாளையம் அஞ்சல், தா.க.புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

கோபால் டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), ராஜகோபால், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

பாலாஜி டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), பழனியப்பன், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

ரவி டீ ஸ்டால் (மேற்கு பகுதி கூடக்கரை),ரத்தினசாமி, கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

லட்சுமி டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), மணி பண்டாரம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

தங்கராசு டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), இராமலிங்கம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

கொண்டையம்பாளையத்துக்காரன் டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

கிட்டுசாமி டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

சரவணன் புரோட்டா ஸ்டால், உணவகம், கூடக்கரை மேற்கு, உரிமை : சரவணன், இவர் அரியப்பம்பாளையத்தை சார்ந்தவர்.

குறிப்பு: அனைத்துக் கடை களிலும் செயற்கைக் குவளை (பிளா°டிக் கப்) அதிகம் பயன்படுத்தப்படு கிறது.

முடி திருத்தக் கடைகள்

சுப்பிரமணி சலூன் கடை, கடைவிதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

வெள்ளியங்கிரி சலூன் கடை, முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுப்பிரமணி சலூன் கடை, பெரியசாமி கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை (சின்னப்பையன்), முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை, நரசஸ்சாபுரம் பிரிவு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

செல்வம், யுவராஜ் முடித்திருத்தகம், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

செல்வன் சலூன் கடை, உரிமை: செல்வன், லோகு சலூன் கடை, உரிமை: லோகநாதன், லிங்கேஸ் சலூன் கடை, உரிமை: லிங்கேஸ்ரன்,

லைட் (எ) ஆறுமுகம், அயனிங்கடை, கூடக்கரைமேற்கு, கூடக்கரை.
(இங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்டுவதில்லை)

கோயில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் கூடக்கரை (வடக்கு).


கோவை மாவட்டம்



கோவை புறநகர்

மோளப்பாளையம், சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், விராலியூர், நரசிபுரம், அஜ்ஜனூர், கண்டப்பாளையம், காளப்பநாயக்கன் பாளையம், ஜாகீர் நாயக்கன் பாளையம், வெள்ளருக்கம் பாளையம், சிலம்பனூர்.பெரியநாயக்கன் பாளையம், காரமடை மேற்கு - புஜ்ஜனூர், திம்மம்பாளையம், கே.புங்கம்பாளையம், புன்னையூர், வெள்ளியங்காடு, கண்டியூர், சின்னப்புத்தூர், பெரிய புத்துர்,மங்களக்கரை புதூர், மூலத்துறை, பாலப்பட்டி, வச்சினப்பாளையம், கிட்டாம்பாளையம், புதூர்.

அன்னூர் :

மோக்கனூர், எ°. புங்கம்பாளையம், பகத்தூர், பல்லேபாளையம். இரும்பொறை : கவுண்டன்பாளையம், மீனம்பாளையம், கனுவக்கரை, கள்ளப்பட்டி, சின்னரங்கம்பாளையம், பெரியரங்கம்பாளையம்.

அவிநாசி

சேவூர், நம்பியாம்பாளையம் (கருவலூர் சாலை),ராணியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம்.

ஈரோடு உட்கோட்ட எல்லை

காவிரி பாளையம், குப்பன் துறை, உக்கரம், கடத்தூர்,பனையம்பாளையம்.

பல்லடம்


பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், கரடிவாவி, பருவாய்,ஆராக்குளம், அனுப்பட்டி, லட்சுமி மில்ஸ், ஐயம்பாளையம், 11 சென்னிபாளையம், அப்பம்பாளையம், காளிகாளப்பட்டி,வேலம்பட்டி, மடுகபாளையம், எளவந்தி, துத்தாரிபாளையம்,கேத்தனூர், வெங்கிட்டாபுரம், பணப்பட்டி, பிரண்டம்பாளையம், சிக்கனத்தூர்.

மேட்டு கடை டீ கடை, பாரதியார் நகர், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

ராமாத்தாள் டீ கடை, பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை - 641 016.

ஆசாரி மணி கடை, கரும்புரவிபாளையம், வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

பாலு உணவகம், கரடிவாலி, பல்லடம் , கோவை மாவட்டம்.

