பெருவெளி குறித்த முரண்வெளியின் விமர்சனம்.

பெருவெளி என்னும் ஈழமுஸ்லீம் தேசியத்தை முன்வைக்கும் சிறுபத்திரிகையைப் படிக்கும்போது எனக்குள் எழுந்த சில கேள்விகள் இக்கட்டுரையிலும் பிரதிபலித்துள்ளபடியால் இதைப் பதிவுசெய்கிறேன். குறிப்பாக அப்துல் லத்தீப்பின் பர்தாவைச் சிலாகித்து வெளியான கவிதை. மேலும் பெருவெளியில் வெளியான அ.மார்க்சின் நேர்காணலிலும் புதிதான விடயங்கள் ஏதுமில்லை என்பதும் ஏமாற்றத்துக்குரியதாகவே இருந்தது. ஆனால் இக்கட்டுரையிலுள்ள எல்லா விடயங்களுடனும் நான் ஒத்துப்போக வேண்டுமென்ற அவசியமில்லை. உரையாடுவோம்.

- சுகுணாதிவாகர்


அப்துல் லத்தீப், பாலைநகர் ஜிப்ரி ஹசன் ஆகியோரது பிரதிகளைப் பெருவெளியில் வாசிக்கையில் - ஒரு தர்க்கப் படி பார்த்தால் - நிறப்பிரிகையில் வெங்கட் சாமிநாதன், யுவன் சந்திரசேகர், பி.ஏ.அனந்தகிருஷ்ணன் போன்றவர்களது பிரதிகளைக் காணும் உணர்வு வந்திருக்க வேண்டும். அப்படியெதுவும் தோன்றாததற்கு வெ.சா, யுவன் அளவுக்கு இவர்கள் இல்லாததும் நிறப்பிரிகையுடன் ஒப்பிடுமளவுக்கு பெருவெளி இல்லாததும் காரணங்களாக இருக்கலாம்.

பாலைநகர் ஜிப்ரி கட்டுரைக்குக் கட்டுரை தனது நிலைப்பாடுகளை மாற்றி மாற்றி வாசிப்பவரைக் குழப்பியடிப்பவர். அவரது கட்டுரைகளை ஒரு தொகுப்பாகப் போட்டால் உங்களுக்கு இன்னுமொரு உன்னதப் பின்நவீன புனைபிரதி கிடைக்கும். மூன்றாவது மனிதன்19இல் பின்-நவீனத்துவம், சமப்பாலுறவு தொடர்பில் உளறிக் கொட்டியிருந்த அவரிடம் முரண்வெளி எழுப்பிய கேள்விகளுக்கு இன்னமும் பதிலில்லை. மூன்றாவது மனிதன் வாசிப்புப் பிரதியில் அவருடைய கட்டுரைக்கான பகுதிகளை தனியாக அவருக்கு மின்-அஞ்சல் செய்து, முரண்வெளியில் வலையேற்றப்பட்டதை அறிவித்தும் எப்பலனும் இல்லை. இதே ஜிப்ரி பின்-நவீன சஞ்சிகையான பெருவெளியில் வந்து ‘திறந்த உரையாடல்’ ‘வெளி’ ‘புனிதங்களிடம் உணமையை உரைத்தல்’ பற்றியெல்லாம் கதை விட்டால் சிரிப்பு வருமா வராதா? இணையத்தில் நடப்பது பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பற்ற வாசகர்களின் தலையை மிளகாய் அரைப்பதற்கென்று இவர்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். Pரின்ட் செய்து அதை நிழற்பிரதி செய்து விநியோகிக்கிற ணெட்நொர்க் ஒன்றை ஏற்படுத்தும் யோசனை எமக்குண்டு. இந்த சிற்றிதழ்க்காரன்கள் இனிமேலும் இப்படிக் குறும்பு பண்ணினால் அந்த நாசகார வேலையையும் பண்ணத் தொடங்கி விட வேண்டியது தான்!

‘சீறாவின் இயங்கியல்’ கவனிக்கப் படவில்லை என்று ஆதங்கப் படுகிறார் ஜிப்ரி. கவனிக்கப் படாத பிரதிகளும் பிரதியாளர்களும் என்று தமிழ் சிற்றிதழ்க்காரர்கள் லிஸ்ட் போட்டபடியே இருப்பதால் இதெல்லாம் எமக்கு கேலிக் கூத்துக்கள் மட்டுமே. உணமையாகவே கவனிக்க விருப்பம் இன்றிப் போடப்பட்ட விடயங்களை நாம் அறிந்திருப்பதால் இவர்களின் இயலாமையை கொடுப்புக்குள் சிரித்தபடி வாசிக்க வேண்டியிருக்கிறது. ‘ஈமானின் உண்மையை நீ அறிவாயா?’ போன்ற சர்ச்சைக்குரிய பிரதிகள் பற்றி ஏன் பேசக் கூடாது? அப்துல்லா தனது நியாயங்களை மறுதலிப்பவர் 100,000 பரிசு பெறுவர் என்று அறிவிப்புச் செய்தும் கூட இன்று வரை ச்சொலச்டிc ஒப்பொசிடிஒன் இல்லையே. தெஒலொகிcஅல்ஆக எந்த மறுப்பும் அந்தப் புத்தகங்களுக்கு இல்லாத நிலையில் சூ·பியிசத்தைப் பின்பற்றும் அம்மக்கள் கூட்டம் மீதும் அவர்களது வழிபாட்டுத் தளம் மீதும் கேவலமாக வன்முறை பிரயோகிக்கப் பட்டிருக்கிறது. ‘இஸ்லாமிய சமூக மாற்றம்’ பற்றிக் கதைக்கும் ஜிப்ரி போன்றவர்களோ அல்லது பெருவெளியினரோ இவை பற்றிக் கதைப்பது இல்லை. ‘கவனிக்கப் படவில்லை’ ‘போதிய விவாதங்கள் நடைபெறாத ஆரோக்கியமற்ற சூழல்’ என்றெல்லாம் இவர்கள் படம் காட்டும் போது பரவசப்படுறதுக்கு நாங்கள் ஒன்றும் சிஷ்யப்பிள்ளைகள் அல்லவே…

)(–)(

கறுப்பு பர்தாவை ‘மறைக்கது மகரந்தம்’ ‘இறைக்கது தேன்துளி’ ‘மானத்திற்கு முக்காடு’ ‘வெட்கத்தின் சிகரமது’ என்றெல்லாம் க்லொரிfய் செய்கிற இஸ்லாமிய ஆணாதிக்கவாதக் கவிதையொன்றைப் பெருவெளி பிரசுரித்திருக்கிறது. ‘மறைத்தலைக் கொண்டாடுவது’ என்ற அடிப்படையில் கூட அப்துல் லத்தீப்பின் கவிதையை மதிப்பிட முடியாது. லத்தீப் முக்காடணிந்தவளைப் பார்த்து ‘அவள் அரேபியப் பெண், எனக்குள் எதுவும் முளைக்கவில்லை’ என்கிறார். ‘மறைத்தல்’ என்பதே கிளர்ச்சியை உன்டுபண்ணுதலை எதிர்பார்த்துச் செய்யப்படுவது. நிறைய விஷயங்களை முளைக்கச் செய்வதற்காகவும் அறிதலுக்கான உந்துதலையும் வேட்கையையும் அதிகரிப்பதற்காகவும் ‘மறைத்தலைக் கொண்டாடல்’ பயன்படுகிறது. ஸ்ட்ரிப் டெஅசிங்இல் முழுவதும் இழுத்துப் போர்த்திக் கொண்டு ஆரம்பத்தில் அவர்கள் தோன்றுவது ஏன் என்பதை அறிந்தவர்களுக்கு நான் சொல்பவற்றை விளங்கிக் கொள்ள இயலுமாயிருக்கும்.

இப்பிடிப்பட்டதொரு கவிதையப் பிரசுரிப்பவர்கள், பர்தாவின் அசௌகரியங்கள் குறித்துப் பேசுகிற பிரதிகளை வெளியிட முன்வருவார்களா? அப்படி இவர்கள் தயாராயிருப்பதை வெளிப்படுத்தினால், அதைச் செய்வதற்கான தோழிகள் கிழக்கிலேயே இருக்கிறார்கள். பர்தாவின் அநாவசியங்கள், அதை வலியுறுத்துவோர் மார்க்கத்திற்கு விசுவாசமாகத் தான் உள்ளார்களா? போன்ற கருத்துக்கள் கேள்விகளுடன் பெண்பிரதியாளர்களை வெளிக்கொணர பெருவெளியினர் தயாரா?

இந்துத்துவப் புனிதங்களைக் கலைத்துப் போடுகிற அதிர்ச்சியூட்டும் கலகங்களை நாம் என்றைக்கோ கண்டாகி விட்டது. [எ.கா:’மனுவின் அழுகல்க் குறியை ஊம்பி’ - மதிவண்ணன், சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷலிஸமும் பான்ஸி பனியனும்’ நாவலில் வருகிற பிராமணர் பாத்திரம் சூத்திர இளைஞனொருவனின் குறியைச் சுவைக்கிறார்.] பின்-நவீனத்துவ முலாம் பூசிக் கொண்டவர்கள் உட்பட யாருமே தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள தயாராக இல்லை. குரானைக் கட்டுடைப்பதெல்லாம் வேண்டாம், அதை ஒரு மீள்வாசிப்பு செய்வதுகூட இவர்களைப் பொறுத்தவரை இயலாத காரியம்.

அனாரின் ‘மேலும் சில இரத்தக்குறிப்புகள்’ கவிதையில் மாத உதிரம் பற்றி பூடகமாக வரிகள் இடம்பெற்றதற்கே முஸ்லிம் ஆண் கவிஞர்கள் சிலர் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்ததை தோழி ஒருத்தி சொன்ன போது அதிர வேண்டி இருந்தது. ‘பிச்சி’ கவிதை பிரசுரமானபோது ‘சல்மா மாதிரியே அனாரும்’ என்கிற ரீதியில் எத்தனை கதைகள் உலவின? நவாஸ் சௌபி அப்படியெல்லாம் எழுதலாம் என்றால், கடற்கரய்(ஹைதர்கான்) ‘விதைப்பையிடிக்க விவாதம் நடாத்தி, குத்திட்டு நுழைவது’ பற்றி எழுதலாம் என்றால், மஜீத் ‘காம நரம்பிறுகிச் சொட்டும் தீத்திரவம்’ என்று எழுதலாம் என்றால் அனார் ‘பிச்சி’ எழுதுவதில் மாத்திரம் ஏன் கேள்விகள்? இப்படியான கட்டுப்பெட்டி சூழலில் ‘பர்தா’வைப் போற்றும் கவிதையொன்றை கோட்பாட்டு இதழொன்றில் காண்கிறோம் என்றால் என்ன அர்த்தம்?

அனார், பெண்ணியா, பஹீமா போன்றவர்களிடமிருந்து எதிர்ப்புகள் ஏதும் இல்லாததை வேதனையுடன் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மருதமுனை, கல்முனை, காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் நிலவும் பெண்களுக்கெதிரான இறுக்கத்தையே இது காட்டுகிறது. எனக்கு இடக்குழப்பம் வருகிறது - மாலதி மைத்ரிக்கு தான் இருப்பது தலிபான்களின் ஆட்சியின் கீழா என்று வியப்பு ஏற்பட்டதைப் போல. எம்மைப் போல வெறும் அநாதைக் குரல்களே அப்பெண்கவிகளுடையவை என்பதால் இந்த நிலையில் அவர்களுக்கான எனது ஆதரவைப் பகிர்ந்து கொள்கிறேன்.

)(–)(

மாற்றுக்கருத்தின் நிலவரம் பகுதியில் பிரசுரமாகியிருக்கிற கடிதங்களுள் சுன்னாகம் இரமேஷினதும் ஹரிஹரஷர்மாவினதும் கடிதங்கள் கவனிப்புக்குரியவை.

