கலைஞரின் 'நெஞ்சுக்குநீதி'யும் வீரமணியின் 'உலகத்தலைவரும்'



கலைஞர் மு.கருணாநிதி தன் வாழ்க்கை வரலாற்றைத் தானே எழுதிய 'நெஞ்சுக்குநீதி' மற்றும் சாமிசிதம்பரனார் பெரியாரின் வரலாறாக எழுதிய 'தமிழர்தலைவர்' நூலின் இரண்டாம்பாகம் என அறிவிக்கப்பட்டு வெளியாகியிருக்கும், திராவிடர்கழகத்தலைவர் கி.வீரமணி எழுதிய 'உலகத்தலைவர்' என்னும் இருநூற்களையும் அடுத்தடுத்துப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 1924 முதல் 1969 வரையிலான நிகழ்வுகளைக் கொண்டதெனில் உலகத்தலைவர் 1948 வரையிலானது.

நெஞ்சுக்கு நீதியில் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பலவற்ரைச் சொல்லமுடியுமெனினும் ஒரேஒரு சம்பவத்தை மாதிரிக்குச் சுட்டலாம். கருணாநிதி எவ்வளவு கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை அவரது இளமைக்காலத்தில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சி சுட்டுகிறது.


திருவாரூரில் கலைஞர் தலைமையில் சீர்திருத்தச்சங்கம் என்னும் பெயரில் இளைஞர்கள் சங்கமாய்த் திரண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் கருணாநிதியின் நண்பர்களில் ஒருவரான தியாகராஜன் என்பவர் அதிலிருந்து விலகிப்போய் 'இளைஞர்சங்கம்' என்னும் பெயரில் ஒரு சங்கத்தைத் தொடங்குகிறார்.

இந்த இரண்டுசங்கத்திற்குமிடையிலும் கடுமையான போட்டிகளும் வன்முறை மோதல்களும்
அரங்கேறுகின்றன. ஒருமுறை எந்தச் சங்கத்திற்கு செல்வாக்கு அதிகம் என போட்டிவந்து ஊர்மக்கள் மத்தியில் தேர்தல் நடத்தலாமென இருசங்கத்தாரும் முடிவு செய்கின்றனர்.

இருதரப்பினரும் கடுமையான பிரச்சரம், கூட்டம் திரட்டுவதற்கென நாடகங்கள் என நடத்துகின்றனர். ஒருமுறை தியாகராஜன் ஏற்பாடு செய்த நாடகத்தில் நடிப்பதற்கு முக்கியமான நடிகர் ஒருவர் வரவில்லை. வேறுவழியில்லை. தியாகராஜன் கருணாநிதியிடம் நேரில் சென்று அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டுகோள்விடுக்கிறார். ஏனெனில் கருணாநிதி சிறுவயதிலேயே மாணவர்களிடம் நாடகங்கள் நடத்தியவர்.

அப்போது நாடகத்தில் நடிப்பதற்கு கருணாநிதி ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே விதிக்கிறார், அது, 'நான் நாடகத்தில் நடிகக்வேண்டுமானால் இளைஞர்சங்கத்தைக் கலைத்துவிடவேண்டும்' என்பதுதான் அது. இளைஞர்சங்கம் காணாமல்போய் அனைவரும் சீர்திருத்தச்சங்கத்தில் அய்க்கியமானதையும் கருணாநிதி மட்டுமே ஒரே தலைவராக விளங்கியதையும் சொல்லவும் வேண்டுமா?

இப்படியான பலசம்பவங்களைக் கருணாநிதி தனது வழக்கமான பகட்டுநடையின்றி இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்.

நெஞ்சுக்குநீதியை வாசித்துமுடித்தபோது இரண்டுவிதமான பார்வைகள் கிடைத்தன.

1924ல் பிறக்கும் கருணாநிதி தனது பதினான்கு வயதில் பட்டுக்கோட்டை அழகிரியின் முழக்கத்தால் ஈர்க்கப்பட்டு 1938ல் முதல் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமே அரசியல்களத்துக்குள் நுழைகிறார். அதிலிருந்து திமுக தொடங்கப்படட் 1948 வரையிலும் அதற்குப் பிறகும் ஏன் இன்றளவிலும் கருணாநிதி பல போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்.

ஆனால் ஆச்சரியமான விஷயம் பெரியாரியக்கத்திலிருந்தவரை கருணாநிதியும் சரி, அண்ணாதுரை போன்ற திமுகவின் முன்னோடிகளும் சரி மொழிப்போராட்டங்களிலேயே பங்கெடுத்திருக்கின்றனரே தவிர எந்த சாதியொழிப்புப் போராட்டங்களிலுமல்ல. இதன்மூலமே அண்ணாதுரையின் பேச்சு மூலமாக திராவிடர்கழகத்தில் உருவான இளைஞர்கூட்டத்தின் மனச்சாய்வு என்னமாதிரியாக இருந்தது என்பதையும் இந்த கூட்டமே பின்னாளில் திராவிடர்கழகம் உடைவதற்கும் திமுக உதயமாவதற்கும் காரணமாக அமைந்தது என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.

ஆய்வாளர் வ.கீதா பெரியாரியக்கத்தின் வீரியமிக்க சாதனைகள் 1930கள் வரையிலான காலமே என்றும் முதல் இந்தித்திணிப்புப் எதிர்ப்புப்போராட்டம் பெரியாரியக்கத்தின் திசைவழிப்போக்கையே மாற்றியது என்றும் குறிப்பிடுவது சரிதானோ என்று யோசிக்கத்தோன்றுகிறது.

கருணாநிதியின் இயற்பெயர் தட்சணாமூர்த்தி என்றும் அதையே கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார் என்றும் பலரும் சொல்கின்றனர். ஆனால் அப்படியான குறிப்புகளெதுவும் நெஞ்சுக்கு நீதியில் இல்லை. ஆனால் கருணாநிதியின் மைத்துனர், தயாளு அம்மாளின் அண்ணனின் பெயர் தட்சணாமூர்த்தி.

அதேபோல், திராவிடர்கழகம் உருவான வரலாறு பற்றி எழுதும் அத்தியாயத்திலும் திராவிடர்கழகக் கொடியத் தான் தான் கைவிரல் கிழித்து ரத்தத்தால் உருவாக்கியதாக எழுதவில்லை. முதல்பாகம் வந்த ஆண்டு 1975 என்பதும் பெரியார் இறந்த இரண்டாண்டுகள் வரையிலும் கருணாநிதி இப்படியாகக் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னாட்களில்தான் கருணாநிதி திராவிடர்கழகக் கொடியைத் தானே உருவாக்கியதாக எழுதியும் பேசியும் வந்தார். இதைத் திமுகவோடு முரண்பட்ட காலங்களில் திராவிடர்கழகம் மறுத்தே வந்துள்ளது. ஆனால் இப்போது வீரமணி எழுதியுள்ள 'உலகத்தலைவர்' நூலில் கருணாநிதியே தி.க கொடியை உருவாக்கியதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. (இத்தகைய முரண்பாடுகளைத் தோழர் கொளத்தூர்மணி பெரியார்திராவிடர்கழகத்தின் இதழாகிய பெரியார்முழக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார்.)

அதுமட்டுமல்ல, நூலின் பல இடங்களிலும் திமுக சார்பு அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரு சிறந்த உதாரணம் 1947 ஆகஸ்ட்15.

ஆகஸ்ட் 15 துக்கநாள் என்று பெரியார் அறிக்கைவிட அண்ணாவோ அதை இன்பநாள் என்று அறிக்கைவிடுகிறார். பெரியாருக்கும் அண்ணாவிற்குமான முரண்பாடுகள் வெளிப்படையாய்த் தெரிந்த சம்பவம் இதுவே. ஆனால் அண்ணா இன்பநாள் என அறிக்கைவிடுத்தார் என ஒருவரி கூட நூலில் இல்லை.

இந்துத்துவவாதிகள் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள் என குற்றம் சாட்டுவதற்கு முன் திராவிட மற்றும் திராவிடர் இயக்கங்களின் தலைவர்கள் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ளவேண்டுமென்றே தோன்றுகின்றன.

அம்பேத்கரின் அரசியலும் விடுதலைச்சிறுத்தைகளின் வீழ்ச்சியும்




தமிழகத்தில் தலித் அரசியலுக்கென்று ஒரு நீண்ட நெடும்பாரம்பரியமுண்டு. 1800களிலேயே சந்திரோதயம் என்னும் இதழ் தலித்துகளால் நடத்தப்பட்டது. மேலும் அரசியல் களத்தில் 'திராவிட' என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தி அரசியலைக் கட்டமைக்க முயன்றவர்கள் தலித்துகளே, இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பறையர்களே.

அயோத்திதாசர், எம்.சி.ராஜா, சிவராஜ், இரட்டைமலைசீனிவாசன் போன்ற தலித் ஆளுமைகள் தமிழக அரசியல் களங்களில் செயற்பட்டுவந்திருக்கிறார்கள். ஆனாலும் மற்ற இயக்கங்களைப் போல ஒரு தனித்துவமான இயக்காமாக தலித் இயகக்ம் வளரவில்லை என்பதே உண்மை. இதற்குப் பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம் என்று தற்போதைய தலித் எழுத்தளர்கள் மற்றும் தலித் செயற்பாட்டாளர்கள் சிலர் குற்றம் சாட்டிவருவதும் நாமறிந்த செய்திதான்.

