வதம்



மலங்களில் நெளியும்புழுக்களை
விரும்பி உண்கிறாய்.
கருக்கலைந்த உதிரப்பிசிறுகளை
கலக்கிக்குடிக்கிறாய்.
பட்டாம்பூச்சியின் இறகுபிய்த்து
சுயமைதுனத்தில் பீறிட்ட
விந்தைத் துடைக்கிறாய்.
இவை எல்லாவற்றுக்கும் சாட்சியாயிருந்த
என் கண்ணின் கருமணியை
நடுச்சாலையில் போட்டு
நசுக்கி
மிதித்து
தேய்த்து
அப்பால்
நகர்கிறாய்.

1 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    can you please explain what it means?

    is it silk? or honey?

    sundar