இரமேஷ் தனது கடிதத்தில் ‘பெருவெளி’ லொகொவை ‘பாரதியின் கட்புருவத்தை நினைவூட்டுவது’ என வாசிப்புச் செய்கிறார். ‘தமிழ்’ அடையாளங்களையே எதிலும் பொருத்தி வாசிக்கிற மனம் அதில் புலப்பட்டது. நான் அதை ‘காகத்தின் சிறகுகள்’ என்பதாகவே வாசித்தேன். பெருவெளி#02இல் மஜீத்தின் கதைப்பிரதியில் வரும் தனித்த பெருங்காகம் பற்றிய பகுதியை வாசித்த பின்னர் பெருவெளி லோகோவின் அர்த்தம் விளங்கிற்று. முஸ்லிம்களைக் ‘காக்கா’ என விளிக்கும் வழக்கு இருக்கிறதை இரமேஷ் மறந்து போயிருக்கலாம், ஏனென்றால் அவரது நிலப்பகுதியில் இருந்து முஸ்லிம்கள் அடித்துத் துரத்தப்பட்டு 17 வருடமாகிறது. ஸெலெcடிவெ ஆம்னெசிஅ என்பது தமிழர்களின் கூடப் பிறந்த வியாதி அல்லவா?

நாவலரது கஞ்சித் தொட்டித் திட்டத்தின் நுண்-அரசியலை, வன்முறையைப் புரிந்து கொள்ளாமல் ரமேஷ் பகிடி விடுவதுடன் எனக்கு உடன்பாடுகள் ஏதுமில்லை. நாவலரை மு.பொ விமர்சித்தது சிறுபிள்ளைத் தனம் என்கிறார் இரமேஷ். இதனுடன் உடன்படலாம், நாவலரது சைவத்திணிப்பு கிழித்தெறியப்பட வேண்டிய ஒன்று; மு.பொ விமர்சித்திருக்கிறார், ஆகவே அது சிறுபிள்ளைத்தனம் தானே?

மு.பொ கவனிக்கப்படவில்லை என்கிறார் இரமேஷ். பழைய அலை/மல்லிகை போன்ற இதழ்களில் அவர்/அவர் பற்றியவை எடுத்துக் கொண்டிருக்கும் இட அளவுகளைப் பார்க்குமாறு நான் இரமேஷ¤க்குச் சொல்ல விரும்புகிறேன். அந்தக்கால நபரொருவரை இக்காலத்தில் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. சமகாலப் பிரச்சனைகள், சிக்கல்கள், பின்-நவீன நிலவரங்களைப் பொறுத்தவரை மு.பொ வெர்ய் நொர்த்லெச்ச். காலாவதியாகிப் போன நபர் மு.பொ. சந்தியாகோ சொல்வது போல ஆன்மீக அனஸ்தீஸியா எடுத்துக் கொண்டு உளறும் அவருக்கு எங்களுடைய வலிகள் ஒருபோதும் விளங்காது. [காண்க: ஆத்மீகவாதம்-இரத்தம் கழுவியெடுத்த ஞாபகப் பாதைகளும் பிறழ்வுகளும், சந்தியாகோ. முரண்வெளி] ‘தமிழ் உரைநடைக்கு முன்னோடியாக மட்டும் நாவலர் இல்லையென்றால், இன்றும் பண்டிதத் தமிழையே பேசிக்கொண்டிருப்போம்’ என்று இயங்கியல் பார்வையையே மறுக்கிற பகிடியொன்றை இந்த யுகத்தில் வந்து நின்று இரமேஷ¤க்கு இருக்கும் துணிச்சலை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஹரியினுடையன கடிதத்தில் போட்ரிலார்ட் மீது ஏன் அவ்வளவு ஆத்திரம் என்பது புரியவில்லை. கிட்டடியில் மோசம் போய்விட்ட அக்கிழவரின் அவதானிப்புகள் கோபப்படுத்தும் படியானவைதான். நாம் ஏற்றுக்கொள்ள மிகவும் தயக்கப் படுகிற உண்மைகளால் (அப்படியொன்று அவரைப் பொறுத்தவரை கிடையாதாயினும்!) நிரம்பியிருக்கும் பிரதிகள் அவருடையவை. அவரது Mஅச்க் ஓf Wஅர் போன்ற பிரதிகளைப் படித்து விட்டு மிகவும் கவரப்பட்ட நிலையில் பௌசரிடம் மொழிபெயர்ப்பு செய்து பிரசுரிக்கும்படி அனுப்பியிருந்தேன் - அவரும் ஒப்புக் கொண்டார்தான். மூன்றாவது மனிதன் தாமதமாகிக் கொண்டு போவது துரதிர்ஷ்டம். அக்கறையுள்ளவர்கள் போத்ரிலார்டைத் மொழிபெயர்க்க முயற்சிக்கலாம். இலங்கையின் சமகால சமூக, அரசியல் நிலவரங்களின் தன்மைகளைப் புரிந்து கொள்ள (புரிந்து குழம்பித் தலை வெடிக்க!) அவரது எழுத்துக்கள் மிகவும் பயன்படும்.

ஹரியின் சொற்பயன்பாட்டில் வன்முறை இருப்பதாக விசாரன்/விசரன் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருந்தார். ஹரியின் இந்த விழிப்புணர்வின்மையை ஏலவே ஆமிரபாலி மூன்றாவது மனிதனில் சுட்டிக் காட்டியிருந்தார். மிக இளம் தலைமுறை கூட பண்டிதர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் வன்முறைமிக்க மொழியில் இருந்து விடுபட இயலுமாயில்லை. ‘தமிழ்த்தேசியவாதத்தின் கறுப்புப் பக்கங்கள்’ என்று எழுதும் போது ‘கறுப்பு’ தாழ்வான ஒன்று என்று அர்த்தமாகி விடுகிறது. நிறவன்முறையின் வேர் இப்படியான வெள்ளைக்ஷ்கறுப்பு துவிதஎதிர்மையிலல்லவா மையம் கொண்டிருக்கிறது? Cலொஉட்ய் இம்பெனெட்ரபிலிட்ய் என்ற வார்த்தை ஆண்மையம் கொண்டது என்கிறார் விசரன்/விசாரன். உண்மைதான். Cலொஉட்ய் இம்பெனெட்ரபிலிட்ய் என்ற சொல்லை உடைத்துப் பார்த்தால் டெxட் என்பது வாசிப்பாள’ன்’ தன்னை நுழைத்துக் கொள்ளக் கூடிய வழவழப்புடன் (பெனெட்ரப்லெ) இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தெரிகிறது. (பச்சையான அர்த்தத்தில் இம்பெனெட்ரப்லெ என்பது பெனிச்ஐ நுழைக்க முடியாத இறுக்கம் என்பதைக் குறிக்கிறது.) பிரதி=யோனி என்ற இந்த ஒப்பீடு ஆண்மையம் கொண்டதுதான் அல்லவா? நுகர்வுக்கான ஒரு பொருளாக பிரதி இருக்கையில் யோனியை பிரதிக்கு ஒப்பீடு செய்வதினை அடிப்படையாகக் கொண்ட வார்த்தை வன்முறை மிக்கது தானே? ஓxfஒர்ட் Dஇcடிஒனர்ய் இம்பெனெட்ரப்லெ என்பதை ”இம்பொச்சிப்லெ டொ உன்டெர்ச்டன்ட்’ என்று விளக்குகிறது. விசரன்/விசாரன் மிக அடிப்படையாக அந்த வார்த்தையின் கட்டமைப்பை நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்திருக்கிறார். அவர் இது குறித்து எழுதினால் தனியாக விவாதிக்க முடியும்.

‘ன்’விகுதியின் வன்முறை பற்றியும் ஆண்மனம் பற்றியும் பெருவெளிக்கு அறிவுரை சொல்கிற ஹரி தானே இடறுவது பெரிய வேடிக்கை. ‘பிரதியாளன்’ ‘வாசிப்பாளன்’ என்றெல்லாம் எழுதுகையில் அவரது பிரக்ஞை எங்கு ஓடி ஒளிந்தது என்று தெரியவில்லை.

இளைய அப்துல்லா ‘அவர்கள் புலி சார்பு என்கிறார்கள், மு.பொ புலி எதிர்ப்பு என்கிறார்’ என்றவாறாக செய்வதறியாது அழுது கலங்கும் ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். ‘தமிழர் ஆதிக்கத் தரப்புக்குச் சாய்வானவர்கள்’ என்று பெருவெளியினர் முத்திரை குத்தும் சிவசேகரம், சேரன், ஜெயபாலன், நுஹ்மான், சேரன் போன்றவர்களின் அவல நிலை இளைய அப்துல்லாவுக்குப் புரியும் என நினைக்கிறேன். தேசியவாதச் சார்புடைய செயற்பாட்டாளர்கள் வரலாறு முழுவதிலும் காட்டிக்கொடுப்பவர்களாக, முத்திரை குத்துபவர்களாக இருந்து வருகிறார்கள். ‘தெரிதல்’ ‘பெருவெளி’ ஆகியவை இலங்கையிலிருந்து மிகச்சமீபத்திய உதாரணங்கள். இறுகிப்போன தமிழ்த்தேசியவாதியான அ.யேசுராசாவின் ‘தெரிதல்’ இதழ்#03இல் சிவசேகரம், ‘எதிர்த்தமிழ்த்தேசியவாதி’ என்றும் ‘சீன எடுபிடி’ என்றும் முத்திரை குத்தப் பட்டு அவரது புனைபெயர்கள், கட்சி விபரங்கள் காட்டிக்கொடுக்கப் பட்டன. இஸ்லாமியத் தேசியவாதம் பேசுகிற பெருவெளியில் அதே சிவசேகரம் ‘புலி’ என்று முத்திரை குத்தப்படுகிறார். பௌசரின் கட்சி விபரங்கள் தேவையேயில்லாமல் இழுக்கப்பட்டு சரcடெர் அச்சச்சினடிஒன் நடக்கிறது. பௌசரின் அரசியல்/சிவசேகரத்தின் அரசியல் ஆகியவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று இதற்கு அர்த்தமில்லை. அடிப்படை பத்திரிகா தர்மம் இன்றி ஒற்றை வரியில் ஒரு முத்திரை குத்தலை செய்வதன் நோக்கங்கள் என்னவாக இருக்கக் கூடும்? சிவசேகரத்தின், பௌஸரின், ஜெயபாலனின் அரசியல் அடையாளங்கள் ஆச்சரியத்தோடு நோக்கப்பட வேண்டியவையன்று. இலங்கையின் எழுத்துச் செயற்பாட்டாளர்களில் தீவிரமானவர்கள் அனைவருமே அரசியலோடு தம்மை வலுவாகப் பிணைத்துக் கொண்டவர்கள் தான். அது சமூக மாற்றத்துக்கான அவர்களுடைய வேட்கையோடு சம்பந்தப் பட்டது. அவர்கள் ஏதாவது குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டிருந்தால், றியாஸ் குரானா அதை வெளிப்படுத்த விரும்பினால் தாராளமாகப் புலனாய்வுக் கட்டுரை ஒன்று எழுதலாம். எதற்காக ஒற்றை வரியில் முடித்துக் கொள்ள வேண்டும்? எதையும் அறியாத புதிய தலைமுறைக்குள் கடவுளர்களாய் அறிமுகமாக வேண்டும் என்றால் பழைய கடவுளர்களை சாத்தான்களாக்க வேண்டும். அதுதான் பெருவெளியில் நடக்கிற முத்திரை குத்தல்களின் அரசியல். ஹரி சொன்னது போல இவர்களது பிரச்சனை முஸ்லிம் தேசியமோ பின் நவீனத்துவமோ அல்ல, இது cஎன்ட்ரிபெடல்க்ஷ்cஎன்ட்ரிfஉகல் சிக்கல் மட்டுமே. அலை, தெரிதல், பெருவெளி ஆகியவை ஒரேமாதிரியான செயற்பாட்டை வேறு விதமாக, வேறு முலாம்களுடன், வேறு தளங்களில் செய்து கொண்டிருக்கிற இதழ் இயக்கங்கள்.

‘துரோகி’ என்று முத்திரை குத்துவதும், ‘தெளிவான எல்லைக்கோடுகள்’ இருப்பதாகக் காட்டி இf யொஉ அரெ நொட் நித் உச், யொஉ அரெ நித் தெம் என்று புஷ் தனமாக மிரட்டுவதும், புனைபெயர்களைக் காட்டிக் கொடுப்பதும், சரcடெர் அச்சச்சினடிஒன் செய்வதுமாக - எங்களது இலக்கியக்காரன்களின் கால் நூற்றாண்டு கால அழாப்பல் கூத்து இது!