ஆனால் 80களில் தலித்துகள் மீண்டும் அரசியல் அமைப்புகளாகத் திரளத்தொடங்கினர் என்று சொல்லலாம். குறிப்பாக ஒடுக்கப்படட் மகக்ளின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாய் வளர்ந்துவந்தவர் திருமாவளவன். அதுகாறும் சிற்சில இடங்கள் தவிர பலவிடங்களில் தலித்மகக்ள் ஆதிக்கச்சாதியினரால் தாக்கப்பட்டு வந்த நிலை மாறி தாங்களும் திருப்பித்தாக்கத் தொடங்கினர்.

'திட்டமிடு, திமிறியெழு, திருப்பியடி' என்னும் முழக்கம் தலித் இளைஞர்களிடையே புதிய உற்சாகத்தை ஊட்டியது. கருஞ்சிறுத்தைகள் இயக்கததை முன்மாதிரியாகக் கொண்டு மகாராட்டிராவில் ஆரம்பிக்கப்பட்டது இந்திய தலித் சிறுத்தைகள் இயக்கம். ஆனால் தமிழ்ச்சூழலில் டி.பி.அய் என்றே அழைக்கப்பட்டாலும் அதன் அடையாளம் விடுதலைச்சிறுத்தைகளாய் மாறியது.

மலைச்சாமிக்குப் பிறகு தலைமைக்குவந்த திருமாவளவன் தடயவியல்துறையில் பணியாற்றிவந்த ஒரு அரசு ஊழியராக இருந்தபோதும் பல தலித் இளைஞர்களின் ஆதர்சமாய் விளங்கினார் என்பது மறுக்கமுடியாது. சிறுத்தைகள் தேர்தல் அரசியலைப் புறக்கணித்ததோடு மட்டுமல்லாது தேர்தலின்போது பலவிடங்களில் தேர்தல் மறுப்புவாசகங்களை எழுதி வாக்குப்பெட்டிக்குள் போடவும் செய்தனர்.

ஆனால் தொண்ணூறுகளின் இறுதிப்பகுதியில் சிறுத்தைகள் இயகக்ம் தேர்தல் மறுப்பு என்னும் நிலைப்பாட்டைக் கைவிட்டுத் தேர்தலில் பங்கேற்பது என்று முடிவெடுத்தது. அரசியலதிகாரமற்ற தலித்துகள் தொடர்ந்து அரசினால் குண்டர்சட்டம் போன்ற கடும் ஒடுக்குமுறைச் சட்டங்களால் துன்புறுத்தப்படும்போது தனக்கான அதிகாரத்தைக் கைப்பற்றவே இந்த நிலைப்பாடு என்று விளக்கமளித்தது சிறுத்தைகளின் தலைமை. தனது அரசுபபணியைத் துறந்து தேர்தல் அரசியல் களத்தில் குதித்தார் திருமா.

பல்வேறுபட்ட கூட்டணிகளில் இடம்பெற்று இன்று மய்யநீரோட்ட அரசியலில் தவிர்க்கமுடியாத அமைப்பாய் விளங்குகிறது டி.பி.அய். இதே சமகாலத்தில் திருமாவோடு போட்டியிட்ட பறையர் தலைவர்களாகிய சாத்தை பாக்கியராஜ், அரங்க.குணசேகரன், ஏர்போர்ட் மூர்த்தி, வை.பாலசுந்தரம், ஜெகன்மூர்த்தி போன்ற தலைவர்களால் திருமா அளவிற்கான கவனத்தையோ அமைப்புத் திரட்சியையோ பெறமுடியவில்லை.

தென்மாவட்டங்களில் தேவர்சாதியினருக்கு எதிராக திருப்பித் தாக்கும் அரசியலை முன்வைத்து இயக்கங்களாய் வளர்ந்த பள்ளர்சமூகத்தலைவர்களாக ஜான்பாண்டியன், பசுபதிபாண்டியன், டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றிகளைப் பெற்றவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. ஆனாலும் அவரின் அரசியல் வாழ்வும் கடந்த பத்தாண்டுகளில் அஸ்தமித்து வெறுமனே அறிக்கைத்தலைவராக மாறிப்போனார். இறுதியாக காவிரிப்பிரச்சினையில் நடிகர்.ரஜினிகாந்தின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுத் தனது அரசியலைத் தானே மலினப்படுத்திக்கொண்டார்.

இன்று மய்யநீரோட்ட அரசியல்கட்சிகளுடன் அரசியல் பேரம் பேசும் அளவிற்குத் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கும் விடுதலைச்சிறுத்தைகள் கருத்தியல் ரீதியாக இழந்தவை என்ன? 1992 பபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையொட்டித் தமிழ்ச்சூழலில் பரவலாக விவாதிக்கப்பட்ட தலித் அரசியல், தலித் இலக்கியம், தலித் அரங்கியல் ஆகிய கருத்தாக்கங்களே சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கு மாபெரும் உற்சாகத்தை அளித்தன என்று சொல்வது தவறாகாது.

ஆனால் இன்று தனது தனித்துவமிக்க அடையாளத்தை இழந்திருக்கின்றனர் சிறுத்தைகள். ஜெயலலிதா அரசால், ஜெயேந்திரனின் ஆசியோடு கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டம், ஆடு, கோழி பலிதடைச்சட்டம் ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களின் வழிப்பாட்டுமுறைகள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை ஒடுக்கும் பார்ப்பனீய அரசியல்தந்திரத்தோடேயே கொண்டுவரப்பட்டது.

ஆனால் இதை எவ்வாறு எதிர்கொண்டனர் சிறுத்தைகள்? பலித் தடைச்சட்டத்திற்கு எதிரான அமைப்புரீதியான பெரிய போராட்டங்கள் எதையும் நிகழ்த்திவிடவில்லை. மதமாற்றத்தடைச் சட்டம் என்பது உண்மையில் தலித்துகள் இந்துக்கள் அல்ல என்பதை வலுவாக முன்வைப்பதற்கும் அந்தக் கருத்தியலைத் தலித்மக்களிடம் வீச்சாகக் கொண்டுசெல்வதற்கும் இந்துமதம் என்னும் மாயக்குகையிலிருந்து வெளியேறுவதற்கும் தலித்மக்களைப் பார்ப்பனீயத்திலிருந்து துண்டிப்பதற்குமான அரியவாய்ப்பு.

ஆனால் நடந்தது என்ன? இந்தச் சட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்பதற்காகக் கூடிய சிறுத்தைகளின் மய்யக்குழு மதமாற்றத்திற்குப் பதிலாக பெயர்மாற்றத்தை முன்வைத்தது. உண்மையில் இந்துமதத்திலிருந்து தங்களைத் துண்டித்துக்கொள்ள சிறுத்தைகள் தயாராக இல்லை என்பது அவர்கள் கருத்தியல் ரீதியாக தயார்ச்செய்யப்படவில்லை என்பதையும் அம்பேத்கர் பிம்பமாகவன்றி தத்துவமாக உள்வாங்கப்படவில்லை என்பதையுமே காட்டியது.

திருமா ஆரம்பித்துவைத்த பெயர்மாற்ற அரசியல் என்பதும்கூட திமுகவிடம்,இருந்து கடன்வாங்கியதுதான். நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் ராமைய்யா அன்பழகனாகவும் மாறியது திமுகவின் கடந்தகாலக் கதை. அதே அரசியலைப் பின் தொடர்ந்த திருமா, இதுவே சாதியடையாளத்திற்கும் இந்து அடையாளத்திற்கும் எதிரான மாற்று என்றார். அப்படியானால் திமுக ஏன் சாதியெதிர்ப்பு இயககமாக மாறவில்லை என்னும் கேள்வியை அவர் எதிர்கொள்ளத் தயங்கினார்.

மேலும் தமிழ் மரபு, தமிழ்ப்பண்பாடு என்று ஆதிக்கமரபுகளையே அவரும் கட்டமைத்தார். 'உங்களது பெயரை ஏன் மாற்றிக்கொள்ளவில்லை?' என்னும் கேள்விக்கு 'கரிகால்சோழனின் இன்னொரு பெயர்தான் திருமாவளவன். அதை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை' என்று அவர் பதிலிறுத்ததன்மூலம் பார்ப்பனீயத்தையும் ஆணாதிக்கமதிப்பீடுகளையும் கட்டிக்காத்த சோழர் காலத்தைப் பொற்காலமாய்க் கதையாடிய திமுகவின் மரபில் இயல்பாகப் பொருந்திப்போனார். மட்டுமல்லாது அருணாச்சலம் போன்ற ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கும் கூட செம்மலை என்று பெயர்சூட்டி 'ஞானஸ்ன்நானம்' செய்தார்.

கற்பு - குஷ்பு விவகாரத்தில் சிறுத்தைகள் வெளிப்படையாகவே தங்களை ஆணாதிக்கப்பாசிஸ்ட்களாக வெளிப்படுத்திக்கொண்டனர். எண்ணற்ற தலித் இளைஞர்களின் ரத்தத்தின் மீதும் சுயமரியாதை உணர்வின்மீதும் கட்டப்பட்ட சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் பறையர்களுக்கெதிராக கலவரங்களைத் தொடுத்த வன்னிரகளின் தலைவர் ராமதாசோடு 'தமிழைப் பாதுக்காக' கைகோர்த்தார்.

'இனி சாதிக்காக ரத்தம் சிந்தப்போவதில்லை' என்று புன்னகையோடு பொன்மொழி உதிர்த்தனர். ஒடுக்கப்பட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அணிதிரள வேன்டிய அமைப்பு சினிமாக்காரர்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தது. விடுதலைககாய்ச் செலவழிக்கப்படவேண்டிய தலித் மகக்ளின் உழைப்பு விளம்பரங்களுக்காகவும் சுயநலங்களுக்காகவும் விரயமாக்கப்படட்து.

