பிளாக்கர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள்

வரவணையான் : ஆட்டோகிராப்

( இந்த படத்தின் கதாநாயகனின் பெயரும் செந்தில்தான். மேலும் அப்பாவின் கையெழுத்தை பிராக்ரஸ்ரிப்போர்ட்டில் போடுவது, சின்ன வயசிலேயே காதலித்து கெட்டுப்போவது, தண்ணியடிப்பது, தம்மடிப்பது என்று சகல கல்யாணகுணங்களும் நிரம்பியிருப்பது போன்றவை உபகாரணங்கள். மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று " எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்))

முத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)

அசுரன் : நான் சிவப்பு மனிதன்

லிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை are you a .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)

we the people : பாரதவிலாஸ்

இட்லிவடை ; ஜெமினிகணேசன் படங்கள் அனைத்தும்

ஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)

ஈழபாரதி : தர்மயுத்தம்

வஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்

ஜெயராமன் : அய்யர் தி கிரேட்

டோண்டு ராகவன் : நான் அவனில்லை

விடாதுகருப்பு : திராவிடன், தமிழன்

குழலி ; அய்யா, மறுமலர்ச்சி

7 உரையாட வந்தவர்கள்:

  1. ஞானவெட்டியான் said...

    அன்பு திவாகர்,
    //ஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)//

    மிக்க நன்றி.
    சிறுவயதில் நான் பட்டினத்தார்போல் இல்லை!!!

  2. We The People said...

    //we the people : பாரதவிலாஸ்//

    என்னடா இது எல்லா பதிவர்களும் நம்மள ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டாங்க??!!! ஏன்??

  3. குழலி / Kuzhali said...

    //குழலி ; அய்யா, மறுமலர்ச்சி//
    அய்யா புரியுது :-) அது என்னங்க மறுமலர்ச்சி? வைகோவை இப்பவெல்லாம் ஆதரிப்பதில்லையே?

  4. குழலி / Kuzhali said...

    அடப்பாவி மக்கா நாசமாப்போக... மறுமலர்ச்சியில் உள்குத்தா சே... சே...

  5. மாயவரத்தான் said...

    அது என்ன மறுமலர்ச்சி உள்குத்து?! சொல்லித் தொலையுமய்யா.

  6. மொக்கை மோகன் said...

    எனக்குப் போட்டியாக களம் இறங்கி இருக்கும் உங்களைத் தேடி ஆட்டோ வருகிறது.
    :-)))))))
    (நான் யோசிச்சு வச்சிருந்ததை போட்டு கிலி கொடுத்துட்டீரே, இனி புதுசா யோசிக்கனுமா?)
    :-((((

  7. Anonymous said...

    அன்பு சுகுணா திவாகர்,

    //மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று " எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்)//

    அந்த ரகசியம்.,எனக்கும் கூடத்தெரியும்.
    " கேரளா.........அழகே தனி"

    செந்"தில்" என்னிடம் கூட கூறி விட்டார்.

    செந்"தில்" ரசிகர் மன்ற ரசிகர்.
    த.சேசுராஜா.தூத்துக்குடி.