இளைய அப்துல்லாவின் துன்பம் புரிந்துகொள்ளக் கூடியது. ஒப்பாரிகள், ஓலங்கள், கதறல்கள் கூட பொலிடிcஅல்ல்ய் cஒர்ரெcட் ஆக இருக்கவேண்டுமென்று சட்டமியற்றும் இவர்களுடன் எதைத்தான் உரையாடுவது? இப்படியான நபர்களையும் அவர்களது நாற்றமடிக்கும் அரசியலையும் அப்பால் தள்ளிவிட்டு நகர்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.

)(–)(

வெட்டுக்குத்தல்கள், மைக்கசிவுகளுடன் தொதல் சுற்றும் காகிதத்தில் அரபாத் தமக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், ‘நாகரீகம்’ கருதி தாம் அதைப் பிரசுரிக்கவில்லையென்றும் பெருவெளியினர் எழுதுகிறார்கள். விளிம்புகளுக்கு இப்பெருவெளியின் நாகரீக சட்டங்களின் அடிப்படையில் இடமில்லை என்பது தெளிவாகிறது. வறியவர்கள், ஃஉஅலிட்ய் ச்டடிஒனெரிஎச் பயன்படுத்தித் தான் கடிதம் எழுத வேண்டும், அப்படியானால் தான் அவர்களுக்கு பிரசுர வாய்ப்பு என்று நிர்ப்பந்திக்க இவர்கள் யார்? இத்தனைக்கும் அரபாத் தான் துதல் சுற்றும் காகிதத்தில் கடிதமெழுதியதாகச் சொல்லப்படுவதை மறுக்கிறார். உண்மை எது? அப்படியே ‘எழுத்து விளங்கவில்லை’ என்றாலும் ச்cஅன் செய்து போட்டிருக்கலாம். அரபாத்தை தொடர்பு கொண்டு கடிதம் விளங்கவில்லை, தெளிவாக எழுதி அனுப்புங்கள் என்று கேட்டிருக்கலாம்.. இப்படி எத்தனையோ இருக்க அதைப் பிரசுரிக்க மறுத்ததற்கு காரணம் என்ன? அரபாத் தனது நியாயங்களை எங்கு போய்ச் சொல்வது? ‘ஒற்றைத்தட்டுப்பாடு’ ‘தேவையிலாத அலம்பலை பிரசுரிப்பது வீண் செலவு’ என்று பெருவெளியினருக்கு இருக்கக் கூடிய நியாயங்கள் தெரிகிறது. ஆனால், முதலாவது இதழில் கவிஞரும் ‘உயிரெழுத்து’ நடாத்தியவருமான ஆத்மாவுக்கு இவர்கள் தெரிவித்த மறுப்பை இந்த நேரத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

‘உயிர் எழுத்து’ பகுதியில் ஆத்மாவுக்கு மட்டுப்படுத்திய சுதந்திரங்களுடன் கூடிய செயற்பாடே அனுமதிக்கப் பட்டிருந்தது. அவர் வீரகேசரியுடன் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டிருந்தார். அப்படியொரு நிலையில் ஆத்மாவுக்கு றியாஸ் குரானாவின் எதிர்வினையை மறுப்பதற்கு இருந்திருக்கக் கூடிய நியாயங்கள் மிக வலுவானவை. பெருவெளியினர் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் யாருடைய தலையீடும் அற்ற சிறுபத்திரிகையிலேயே இப்படியொரு தணிக்கையை செய்கிறார்கள் என்றால், தேசியப் பத்திரிகையில் பலரைச் சென்றடையும் பக்கமொன்றில் ஆத்மா தணிக்கை செய்ததில் குற்றம் காண்பது வேடிக்கையானதல்லவா? மாற்றுக்கருத்து தொடர்பில் முதலாவது இதழில் இந்த செயற்பாட்டாளர்கள் காட்டிய படங்களில் மதி மயங்கி ஆத்மாவை ஏகத்துக்கும் கண்டித்து பெருவெளியின் ‘மாற்றுக்கருத்து’ மீதான அக்கறையையையும் ‘உயிர் எழுத்து’ விடயத்தில் பெருவெளியினரின் நியாயங்களையும் ஆதரித்து எழுதியிருந்தோம். இப்போது நிலமை தலைகீழ்… ‘இதைத் தானே ஆத்மாவும் செய்தார்? அரபாத்துக்கு ஒரு நியாயம் றியாஸ் குரானாவுக்கு இன்னொரு நியாயமா?’ எனக் கேட்கப் பட்ட போது மிகவும் அவமானமாக இருந்தது.

)(–)(

பாதிக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் சார்ந்து இயங்கும் செயற்பாட்டாளர்கள் மையங்களின் மீது வன்முறையைப் பிரயோகித்தவாறே இருப்பவர்கள் தான். ஷோபாசக்தி, சுகன், மதிவண்ணன், கற்பகம் யசோதர, சாரு நிவேதிதா என்று ஆரம்பித்து லிவிங் ஸ்மைல் வித்யா, முரண்வெளியினர் போன்றவர்களையும் உள்ளடக்கி நீளுகிற ஒரு பட்டியலில் அடங்குபவர்களைப் புரிந்து கொண்டதனடியாக பெருவெளியினரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ‘முரணறு நிலை’ ‘மையமும் விளிம்பும் கலைந்து ப்லுர் செய்யப்பட்ட நிலை’ என்றெல்லாம் படித்தாலும் அப்படி இருப்பதன் அசாத்தியங்களை நடைமுறையில் உணர்ந்திருப்பதால் பெருவெளியினர் இடறுகிற இடங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. தவிர்க்க முடியாமல் அப்படி ஆகி விடுகிறது என நினைக்கிறேன். எனினும் பெருவெளியினருக்கும் மேற்குறித்த இதர பிரதியாளர்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இறுக்கம்-நெகிழ்வுத்தன்மை என்கிற அளவுகோலின் படி உண்டு. பெருவெளி பிரதிகளின் இறுக்கமும் ஒற்றைத்தன்மையும் அச்சந்தருவன. நெகிழ்வுத்தன்மையுடனும் பன்மைத்துவப் புரிதல்களுடனும் இவர்களுடைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படின் நிறையவே சாதகமான கதையாடல்களை எதிர்பார்க்கலாம்.

__________
‘முஸ்லிம் தேச இலக்கியம்: பொய்மையில் சமையும் தேசியவாதப் பெருங்கதையாடல்?’
[றியாஸ் குரானாவின் கவன ஈர்ப்புப் பிரதியை முன்வைத்து சில மறுப்புகள்.]

வந்துதிக்கிற கவிஞன்கள், எழுத்தாளன்கள், படைப்பாளன்கள், சிந்தனையாளன்கள் ஆகிய மகாப்பிரபுக்கள் தமது வருகையின்போது அடித்துக்கொள்ளும் புளித்துப்போன பஞ்ச் டயலொக்கான ‘தேக்கத்தை உடைக்கிறன்’ பிரகடனத்துடன் தனது கவன ஈர்ப்புப் பிரதியை ஆரம்பிக்கிறார் றியாஸ் குரானா. இவ்வளவு காலமும் தேக்கத்தை உடைக்கிறமெண்டு கிளம்பின கவிஞர், உரைஞர் சிந்தனையாளச் சனங்கள் எல்லாம் ஒரேயடியாய் தேங்கிப்போய்க் கிடக்கிறதில இந்தாள் எந்தத் தேக்கத்தை உடைக்கப் போகுது எண்டு தலையை சொறிஞ்சுகொண்டு (டிஸ்கி: ஈ உசெ Hஎஅட்&ஸ்கொஉல்டெர்ச்) வாசிக்கத் தொடங்கினன்.

*

றியாஸ் குரானாவின் கட்டுரைப்பிரதியில் (என்னதான் குலைச்சுப்போட்டம், கலைச்சுப்போட்டம், கட்டவிழ்த்திட்டம் எண்டு சொல்லிக்கொண்டிருந்தாலும் ஒன்றாய்க்கட்டியதால் ‘கட்டுரை’ கட்டுரை தான்) ஆரம்பத்தில் 50களுக்குப் பிற்பட்ட தமிழ்மொழி இலக்கியச் செயற்பாடுகள் மீள்வாசிப்பிற்கு உட்படுகின்றன. வாசித்துக் கொண்டு வருகையில் எஸ்.பொ வாறார். இந்த எஸ்.பொவை முன்வைச்சு நவாஸ் சௌபி பெருவெளி#02இல் கூறியவற்றுக்குப் பதில் சொல்லலாம். நவாஸ் சௌபி பிறப்பால் முஸ்லிம் ஆனவர்கள் எல்லாம் முஸ்லிம்களே என்று ஒரே போடாய்ப் போடுகிறார். அதிலயும் ஒருபடி மேல போய் ‘தமிழர் தேசத்துக்காய் எழுதினாலும் (எ.கா: புத்தரின் படுகொலை) எழுதினது முஸ்லிமெண்டா அது முஸ்லிம் தேச இலக்கியம் தான் எண்டு சொல்லுறார். [அவரை இது தொடர்பில் ஹரியும் சனனும் விமர்சித்திருந்தார்கள். எல்லாத்துக்கும் போலவே இதுக்கும் பதில் மிஸ்ஸிங்] பcக் டொ ஏச்.Pஒ; எஸ்.பொ நளவர் சமூகத்தை சேர்ந்தவர். நளவர்கள் தலித் வகைப்பிரிப்புள் வருபவர்கள். எஸ்.பொ பிறப்பால் ஒரு தலித். நவாஸ் சௌபியின் தர்க்கப்படி எஸ்.பொ எழுதுவதெல்லாம் தலித் இலக்கியமாக அல்லவா பார்க்கப்பட வேண்டும்? ‘தலித்’ அடையாளத்தை வன்மையாக மறுத்து வருபவர் எஸ்.பொ. ஷோபா சக்தி, சுகன் போன்றவர்கள் இந்த நபர் எழுதுவதை தலித் இலக்கியமாகக் காண்பதும் இல்லை. அப்படியே அவர் எழுதியதை தலித் இலக்கியம் எண்டு ஆராவது சொன்னா சிரிப்புத் தான் வரும். எஸ்.பொவின் மீது தலித் இலக்கியவாதி முத்திரையை ஒட்டுவது எவ்வளவு தூரம் அபத்தமானதோ அப்படியான ஒன்றுதான் நுஹ்மானின் கவிதைகள் முஸ்லிம் தேசியக் கவிதைகள் என்று சொல்வது. றஊப் ‘ஆகவே’ இல் எழுதிய நுஹ்மான் பற்றிய கட்டுரையின் பின்பு கூட அவரை முஸ்லிம் தேசவாதியாக இனம்காண முடியவில்லை. றஊப் சுட்டிச்சொல்கிற ‘பிரவாதம்’ இதழ் தலையங்கம் அந்த இதழை வெளியிடும் ‘பிரவாதா பிரசுர நிறுவனம்’ ‘ஸ்ஸா’ ஆகியவற்றின் நல்லாயன் நிலைப்பாடுகளே தவிர வேறில்லை. நுஹ்மான் அந்த இதழில் எழுதியதை விடவும் தீவிரமான கண்டனங்களை ஸ்ஸா(சொcஇஅல் ச்cஇஎன்டிச்ட்ச் அச்சொcஇஅடிஒன்) -ஐச் சேர்ந்த வாசுகி நேசைய்யா, தேவநேசன் நேசையா போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். முஸ்லிம்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளைக் கண்டித்து அவர்கள் எழுதியதற்கு (காண்க: பொலிட்ய் இதழ்கள்) நுஹ்மானின் லேசான கண்டனம் கால் தூசு பெறாதது. முஸ்லிம் அடையாளத்திற்குட்பட்டோராய்த் தம்மை அறிவித்து, அந்த அடையாளத்தின் இருப்பிற்காய் பிரதியாக்கத்திலீடுபடும் பிரதியாளர்களை ‘முஸ்லிம் தேச’ அடைமொழி கொண்டு விளிப்பதில் தவறுகளில்லை. பிறப்பை மட்டும் வைத்துக்கொண்டு எழுத்துச் செயற்பாடுகளை அடையாளப்படுத்துவது முட்டாள்த்தனமானது.