சிறுத்தைகள் முன்வைத்த தமிழ்த்தேசிய அரசியலும்கூட 'தமிழ்பேசும் சாதி'களுக்கானது. இதை சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிறுத்தைகள் பல்வேறு காலகட்டங்களில் நடத்திவந்த ஏடுகளான கலகக்குரல், தாய்மண், இப்போது தமிழ்மண், உலகத்தமிழர்சக்தி ஆகிய ஏடுகள் வெளிப்படுத்தின. இத்தகைய வரையறுப்புகளின் மூலம் அருந்ததியர்கள், நரிக்குறவர்கள், பழங்குடிகள் ஆகிய விளிம்புநிலைச்சாதியினர் தேசியக்கட்டமைப்பிலிருந்து விலக்கிவைக்கப்பட்டனர்.

பெரியாரே தலித் அரசியலின் மாபெரும் எதிரியாய் முன்னிறுத்தப்பட்டார். பார்ப்பனர்களோடு எவ்வித தயக்கங்களுமின்றி உறவுகள் மேற்கொள்ளப்பட்டன. மதுரை அண்ணாபேருந்து நிலையத்திற்கருகே சிறுத்தைகளால் தமிழ்த்தாய்க் கோயில் கட்டப்பட்டது. அக்கோயிலில் திருமாவிற்கு பரிவட்டம் கட்டப்படும் படங்கள் தாய்மண்ணில் பகட்டாக வெளியிடப்பட்டது. சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் திருமாவிற்குப் பூரணகும்ப மரியாதை செய்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்பனீய மதிப்பீடுகள் எவ்விதக் கூச்சமுமின்றி அமைப்புக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டது. திமுக நடத்திவந்த கவர்ச்சி அரசியல், தனிநபர் வழிபாடு, தலைமைதுதி, 'கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்' என ஏட்டளவிலும் 'மய்யப்படுத்தப்பட்ட தலைமை' என்பதுமாக நடைமுறையிலுமாக திமுக, அதிமுக போன்ற கட்சிகளைப் 'போலச்செய்தனர்' சிறுத்தைகள்.

இதன் உச்சகட்டமாக தோழர் திருமா 'அண்ணன் திருமாவாக' மாறினார். ஈழப்பிரச்சினை குறித்து எவ்வித விமர்சனங்களுமற்று தலித்துகள் விடுதலைப்புலிகளின் ரசிகர்களாக்கப்பட்டனர். 'தென்னகத்துப் பிரபாகரன் திருமாவளவன் வாழ்க' என்னும் கோஷங்கள் விண்ணதிரத்தொடங்கின. கடைசியாக அதனுச்சம் திருமா அரசியல் களத்தில் மட்டுமில்லாது திரையுலகிலும் 'கதாநாயகன்' ஆனார்.

சிலகாலம் முன்புவரை கட்டவுட்டுகளில் மழைக்கோட்டும், துப்பாக்கியும், கூலிங்கிளாசுமெனத் தோற்றமளித்த விஜயகாந்தின் தோற்றம் கதர்ச்சட்டை, கதர்வேட்டி என மாறிப்போனதெனில் திருமாவளவனோ விஜயகாந்தின் கெட்டப்புகளை மாட்டிக்கொண்டு ரெயின்கோட், கூலிங்கிளாஸ், துப்பாக்கி சகிதம் தலித மக்களுக்குக் காட்சியளிக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் மற்றெந்த தலித் அமைப்புகளையும் விட கூடுதலான கவனத்தையும், கணிசமான பலத்தையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தத் தலித் மக்களை இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்களவில் பறையர்சமூகத்தை வாக்குவங்கியாகத் திரட்டியிருக்கிறது. ஆனால் இதன் மறுபுறத்திலோ அது மோசமான கருத்தியல் வீழ்ச்சியையே சந்தித்திருக்கிறது என்பதற்கு சமீபத்திய இரு உதாரணங்களைச் சொல்லலாம்.

பெரியாரை ஒருபுறம் தலித்விரோதியாகச் சித்தரித்துக்கொண்டு (இப்போது திமுக கூட்டணிக்குப்பிறகு இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது) மறுபுறம் தலித்துகளின் மீது கடும் வன்முறையையை ஏவிவிட்டவரும் இந்துத்துவக் கருத்தியலில் ஊறிப்போனவருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்கவேண்டுமென சிறுத்தைகள் அமைப்பு சமீபத்தில் நெல்லையில் நடத்திய 'மண்ணுரிமை மாநாட்டில்' முதல்வர் கருணாநிதியிடம் தீர்மானம் நிறைவேற்றிக் கோரிக்கை வைத்துள்ளது.

இரண்டாவது கொடூரசம்பவம் அருந்ததியர்கள் மீதான சிறுத்தைகள் அமைப்பினர் நேரடியாகப் பங்குபற்றிய தாக்குதல். அயோத்திதாசரைத் த்லித் திரு உருவாகக் கட்டமைக்கும்போது பறையர் சமூகத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள் அவரின் அருந்ததியர் விரோதக் கருத்தியல் குறித்து எவ்வித விமர்சனங்களையும் முன்வைப்பதில்லை. மேலும் இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரையில் தலித் தோழமை இயக்கம் நடத்திய 'தந்தை பெரியார் தலித்துகளுக்கு எதிரியா? என்னும் கருத்தரங்கில் அருந்ததியர் இயக்கமாகிய ஆதிதமிழர் பேரவைத் தலைவர் அதியமான், சிறுத்தைகள் அமைப்பை விமர்சித்தார் என்பதற்காக அவரைச் சாதிப்பெயர் சொல்லித் தாக்கமுனைந்தனர்.

இப்போது அதேபோல விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்புப் பகுதியில் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகிகளே அருந்ததியர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு...

http://www.keetru.com/dalithmurasu/aug07/ponnusamy.php


தம்ழிச்சூழலில் சிறுத்தைகள் மட்டுமல்ல, இன்னும் பல அமைப்புகளும் தேசிய அரசியலில் பகுஜன்சமாஜ்வாடி உள்ளிட்ட அமைப்புகளும் இப்படியாகக் கருத்தியல் ரீதியாகச் சீரழிந்துபோனது குறித்து யோசிக்கும்போது அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடு குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் வாழ்வு மற்றும் செயற்பாடுகளை ஒரு வசதிக்காக மூன்றாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1. தொடர்ந்து இந்துமதக் கடவுள்கள், இந்துமதப்பிரதிகள் ஆகியவற்றைக் கட்டவிழ்த்து அதன் அடிப்படை வருணாசிரமப் பார்ப்பனீயமே என்பதை வெளிக்கொணர்வது.

2. இந்து மதத்திலிருந்து வெளியேறும் முகத்தானாகவும் பார்ப்பனீயத்திற்கெதிரான மாற்று அறவியல் மதிப்பீடுகளைக் கைக்கொள்ளும் முகத்தானாகவும் மதமாற்றத்தை மேற்கொள்வது.

3. தலித்துகள் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது.

ஆனால் அம்பேத்கரின் மூன்றாவது கூறையே இன்றைய தலித் அமைப்புகள் விடாப்பிடியாகப் பற்றுகின்றன என்பதே உண்மை. நக்சல்பாரிகள் சொல்வதைப்போல தலித்துகள் தேர்தல் அரசியலில் ஈடுபடாமலிருப்பது அம்பேகரியத்தின்படிச் சாத்தியமில்லை.

ஏனெனில் 'தீண்டாமை என்பது வெறுமனே சமூகப்பிரச்சினை மட்டுமில்லை, மாறாக அது ஒரு அரசியல் பிரச்சினையே' என்பதை அம்பேத்கர் வலியுறுத்திவந்தார். பாராளுமன்ற அரசியலை மனப்பூர்வமாக ஆதரித்தார். அவரது பல நிலைப்பாடுகள் தலித்துகள் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றும் அபிலாஷையின் அடிப்படையிலேயே அமைந்தது.

குறிப்பாக மாநிலங்கள் குறைந்தளவிலான அதிகாரத்திலிருப்பதையும் அதிகாரங்கள் நிறைந்த மய்ய அரசையும் அவர் வலியுறுத்தினார். ஏனெனில் வலிமைவாய்ந்த மாநில அரசு தங்கள் மாநிலங்களில் சிறுபான்மையினரான தலித்துகளின் மீது கரிசனம் செலுத்தாது என்றும் அதைக் கண்காணிக்க வலிமையான மய்ய அரசு தேவை என்றும் வலியுறுத்தினார்.

அவர் காந்தியுடன் தொடர்ச்சியாக இந்தியத்தேசியம் குறித்து முரண்பட்டு வந்தபோதும் அவர் எந்த பிராந்திய தேசியங்களை ஆதரிக்கத் தயாராக இல்லாததற்கும் இதுவே காரணம். ஆனால் அம்பேத்கரின் இத்தகைய நிலைப்பாடுகள் என்ன விதமான பலன்களை விளைவித்தன என்பதற்கான நடைமுறைகளுக்கு நாம் வேறெங்கும் போகத்தேவையில்லை, அம்பேத்கரையே மகத்தான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

அம்பேத்கர் பாராளுமன்ற அரசியலின்மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அவரால் எப்போதும் வெற்றிகரமான பாராளுமன்ற அரசியல்வாதியாக இருக்கமுடிந்ததில்லை. அவரது குடியரசுக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் பெருமளவு வெற்றியைத் தேர்தல்களங்களில் ஈட்டியதில்லை.