வஞ்சியம்மன் உணவகம், லட்சுமி உணவகம், செம்மிபாளையம் அஞ்சல்,
பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

குமார் உணவகம், சுக்கம்பாளையம், சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம், கோவை மாவட்டம்.

அமாசையப்பன் கவுண்டர் உணவகம், காமராசர் நகர், கண்ணம்பாளையம் அஞ்சல், சூலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

கவுண்டர் தேனீர் நிலையம், சிக்கனூத்து, சுல்தான் பேட்டை ஒன்றியம், கோவை மாவட்டம்.

தெற்குப்பாளையம், பொங்கலூர் ஒன்றியம், கோவை மாவட்டம்.

புத்தரச்சல் டீ கடை, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் தாலுக்கா.

நடுகவுண்டர் பெரிய பாப்பா கடை, வடவேடம்பட்டி, வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்பையா கவுண்டர் டீ கடை, கிருஷ்ணா நகர், கரடிவாலி, பல்லடம் தாலுக்கா, கோவை.

முத்தக்கா டீ கடை, அனுப்பட்டி, பல்லடம் தாலுக்கா, கோவை.

பழனிச்சாமி கவுண்டர் டீ கடை, வெங்கிட்டாபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.

நடராஜ் டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்ரமணி டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

செந்தில் நாயக்கர் டீ கடை, துத்தாரிபாளையம் பிரிவு, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

எலவந்தி வடுகபாளையம், மூன்று டீ கடை, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

மாரப்பன் கவுண்டர் டீ கடை, காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம் தாலுக்கா, கோவை.

கீர்த்திகா டீ கடை, வடவேடம்பட்டி, வடவேடம் பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

தனி சுடுகாடு உள்ள இடங்கள்:


இராஜீவ்காந்தி நகர் வடவள்ளி, கணுவாய், நாதேகவுண்டன்புதூர், மேட்டுக்காடு, முல்லைநகர்,புதூர் புதுக்காலனி, போளுவாம்பட்டி, தெனமநல்லூர், ஆலாந்துறை, செம்மேடு, ஆறுமுகனூர், பச்சாபாளையம், கோவைப்புதூர், இடையர்பாளையம், லிங்கனூர் ஆதி தமிழன் நகர்.

பெருமநாயக்கன் பாளையம். பெருமாநாயக்கன்புதூர்,

குண்டடம் ஒன்றியம்

எடையபட்டி, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

பாரபாளையம், கொடுவாய் ஒன்றியம், காங்கயம் வட்டம்.

வலையபாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

வெல்லநத்தம் கிழக்கு.வெல்லநத்தம் வடக்கு, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

சாத்தநாயக்கன்பாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

தீண்டாமை கடைபிடிக்கும் பொது கோவில் :

காளப்பட்டி மாரி அம்மன் கோயில்
மாகாளியம்மன் வீரமாத்தியம்மன் கோயில், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை

சலூன்

வளர்மதி சலூன் - மல்லேஸ்வரி சலூன்,பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை.

ஹீராட் சலூன், சித்நாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, கோவை

நிலா நிரோஷா ஹேர் லைன்ஸ், குப்புசாமி நாயுடுபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.


விழுப்புரம் மாவட்டம்


அப்பு (ஆறுமுகம்), அருத்தங்கொடி, திருக்கோவிலூர் வட்டம்.
குமார் (செகதீசன்), லக்கிநாயக்கம்பட்டி, சங்கராபுரம் வட்டம்.

ஆதி திராவிடர்களை அனுமதிக்காத கோயில்கள்

சிவன் கோயில் - கடுவனூர், சங்கராபுரம் வட்டம்.துரோபதி அம்மன் - தொழுவந்தாங்கல், சங்கராபுரம் வட்டம்.

துரோபதி அம்மன் - கள்ளிப்பட்டு, சங்கராபுரம் வட்டம்.

ஈசுவரன் கோயில் - கூவனூர், திருக்கோவிலூர் வட்டம்.

கல்வராயன் கோயில் - கோமனூர், கள்ளக்குறிச்சி வட்டம்.