*

இலங்கையில் தமிழ்மொழியின் அறிவுலகம், இலக்கியப் புலங்கள் மீதான தெளிவான வாசிப்புகளை வரிக்குவரி நிகழ்த்தியபடி செல்லும் றியாஸ் குரானாவின் பிரதியின் முற்பகுதிகள் அ.மார்க்ஸின் ‘தமிழ் நவீனமான கதை’ பிரதியில் அவதானங்கள் முன்வைக்கப்படும் தன்மைகளை ஒத்திருக்கிறது. அ.மார்க்ஸின் நிதானமிக்க ஆய்வணுகுமுறையை போலச் செய்தபடி [எனcட்] றியாஸ் குரானா தருகிற அவதானிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவை. (அ.மார்க்ஸ், செய்த், ஹாசன் போன்றவர்களிடமிருந்து திருடியதாக அவரே ஒப்புக் கொள்கிறார் - கட்டுரையின் இறுதியில்) அத்தனை நேர்மையுடனும், பக்கச்சார்பற்ற தன்மையுடனும் தனது அவதானங்களை முன்வைத்து வரும் றியாஸ் குரானா 90களையொட்டிய காலப்பகுதியை வந்தடைந்ததும் இடறத் துவங்குகிறார். தனிநபர் சண்டைகளே அவரது கட்டுரைப்பிரதிகளில் அரசியல் பரிணாமம் பெற்று முக்கிய விடயங்களாக பிரச்சனைக்குட்படுத்தப் படுகின்றன. பௌஸர், சேரன், ஜெயபாலன், சோலைக்கிளி போன்றவர்கள் மீதான தனிப்பட்ட வெறுப்பு கட்டுரையில் அரசியல்தளத்துக்கு நகர்த்தப் படுகிறது.

80களின் நடுப்பகுதி தொடங்கி இன்றுவரையிலுமான தமிழ்மொழிமூல இலக்கியச் செயற்பாட்டைப் பற்றிய புரிதல்களின்றி றியாஸ் குரானா விவரிக்க ஆரம்பிக்கிறார். 90களுக்குப் பிந்தைய இலக்கியச் செயற்பாடு பற்றி றியாஸ் குரானா திருடுவதற்கு எந்த புத்தகங்களும் இல்லையாதலால் அந்த மதிப்பீடுகள் அவருடையவை, அதனாற்றான் அ.மார்க்ஸ் தன்மையையும் ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம்’ போன்ற நூல்களின் தரவுகளையும் இணைத்து எழுதப்பட்ட முதற்பகுதி போலன்றி இடறல்கள், உளறல்கள், பிதற்றல்களுடன் இரண்டாம் பகுதி எழுதப்பட்டிருக்கிறது.

சக்கரவர்த்தியின் எழுத்துச்செயற்பாடு, அதன் அரசியல் தன்மைகள் குறித்த புரிதல்கள் இருந்திருந்தால் அவரை ‘தமிழ்ப்பேரினவாதி’ எனப் பட்டியலிட்டிருக்க மாட்டார் றியாஸ் குரானா. வ.ஐ.ச.ஜெயபாலனது கவிதையை வாசித்த விதத்தில் நிறையவே கோளாறுகள் உண்டு. [Dஇcலைமெர்: இந்த செயபாலனின் கருத்துக்களிலும் சரி செயற்பாடுகளிலும் சரி, எனக்கு எள்ளளவு உடன்பாடும் இல்லை - இங்கு தரப்படுவது றியாஸின் வாசிப்புக்களை மறுப்பதற்கான ஓர் எதிர்வாசிப்பு மாத்திரமே] குறித்த கவிதையொன்றை றியாஸ் பின் வருமாறு வாசிக்கிறார்; ‘அக்கவிதையில் வருகிற ‘நமது’ என்கிற சொல் முஸ்லிம்களை, அவர்களது தனித்துவங்களை மறுத்து ‘தமிழ்’ அடையாளத்துக்குள் கையகப்படுத்தும் முயற்சியாகும். ‘நமது’ என்ற இப்பொது விளிப்பின் அர்த்தமானது முஸ்லிம்கள் வேறானவர்கள் அல்ல; அவர்கள் நமக்குக் கீழ் இருக்க வேண்டியவர்கள், தனித்துவங்கள் இல்லாதவர்கள் என்பதுதான்’. ஜெயபாலனது இந்த வரிகளும் ‘நமது’ என்கிற பொதுவிளிப்பும் ஒடுக்குமுறையின் பாற்பட்டனவாக காணப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. றியாஸ் குரானா மேற்கோளிடுகிற வரிகளிலேயே முஸ்லிம்கள்-தமிழர்கள் என்ற வித்தியாசம் பேணப்படுகிறது. //உங்கள் வீட்டையே// //உங்கள் தொழுகைப்பாய்·· ··உங்கள் புனிதநூல்//என்றவாறாக நீங்கள்|நாங்கள் வித்தியாசம் காட்டப்படுகிறது அல்லவா? இந்தத் தனித்துவங்கள் மீது தன் இனம் செலுத்திய வன்முறையையும் ஒடுக்கும் வகையான செயற்பாடுகளையும் cஒன்fஎச்ச் செய்கிற குரலாக அக்கவிதை வாசிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில் மேற்குறித்த வரிகளைக் கவனத்தில் எடுக்காது தனியே ‘நமது’ என்கிற வார்த்தையை மாத்திரம் வைத்துக் கொண்டு சல்லியடிப்பதில் என்ன பின்-நவீனம் மிளிர்ந்து தொலைக்கிறது? ‘பிட்டும் தேங்காப்பூவும் போல என்ற பதத்திலும் கூட நான் எந்த அடையாள மறுப்பையும் காணேன். அங்கும் வித்தியாசமே முதன்மைப்படுத்தப் படுகிறது. பிட்டும் தேங்காய்ப்பூவும் தம்மளவில் கொண்டிருக்கும் வித்தியாசங்களை அனைவருமறிவர் என்றே நினைக்கிறேன். றியாஸ் குரானாவின் சிந்தனையில் இருக்கும் பன்மைத்துவ வரட்சியோடு ஒப்புநோக்குகையில் ஜெயபாலனின் ‘பிட்டுக்குத் தேங்காய்ப்பூ’ பதம் எவ்வளவோ மேன்மையானது. பிட்டின் சிறிய கட்டிகளில் பல விதங்கள் இருப்பதையும் தேங்காய்ப்பூவின் தன்மைகளில் பல விதங்கள் இருப்பதையும் உணர்ந்தவாறேதான் அந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் வாசிக்கலாமே!

‘பொது எதிரி’க்கு (’சிங்களவன்’) எதிரான போராட்டத்துக்கான ஒன்றிணையுங்கள் என்கிற வழக்கமான தமிழ்த்தேசியப் பிரச்சாரக் குரலே ஜெயபாலனுடையது என்பதை நாமறிவோம். அதற்காக அந்தக் கவிதையை கண்டபடிக்கு வாசித்து உளறுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழ்த்தேசியப் பிரச்சார அழைப்பில் முஸ்லிம்களின் தனித்துவங்கள் மறுக்கப்பட்டதாக வாசிப்புச் செய்வது முட்டாள்த்தனம். ஜெயபாலனின் அழைப்பில் கூட ‘மதத் தனித்துவங்களுடன் வந்து இணைந்து கொள்ளுங்கள்’ என்பதுதானே ‘ஐவேளைப் பாங்கொலியுடன் வந்தெம்மைக் காப்பாற்றுங்கள்’ என்ற வரிகளின் அர்த்தமாயிருக்கிறது? அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. தூக்கி எறிவதற்கு முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக தமிழர்களது அழைப்பில்தான் கோளாறு என்று நொண்டிச்சாக்கு சொல்லக் கூடாது. தமிழர்களது அழைப்பில் உள்ள ஒருசில பிசகுகளுடன் சேர்த்து வேறும் சில காரணங்கள் உண்டு. அவை பற்றி எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன். பிறகு ‘தமிழ்த்தேசியவாதி’/'புலி’ என்பீர்கள். முத்திரைகள் தயாராக இருந்தபடிதானே.

அ-யதார்த்தம், புனைவுகளின் உண்மையும் உண்மைகளின் பிதுக்கமும், உண்மையற்ற உண்மை போன்றவற்றை ஆதரிக்கும் பின்-நவீன நிலைப்பாட்டிலிருக்கிற றியாஸ் குரானா, புனைபிரதியாளரான சக்கரவர்த்தியின் ‘என்ட அல்லா’ புனைபிரதி குறித்து எழுப்பும் விசித்திரமிக்க பின்-நவீனக் கேள்வியைப் பாருங்கள் : “சக்கரவர்த்தி ‘என்ட அல்லா’ என்ற கதையில் மருதமுனையில் நிகழ்ந்ததாகக் கூறும் சம்பவம் ஒன்று உண்மையில் நடைபெற்றதுதானா? என்ற கேள்விகளெல்லாம் முஸ்லிம் தேச இலக்கிய ஜாம்பவான்களாகப் பிதற்றிக் கொள்பவர்களிடம் ஏன் உருவாகாமல் போய்விட்டது?” றியாஸ் குரானா தமிழ் மொழியில் பின்-நவீன பிரதியியலை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களுள் முக்கியமானவர் என்கிறார் பஷ்றி. ‘புனைபிரதி’ என வகைப்படுத்தப்பட்ட ஒன்றுக்குள் நுழைந்து அபத்தமாக ‘இது உண்மையா?’ என்கிற விதமாக, மூன்று வயதுக் குழந்தை கிங்கொங் பார்த்து ‘இது உண்மையா மம்மி?’ என்று வினவுவது போல கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பெயர்தான் பின்-நவீன பிரதியியலை நிகழ்த்துதல் போலும்!!

றியாஸ் குரானா தமிழ்ப்பேரினவாதிகளைப் பட்டியல் போடுகையில் இரண்டு முக்கிய நபர்களை வசதி கருதி மறந்திருக்கிறார். தனது இந்த விடுபடலைப் பூசி மெழுக ‘இது மிகத் தற்செயலானதே, தொகுப்பாக இக்கட்டுரையின் தொனியை மட்டும் கவனி’ என்றொரு டிஸ்க்ளெய்மர் வேறு சேர்த்துக் கொள்கிறார். விடுபட்டுப்போன நபர்களில் முதலாவது நபர் சண்முகம் சிவலிங்கம். சேரன், ஜெயபாலனின் பிரதிகளாவது பரவாயில்லை முஸ்லிம்களுக்காக கண்ணீர் வடிப்பது போல பாவனையாவது செய்திருக்கின்றன. பார்க்கப் போனால் சேரன், ஜெயபாலன், இளவாலை விஜயேந்நிரன், சு.வி என அந்தக் காலகட்ட நபர்கள் முஸ்லிம் வெளியேற்றம் தொடர்பில் தலா ஒரு கவிதையாவது எழுதி வைத்திருக்கிறார்கள். அந்தளவிற்கு சந்தோஷப்பட்டுக்கொள்ளக்கூடிய செயற்பாடு அவர்களுடையது. ஆனால் இந்த சண்முகம் சிவலிங்கம்? சண்முகம் சிவலிங்கத்தின் பிரதிகளில் முஸ்லிம்களின் இடம் எது என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம். உமா வரதராஜனின் பிரதிகளில் முஸ்லிம்கள் உதிரிகள் என்றால் ச.சியின் பிரதிகளில் முஸ்லிம்கள் துரோகிகள். மஜும்தாரின் நியாயங்களை ச.சியின் தமிழ்மறவனான பன்னீர்ச்செல்வம்இ “நீ யார்ரா காசியர்ர வரியளை விமர்சிக்க?” என்று உறுக்குவதனூடாக வென்றுவிடுவாராம்இ பிறகு மஜும்தார் தனது தவறை உணர்ந்து திருந்துவாராம். இந்தக் கதையை மூன்றாவது மனிதன் என்றொரு இதழ் பிரசுரிக்க றியாஸ்குரானா இது பற்றி எந்த அசுமாத்தமும் இல்லாமல் ‘தமிழ்ப்பேரினவாதி’ லிஸ்ட் தயாரிப்பாராம். என்னா செட்டப் இது? சண்முகம் சிவலிங்கம் பெருவெளியினரைச் சந்தித்துப் பேசியதாக அறிகிறேன்.