இந்திய அரசியல் சட்டத்திற்கு எழுத்துவடிவம் தந்த அம்பேத்கரே பின்னாளில், 'என்னை ஒரு ஸ்டெனோ போல பயன்படுத்திக்கொண்டனர்' என்றும் 'அவர்களுக்கு (பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்கச் சாதிகளுக்கு) ராமாயணம் தேவைப்பட்டபோது தாழ்த்தப்பட்ட வால்மீகியிடம் போனார்கள், அவர்களுக்கு மகாபாரதம் தேவைப்பட்டபோது தாழ்த்தப்பட்ட வியாசரிடம் போனார்கள், அவர்களுக்கென்று ஒரு அரசியல் சட்டம் தேவைப்பட்டபோது தாழ்த்தப்பட்டவனாகிய என்னிடம் வந்தார்கள்' என்றே புலம்பினார்.

அம்பேத்கர் தீண்டாமை ஒழிப்புச்சட்டத்தை அறிமுகம் செய்தபோது கூடியிருந்த நிருபர்கள், மகாதமா வாழ்க', 'படேல் வாழ்க' என்று ஆரவாரம் செய்தனரே தவிர அம்பேத்கரின் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. அவரால் மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டுவரப்பட்ட இந்துசட்டத்தொகுப்பு மசோதாவை பிரதமர் நேரு ஆதரித்தபோதும் மற்ற ஆதிக்கச்சக்திகள் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்காதபோது மனம் வருந்திப் பதவியிலிருந்து விலகினார் அம்பேத்கர்.

தனது வாழ்வின் இறுதிக்காலங்களில் இட ஒதுக்கீட்டின் மூலம் பதவிக்கு வந்த தலித் அரசு அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியிலிருந்தார் அவர். அதன் அழுத்தம் அவரை மீண்டும் பவுத்தத்தை இறுகப்பற்றச் செய்தது.

எனவே தலித் ஒருவர் அரசியலதிகாரத்திற்கு வருவதே அம்பேத்கரியத்திற்குக் கிடைத்த வெற்றி என்பது அம்பேத்கரியத்திற்குச் செய்யும் நீதியாகாது. அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கே. அறமும் கருத்தியலுமற்ற அதிகாரக் கைப்பற்றல் என்ன பலனைத் தரும் என்பதற்கான உதாரணம்தான் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தியல் ரீதியான வீழ்ச்சி.

இந்தியச் சாதியமைப்பு, இன்றைய உலகமயமாக்கல் சூழல், ஊழல் கறைபடிந்த நாடாளுமன்ற அமைப்பு கருத்தியலைக் காலிசெய்துவிடும் அபாயம், கருத்தியல்மயப்படுத்தாமல் அமைப்புகளைத் திரட்டுவதில் உள்ள பின்னடைவு ஆகியவை குறித்த கேள்விகளே இன்று ஒடுக்கப்பட்ட மகக்ளின்பால் கரிசனங்கொள்வோரின் முன்நிற்கும் கேள்விகள்.

பதிவாளர் பட்டறை?

தொடர்ச்சியான அலுவல்கள் இருந்ததால் வலைப்பதிவாளர்பட்டறையில் தொடர்ந்து பங்குபற்றாத இயலாத நிலை. அதிகபட்சம் அரைமணிநேரம் மட்டுமே பட்டறையில் சுற்றிவரமுடிந்தது. அரங்கத்தில் ஒரே ஒரு அமர்வினை மட்டுமே கேட்டேன். அதுவும் தலைப்பு ஈர்த்ததால்.

'வலைப்பதிவாளர்களின் சமூக அக்கறை'. ராமகிருஷ்ணன் என்பவர் பேசினார். (அவர்தான் ரஜினிராம்கி என்று ஒரு நண்பர் சொன்னார். சரியா என்று தெரியவில்லை.) அவர் பேசியதன் சாராம்சம் இதுதான். 2004ல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வலைப்பதிவாளர்கள் நிதி திரட்டிக்கொடுத்தது, கல்வி மற்றும் மருத்துவச்செலவுகளுக்காக நிதி திரட்டிக்கொடுத்தது ஆகியவற்றைப் பட்டியலிட்ட ராமகிருஷ்ணன் இதைத்தான் சமூக அக்கறை என்றார்.

இதற்குப்பெயர் மிடில்கிளாஸ் மனிதாபிமானமே தவிர சமூக அக்கறையல்ல. இயற்கைப்பேரழிவுகளோ அல்லது வறுமையோ வெறுமனே இயறகை மாற்றங்களால் மட்டும் ஏற்படுவதில்லை, அதற்குப் பின்னால் அகோரமான மூலதனப் பசியும் வல்லரசுகளின் சுரண்டலும் முதலாளித்துவக் கொடூரமும் உறைந்திருக்கின்றன. இதுபற்றிப் பேசுவதும் பேசச்செய்வதுமே சமூக அக்கறை. நிதி திரட்டித் தருவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதற்குப் பெயர் சமூக அக்கறையில்லை என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

மாலன் பேசியதில் உள்ள சர்ச்சைகளை தொடர்ச்சியாக ஈழத்தமிழ்த்தோழர்கள் எழுதிவருகிரார்கள். ராஜீவ் கொலைக்குற்றவாளிகளுக்கான தீர்ப்பின்போது மாலன் எப்படி நடந்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். மாலன் மற்றும் ஹிந்துராம் போன்ற பார்ப்பனர்களின் ஈழப்போராட்டத்திர்கு எதிரான மனோநிலையைக் கண்டறிந்துகொள்வது ஒன்றும் கடினமானதில்லை.

டீக்கடையில் கிழியுதுன் தேசியப் பொய்மை


ஈரோடு, கோவை, திண்டுக்கல், தென்னாற்காடு மாவட் டங்களில் ‘இரட்டைக் குவளை’ முறை அமுலி லுள்ள தேனீர்க் கடைகள் மற்றும் தலித் மக்களை அனுமதிக்காத கோயில்களின் பட்டி யலை - பெரியார் திராவிடர் கழகத் தோழர் கள் தயாரித்துள்ளனர். அந்தப் பட்டியலை, இங்கு வெளியிடுகிறோம்.


பாபு, த/பெ. ராமசாமி, பாபு டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638503.

முருகேஷ், த/பெ. ரங்கசாமி, முருகன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம்௬38 503.

அழகிரிசாமி (கண்ணன்), கண்ணன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல் சத்தி வட்டம் - 638 503.

வெங்கடேஷ், த/பெ. செட்டியார், வெங்கடேஷ் டீ ஸ்டால், கடைவீதி சாலை, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுந்தரமூர்த்தி, த/பெ. வெள்ளேகவுண்டர், சுந்தரமூர்த்தி டீ ஸ்டால், அம்மன் கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

ராமசாமி, த/பெ. கருப்பண முதலியார், ராமசாமி டீ ஸ்டால், பாரஸ்ட் ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

சஞ்சீவி, சஞ்சீவி டீ ஸ்டால், கடைவீதி ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

இராசு, இராசு டீக்கடை, புது மேட்டூர், ஆயில் மில் அருகில், சத்தி ரோடு, தவிட்டுப்பாளையம், அந்தியூர் அஞ்சல், பவானி வட்டம்.

சம்பத் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கிரி தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

மல்லிகா டீ ஸ்டால், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

இராயப்பன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சிவாயாள் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

முருகபவன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

ஆசனூர்க்காரர் டீக்கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாய் டீக்கடை, மசூதி பின்புறம், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

தங்கவேல், தங்கவேல் தேனீரகம், முதன்மைச் சாலை, அளுக்குளி அஞ்சல், கோபி வட்டம்.

முத்துசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

கந்தசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

வேலன் டீக்கடை, குள்ளம்பாளையம் பிரிவு, ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம்,கோபி வட்டம்.

ஜெயராணி டீக்கடை, வேலன் டீக்கடை எதிரில், ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம், கோபி வட்டம்.

சுப்ரமணியம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பி.எஸ். கிருஷ்ணன் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாரியூர் அம்மன் மகளிர் சுயஉதவிக்குழு டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கார்மேகம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

அசோக் டீ ஸ்டால், தாசம்பாளையம், ஈரோடு மெயின்ரோடு, கோபி வட்டம்.

முருகேசன், த/பெ. சின்னப்ப உடையார், முருகேசன் டீக்கடை, காராப்பட்டி,
கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

சின்ன அம்மணி டீக்கடை, க/பெ. கே.பி. ராஜா, கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

நாச்சிமுத்து டீக்கடை, எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சங்கீதா டீக்கடை, பேரூராட்சி அலுவலகம் அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

காளியப்பன் டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பொன்னுச்சாமி டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சின்னப்பன் (எ) காளையன், மாரனூர், ஊத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சக்தி தாலுக்கா.

சிந்து உணவகம் (தேனீர்க்கடை), குமாரசாமி, செண்பகப்புதூர் ஊராட்சி, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

பாலன் உணவகம் (தேனீர்க்கடை), மாரனூர், உத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

ராஜேந்திரன் தேனீரகம், வேடச்சின்னானூர் (பேருந்து நிறுத்தம் அருகில்) வேடச்சின்னானூர் ஊராட்சி செண்பகபுதூர் அஞ்சல், சத்தி வழி.

கோபால் தேனீர்க் கடை, விண்ணப்பள்ளி ஊராட்சி, பாலிபாளையம் அஞ்சல், சத்தி வட்டம்.

மாகாளி நாய்க்கர் தேனீர்க்கடை, புதுரோடு (பேருந்து நிலையம் அருகில்), செண்பகபுதூர் அஞ்சல், விண்ணப்பள்ளி ஊராட்சி, சத்தி
வழி.சிக்கரசம்பாளையம் (ஊராட்சி)

பொன்னம்மா உணவகம், சிக்கரசம்பாளையம் புதுகாலனி, பேருந்து நிலையம் அருகில், சிக்கரசம்பாளையம் அஞ்சல்சக்தி வட்டம் - 638 401. சிக்கரசம்பாளையம் ஊராட்சி

ராமசாமி தேனீரகம், குளத்தூர் பிரிவு, சிக்கரசம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 401.அரியப்பம்பாளையம் பேரூராட்சி

சின்னப்பன் டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

பழனிசாமி டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல்,சக்தி வட்டம் - 638 402.

