" ஈராக் நீதிபதி ஒரு குடிகாரர்" - ஜெயலலிதா தாக்கு!

வீட்டிலும் டென்ஷன், வெளியிலும் டென்ஷன். சற்று ரிலாக்ஸாக டி.வி. பார்க்கலாம் என்று டிவியைப் போட்டால், ஜெயாடிவி செய்திகள்.
" முன்னாள் தமிழக முதல்வர், புரட்சித்தலைவி, அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி. ஜெயலலிதா இன்று காலை விடுத்த அறிக்கை.
'ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்குத் தூக்கு தண்டனை விதித்த நீதிபதி குடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்துதான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று எனக்கு நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. கறுப்பு எம்.ஜி.ஆர், பச்சை எம்.ஜி.ஆர் என்று தனக்குத் தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு மனிதரைப் பார்த்துத்தான் நீதிபதி கெட்டுவிட்டார். இதன் பின்னணியில் கருணாநிதியின் மைனாரிட்டி திமுக அரசு இருக்கிறது என்றும் தெரிகிறது. சிக்கன்குனியாவையே கட்டுப்படுத்தமுடியாத கருணாநிதியின் மைனாரிட்டி அரசு மரணதண்டனையையா தடுக்கப்போகிறது? முன்னாள் அதிபர்கள், முன்னாள் முதல்வர்கள் என அனைவரையும் பழிவாங்கத்துடிக்கும் சதியின் ஒரு அங்கம்தான் இது என்பதை மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்"
இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது:-
"முதல்கில் என்னைக் குடிகாரன் என்றார் அந்த அம்மா. இப்போது ஈராக் நீதிபதியைக் குடிகாரன் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவர் நிதானத்தை இழந்திருக்கிறார் என்று தெரியவில்லையா? அவர் அறிக்கை விடுவதற்கு முன்பு பாரின் ஜின் குடிப்பார் என்று எனக்கும் நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. இரண்டு கட்சிகளையும் நீங்கள் மாறி மாறிப் பார்த்துவிட்டீர்கள். ஒருமுறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஈராக்கில் மொத்தம் 53 நீதிமன்றங்கள் இருக்கு. ஆனால் ஒயின்ஷாப்போ 3021தான் இருக்கு...."
இன்று முரசொலியில் வெளிவந்த கருணாநிதியின் கவிதை
உடன்பிறப்பே
மதுமயக்கம் மதுமயக்கம் என்று
மதிமயக்கத்தால் உளறுகின்றார் ஒரு அம்மையார்.
மைனாரிட்டி அரசு என்று நம்மையும் ஏசுகின்றார்.
புயலொன்று இப்போது தன் புடவைக்குள்
இருக்கிறது என்ற மமதையும் கூட.
வங்கக்கடற்கரையில் உறங்கும்
நம் அண்ணன் அறிவான்
நாம் பங்கமற்றவர்கள் என்பதை"
இந்த கடிதம் குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ அளித்த பேட்டி
" கோபாலபுரத்தார் என்னையும் தேவையில்லாமல் வம்பிக்கிழுத்திருக்கிறார். வம்புச்சண்டைக்குப் பயப்படாத வரிப்புலி மதிமுக என்பதை அவர் மறந்துவிட்டார். இன்று ஈராக் நீதிமன்றம் வரை கோபாலபுரத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. சதாம் தவறாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்படித்தான் கிரேக்கத்திலே ஸ்பார்ட்டகஸ் தண்டிக்கப்பட்டார். ரோமாபுரியிலே சாக்ரடிஸ் தண்டிக்கப்பட்டார். கலிலியோ தண்டிக்கப்பட்டார். ஏன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே வைகோ பொய்க்குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டானே..(ஆ ஊ யேய்..ம்ம்ம்(கர்ஜிக்கிறார்))
இந்த தொல்லை தாங்காமல் திநகர் இந்திபிரச்சாரசபாதெரு பக்கம் வாக்கிங் போனால் அங்கே வாசலில் நின்றுகொண்டு சன் டிவிக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறாஎ விஜய.டி.ராஜேந்தர்.
" அனனிக்கு ஈராக் மக்கள் சொன்னாங்க சதாம், சதாம்
இன்னைக்கு ஈராக் நீதிபதி சொல்றார் கதம், கதம்.
நீதிபதி அடிச்சது சரக்கா?
அம்மா சொல்றதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?
கலைஞர்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க அம்மா
அதெல்லாம் வெறும் சும்மா"
அப்போது அந்த பக்கமாக வந்த சிம்பு டென்ஷனாகி.." லூஸு அப்பா,லூஸு அப்பா, லூஸு அப்பா லூஸுத்தனமா உளறி ஏன்யா உயிரை எடுக்கிறே...(பாடிக்கொண்டிருக்கும் போதே நயன் தாராவிடமிருந்து போன் வர ஜெர்க் ஆகிறார்.)
போனில் நயன்: காப்பாத்துங்க..காப்பாத்துங்க. சரத்குமார் அடுத்த படத்திலயும் ஜோடியா நடிக்க கூப்பிடறார்.

கட் பண்ணினால் ராதிகா வீடு (பின்ன என்ன சரத்குமார் வீடா?)
சரத் சோகமாக புடவைகளை அயர்ன் செய்துகொண்டிருக்கிறார். ராதிகா உள்ளே வந்து " ஆபிஸ் போகணும். புடவையை அயர்ன் பண்ணிணீங்கினா இல்லையா?
சரத் : ஏன் ராது விரட்டுறே? நான் தான் வேலைப்பளு அதிகமாயிருக்குன்னு கட்சியில இருந்துகூட விலகிட்டேனே. நயன் தாரா வேற என்னோட நடிக்க மாட்டேங்குது. ராது வேற யாரை ஜோடியாப் போடலாம்?
ராதிகா : யாரை வேணும்னாலும் போடுங்க. படம் என்ன ஓடவாப்போகுது?

8 உரையாட வந்தவர்கள்:

  1. PRABHU RAJADURAI said...

    :-))))))))))))

  2. Anonymous said...

    இப்படி அநியாயத்துக்கு எல்லோரையும் கலாய்ச்சுட்டீங்களே தலைவா?

  3. Anonymous said...

    நான் என்னவோ ஜெயலலிதா நிஜமாகவே அறிக்கை விட்டார் என்று நினைத்தேன். ஹிஹி... :)

  4. rajavanaj said...

    hahahaha....

    kalakkunga thalai..!!

  5. Anonymous said...

    அப்ப இதெல்லாம் காமிடியா...?

  6. Pot"tea" kadai said...

    :))

  7. Anonymous said...

    supera irruku thaliva :-)

    Nandri,
    Amarnath.

  8. Anonymous said...

    supera iruku thaliva ;-)

    Nandri,
    Amarnath.