றியாஸ் குரானாவின் வாசிப்புத் தர்க்கங்களின் படி பார்த்தால் அவர் வழங்கியிருக்கும் ‘தமிழ்ப் பேரினவாதி’ பட்டியலில் இருந்திருக்க வேண்டிய இன்னொரு முக்கிய நபர் ஷோபா சக்தி; கொரில்லாவில் ‘மஜீத்’ எனும் போராளி பற்றி வருகிற இடங்களை ஒருவர் இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘மஜீத்துக்குக் கரி நாக்கு’ என்கிற வசனத்துடன் அப்போராளி பற்றிய விபரிப்புகள் முடிந்து போகும். மஜீத் பற்றிய குறிப்புகளுடன், ‘கரிநாக்கு’ என்ற வழக்கை சேர்த்து வாசிக்கும் போது ‘கள்ளன்’ ‘பொய்சொல்கிறவன்’ என்றெல்லாம் அர்த்தப்படும். ஷோபா சக்தியின் பிரதிகள் அளிக்கிற பிரதி இன்பத்தில் கட்டுண்டு போய்க்கிடக்கிற விசிலடிச்சான் குஞ்சுகள் (நான் உட்பட) இப்படிப்பட்ட வாசிப்புகளை நிகழ்த்த முடியாத நிலையிலிருக்கிறார்கள். ஆனால், பல மடிப்புகள் கொண்ட அப்பிரதியிலிருந்து, ‘முஸ்லிம்களுக்கெதிரானதாக’ ஒரு வாசிப்பைப் பெற முடியாது என்றில்லை. அதற்கான சாத்தியங்கள் கொரில்லாவில் நிறையவே உண்டு. இறுதியில் அரேபியனான ‘ரிடா’ பற்றிய பகுதிகளைக் கூட முஸ்லிம்விரோதப் பண்புடையனவாகக் கொள்ள முடியும். றியாஸ் குரானா ஷோபா சக்தியை மறந்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1) ஷோபா ஆசான் அ.மார்க்ஸின் சகபாடியாக இருத்தல். 2) ஷோபா சக்தி ‘பெருவெளி’ செயற்பாட்டாளர்களில் ஒருவரான மஜீத்துடன் தொடர்பு கொண்டமை. [மஹிந்த-பிரபா இரகசிய ஒப்பந்தம் போன்ற தகவல்கள் கிசுகிசுக்கப்படுவதும் அம்பலமாக்கப்படுவதும் எவ்வளவு தூரம் முக்கியமானதோ அவ்வளவு முக்கியத்துவத்துடன் எமது இலக்கிய சம்பவான்களின் குழறுபடிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இந்த எழுத்தாளன்களின் தனிநபர் காய்த்தல் உவத்தல்கள் சமூகங்களின் தலைவிதியைத் தீர்மானிக்க முனையுற கன்றாவியைக் கண்டா வாற ரென்சனில இலக்கியக் கிசுகிசு பக்கம் ஒன்று ஆரம்பிச்ச்சா என்ன எண்டு கிடக்குது. இது ஏற்கனவே சக பதிவரான ‘பெட்டை’க்கு வந்த யோசனை!! சமீபத்திய ‘அணங்கு’ இதழில் மாலதி மைத்ரி ரவிக்குமார் பற்றி எழுதியவை, ஆபிதீன்-சாரு விடயம் என்பவற்றுக்குப் பிறகு இந்த எண்ணம் வலுவடைந்து செல்கிறது. இலக்கியப் பெருமக்களே கவனம்!!]

*

முஸ்லிம்கள் தங்களுக்கான அழகியலை மறுவரையறை செய்துகொள்ளவும், மீள்கண்டுபிடிப்புச் செய்யவும் இருக்கிற சுதந்திரத்தை யாரும் மறுக்கவியலாது. அவர்களுடைய தனித்துவங்கள் தமிழிலக்கியப் பெருங்கதையாடலினுள் ஒதுக்கப்பட்டு வந்தது என்பதையும் பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ள முடிகிறது. தமிழிலக்கியப் பெருங்கதையாடல் தமிழ்த்தேசியப் பெருங்கதையாடலாய் மாறிப்போனதன் விளைவே அது என்றே நான் வாசிக்கிறேன். யாரும் திட்டமிட்டு அதைச் செய்துகொண்டிருக்கவில்லை. ‘தேசியவாதம்’ என்பதே வரலாறு முழுதிலும் மற்றவர்களை வெளியேற்றித் தான் வந்திருக்கிறது. அது தேசியவாதத்தின் தன்மை. தமிழ்த்தேசியவாதம் முனைப்புற்ற போது மற்றவை உள்ளொடுங்கிப் போகும்படி நேர்ந்தது அக்காலத்தின் போக்காக, மிக இயல்பான ஒன்றாக இருந்தது.

இந்த வன்முறைக்கு மாற்றாக றியாஸ் குரானா பிரேரிக்கும் ‘முஸ்லிம் தேச இலக்கியம்’ கூட இன்னொரு வன்முறை மிக்க தேசியவாதப் பெருங்கதையாடல் தான். தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிற கதையாடல் பலபக்கங்களிலும் கூரான ஆயுதத்தைப் போன்றது என்பதை றியாஸ் குரானா உணர வேண்டும். முத்து மீரானது பிரதிகளில் காணப்படுகிற முஸ்லிம் நிலைப்பட்ட பதிவுகள், ஏ.இக்பால் சொல்கிற ‘முஸ்லிம் பண்பாட்டு முறையிலமைந்த தமிழ்மொழி’(வணக்கம்=தொழுகை, சொதி=ஆணம்) போன்ற அம்சங்களைத் தன் கூறுகளாகக் கொண்டிருக்கும் முஸ்லிம் இலக்கியப் பிரதியொன்றே தனது தனித்துவங்களைப் பேணுகிற ஒன்றாக இருக்க முடியும். இந்த நிலைமைகளை நாகூர் ரூமி, ஹெச்.ஜி.ரசூல், ஆபிதீன், மருதூர்க்கொத்தன் போன்றவர்களது பிரதிகளில் நான் கண்டிருக்கிறேன். முஜீப் ரஹ்மானின் பிரதிகளில் பச்சை இரத்தமுடைய அடையாளம் குழம்பிய மனிதர்கள் வருகிறார்கள். ஆனால், முஜீப்பின் பிரதிகள் எனக்கு திருப்தியளிப்பவை. அவரது பிரதிகளில் மையமாக்கலோ, விளிம்பாக்கமோ நடைபெறுவதில்லை. இஸ்லாமியக் கலாச்சாரம், இந்துக்கலாச்சாரம் இரண்டும் ப்லுர் செய்யப்பட்டதொரு புனைவு வெளி அவருடையது. சல்மாவின் பிரதிகளில் முஸ்லிம் ஆண்களின் பிரதிகளில் வெளிப்படுவது போன்ற ‘முஸ்லிம் தனித்துவம்’ வெளிப்படாதிருப்பது பற்றி தனியாக ஆராய வேண்டும். ஆண்களின் கலாச்சாரமாகவே, ஆண்களுக்கான கலாச்சாரமாகவே முஸ்லிம் கலாச்சாரம் உள்ளதாகவும், அதற்குள்ளிருக்கிற பெண்கள் தமக்குள்ளாக வேறொரு தனித்துவமான கலாச்சாரத்தையே காவுவதாகவும் நான் நினைத்துக் கொண்டேன். சல்மாவின் பெண்களின் அசைவியக்கத்தைப் பார்த்தபோது இறுகிப்போன கற்கோட்டை ஒன்றுக்குள் சலசலத்தோடும் பேரோடையொன்று என்பதான படிமமொன்று மின்னி மறைந்ததை இன்றும் நினைவு கூர்கிறேன். இது பற்றி தனியே எழுத உத்தேசம்.

*

பிறப்பால் தமிழ்மொழி பேசுகிற முஸ்லிம்களது பிரதிகளை ‘தமிழ்’ அடையாளத்தினுள் கையகப்படுத்துவது வன்முறை மிக்க ஒன்று என்றால் பிறப்பால் முஸ்லிம்களாக இருப்பவர்கள் எல்லோரதும் பிரதிகளை ‘முஸ்லிம் இலக்கியம்’ என்ற ஒற்றை அடையாளத்தினுள் கையகப் படுத்துவது எப்படி சரியாகும்? முஸ்லிம்களிடம் மட்டும் வித்தியாசங்கள் கிடையாதா? றியாஸ் சொல்கிறபடிக்கு நாயைக் கொஞ்சுவது தான் தமிழ் அழகியலா? நாயைக் கண்டாலே அரை மைல் ஓடுகிற எனது பிரதிகள் ‘தமிழ்’ கிடையாதா? மார்க்கத்தை மீறி தனது காவல்கார நாயில் அன்பு வைக்கிற முஸ்லிமீன் பிரதி ‘முஸ்லிம்’ கிடையாதா? தமிழர் செறிந்த பகுதிகளில் தொடர்ந்து வாழ்ந்ததன் மூலம் தமிழ்த் தன்மைகளை உளவாங்கின ஒருத்தர், முஸ்லிம் தன்மைகளைக் கொண்ட ஒரு தமிழ்ரின் பிரதிகள் எந்த அடையாளத்துக்குரியவை? ‘தமிழ்’ ‘முஸ்லிம்’ என்று இரண்டு ச்டெரெஒட்ய்பெகளை உருவாக்கிக்கொண்டு றியாஸ் கட்டுரை எழுதியிருக்கிறார். இப்படி அடையாளங்களைத் தீர்மானிக்க இவர் யார்? ‘இது தமிழ்’ ‘இது முஸ்லிம்’ என்று றியாஸ் முத்திரை குத்திக் கொண்டிருப்பதற்குப் பெயர் வித்தியாசங்களைக் காண மறுத்தல்.

பொதுவான விமர்சன முறை/அறிதல் முறை/அழகியல் சாத்தியமேயில்லை என்பதே எனது நிலைப்பாடு. அது ‘தமிழ்’ ஆக இருந்தாலென்ன, ‘முஸ்லிம்’ஆக இருந்தாலென்னஇ இரண்டுமே வன்முறை மிக்க பொதுமைப் படுத்தல்கள் - வித்தியாசங்களைக் காணமறுக்கிற இறுகிப்போன பொதுமைப்படுத்தல்கள். நான் எந்தத் தொகுப்புக்குள் என்னை இனங்கண்டு கொள்வது பெரியோர்களே? ‘தமிழ்’ அடையாளம் எனக்குப் ஒருந்தி வருகிற ஒன்றில்லை. நான் ‘முஸ்லிம்’ ‘இந்து’ ‘ஆண்’ ‘பெண்’ ‘மார்க்ஸிச’ ‘பின் நவீன’ ‘இலக்கிய’…. இப்படியாக நீண்ண்ண்டு செல்கிற எந்த ஒரு அடையாள அடைமொழிக்குள்ளும் பொருந்தி வர மறுக்கும் உயிரி. நான் அடையாளங்கண்டு கொள்ளவென சபலப்பட்ட ஆண் சமப்பாலுறவு அழகியல் கூட சாத்தியமற்றது என பின்னாளில் புரிந்து போயிற்று. அங்கே மசொக்ஷெffஎமினடெ முரண்கள் உண்டு, ஆண் சமப்பாலுறவு அழகியல் என்பது எffஎமினடெ வித்தியாசத்தைக் காண மறுக்கும் ஒருவித வன்முறைதான். இப்படியாக எந்த ஒரு தொகுப்பு அடையாளமும் fரக்மென்டடிஒன்ஐ நிராகரிக்கிற ஒன்றாகவே இருப்பதால் இப்போதைக்கு யோசித்து யோசித்து மண்டை குழம்பிக் காய்ந்து போய்….. கதை கட்.

இப்படியாக முஸ்லிம் தேசியக் கதையாடல் என்பது ‘சிறுகதையாடல்’ என்ற நிலையிலிருந்து ‘பெருங்கதையாடலாக’ மாற்றம் பெறுகிறது.
றியாஸ் குரானா முஸ்லிம் தேச அழகியலுக்கான குறிப்புக்களில் பொலிடிcச் ஒf பொஎடிcச் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். யதார்த்தவாதம், லத்தீன் அமெரிக்க மாந்திரீக யதார்த்த வாதம், சர்ரியலிசம் என அனைத்துக் கவிதையியல்களுமே அரசியல் தன்மையுடைய இயக்கங்களாகவே இருந்தன என்பதை இங்கு சேர்த்து வாசிக்க வேண்டும். அழகியலைத் தமது ஆயுதமாய் முன்வைப்பது என்பது தொடர்பில் பின்-காலனித்துவ (குறிப்பாக லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க) இலக்கியங்களைக் கற்க வேண்டும். இலங்கைவாழ் முஸ்லிம்களின் நிலையும் பின்காலனித்துவ சமூக நிலவரங்களுடன் ஒப்பு நோக்கக் கூடியது தான்.