தனலட்சுமி டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

மணி, டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

தமிழரசு டீ, உணவகம், (கோவில் அருகில்), பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

சிவகாமி டீ, உணவகம், (காலனி அருகில்), சதுமுகை அஞ்சல், தா.க. புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

முருகேசன், டி, உணவகம், காலனி அருகில், கெம்மநாய்க்கன்பாளையம் அஞ்சல், தா.க.புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

கோபால் டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), ராஜகோபால், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

பாலாஜி டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), பழனியப்பன், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

ரவி டீ ஸ்டால் (மேற்கு பகுதி கூடக்கரை),ரத்தினசாமி, கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

லட்சுமி டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), மணி பண்டாரம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

தங்கராசு டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), இராமலிங்கம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

கொண்டையம்பாளையத்துக்காரன் டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

கிட்டுசாமி டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

சரவணன் புரோட்டா ஸ்டால், உணவகம், கூடக்கரை மேற்கு, உரிமை : சரவணன், இவர் அரியப்பம்பாளையத்தை சார்ந்தவர்.

குறிப்பு: அனைத்துக் கடை களிலும் செயற்கைக் குவளை (பிளா°டிக் கப்) அதிகம் பயன்படுத்தப்படு கிறது.

முடி திருத்தக் கடைகள்

சுப்பிரமணி சலூன் கடை, கடைவிதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

வெள்ளியங்கிரி சலூன் கடை, முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுப்பிரமணி சலூன் கடை, பெரியசாமி கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை (சின்னப்பையன்), முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை, நரசஸ்சாபுரம் பிரிவு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

செல்வம், யுவராஜ் முடித்திருத்தகம், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

செல்வன் சலூன் கடை, உரிமை: செல்வன், லோகு சலூன் கடை, உரிமை: லோகநாதன், லிங்கேஸ் சலூன் கடை, உரிமை: லிங்கேஸ்ரன்,

லைட் (எ) ஆறுமுகம், அயனிங்கடை, கூடக்கரைமேற்கு, கூடக்கரை.
(இங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்டுவதில்லை)

கோயில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் கூடக்கரை (வடக்கு).


கோவை மாவட்டம்



கோவை புறநகர்

மோளப்பாளையம், சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், விராலியூர், நரசிபுரம், அஜ்ஜனூர், கண்டப்பாளையம், காளப்பநாயக்கன் பாளையம், ஜாகீர் நாயக்கன் பாளையம், வெள்ளருக்கம் பாளையம், சிலம்பனூர்.பெரியநாயக்கன் பாளையம், காரமடை மேற்கு - புஜ்ஜனூர், திம்மம்பாளையம், கே.புங்கம்பாளையம், புன்னையூர், வெள்ளியங்காடு, கண்டியூர், சின்னப்புத்தூர், பெரிய புத்துர்,மங்களக்கரை புதூர், மூலத்துறை, பாலப்பட்டி, வச்சினப்பாளையம், கிட்டாம்பாளையம், புதூர்.

அன்னூர் :

மோக்கனூர், எ°. புங்கம்பாளையம், பகத்தூர், பல்லேபாளையம். இரும்பொறை : கவுண்டன்பாளையம், மீனம்பாளையம், கனுவக்கரை, கள்ளப்பட்டி, சின்னரங்கம்பாளையம், பெரியரங்கம்பாளையம்.

அவிநாசி

சேவூர், நம்பியாம்பாளையம் (கருவலூர் சாலை),ராணியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம்.

ஈரோடு உட்கோட்ட எல்லை

காவிரி பாளையம், குப்பன் துறை, உக்கரம், கடத்தூர்,பனையம்பாளையம்.

பல்லடம்


பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், கரடிவாவி, பருவாய்,ஆராக்குளம், அனுப்பட்டி, லட்சுமி மில்ஸ், ஐயம்பாளையம், 11 சென்னிபாளையம், அப்பம்பாளையம், காளிகாளப்பட்டி,வேலம்பட்டி, மடுகபாளையம், எளவந்தி, துத்தாரிபாளையம்,கேத்தனூர், வெங்கிட்டாபுரம், பணப்பட்டி, பிரண்டம்பாளையம், சிக்கனத்தூர்.

மேட்டு கடை டீ கடை, பாரதியார் நகர், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

ராமாத்தாள் டீ கடை, பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை - 641 016.

ஆசாரி மணி கடை, கரும்புரவிபாளையம், வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

பாலு உணவகம், கரடிவாலி, பல்லடம் , கோவை மாவட்டம்.

வஞ்சியம்மன் உணவகம், லட்சுமி உணவகம், செம்மிபாளையம் அஞ்சல்,
பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

குமார் உணவகம், சுக்கம்பாளையம், சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம், கோவை மாவட்டம்.

அமாசையப்பன் கவுண்டர் உணவகம், காமராசர் நகர், கண்ணம்பாளையம் அஞ்சல், சூலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

கவுண்டர் தேனீர் நிலையம், சிக்கனூத்து, சுல்தான் பேட்டை ஒன்றியம், கோவை மாவட்டம்.

தெற்குப்பாளையம், பொங்கலூர் ஒன்றியம், கோவை மாவட்டம்.

புத்தரச்சல் டீ கடை, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் தாலுக்கா.

நடுகவுண்டர் பெரிய பாப்பா கடை, வடவேடம்பட்டி, வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்பையா கவுண்டர் டீ கடை, கிருஷ்ணா நகர், கரடிவாலி, பல்லடம் தாலுக்கா, கோவை.

முத்தக்கா டீ கடை, அனுப்பட்டி, பல்லடம் தாலுக்கா, கோவை.

பழனிச்சாமி கவுண்டர் டீ கடை, வெங்கிட்டாபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.

நடராஜ் டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்ரமணி டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

செந்தில் நாயக்கர் டீ கடை, துத்தாரிபாளையம் பிரிவு, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

எலவந்தி வடுகபாளையம், மூன்று டீ கடை, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

மாரப்பன் கவுண்டர் டீ கடை, காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம் தாலுக்கா, கோவை.

கீர்த்திகா டீ கடை, வடவேடம்பட்டி, வடவேடம் பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

தனி சுடுகாடு உள்ள இடங்கள்:


இராஜீவ்காந்தி நகர் வடவள்ளி, கணுவாய், நாதேகவுண்டன்புதூர், மேட்டுக்காடு, முல்லைநகர்,புதூர் புதுக்காலனி, போளுவாம்பட்டி, தெனமநல்லூர், ஆலாந்துறை, செம்மேடு, ஆறுமுகனூர், பச்சாபாளையம், கோவைப்புதூர், இடையர்பாளையம், லிங்கனூர் ஆதி தமிழன் நகர்.

பெருமநாயக்கன் பாளையம். பெருமாநாயக்கன்புதூர்,

குண்டடம் ஒன்றியம்

எடையபட்டி, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

பாரபாளையம், கொடுவாய் ஒன்றியம், காங்கயம் வட்டம்.

வலையபாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

வெல்லநத்தம் கிழக்கு.வெல்லநத்தம் வடக்கு, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

சாத்தநாயக்கன்பாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

தீண்டாமை கடைபிடிக்கும் பொது கோவில் :

காளப்பட்டி மாரி அம்மன் கோயில்
மாகாளியம்மன் வீரமாத்தியம்மன் கோயில், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை

சலூன்

வளர்மதி சலூன் - மல்லேஸ்வரி சலூன்,பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை.

ஹீராட் சலூன், சித்நாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, கோவை

நிலா நிரோஷா ஹேர் லைன்ஸ், குப்புசாமி நாயுடுபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.


விழுப்புரம் மாவட்டம்


அப்பு (ஆறுமுகம்), அருத்தங்கொடி, திருக்கோவிலூர் வட்டம்.
குமார் (செகதீசன்), லக்கிநாயக்கம்பட்டி, சங்கராபுரம் வட்டம்.

ஆதி திராவிடர்களை அனுமதிக்காத கோயில்கள்

சிவன் கோயில் - கடுவனூர், சங்கராபுரம் வட்டம்.துரோபதி அம்மன் - தொழுவந்தாங்கல், சங்கராபுரம் வட்டம்.

துரோபதி அம்மன் - கள்ளிப்பட்டு, சங்கராபுரம் வட்டம்.

ஈசுவரன் கோயில் - கூவனூர், திருக்கோவிலூர் வட்டம்.

கல்வராயன் கோயில் - கோமனூர், கள்ளக்குறிச்சி வட்டம்.

வினாயகர் கோயில் - நாகந்தூர், செஞ்சி வட்டம்.


திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை முறைகள் உள்ள கிராமங்களின் பட்டியல்

பழனி ஒன்றியம்


1. மிடாப்பாடி2. மயிலாபுரம் 3. நல்லெண்ணக்கவுண்டன்புதூர்4. பாப்பாகுளம்5. அய்யம்பாளையம்6. சின்னாக்கவுண்டன்புதூர்7. வேலாயுதம்பாஇளையம் புதூர்8. காவலப்பட்டி 9. போடுவார்பட்டி10. கரடிக்கூட்டம்


ஓட்டன்சத்திரம் ஒன்றியம்

11. திருவாண்டபுரம்,12. மோதுப்பட்டி,13. அப்பியம்பட்டி,14. நால்ரோடு,15. கூத்தம்பூண்டி,16. கழுத்தறுக்கன்பாளையம்,17. கரியாம்பட்டி,18. அம்மாபட்டி,19. குத்திலிப்பை,20. ஓடைப்பட்டி,21. சக்கம்பட்டி,22. சிந்தலப்பட்டி.23. சவ்வாதுபட்டி24. கோ.கீரனூர்25. புதுஅத்திக்கோம்பை26. அரசப்பிள்ளைபட்டி27. காவேரியம்மாபட்டி28. சின்னக்கரட்டுப்பட்டி29. பெரிய கரட்டுப்பட்டி30. பெரியகோட்டை31. தேவத்தூர்32. கொத்தயம்33. கந்தப்பகவுண்டன்வலசு34. 16 புதூர்35. கிலாங்குண்டல்36. கப்பல்பட்டி37. புலியூர்நத்தம்38. முத்துநாயக்கன்பட்டி39. நவாலூத்து40. இ.கல்லுப்பட்டி41. புளியமரத்துக்கோட்டை42. பி.என்.கல்லுப்பட்டி43. குளிப்பட்டி44. சின்னக்குளிப்பட்டி45. மறுநூத்துப்பட்டி46. சிறுநாயக்கன்பட்டி47. வடகாடு 48. பால்கடை49. வண்டிப்பாதை50. கொசவபட்டி51. தங்கச்சியம்மாபட்டி52. மேட்டுப்பட்டி (அம்பிளிகை)53. வளையபட்டி ( இடையகோட்டை 54. வெரியப்பூர்55. சீரங்கக்கவுண்டன்புதூர்56. கொல்லபட்டி57. குட்டில்நாயக்கன்பட்டி

தொப்பம்பட்டி ஒன்றியம்


58. கோவில்அம்மாபட்டி 59. இராஜம்பட்டி 60. அத்திமரத்துவலசு 61. பணம்பட்டி 62. அக்கரைப்பட்டி 63. சரவணப்பட்டி 64. ஆலாவலசு 65. பூலாம்பட்டி 66. வாகரை 67. மரிச்சிலம்பு 68. கொழுமங்கொண்டான் 69. சங்கஞ்செட்டிவலசு 70. கல்துரை 71. கோட்டத்துரை 72. பெரியமொட்டனூத்து 73. தாளையூத்து 74. நாச்சியப்பக்கவுண்டன்வலசு75. புங்கமுத்தூர்,76. அப்பனூத்து,77. குமராசாமிக்கவுண்டன்வலசு,78. அரண்மனைவலசு79. தீத்தாக்கவுண்டன் வலசு80. திருமலைக்கவுண்டன்வலசு81. பருத்தியூர்,82. வடபருத்தியூர்,83. பொருளூர்84. மேட்டுப்பட்டி (கள்ளிமந்தையம்)85. ஒத்தையூர்( கள்ளிமந்தையம் 86. வேலம்பட்டி87. புளியம்பட்டி


தோழர்களே தயாராவீர்!

ஆகஸ்டு 15 இல் தேனீர் கடைகளில், இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை பற்றியும், தலித் மக்களை அனுமதிக்க மறுக்கும் பொதுக் கோயில்கள் பற்றியும், பட்டியல் தயாரித்து விட்டீர்களா?


தோழர்கள் அனுப்பி வைத்த பட்டியலை இந்த இதழில் வெளியிட் டிருக்கிறோம். உரிய நடவடிக்கை கோரி, தொடர்புடைய அரசுத் துறைக்கு, இவை முறைப்படி அனுப்பி வைக்கப்படும். அரசு உரிய நட வடிக்கை எடுக்கவில்லை எனில், ஆகஸ்டு 15 இல் திட்டமிட்டபடி ‘இரட்டைக் குவளை’ உடைப்புப் போராட்டத்தில் கழகம் இறங்கும்.

கழகத் தோழர்களே!
• மாவட்டத்தில் போராட்டம் நடக்கும் பகுதியைத் தேர்வு செய்யுங்கள். • காவல் துறைக்கு போராட்டம் பற்றிய தகவல்களைத் தெரியப் படுத்துங்கள்.
• உடன்பாடுள்ள தோழமை அமைப்புகளைச் சந்தித்துப் பேசுங்கள். அவர்களின் ஆதரவைக் கோரி அவர்களையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.
• போராட்டத்தின் நியாயத்தை பல்வேறு பிரச்சார வழிமுறைகளைப் பயன்படுத்தி, மக்களிடம் விளக்குங்கள்.

தீண்டாமையைப் பின்பற்றுவது சட்டப்படி குற்றம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். சட்டங்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்து நிற்பதைக் கண்டித்தும் -சட்டத்தை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை கோரியும் - தீண்டாமையையும், அதற்கு உயிர் கொடுக்கும் சாதி அமைப்பை யும் எதிர்த்து, ‘பெரியார் திராவிடர் கழகம்’ இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
நாட்டின் அடிப்படையான முதலுரிமையும் முன்னுரிமையுமான ஒரு பிரச்சினையை கழகம் முன்னெடுத்துள்ளது.தோழர்களே! கழகச் செயல்வீரர்களே, தயாராவீர்!

“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என்மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும், இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மானவாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண் டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும், மனக் குறையின்றி, நிறை மனதுடன் அனுபவிப்பேன்-சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்.”

- பெரியார் (தமிழர் தலைவர் - நூல், பக்.15)

நன்றி : http://thozharperiyar.blogspot.com/2007/08/blog-post.html

கைவிடப்பட்ட முஸ்லீம்கள்...



1998 நவம்பர் மாதம் செல்வராஜ் என்ற போலிஸ்காரர் முஸ்லீம் இயக்கமாகிய அல் உம்மா அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து போலீஸ்ரவுடிகளும் இந்துத்துவ வெறியர்களும் கோவை வீதிகளெங்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை முன்னின்று ஏவினர். இக்கலவரத்தில் பத்தொன்பது முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர். முஸ்லீம்களின் உடைமைகள் சூறையாடப்படுகின்றன. ஷோபா என்னும் முஸ்லீம் ஒருவரால் நடத்தப்பட்ட ஜவுளிக்கடை அழிக்கப்படுகிறது.

'தான் தேர்தலில் ஜெயித்தால் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளைப் போல கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்' என்று உறுதியளித்து அதை நிறைவேற்றவும் செய்த அப்போதைய கோவைச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ வேட்டி உரியப்பட்டு உள்ளாடையோடு இந்துத்துவ மற்றும் போலீசுக் குண்டர்களால் சாலையில் விரட்டப்படுகிறார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளையட்டி அப்போதைய கருணாநிதி அரசு பொடா சட்டத்தைக் கொண்டுவந்து அல் உம்மாவைத் தடை செய்து நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்களைச் சிறையிலடைத்தது. தன் கட்சியைச் சேர்ந்த தண்டபாணி எம்.எல்.ஏ இறந்தபோதுகூட அவரைப் போய்ப்பார்க்காத கருணாநிதி அப்போதைய பிஜேபி எம்.எல்.ஏ வேலாயுதம் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சென்று உடல்நலம் விசாரித்தார். இதில் கருணாநிதியின் துரோகம் இத்தன்மையெனில் தமிழ்த்தேசிய அமைப்புகளின் துரோகம் வேறுமாதிரியானது.

ராஜிவ் கொலையையட்டி 24 அப்பாவித்தமிழர்கள் சிறையிலடைக்கப்பட்டு அவர்களில் ஆறுபேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு என்னும் அமைப்பு அவர்களின் விடுதலைக்கான இயக்கம் ஒன்றை அமைத்தது.

இது வெறுமனே அவர்களது வழக்கு நிதிக்கான நிதி சேகரிப்பு இயக்கமாக மட்டும் அமையவில்லை. மரணதண்டணை ஒழிப்பு இயக்கமாக மாறியது. முதன்முதலாக மரணதண்டனை ஒழிப்பு என்னும் கருத்தாக்கம் மக்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் மூலம் முன்வைக்கப்பட்டது. இறுதியில் கருணாநிதியிலிருந்து சோனியா வரை அதை ஏற்குமளவிற்கு அவ்வியக்கம் வெற்றிகண்டது.

ஆனால் இந்த தமிழ்த்தேசியர்கள், முஸ்லீம் இளைஞர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோது அவர்களுக்காய் இயக்கம் நடத்தவோ நிதி திரட்டித்தரவோ முன்வரவில்லை. பின்னால் கொண்டுவரப்பட்ட பொடாவை எதிர்த்த வீச்சும் வீரியமும் கருணாநிதியால் முஸ்லீம்களை ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட மூத்த பொடாவை எதிர்ப்பதில் இல்லை.

தமிழர்கள் என்பவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என்பதாகவே இன்றுவரை தமிழ்த்தேசிய அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்கின்றன. மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காகக் குரல்கொடுத்தவர்கள் அப்சலின் மரணதண்டனைக்கு எதிராய்ப் பேரளவு எதிர்வினை எதுவும் நிகழ்த்தவில்லை. இப்போது கோவைகுண்டுவெடிப்பு தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. பாட்சா, அன்சாரி உட்படப் பலரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கும் இன்னும் சில நாட்களில் மரணதண்டனை விதிக்கப்படலாம். நாளை அவர்களுக்காக மரணதண்டணை ஒழிப்பு இயக்கத்தை நடத்த தமிழ்த்தேசிய அமைப்புகள் முன்வருமா?

கேரளாவில் இயங்கிவரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானி. மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலில் நம்பிக்கையுள்ள ஒரு அரசியல்கட்சி. முஸ்லீம்கள் மட்டுமில்லாமல் கணிசமான தலித்துகளும் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வியக்கத்தின் தலைவர் மதானியைக் கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று காவல்துறை கைதுசெய்து ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மதானியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரை குறைந்தபட்சம் மருத்துவசிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆறுமாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். இவ்வறிக்கையில் அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர்.வீராசாமி, கவிஞர்.சுகிர்தராணி, வழக்கறிஞர்.ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார்தி.க, ஆதித்தமிழர்பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மதானி பிணையில் விடுவிக்கப்படவில்லை.