வினாயகர் கோயில் - நாகந்தூர், செஞ்சி வட்டம்.


திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை முறைகள் உள்ள கிராமங்களின் பட்டியல்

பழனி ஒன்றியம்


1. மிடாப்பாடி2. மயிலாபுரம் 3. நல்லெண்ணக்கவுண்டன்புதூர்4. பாப்பாகுளம்5. அய்யம்பாளையம்6. சின்னாக்கவுண்டன்புதூர்7. வேலாயுதம்பாஇளையம் புதூர்8. காவலப்பட்டி 9. போடுவார்பட்டி10. கரடிக்கூட்டம்


ஓட்டன்சத்திரம் ஒன்றியம்

11. திருவாண்டபுரம்,12. மோதுப்பட்டி,13. அப்பியம்பட்டி,14. நால்ரோடு,15. கூத்தம்பூண்டி,16. கழுத்தறுக்கன்பாளையம்,17. கரியாம்பட்டி,18. அம்மாபட்டி,19. குத்திலிப்பை,20. ஓடைப்பட்டி,21. சக்கம்பட்டி,22. சிந்தலப்பட்டி.23. சவ்வாதுபட்டி24. கோ.கீரனூர்25. புதுஅத்திக்கோம்பை26. அரசப்பிள்ளைபட்டி27. காவேரியம்மாபட்டி28. சின்னக்கரட்டுப்பட்டி29. பெரிய கரட்டுப்பட்டி30. பெரியகோட்டை31. தேவத்தூர்32. கொத்தயம்33. கந்தப்பகவுண்டன்வலசு34. 16 புதூர்35. கிலாங்குண்டல்36. கப்பல்பட்டி37. புலியூர்நத்தம்38. முத்துநாயக்கன்பட்டி39. நவாலூத்து40. இ.கல்லுப்பட்டி41. புளியமரத்துக்கோட்டை42. பி.என்.கல்லுப்பட்டி43. குளிப்பட்டி44. சின்னக்குளிப்பட்டி45. மறுநூத்துப்பட்டி46. சிறுநாயக்கன்பட்டி47. வடகாடு 48. பால்கடை49. வண்டிப்பாதை50. கொசவபட்டி51. தங்கச்சியம்மாபட்டி52. மேட்டுப்பட்டி (அம்பிளிகை)53. வளையபட்டி ( இடையகோட்டை 54. வெரியப்பூர்55. சீரங்கக்கவுண்டன்புதூர்56. கொல்லபட்டி57. குட்டில்நாயக்கன்பட்டி

தொப்பம்பட்டி ஒன்றியம்


58. கோவில்அம்மாபட்டி 59. இராஜம்பட்டி 60. அத்திமரத்துவலசு 61. பணம்பட்டி 62. அக்கரைப்பட்டி 63. சரவணப்பட்டி 64. ஆலாவலசு 65. பூலாம்பட்டி 66. வாகரை 67. மரிச்சிலம்பு 68. கொழுமங்கொண்டான் 69. சங்கஞ்செட்டிவலசு 70. கல்துரை 71. கோட்டத்துரை 72. பெரியமொட்டனூத்து 73. தாளையூத்து 74. நாச்சியப்பக்கவுண்டன்வலசு75. புங்கமுத்தூர்,76. அப்பனூத்து,77. குமராசாமிக்கவுண்டன்வலசு,78. அரண்மனைவலசு79. தீத்தாக்கவுண்டன் வலசு80. திருமலைக்கவுண்டன்வலசு81. பருத்தியூர்,82. வடபருத்தியூர்,83. பொருளூர்84. மேட்டுப்பட்டி (கள்ளிமந்தையம்)85. ஒத்தையூர்( கள்ளிமந்தையம் 86. வேலம்பட்டி87. புளியம்பட்டி


தோழர்களே தயாராவீர்!

ஆகஸ்டு 15 இல் தேனீர் கடைகளில், இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை பற்றியும், தலித் மக்களை அனுமதிக்க மறுக்கும் பொதுக் கோயில்கள் பற்றியும், பட்டியல் தயாரித்து விட்டீர்களா?