தமிழுக்கும் அதன் குறிப்பீடுகளுக்கும், முஸ்லிம்கள் பேசும் தமிழுக்கும் அதன் குறிப்பீடுகளுக்கும் வித்தியாசம் உண்டென்கிறார் றியாஸ் குரானா. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அவர் வித்தியாசங்கள் அனைத்தையும் தமிழ்க்ஷ்முஸ்லிம் இருமைஎதிர்வுக்குள் அடக்கிவிடுவதுடன் உடன்பாடுகள் இல்லை. ஷோபாசக்தியிடமிருந்து நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்: ஷோபாவின் ‘கொரில்லா’ புனைபிரதியில் அந்தோனி சொல்வான் ‘எங்கட ஊரில இந்துமதத்தவர்களைத் ‘தமிழ் ஆக்கள்’ எண்டு சொல்லுறது வழக்கம்’ எண்டு. கிறிஸ்தவர்கள்/தலித்துக்கள் தமிழ் ஆக்களில் இருந்து வித்தியாசமானவர்கள் என்பது இதன் அர்த்தம். தமிழ் என்று றியாஸ் குரானா பொதுமைப்படுதுகிறவற்றிலேயே நிறைய வித்தியாசங்கள் உண்டு; கொம்யூனிஸ்றுகள், முற்போக்காளர்கள், தமிழ்த் தேசியவாதிகள், தலித்துக்கள், கிறிஸ்தவர்கள் இவர்களுக்குள்ளாகவும் தீவுப்பகுதி தலித்துக்கள், நகரப்பகுதி தலித்துக்கள், பிரதேச வேறுபாடுகள், பால் வேறுபாடுகள். வித்தியாசங்கள் எண்ணற்றவை. அ.மார்க்ஸ் சொல்வது போல இலங்கையில் ‘தமிழ்’ கிடையாது ‘தமிழ்கள்’ தான் உண்டு. வன்னித் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், தீவுத் தமிழ், வடக்கத்தேயத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், சோனகத் தமிழ், வேதக்காரத் தமிழ், ரவுண் தமிழ் இப்பிடியாக தமிழ்களின் பட்டியலே நீண்டு செல்கிற ஒன்று. முஸ்லிம் என்கிற ஒற்றை அடையாளம் இப்படியாக எத்தனை தனித்துவங்களைக் கையகப்படுத்திக் கொண்டு வன்முறை செய்கிறது. ஹெச்.ஜி.ரசூலை முஸ்லிம் என்று சொல்லி கவிதை போட்டதற்கு இஸ்லாமிய விசுவாசிகளிடமிருந்து எங்களுக்கு வந்த திட்டுதல்களை ஞாபகம் கொண்டே இந்த வித்தியாசங்களை முதன்மைப்படுத்த விரும்புகிறேன். சமீபத்தில் காத்தான்குடியில் மதப்பிரிவுகளின் பெயரால் நடந்தேறியவைவை எனது நியாயங்களுக்கு வலுச்சேர்க்கும் என நம்புகிறேன். இத்தனை வித்தியாசங்களையும் தமது வசதிக்காக இரண்டாக மாத்திரம் பிரித்து அணுகுவதில் என்ன நியாயம்?

முஸ்லிம் என்கிற அடையாளம், ஈழத்தமிழ் பெருங்கதையாடலுக்கு மாற்றாக வைக்கப்படுவதில் நிறைய அவசரமும் சிந்தனைப் பற்றாக்குறையும் தெரிகிறது. இது மாதிரியான அரசியல் முக்கியத்துவம் கொண்ட பெருந்தொகை மக்கள் கூட்டத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிற ஆய்வாடல்களுக்கு நிறையவே நிதானம் அவசியம். (நம்மளிடம் கிடையாத ஒன்று!!) ‘முஸ்லிம்’ என்கிற தனியான வகைப்பிரிப்பு உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் அடையாளத்தினுள் கொண்டு செல்லப்படுகையில், ஈழத்தமிழ்க்கலாச்சாரத்துடனும் சிங்களக்கலாச்சாரத்துடனும், இன்ன பிற கலாச்சார இருப்புக்களுடனும், இலங்கை நிலப்பகுதிகளுடனும் இணைவு கொண்டதால் ஏற்பட்டுப் போன தனித்துவங்களை இழந்து விடுகிற/மறுக்கிற ஒன்றாக மாறிவிடுகிறது இல்லையா? குர்-ஆனில் மையம் கொண்டு உலகு தழுவிக் கட்டமைக்கப் படும் இந்த ‘முஸ்லிம்’ அடையாளம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குரிய வித்தியாசங்களைக் காண மறுத்து முஸ்லிம் அடையாளத்துக்குள் ஒருங்கிணைதலை வலியுறுத்துகிற ஒன்று (தொல்.திருமாவளவன் உலகத் தமிழொன்றை ஏற்படுத்த முனைவது போல). ‘தமிழைப் பேசுவதால் தமிழர்களும் அல்ல, இஸ்லாமைப் பின்பற்றுவதால் நாங்கள் அரேபியத் தந்தைவழிச் சமூகத்துடன் அடையாளம் கண்டுகொள்ளப் பட வேண்டியவர்களும் இல்லை’ என்ற றஊப்பின் டயலொக் இன்னொரு அழகிய டயலொக்காக காற்றில் போய் விட்டது. றஊப் நானறிந்தவரை கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவங்களைக் கொண்டாடுகிற ஒருவர். அவர்களுக்கென்று தனியான நீண்ட வரலாறு இருப்பதாக கூறியபோது அவரது குரலில் நெடுங்கால ஒடுக்குதலின் கீழான வலியை துக்கத்தை, அதை மீள் கண்டுபிடிக்கிற வேட்கையை உனர்ந்தேன். தாய்வழிச் சமூகம் என்பது வேறு என் கவனத்தை ஈர்த்திருந்தது. அதையே அவர் பெருவெளி #02இலும் எழுதியிருந்தார். இப்போது பெருவெளி#03 ‘அரேபிய வீரம்’ (காண்க: அப்துல் றஸாக்) என்கிறது! றியாஸ் குரானா ‘முஸ்லிம்’ அடையாளத்துக்குள் வித்தியாசங்களை மறைக்கிறார். எங்கே போயின அத்தனித்துவங்கள் எல்லாம்?

இந்த இதழில் பிரசுரம் பெற்றிருக்கிற கடிதங்களில் ஹரிஹரஷர்மாவின் கடிதம் இனத்தூய்மைவாதம் குறித்து பெருவெளியினரை எச்சரிக்கிறது. மிக வெளிப்படையான இனத்தூய்மைவாதமும், சகிப்பின்மையும், தமிழ்வெறுப்பும் றியாஸ் குரானாவிடம் வெளிப்பட்டிருக்கிறது. தனது ‘பெண்கள்’ நாற்றம்டிக்கும் தமிழ் வாடையைக் கழுவியகற்ற வேண்டும் எனவும் தூய முஸ்லிம் வாசத்துடனிருக்கவேணும் என்றும் உத்தரவிடுகிறார் றியாஸ் குரானா.
//இவர்களுடைய (முஸ்லிம் பெண்களுடைய) இலக்கியச் செயற்பாடான எழுத்துக்களில் நாற்றமெடுக்கும் தமிழ்ப்பெண்களின் வாடை எப்போதுதான் அகலும்? // (பெ.வெளி பக்.33)

தமிழ்ப் பெண்ணிடம் முஸ்லிம் வாடை அடிப்பதும் முஸ்லிம் பெண்ணிடம் தமிழ் வாடை அடிப்பதும் சகிக்க முடியாத விடயங்கள் றியாஸ் குரானாவுக்கு. எனக்கு யார் எந்த நாற்றத்துடனிருந்தாலும் பிரச்சனையில்லை. தூய ஒலியோ, தூய சத்தமோ சாத்தியமற்றது என்கிறார் சிமோன் பிரித். “Cஉல்டுரெ மெஅன்ச் அ மிx ஒf திங்ச் fரொம் ஒதெர் சொஉர்cஎச்” என்கிறார் ஒரான் பாமுக். அப்படியெல்லாம் சொல்லப்பட்டும் கூடஇ கலாச்சார இணைவுகள் பன்முகப்படும் காலம் இது என்பதை எழுதுவதற்கு பயமாக இருக்கிறது. றியாஸ் குரானா போன்றவர்களின் கதையாடல்கள் கலாச்சார இணைவுகளின் மீதான அவநம்பிக்கையை வளர்ப்பவை. பெருவெளியினரை ஆதரிக்கும் அ.மார்க்ஸ் இவை தொடர்பில் நிச்சயம் எழுத வேண்டும். இது பின்-நவீனத்துவமா அல்லது வறண்டுபோன பச்சைத்தேசியவாதத்திற்கு பின்-நவீன முலாமா என்பது தொடர்பில் நாம் அதிகம் பேச வேண்டியிருக்கிறது.
முஸ்லிம் தேச பெண்ணியம்: றியாஸ் குரானாவின் முன்மொழிபுகளுக்கு மறுப்பு

பெருவெளி#03இல் பக்.65இல் பிரசுரம் பெற்றிருக்கும் அப்துல் லத்தீப்பின் ‘பர்தாவின் சிதறலில்’ என்கிற ஆணாதிக்கக் கவிதையின் தொனிக்கும் றியாஸ் குரானாவின் ‘முஸ்லிம் தேச பெண்ணியம்’ முன்மொழிபுகளுக்கும் சாராம்ச அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது. அ.மார்க்ஸின் ‘கறுப்பு பெண்ணியம், தலித் பெண்ணியம்’ பற்றிய கட்டுரைப் பிரதியை வரிக்கு வரி அடியொற்றி (தகவலுக்கு நன்றி விசரன்·விசாரன்) எழுதப்பட்ட றியாஸ் குரானாவின் குறிப்புகள் தேசிய நலனுக்காக பெண்ணின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பழைய பல்லவி தான்.

றியாஸ் குரானா ‘கள்ளத்தோணி’ எனும் அவரது கவிதைப்பிரதியொன்றில் (காண்க; பெருவெளி சூ03) ‘தமது தேசத்தை வடிவமைக்கும் பயணிகளின் நிலைப்பாடு’ பகுதியில் பெண்ணின் பங்களிப்பு தேசத்தை வடிவமைப்பதில் என்னவாக இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்த ஆண் கடவுள். தேவைகருதி சனனும் ஹரியும் அதற்கு எழுதிய மறுப்பு இங்கு வெட்டி ஒட்டப்படுகிறது:

அவரது பிரதியுடன் நான் அதிருப்தியடையும் இடம் அத்தியாயம் 4 (தமது தேசத்தை வடிவமைக்கும் பயணிகளின் நிலைப்பாடு) -இன் இறுதி ஏழு வாக்கியங்களும் தான்.

சிறுமி கடலைப் பெய்கிறாள். அது பள்ளத்தாக்கின் மனிதர்களை உயிர்ப்பூட்டும் நோக்கில் பாய்ந்து செல்கிறது.
சிறுவன் தனது வெட்டப்பட்ட ஆண்குறியைத் தடவித் தடவி உயிர்க்கிறான். அசைந்து அசைந்து மெல்ல நிமிருகிறது அது. விம்மித் திமிறி எழுகிறது. பெரட்டிப்போட்ட தொப்பி அவனை அழைக்கிறது. ..அல்லா?¤ அக்பர்.

எனது வாசிப்பு இவ்வாறு அமைந்தது (வேறு வாசிப்புகள் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை):
சிறுமி கடலைப்பெய்வது தேசத்தை வடிவமைப்போருக்கான உயிர்ப்பினை வழங்குதலாய் அர்த்தப்படுகிறது. தேசத்துக்கு உயிர்ப்பூட்டும் கடமையுடையவளாய் பெண்ணின் பாத்திரம் கட்டமைக்கப் படுகிறது.

ஆண் சிறுவன் தன் ஆண்குறியைத் தடவித் தடவி உயிர்க்கிறான். எதிர்ப்பிற்கான தலமை அதிகாரம் விம்மித் திமிறி நிமிர்கிறதுஇ ஆனால் அது ஒரு ஆண்குறியாகவே இருக்கிறது.(துருத்திக்கொண்டு ஆக்கிரமிக்கத் துடிக்கும் ஆண்குறி - தேசியங்களைக்கட்டமைக்கும் அதிகாரத்துக்கான நல்ல குறியீடு அது றியாஸ் குரானா!) பெரட்டிப்போட்ட தொப்பி அவனைத் தான் அழைக்கிறதுஇ அவளையல்ல. அவள் கடலைப் பெய்வதுடன் நிறுத்திக்கொள்கிறாள். இது முன்நவீன நிலையன்றி பிறிதொன்றுமில்லையே.