ஆனால் இப்போது மதானி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும் அவரை விடுதலை செய்துவிடவில்லை. பெரியமனதோடு அவரைப் பிணையில் விடுவிக்க சம்மதித்திருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்த குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மதானியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீசு எப்படி ஈடுகட்டும்? இது மதானிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வியே.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே....




கடந்த இரண்டு வாரங்களாக ஸ்பாம் பிளாக் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டதால் புதிய பதிவெதையும் பதிவிடமுடியாமலிருந்தது. ஆனாலும் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்யன் கணக்காய் புதிதாய் மூன்று பிளாக் ஆரம்பித்து பதிவெழுதத் தொடங்கியதில் ஆழத்தில் அமிழ்ந்து தேடும் அறிவுஜீவிகள் தொடங்கி பொறுப்பற்றுத் திரியும் பொட்டிக்கடை சத்யா வரை அதிர்ச்சியடைந்ததாய்த் தகவல். ஆனால் இப்போது திடீரென்று மீண்டும் இந்த வெளி மிதக்கத் தொடங்குகிறது. இப்போது இதே பிளாக்கிலேயே எழுதுவதா, புதிதாய் ஆரம்பித்துத் தொலைத்த பிளாக்குகளை என்ன செய்வது...... go to the title

திராவிட இயக்கம் என்னும் பழிதாங்கும் மாயப்பிசாசு




ஜீலை 2007 தீராநதி இதழில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது.

அரசியலற்ற இலக்கியம் என்று ஒன்று சாத்தியமா, நம்முடைய அரசியலுக்கு எதிராக இருப்பதாலேயே ஒரு இலக்கியத்தை நிராகரிக்கவேண்டுமா என்னும் கேள்விகள் முன்வைக்கப்படும்போது, 'அரசியலுக்காக ஒரு இலக்கியத்தை நிராகரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை' என்று கூறும் அதேவேளையில் 'ஒரு இலக்கியம் அரசியல்பூர்வமாக வாசிக்கப்படுவது தவிர்க்க இயலாது' என்று சரியாகவே சொல்கிறார் எம்.டி.எம்.

ஆனாலும் நேர்காணல் கண்டவர் விடுவதாயில்லை. ஜேம்ஸ்ஜாய்ஸின் யுலீசசையும் எஸ்ராபவுண்டையும் மேற்கோள்காட்டித் துளைத்தெடுக்கிறார். 'திராவிட இயக்கம் பக்தி இலக்கியங்களைப் படிப்பதைத் தடைசெய்தது' என்றும் 'ஒரு சந்ததியினருக்கு அந்த அறிவு சென்று சேராமல் போனதற்கு திராவிட இயக்கம்தான் காரணமென்றும் அதற்குமுன் தமிழர் வீட்டு சுகதுக்க நிகழ்ச்சிகளில் தேவாரம் ஓதுவது, திருவாசகம் பாடுவது புழக்கத்திலிருந்ததே என்றெல்லாம் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுகிறார்.

இத்தகைய கேள்விகள் தமிழில் கேட்கப்படுவது இது முதன்முறையல்ல. கவிஞர்.தமிழ்நதி தனது நட்சத்திரவாரத்தையட்டி எடுத்த நேர்காணலில் கவிஞர்.குட்டிரேவதி, 'திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பின்புதான் தமிழர்களின் அழகியல் உணர்வு அழிந்துவிட்டது' என்கிற ரீதியில் தெரிவித்திருந்தார்.

ஆகமொத்தம் சமூகத்தின் அத்தனைச் சீரழிவுகளுக்கும் தேக்கங்களுக்குமான காரணத்தை நாம் சுலபமாக திராவிட இயக்கத்திலிருந்து 'கண்டுபிடித்துக்கொள்ளலாம்' என்பது எவ்வளவு வசதியானது.!

திராவிட இயக்க ஆட்சிக்குப்பின்தான் ஊழல் மலிந்தது, ரவுடி அரசியல் தலைதூக்கியது, தனிநபர் ஒழுக்கம் சீர்குலைந்தது என்பதான குற்றச்சாட்டுகளும் பொதுப்புத்தியில் ஆழப்பதியவைக்கப்பட்டுள்ளன. ஊழல் மலிந்துவிட்டது என்பதான பேச்சின் பின்னுள்ள மனவுணர்வு பார்ப்பனரல்லாத தலித்துகளும் சூத்திரர்களும் அரசியலுக்கு வந்தபின்புதான் என்னும் தூய்மைவாத மனோபாவமே என்பதை ஊகித்தறிவது சுலபம்தான். இவ்வாறாகக் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்தியோ தூய்மைவாத அணுகல்முறையோடு ப.சிதம்பரத்தையும் அத்வானியையும், அப்துல்கலாமையும் ஆதரிக்கிறது.

ஆனால் நடந்தது என்ன? ஊழல் செய்வதில் வருணபேதம் கிடையாது என்பதை ஹர்ஷத்மேத்தா, வேணுகோபாலிலிருந்து 'புரட்சித்தலைவி' ஜெயலலிதா வரை நிரூபித்தார்கள். தூய்மைவாத மத்தியதரவர்க்கத்தினரின் ரோல்மாடலான பி.ஜே.பியும் ஊழல்குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பமுடியவில்லை.

திராவிடக் கட்சித்தலைவர்கள்தான் தனிநபர் ஒழுக்கமற்றவர்கள் என்கிற மனப்பதிவை இருவர் மணிரத்னத்திலிருந்து தில்லிப்பார்ப்பனர் பி.ஏ.கிருஷ்ணன் வரை உருவாக்கத்தவறவில்லை. ஆனால் உண்மை என்பது அதுதானா? பார்ப்பனர்களுக்கும் ஆண்குறி உண்டு என்பதை இருள்நீக்கிசுப்பிரமணியம், டாக்டர்.பிரகாஷ் தொடங்கி சமீபத்தில் அந்துமணி என்கிற ரமேஷ்(எ) தினமலர் ராமசுப்புவரை நிரூபித்தார்கள்.

ஆனாலும் குற்றங்களுக்கான வேர்களைத் திராவிட இயக்கத்தில் தேடுவது என்பது இன்னமும் வசதியானதாகத்தானிருக்கிறது. அந்த மனோபாவத்தின் இன்னொரு பரிமாணமே குட்டிரேவதியின் கூற்றும் எம்.டி.எம்மை நேர்காணல் எடுத்தவரின் கேள்விகளும். 'திராவிட இயக்கம் அழகியல் உணர்வைக் கொன்றழித்துவிட்டது' என்பவர்கள் உண்மையிலேயே திராவிட இயக்க இலக்கியங்களை வாசித்திருக்கிறார்களா, வாசித்திருக்கிறார்கள் என்றால் எந்தளவிற்கு என்றெல்லாம் கேள்விகள் விரிவதைத் தவிர்க்கமுடியவில்லை.

'நாயின் நாக்குப்போன்ற சிவந்த மெல்லடியைத் தூக்கிவை குடிசையில்' என்னும் பாரதிதாசனின் கவிவரிகளில் படிம அழகு விரியவில்லையா?

"நதிதழுவி அருவியின் தோள் உந்தித் - தெற்கு
நன்முத்துக்கடலலையின் உச்சிதோறும்
சதிராடி மூங்கிலிலேப் பண்ணெழுப்பித்
தாழையெல்லாம் மடற்கத்தி சுழற்றவைத்து
அந்தியிலே இளமுல்லை சிலிர்க்க - செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க -என்
சிந்தையணு ஒவ்வொன்றும் சிலிர்க்க
செல்வம் ஒன்றுவரும் அதன்பேர் தென்றல்காற்று"

என்னும் சுப்புரத்தினத்தின் வரிகளில் வீசும் தென்றல் நம்மைத் தழுவவில்லையா?

"சுயநலமென்பீர்கள், என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது, ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப்போல' என்னும் கலைஞரின் வசனத்தில் தத்துவம் கவித்துவமாய்த் தெறிக்கவில்லையா?

அழகியல் உணர்வற்றுத்தானா, ஏறக்குறைய பெரியாரைத் தவிர திராவிட இயக்கத்தில் இருந்த அத்தனைபேரும் நாடகம், சிறுகதை, வசனம் என எழுதியும் நடித்தும் குவித்தனர்? திராவிட இயக்க இலக்கியம் என்பது அண்ணா கலைஞரைத்தாண்டியும் சி.பி.சிற்றரசு, அண்ணல்தங்கோ, தென்னரசு, தத்துவமேதை டி.கே.சீனிவாசன் என்று பரவிப் பரந்துகிடக்கிறதே? மன்றம், தென்றல், திராவிடநாடு, முரசொலி என நாற்பதிற்கும் மேற்பட்ட பத்திரிகைகளை திராவிட இயக்கம் நடத்தியது எப்படி?

தமிழின் முதல் பெண்நாவலாகிய 'மதிகெட்ட மைனர் (அ) தாசிகளின் மோசவலை' எழுதிய மூவலூர் ராமார்மித்தத்தமையார் திராவிட இயக்கத்தவர்தானே? ஆண்களே அற்ற பெண்களை மட்டுமே கதைபாத்திரங்களாகக் கொண்டு நாவலொன்றை முப்பதுகளிலேயே சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் எழுதினாரே. (ராகவனா, நீலாம்பிகை அம்மையாரா என்று நினைவில்லை). அழகியல் உணர்வற்ற கருணாநிதியால் வள்ளுவர்கோட்டமும், பூம்புகாரும், வள்ளுவர் சிலையும் எப்படிச் சாத்தியம்?