தோழர்கள் அனுப்பி வைத்த பட்டியலை இந்த இதழில் வெளியிட் டிருக்கிறோம். உரிய நடவடிக்கை கோரி, தொடர்புடைய அரசுத் துறைக்கு, இவை முறைப்படி அனுப்பி வைக்கப்படும். அரசு உரிய நட வடிக்கை எடுக்கவில்லை எனில், ஆகஸ்டு 15 இல் திட்டமிட்டபடி ‘இரட்டைக் குவளை’ உடைப்புப் போராட்டத்தில் கழகம் இறங்கும்.

கழகத் தோழர்களே!
• மாவட்டத்தில் போராட்டம் நடக்கும் பகுதியைத் தேர்வு செய்யுங்கள். • காவல் துறைக்கு போராட்டம் பற்றிய தகவல்களைத் தெரியப் படுத்துங்கள்.
• உடன்பாடுள்ள தோழமை அமைப்புகளைச் சந்தித்துப் பேசுங்கள். அவர்களின் ஆதரவைக் கோரி அவர்களையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.
• போராட்டத்தின் நியாயத்தை பல்வேறு பிரச்சார வழிமுறைகளைப் பயன்படுத்தி, மக்களிடம் விளக்குங்கள்.

தீண்டாமையைப் பின்பற்றுவது சட்டப்படி குற்றம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். சட்டங்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்து நிற்பதைக் கண்டித்தும் -சட்டத்தை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை கோரியும் - தீண்டாமையையும், அதற்கு உயிர் கொடுக்கும் சாதி அமைப்பை யும் எதிர்த்து, ‘பெரியார் திராவிடர் கழகம்’ இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
நாட்டின் அடிப்படையான முதலுரிமையும் முன்னுரிமையுமான ஒரு பிரச்சினையை கழகம் முன்னெடுத்துள்ளது.தோழர்களே! கழகச் செயல்வீரர்களே, தயாராவீர்!

“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என்மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும், இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மானவாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண் டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும், மனக் குறையின்றி, நிறை மனதுடன் அனுபவிப்பேன்-சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்.”

- பெரியார் (தமிழர் தலைவர் - நூல், பக்.15)

நன்றி : http://thozharperiyar.blogspot.com/2007/08/blog-post.html

கைவிடப்பட்ட முஸ்லீம்கள்...



1998 நவம்பர் மாதம் செல்வராஜ் என்ற போலிஸ்காரர் முஸ்லீம் இயக்கமாகிய அல் உம்மா அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து போலீஸ்ரவுடிகளும் இந்துத்துவ வெறியர்களும் கோவை வீதிகளெங்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை முன்னின்று ஏவினர். இக்கலவரத்தில் பத்தொன்பது முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர். முஸ்லீம்களின் உடைமைகள் சூறையாடப்படுகின்றன. ஷோபா என்னும் முஸ்லீம் ஒருவரால் நடத்தப்பட்ட ஜவுளிக்கடை அழிக்கப்படுகிறது.

'தான் தேர்தலில் ஜெயித்தால் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளைப் போல கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்' என்று உறுதியளித்து அதை நிறைவேற்றவும் செய்த அப்போதைய கோவைச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ வேட்டி உரியப்பட்டு உள்ளாடையோடு இந்துத்துவ மற்றும் போலீசுக் குண்டர்களால் சாலையில் விரட்டப்படுகிறார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளையட்டி அப்போதைய கருணாநிதி அரசு பொடா சட்டத்தைக் கொண்டுவந்து அல் உம்மாவைத் தடை செய்து நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்களைச் சிறையிலடைத்தது. தன் கட்சியைச் சேர்ந்த தண்டபாணி எம்.எல்.ஏ இறந்தபோதுகூட அவரைப் போய்ப்பார்க்காத கருணாநிதி அப்போதைய பிஜேபி எம்.எல்.ஏ வேலாயுதம் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சென்று உடல்நலம் விசாரித்தார். இதில் கருணாநிதியின் துரோகம் இத்தன்மையெனில் தமிழ்த்தேசிய அமைப்புகளின் துரோகம் வேறுமாதிரியானது.