பெருவெளி#02இல் இப்படியாக அவர் வெளிப்பாடடைந்தார். மூன்றாவது இதழில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்;
//முஸ்லிம் தேசப் பெண் எழுத்துக்கள் சிலதை வாசிப்பிற்குட்படுத்தும் போது அவர்களுடைய கருத்தாக்கமானது உடலைக் கொண்டாடுதல், உடல் வேட்கையைச் சொல்லி மாரடித்தல், தமது அங்கங்களைக் காட்சிப் பொருளாக முன்வைத்தல் என்பதைத் தவிர வேறு எதுவும் புலப்படுவதாயில்லை. முஸ்லிம் தேசப் பெண்ணியம் என்பது ஆண்க்ஷ்பெண் என்ற கருத்தாக்கத்தின் பாற்பட்ட வினையாற்றுதலாக மட்டுமேயுள்ளதைக் கட்டுடைக்க வேண்டியுள்ளது. பெண் என்ற அடிப்படையில் உலகளவிலுள்ள அனைத்துப் பெண்களும் ஒரு ஒற்றையடையாளமுள்ளவர்கள் என்ற சொல்லாடலில் இருந்து வெளியேறித் தங்களது தனித்துவம் என்ற நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை என்றே கருத முடியும். முஸ்லிம் தேசப் பெண்ணியம் என்ற கருத்தாக்கம் இனியாவது அவர்களின் அக்கறைக்குரிய விடயமாய் மாறுமா?//

எந்த ஒரு நிறுவன அமைப்பிலும் பெண் இரண்டாம் பட்சமானவளாகத் தான் இருந்து வருகிறாள். தலித் சமூகங்களில் தலித் ஆணின் நிலையை விட தலித் பெண்களின் சிக்கல்கள் வித்தியாசமானவை, கறுப்பினப் பெண்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. அவர் பலவித ஒடுக்குமுறைகளுக்கு ஒரே நேரத்தில் உட்படுகிறார்கள். ஆண்க்ஷ்பெண் எதிர்வு என்பது தவிர்க்கமுடியாத Pஎரென்னிஅல் ரெஅலிட்ய். எமக்குச் சொல்லப்படுகிற அனைத்து வரலாறுகளிலும் பெண் என்பவள் விளிம்பாகவே இருக்கிறாள். அவளது ஒடுக்கம் நீண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்டது. இலங்கை முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவது அப்படியான வாரலாறு அல்ல. தமிழ்க்ஷ்முஸ்லிம் பிரச்சனை மிகவும் குறுகிய காலப்பகுதிக்குரியது. நீண்ட வரலாற்றின் ஒரு சிறு நிகழ்வு மட்டுமே. ஆனால்இ பெண் ஒடுக்கப்படுதல் என்பது வரலாற்றின் மறைபிரதி. ஆகவே இந்த ஆண்க்ஷ்பெண் எதிர்வு என்பது மிக முக்கியமானது. பெண்ணானவள் எந்த ஒரு கலாச்சாரத்துடனும்/அடையாளத்துடனும் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது. நிலப்பகுதிகள்இ கலாச்சார வலயங்கள் சார்ந்து அவள் ஒடுக்கப்பட்டிருப்பதன் வழிமுறைகளின் வித்தியாசங்களை மட்டுமே நான் இனம் காண்கிறேன். (எ+கா= ஆப்பிரிக்க/அரேபியப் பெண் ஒருத்தி ஒடுக்கப்படுதல் என்பது ஐரோப்பிய/அமெரிக்கப் பெண்கள் ஒடுக்கப்படுவதிலிருந்து மிக வித்தியாசமானது) முஸ்லிம் தேச இலக்கியம் இந்த மிக அடிப்படையான வித்தியாசத்தைக் கண்டுகொள்ளாதிருக்கும் படி கூறுமானால் அதைக் கடாசியெறிவதைத் தவிர அப்பெண்ணுக்கு வழிகளில்லை.

குறிப்பிடத்தக்க மாதிரி இலங்கையிலிருந்து ஐந்தோ ஆறு முஸ்லிம் பெண் கவிகள் மாத்திரமே எழுதுகிறார்கள். அனார், பெண்ணியா, பஹீமா ஜகான், சித்தி றபீக்கா மற்றும் சுல்பிகா. இவர்களுள் அனாருடைய கவிதைகள் தவிர்ந்து ஏனையோருடையவை மிகவும் ஆரம்ப நிலையிலேயே தேங்கிப்போனவை. இவர்களுள் அனாரைத் தவிர வேறெவரும் றியாஸ் குரானா பட்டியலிடும் குற்றங்களுக்குப் பொறுப்பாளிகளும் அல்லர். வலுவான படிமக் கவியான அனாரின் கவிதைகள் முரண்வெளியில் பெண்ணிய வாசிப்பிற்குட்படுத்தப் பட்ட போது அவர் பெண்ணிய அரசியல் போன்ற விடயங்களில் மேலும் தீவிரம் பெறவேண்டியிருப்பதாகவே சொல்லப்பட்டது.

எக்கவிதைப் பிரதியை முன்வைத்து இக்குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன என்பதில் எனக்கு மிகவும் குழப்பம் இருந்தது. மூன்றாவது மனிதனில் பிரசுரமாகிய ‘பிச்சி’ ‘நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன்’ மறுகாவில் பிரசுரமான ‘மனமந்திரம்’ போன்ற கவிதைகள் பெண்ணின் கொண்டாட்டத்தையன்றி பூடகப்படுத்தலையே எனக்குச் சொல்லின. ‘பிச்சி’ கவிதையில் வேட்கையைப் பேசுதல் என்பது முயற்சிக்கப்பட்டுத் தோற்றுப்போயிருக்கிறது. ‘பாம்பு’ ‘புற்று’ என்றவாறாக ஆண்நிலைப்பட்ட குறியீடுகளைப் போட்டு வேட்கையைப் பேசுதலாகப் பாவனை செய்ய முயன்று தோற்றுப்போன கவிதை அது. ஒரு முஸ்லிம் பெண் பூடகப்படுத்தும்படிக்கு எவ்வளவு தூரம் நிர்ப்பந்திக்கப்படுகிறார்? அவரது பூடகப்படுத்தல் ஆண்களின் குறியீடுகளுக்குள் எப்படி சிக்குப்படுகிறது? என்பதற்கெல்லாம் விடைகள் அக்கவிதையில் கிடைக்கும். மனமந்திரம் போன்ற அழகான அருட்டுணர்வை ஏற்படுத்தும் படிமக்கவிதைகளில் பேசப்படுகிற ஆணுடல் நோக்கிய விழைவே முரண்வெளி வாசிப்புக்களில் அதிருப்திக்குரியதாக மாறிற்று. பெண்ணிய அரசியலுக்குள் அவரது கவிதைகள் கிடையாது என்பதாகவே நாம் கருதுகிறேம். அனார் தன்னை, தனது சுயத்தைப் பேச முனைகிற வேளைகளில் எல்லாம் பூடகப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு கவித்துவத் தற்கொலை செய்துகொள்கிறார்.

தமிழ்ப்பெண்களின் நாற்றம் என்று எழுதுவது பெரிய பகிடி. அனாருக்கு முன் எழுதிக்கொண்டிருந்த தமிழ்ப்பெண்களான ரேவதி, ஆழியாள், ஔவை இவர்களில் யாருடைய தன்மைகளையுமே அனாரின் கவிதைகள் கொண்டிருப்பதில்லை. சொல்லப்போனால், தமிழில் எழுதிய பெண்கவிகளுள் அனாரைப் போல வேறெவரையும் நான் காணேன். முன்னைய பெண் கவிகள் வெறுப்பும் சலிப்பும் தரவல்ல பிரகடனங்கள், சபதங்களோடு இயங்குகையில் அனார் அதிலிருந்து விடுபட்டு படிமங்களைப் பிரயோகிக்கத் தொடங்கிய ஒருவர். அவருடைய தனித்துவம் வித்தியாசப்பட்டுத் தெரிகிற ஒன்றாயிருக்கையில் றியாஸ் குரானா இப்படி எழுதுகிறார் என்றால் அவர் இரண்டு இனப்பெண்களது கவிதைப்பிரதிகளையுமே வாசிப்பிற்கு உட்படுத்தவில்லை என்று அர்த்தம்.

றியாஸ் குரானா தேசத்தை வடிவமைப்பதற்கான பணியில் பெண்களின் வகிபாகத்தை வரையறுக்கிற ஆண்கடவுள் என்பது மிகத் தெளிவான ஒரு விஷயம். முஸ்லிம் தேசப்பெண்ணியம் தொடர்பில் அவர் முன்வைக்கும் கருத்துக்களின் தொகுப்பு அர்த்தம் ‘உடலைக் கொண்டாடாதே, வேட்கையைப் பேசாதே, உன் தேசத்திற்காய் உன் எழுத்து’ என்பது தான். ‘பெண்கள் தமது கதையாடலை முன்வைப்பது தவிர்க்க முடியாதது’ என்கிறார் றியாஸ் குரானா. அவர்களது கதையாடல்களின் தவிர்க்கமுடியாத/தடுக்கமுடியாத தன்மையைப் புரிந்துகொண்டு அதைத் தனக்கு சார்பானதாக மாற்றி வடிவமைக்கும் தேசியாவாத ஆண் மனதின் எத்தனிப்பே றியாஸ் குரானாவுடையது. ‘சுருக்கிக் கொள்கிறேன்’ ‘அவர்களே பேசட்டும்’ என்ற கனவான் தனமான பூசி மெழுகுதல்களையும் மீறி அவரது இந்த முனைப்பு பல இடங்களில் துல்லியமடைகிறது. பெண் கதையாடல் என்பதைச் சமாளிப்பதற்கு பின்நவீனத்துவம், இஹாப் ஹாசன், எட்வேர்ட் செய்த் எல்லாம் தேவைப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம் தனித்துவத்தை/அழகியலை முன்வைக்க எட்வார்ட் செய்த் தேவை என்பதை ஏற்கிறேன், ங்குகி வா தியாங்கோ, அஷீஷ் நன்டி போன்றோரும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் எதற்கு இஹாப் ஹாசன்? பின்நவீனம் முன்வைக்கும் சிறுகதையாடல்கள், உடைவுகள் என்பதற்கும் முஸ்லிம் தேசியக் கதையாடல் என்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? இப்படியாக வாய்க்குள் நுழையாத பெயர்களைப் போட்டு உப்புமாக் கிண்டுவதன் மூலம் ஆங்கிலம் கற்க வாய்ப்பளிக்கப்படாத வாசகரைப் (குறிப்பாக பெண்களை) பயப்படுத்தி உபாத்தியாயர்களாக மாறிவிடமுடியும்; பின்னர் பயப்பட்ட சிஷ்ய மனோபாவம் கொண்ட அந்தச் சிஷ்யப் பெண்கள் இவர்கள் சொல்லுகிறதை முக் உப் செய்து முஸ்லிம் தேச இலக்கியத்தை வெளியில் கொட்டும். பிறகு, பேப்பர்களில் வானொலிகளில் ரீ.வி நிகழ்ச்சிகளில் முஸ்லிம் தேச இலக்கிய பிதாமகர்கள் என்று முடிசூடிக்கொண்டு இவர்கள் உலா வருவார்கள்!!

இவர்களதைப் போன்றதல்ல இலங்கை வாழ் முஸ்லிம் பெண்கவிகளின் எழுத்து இயக்கம். தோழி ஒருவள் மூலம் அனார் போன்றவர்களது சூழல் சார்ந்த பிரச்சனைகள், நிர்ப்பந்தங்கள், உறுதி என்பவற்றை நான் அறிகிறேன். உறுதுணையாக இருக்கும் கணவர் அஸீமையும் ஓரிரண்டு புகலிடத் தோழிகளையும் விட்டுவிடின் அனாருடையது மிகவும் அடக்கப்பட்ட ஒரு அனாதைக் குரலே என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பெருவெளி செயற்பாட்டாளர்கள் அனைவருமே ஆண்கள். இப்படியெல்லாம் எழுதுவது, இயங்குவது புத்தகம் போடுவது எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை சுயபுணர்வைப் போல மிக இலகுவான விடயங்கள். ஆனால் முஸ்லிம் தேசப் பெண்களாக இருப்போருக்கு சுயபுணர்வைப்போல இவை அனைத்துமே கடினமான விடயங்கள். இந்த ஆண் எழுத்தாளன்களுக்கு தேநீர் போட்டுத்தர, அவர்கள் வழங்கிய குழந்தைகள் கரைச்சல் தராமல் பார்த்துக் கொள்ள, காகிதங்களை எடுத்துவைக்க, வேளாவேளைக்கு சமைத்துக்கொட்ட… இப்பிடி எல்லாத்துக்கும் மனைவி என்றொரு மெஷின் இருந்தபடிதானே? ஆனால் இந்தப் பெண்களுக்கு? சமையல், குழந்தைப்பராமரிப்பு என்று சுழன்று சுழன்று கிடைக்கிற நேரத்துக்குள் நாலு வரி எழுதுவது ஒரு சநடநைக ஆக மட்டுமே. இந்த ஆண்களைப் போல கூட்டம் போடுவது, அரசியல் பிரக்ஞை வந்து (வந்தா உயிரோட இருக்க விடுவார்களா?) பேப்பர் அடிப்பது எல்லாம் - பகிடி விடுறனோ?!

நான் சத்தியமாக ஒப்புக் கொள்கிறேன் தமிழ்ப்பெண்ணிலிருந்து முஸ்லிம் பெண்ணினுடைய பிரச்சனை நிச்சயமாக வேறானது தான். சேலையை உதறி எறிந்து (யொஉ நமெ இட் - Bறா Bஊற்ணேற்) மகாபாரதத்தை, இராமாயணத்தை, மனுவைக் கட்டுடைத்த பெண்களை என்றைக்கோ நாம் சந்தித்து விட்டோம். பர்தாவை எறிவது? சரி, வேண்டாம். குரானைக் கட்டுடைப்பது? அதுவும் வேண்டாம். பர்தாவைக் க்லொரிfய் பண்ணுகிற ஒரு கவிதையைக் (அப்துல் லத்தீப்) கண்டித்து ஒரு அறிக்கையையேனும் விடமுடியாதிருப்பது ஏன்? முஸ்லிம் பெண்ணினுடைய சிக்கல்கள் வேறானவை என்பதை இதை வைத்தே நான் சொல்கிறேன். தனது ஒடுக்குமுறையாளனுக்கு எதிராக இன்னும் பன்மடங்கு வீரியத்துடன் போராட வேண்டியிருக்கிறது. இன்னும் உடைக்கப்படாத ஆண் மதம் இஸ்லாம் மட்டுமே.

இவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதையே நான் திருப்பிச் சொல்லலாம். ‘எப்படி தமிழைப் பேசுகிற பெண்கள் எல்லாரும், தமிழ் எனும் ஒற்றை அடையாளத்துக்குள் அடக்கப் பட முடியாதவர்களாய் உள்ளார்களோ அப்படியேதான் பிறப்பால் முஸ்லிமாக நேர்ந்த எல்லாப் பெண்களும் முஸ்லிம் என்கிற ஒர்றை அடையாளத்துக்குள் கையகப் படுத்தப்பட முடியாதவர்கள்’. பெருவெளியினரால் முஸ்லிம் அடையாளத் திணிப்புக்கு உட்படுத்தப்படுகிற பெண்கள் தம்மீது திணிக்கப்படுகிற நிர்ப்பந்தங்களை -தமக்கு உவப்பில்லாது இருக்கும் பட்சத்தில் - தூக்கி வீசுவதற்கு உள்ள உரிமையை மனங் கொள்ள வேண்டும். தமிழ் அடையாளம், இஸ்லாமிய அடையாளம் என எந்த அடையாளமாக இருந்தாலும் சரி அவர்களுக்கு உவப்பற்றதாயிருந்தால் அவர்கள் தூக்கி எறியலாம். (பெண் என்கிற கறாரான அடையாளத்தைக் கூட விரும்பின் மறுக்கலாம். லெஸ்பியனான Mஒனிஃஉஎ Wஇட்டிக் ‘நான் பெண் அல்ல’ என்றார் 1978இல்!!)

[இனி வருவது அனாரின் கவிதைகளுக்குள் இருந்து றியாஸ¤க்கான எதிர்ப்புகளைக் கண்டடையும் முயற்சி. அனார் இப்படியாகத்தான் எழுதினார் என்றில்லை. அவரது கவிதைகளுக்கான இன்னொரு வாசிப்பு மட்டுமே இது. இதில் அனாரின் நோக்கங்கள் வேறாக இருக்கலாம்இ அவர் சொல்ல வந்தது வேறாக இருக்கலாம் - ஆனால் அவரது நோக்கங்களுக்குள் எனது வாசிப்பை நிகழ்த்த வேண்டிய தேவை·கடமை எனக்கு இல்லை.]

நாகூர் ரூமி, களந்தை.பீர்முகம்மது, ஆபிதீன், ஹெச்.ஜி.ரசூல் ஆகியோரது பிரதிகளில் அதீதமாகத் துலங்கும் மதப்பிரக்ஞை சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’யில் அற்றுப்போனதன் சமூகவியல் பின்னணிகள் குறித்து நாம் அதிகம் பேச வேண்டியிருப்பதாய் முன்னரும் குறிப்பிட்டிருந்தேன். அதேபோலவே முத்துமீரானில் தொடங்கி மஜீத் வரையானவர்களிடம் இருக்கிற மத/இனம் சார்ந்த தன்னிலை அனார், பெண்ணியா, பஹீமா ஜகான் ஆகியோரது பிரதிகளில் வெளிப்படுவது இல்லை. அவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் அதே நேரம் முஸ்லிமல்லாத இன்னொரு கலாச்சாரம் பற்றிய சித்திரத்தையே எனக்குள் உருவாக்குகிறார்கள். அவர்களது பிரதிகளில் பகிர்ந்து கொள்ளல் என்பது இறுக்கமாய் மூடப்பட்ட இடங்களை நான் வலியுடன் உணரவேண்டியிருக்கிறது.

அனாரின் கவிதைகளில் பெண்ணானவள் தனது வலிமையான மறுப்புக் குரலை றியாஸின் முகத்தில் விட்டெறிகிறாள், அனாரின் கவிதைப் பெண் றியாஸ் குரானா சொல்கிறபடி கடலைப் பெய்து விட்டுப் பேசாமலிருக்கிற சிறுமி அல்ல. அவள் தன்னுடைய இரகசியங்களைக் கொண்டாடுகிறாள். காற்றுக்குத் தன்னைத் தின்னக் கொடுக்கிறாள். தனது உடலை ‘மாகடல்’ என்று கொண்டாடுகிறாள்(காண்க. ‘பிச்சி’ கவிதை) முஸ்லிம் தேசியவாதியாக இறுகிப்போய் விட்ட கவிஞர் மஜீத் பெருவெளி#02|பக்.38இல் “காகத்தைத் தவிர கனவில் வேறு ஏதாவது காண்பவர்களுக்கு ‘செய்த்தான் குறை’ தண்ணி ஓதி அடிப்பது நல்லது.” என்கிறார். அனாரின் கவிதைப்பெண்ணின் கனவுகள் மஜீத் எதிர்பார்ப்பதைப் போல வெறுமையாக இல்லை. அனாரின் கனவுலகு நேசத்தால், காதலால் பின்னப்பட்ட வர்ண இழைகளாலானது. அனாரின் கவிதைப் பெண் நிறங்களாலானவனைக் காத்திருக்கிறாள். ‘தனியே அலையும் கருத்த காகமொன்றுக்காக’ தனது வர்ணமிகு கனவுகளை அவள் இழக்க மறுக்கிறாள். வர்ணங்களால் நிறையும் அவ்வுலகில் காகங்களும் சிறகடித்துப் பறக்கின்றன. மஜீத்தின் கவிதையில் வருவது போல அலையவில்லை. துக்கப்பட்டுக்கொண்டே இரு என்று உத்தரவிடுவது எவ்வளவு கொடுமையானது? மஜீத் அதைத்தான் செய்கிறார். அவர் தனித்த காகத்தைக் கனவு காணுமாறு கட்டளை இடுகிறார். அனாரின் கவிதைகள் தனித்த நிலையென்ற செயற்கையான பிளவைக் கடந்து செல்ல முயற்சிப்பவை. இணைதலைக் கொண்டாடும் வெளி அவருடையது.

மரபுக்கும் மரபு அறிவுறுத்துகிறவற்றுக்கும் மாற்றான குரலாக, தேசியத்தின் இறுகிய பிரேரணைகளை மறுத்துத் தனது சாகசத்தைக் கொண்டாடியபடி தளைநீக்க வினையாற்றும் அனாரின் கவிதைப்பெண் சொல்கிறதைக் கேளுங்கள்:

//நிழலின் வியாபகத்தில்
அரூபமடைந்திருக்கும் உடலின் நாடகம்,

ஒளியற்ற இடத்தில்
சங்கடமின்றி முளைக்கிறது
அற்புதத்தின் தொடக்க நிலை

சாகச நிழல் மரத்தில்
விலக்கப் பட்ட கனிகள் காய்த்திருக்கக் கூடும்//

//முறைகள்இ தீர்மானங்கள்
ஆலோசனைகள் எதுவுமின்றி
எழுப்புகிறேன்
ஒளியில்லாத இடங்களில்
வாழ்க்கையை வேறொன்றாக//

அனாரின் கவிதைப்பெண் றியாஸ் குரானாவின் நடிஒனலிச்ட் அகென்டவிற்குள் கட்டுண்ண மறுக்கிறாள்.
தமிழ்நாட்டில் சுகிர்தராணி, சல்மா, மாலதிமைத்ரி, குட்டி ரேவதியின் கவிதைகளைக் கண்டு அங்கிருக்கிற தேசியவாதிகள் ஆதிவாசிகள் கரைகடப்பதாய் சொல்லியபடி, அவிழும் ஆடைய இறுகக் கட்டியபடி தெருக்களில் அலைந்தது ஞாபகமிருக்கட்டும். அப்படியாக, பெருவெளியினர் காலாவதியாக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஏனெனில் றியாஸ் குரானா ஏற்கனவே காலாவதியாக்கப்பட்டுக் கடாசி எறியப்பட்ட முன்-நவீன ஆண் கடவுள்.

பிரதிகளுக்கு வெளியே சில சங்கடமளிக்கும் கேள்விகள் [பெருவெளி செயற்பாட்டாளர்களுக்கு..]
$ குரானைக் கட்டுடைப்பது குறித்து யாது சொல்ல விரும்புகிறீர்கள்?
$ சமப்பாலுறவு இஸ்லாமிய சமூகங்களில் ஆதரிக்கப்படுவதாய் பூக்கோ எழுதியிருக்கிறார். ஈரானியப் புரட்சி ஆதரவு எழுத்துக்களில் இதைக் காணலாம். இலங்கை முஸ்லிம்களில் இருந்து கய்/லெச்பிஅன் செயற்பாட்டாளர்கள் இயக்கமுற ஆரம்பித்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?
$ முஸ்லிம் தேச அழகியலில் சமப்பாலுறவு அழகியல்இ பாலியல் தொழிலாளியின் அழகியல் ஈதெல்லாம் பெற்றுக்கொள்கிற இடங்கள் எவை?
$ ‘ஈமானின் உண்மையை நீ அறிவாயா?’ ‘திருக்குரான் தீர்ப்பு’ போன்ற நூல்கள் எழுப்பும் கேள்விகளுக்கு வன்முறை பதிலாகத் தரப்பட்டதே… அதற்கான உங்களது எதிர்வினை என்னவாக உள்ளது

1 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    சமப்பாலுறவு இஸ்லாமிய சமூகங்களில் ஆதரிக்கப்படுவதாய் பூக்கோ எழுதியிருக்கிறார். ஈரானியப் புரட்சி ஆதரவு எழுத்துக்களில் இதைக் காணலாம். இலங்கை முஸ்லிம்களில் இருந்து கய்/லெச்பிஅன் செயற்பாட்டாளர்கள் இயக்கமுற ஆரம்பித்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?

    Dont you know that his views on
    Iranian Revolution have been
    criticised, particularly by
    feminists.Yamuna Rajendran
    has written on this in Uyirmmai.
    Frontline has published a book
    review on this issue.Homosexuality is a crime in most muslim
    countries.