ராஜிவ் கொலையையட்டி 24 அப்பாவித்தமிழர்கள் சிறையிலடைக்கப்பட்டு அவர்களில் ஆறுபேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு என்னும் அமைப்பு அவர்களின் விடுதலைக்கான இயக்கம் ஒன்றை அமைத்தது.

இது வெறுமனே அவர்களது வழக்கு நிதிக்கான நிதி சேகரிப்பு இயக்கமாக மட்டும் அமையவில்லை. மரணதண்டணை ஒழிப்பு இயக்கமாக மாறியது. முதன்முதலாக மரணதண்டனை ஒழிப்பு என்னும் கருத்தாக்கம் மக்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் மூலம் முன்வைக்கப்பட்டது. இறுதியில் கருணாநிதியிலிருந்து சோனியா வரை அதை ஏற்குமளவிற்கு அவ்வியக்கம் வெற்றிகண்டது.

ஆனால் இந்த தமிழ்த்தேசியர்கள், முஸ்லீம் இளைஞர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோது அவர்களுக்காய் இயக்கம் நடத்தவோ நிதி திரட்டித்தரவோ முன்வரவில்லை. பின்னால் கொண்டுவரப்பட்ட பொடாவை எதிர்த்த வீச்சும் வீரியமும் கருணாநிதியால் முஸ்லீம்களை ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட மூத்த பொடாவை எதிர்ப்பதில் இல்லை.

தமிழர்கள் என்பவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என்பதாகவே இன்றுவரை தமிழ்த்தேசிய அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்கின்றன. மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காகக் குரல்கொடுத்தவர்கள் அப்சலின் மரணதண்டனைக்கு எதிராய்ப் பேரளவு எதிர்வினை எதுவும் நிகழ்த்தவில்லை. இப்போது கோவைகுண்டுவெடிப்பு தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. பாட்சா, அன்சாரி உட்படப் பலரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கும் இன்னும் சில நாட்களில் மரணதண்டனை விதிக்கப்படலாம். நாளை அவர்களுக்காக மரணதண்டணை ஒழிப்பு இயக்கத்தை நடத்த தமிழ்த்தேசிய அமைப்புகள் முன்வருமா?

கேரளாவில் இயங்கிவரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானி. மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலில் நம்பிக்கையுள்ள ஒரு அரசியல்கட்சி. முஸ்லீம்கள் மட்டுமில்லாமல் கணிசமான தலித்துகளும் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வியக்கத்தின் தலைவர் மதானியைக் கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று காவல்துறை கைதுசெய்து ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மதானியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரை குறைந்தபட்சம் மருத்துவசிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆறுமாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். இவ்வறிக்கையில் அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர்.வீராசாமி, கவிஞர்.சுகிர்தராணி, வழக்கறிஞர்.ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார்தி.க, ஆதித்தமிழர்பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மதானி பிணையில் விடுவிக்கப்படவில்லை.

ஆனால் இப்போது மதானி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும் அவரை விடுதலை செய்துவிடவில்லை. பெரியமனதோடு அவரைப் பிணையில் விடுவிக்க சம்மதித்திருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்த குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மதானியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீசு எப்படி ஈடுகட்டும்? இது மதானிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வியே.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே....




கடந்த இரண்டு வாரங்களாக ஸ்பாம் பிளாக் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டதால் புதிய பதிவெதையும் பதிவிடமுடியாமலிருந்தது. ஆனாலும் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்யன் கணக்காய் புதிதாய் மூன்று பிளாக் ஆரம்பித்து பதிவெழுதத் தொடங்கியதில் ஆழத்தில் அமிழ்ந்து தேடும் அறிவுஜீவிகள் தொடங்கி பொறுப்பற்றுத் திரியும் பொட்டிக்கடை சத்யா வரை அதிர்ச்சியடைந்ததாய்த் தகவல். ஆனால் இப்போது திடீரென்று மீண்டும் இந்த வெளி மிதக்கத் தொடங்குகிறது. இப்போது இதே பிளாக்கிலேயே எழுதுவதா, புதிதாய் ஆரம்பித்துத் தொலைத்த பிளாக்குகளை என்ன செய்வது...... go to the title