இத்தகைய கலை, இலக்கிய வெளிப்பாடுகள் அழகியல் உணர்வின்றி எப்படி உருவாக முடியும்? ஆனால் திராவிட இயக்கத்தவரின் எழுத்துக்கள் பளபளப்பானவை, எதார்த்தத்தை மிகைப்படுத்தியவை என்பது உண்மைதான். ஆனால் இன்றைய நவீன இலக்கிய எழுத்துமுறை, வாசிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை அளப்பது என்பது நேர்மையாகாது. திராவிட இயக்க எழுத்து என்பது அதற்கு முந்தைய எழுத்தை விட நிச்சயமாக நவீனமானதுதான். மற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களின் பிரதிகளை விட்டுவிடுவோம். ஆனால் பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் வாசிக்கும்போது பலமுறை நவீன இலக்கியம் வாசிப்பதான உணர்வையே அடைகிறேன். குறிப்பாக நாகம்மை மரணத்தின்போது அவரால் விடப்பட்ட அறிக்கை.

எம்.டி.எம் தனது நேர்காணலில் ஒருவிசயத்தைத் தெளிவாகச் சொல்கிறார். திராவிட இயக்கம்தான் சங்க இலக்கியம் குறித்த வாசிப்பைப் பரவலாக்கியது என்று. சங்க இலக்கியம் மட்டுமில்லை, பெரியாரும் திமுகவும் இல்லாமல் போயிருந்தால் திருக்குறளும் வள்ளுவரும் தமிழ்ப்பொதுமனத்தில் இவ்வளவு ஆழமாக ஊன்றியிருக்கமாட்டார்கள். கருணாநிதி இல்லையென்றால் சிலம்பும் கண்ணகியும் குறித்தான கதையாடல்கள் தமிழ்மனத்தில் ஏது?

ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையை வேறுவிதமாக உரையாடிப் பார்ப்போம். திராவிட இயக்கம் பகுத்தறிவுவாதத்தை முன்வைத்தது. பகுத்தறிவுவாதம் தர்க்கத்தின்பாற்பட்டது. இலக்கியமோ, அழகியல் உணர்வோ, கலைமனமோ தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. திராவிட இயக்கத்தின் தர்க்கபூர்வமான பகுத்தறிவுவாதம் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட மெல்லிய கலைமனத்தைச் சாகடித்துவிட்டது, தேவதைக்கதைகளைக் கொன்றழித்துவிட்டது என்பதாக இந்த குற்றச்சாட்டை வாசிக்க முயல்வோம்.

ஆனால் உண்மையில் திராவிட இயக்கம் தர்க்கபூர்வமான பகுத்தறிவு இயக்கமா? பெரியாரின் பகுத்தறிவு என்பதே வெறுமனே தர்க்கபூர்வமான பகுத்தறிவு மட்டுமல்ல. எல்லாவித வழிபாட்டுமுறைமைகளுக்கும் எதிரான, எல்லாவிதமான உரையாடல்களையும் சாத்தியப்படுத்துகிற, விமர்சனவெளியில் தன்னை முன்கிடத்துகிற இறுக்கமற்ற நெகிழ்வுடைய திறப்பே அவரது பகுத்தறிவு என்னும் கருத்தாக்கம். இல்லாது பெரியார் வெறுமனே தர்க்கங்களுக்குள் சுருங்கிப்போயிருந்தாரெனில் அவரிடத்திலே கவித்துவ அறமிருந்திருக்காது. காரியமுதல்நோக்கமும் வறட்டுத்தனமான சில செத்துப்போன கேள்விகளுமே மிச்சமிருந்திருக்கும்.

பெரியாரையும் அவரையத்த சிலரையும் தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக திமுகவின் அரசியல், இலக்கிய மற்றும் கலைப்பொதுவெளியின் ஊடான செயல்பாடுகளைத் தொகுத்துப்பார்த்தோமெனில் அவற்றிற்கும் பகுத்தறிவிற்குமான உறவு குறித்த ஒரு சில புரிதல்கள் சாத்தியப்படும்.

திராவிட இயக்கம் மதத்தை மறுத்தது, கடவுளை மறுத்தது. ஆனால் அந்த வெற்றிடங்களை வள்ளுவர், திருக்குறள், சேரன்செங்குட்டவன், கண்ணகி, ராசராசசோழன்
என்னும் குறியீடுகளால் நிரப்பியது. மத உணர்விற்குப் பதிலியாக தமிழினப்பெருமிதக் கதையாடல்களை இட்டு நிரப்பியது.

வள்ளுவரும், கண்ணகியும் தமிழர் தெய்வங்களாயினர். இயக்கத்திலும் தோழமைபூர்வமான உறவுச்சொல்லாடல்கள் ஒழிந்து குடும்ப உறவுகளின் மாதிரியிலான உறவுச்சொல்லாடல்கள் கட்டப்பட்டன 'தோழர்' என்கிற வார்த்தை பின்னுக்குத்தள்ளப்பட்டது. அண்ணாத்துரை என்கிற பெயரின் வசதியால் அவர் அண்ணா ஆனார். மற்றவர்கள் தம்பிகளானார்கள். கலைஞருக்கோ அனைவரும் உடன்பிறப்புகளானார்கள்.

அரசியல்பூர்வமான உறவுச்சொல்லாடல்களின் இடத்தை குடும்ப அடிப்படையிலான உறவுச் சொல்லாடல்கள் நிரப்பிக்கொண்டன. இதை ஜெயலலிதாவை அம்மா என்று அழைப்பது வரை நீட்டித்துக்கொள்ளலாம். பகுத்தறிவைப் பேசுவதாய் வந்த திராவிட இயக்கத்தில்தான் அண்ணா 'இதயதெய்வம்' ஆனார். எம்.ஜி.ஆர் 'அமரரானார்'.

ஆக மதவழிபாட்டிற்குப் பதிலாகத் தனிநபர் வழிபாட்டையும் பழம்பிம்ப வழிபாடுகளையும் திராவிட இயக்கம் முன்வைத்தது. மதமற்ற ஒரு வழிபாட்டுமுறையை உருவாக்கியதுதான் திராவிட இயக்கப் பகுத்தறிவின் சாதனை. இந்தப் பதிலியாக்கத்தின் விளைவாக பண்பாட்டுப் பெருமிதத்தின் பெயராலே திராவிட இயக்கத்தலைவர்களின் சொல்லாடல்களிலும் செயற்பாடுகளிலும் தமிழ்க்குடும்ப உறவுமுறைகளில் சிறுகீறலுமில்லாத மதிப்பீடுகளாய் ஆண்மய்ய மற்றும் ஆணாதிக்க மதிப்பீடுகள் நிரம்பிவழிந்தன. எனவே தர்க்கபூர்வமான பகுத்தறிவிற்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது. அதைக்காரணம் காட்டி அவற்றின் பகுத்தறிவே அழகியலைக் கொன்றழித்தது (அ) பக்தியுணர்வைத் தடைசெய்தது என்று குற்றம்சாட்டுவது அறியாமையேயாகும்.

அவற்றிற்கான காரணங்களை நாம் சூழலில்தான் தேடவேண்டும். தேவதைக்கதைகள் ஒழிந்துபோனதற்கு திமுக காரணமில்லை. அண்ணாதுரை ஆட்சிக்காலத்திலும் குழந்தைகள் பாட்டிகளிடம் கதைகேட்டுக்கொண்டிருந்தார்களே தவிர, ''ஏழுமலை ஏழுகடல் தாண்டி அசுரனின் உயிர் எப்படி இருக்கும்?" என்றெல்லாம் 'பகுத்தறிவு'க்கேள்விகளை எழுப்பவில்லை.

ஆனால் இன்றைய சூழல்வேறு. நவீனக்கல்விமுறையும் ஊடகங்களின் வளர்ச்சியினூடான விஞ்ஞான வளர்ச்சியும்தான் தேவதைகளின் மரணத்திற்குக் காரணம். கி.ராஜநாராயணன் ஒருமுறை சொன்னார், 'ஒரு குழந்தை வானம் ஏன் நீலமாக இருக்கிறது, கடலில் ஏன் அலைகள் வருகின்றன என்றெல்லாம் சதா கேள்விகேட்டுத்துளைக்கும். கேள்விகேட்பது குழந்தைகளின் இயல்பு. ஆனால் மூன்றுவயதில் நாம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிடுகிறோம். பின் பிரம்போடு வாத்தியார் கேள்விகேட்கத்தொடங்கிவிடுகிறார். குழந்தைகள் கேள்விகளற்றுப்போகிறார்கள்' என்று. நமக்குத்தான் குழந்தைமையைக் கொல்லும் ஹார்மோன் ஊசிகள் பாடத்திட்டங்கள் என்னும் பெயரில் இருக்கின்றனவே!

ஆனாலும் பகுத்தறிவைத்தாண்டி மாயச்சாகசத்திற்காய் ஏங்கும் குழந்தை மனம் அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடுவதில்லை. அவை ஜெட்டிக்ஸாகவும் சன்டிவியின் சுட்டிடிவியாகவும் ஹாரிபார்ட்டராகவும் மடைமாற்றம் கொள்கின்றன. எவ்வித ஆதாய நோக்கமுமற்று தேவதைக்கதைகளைப் பகிர்ந்துகொண்ட பாட்டிகளின் இடத்தை வணிகநோக்கமும் அரசியல்நோக்கமும் கொண்ட அனிமேசன் பிம்பங்கள் நிரப்பிக்கொள்கின்றன.

வீட்டில் போகோ ஓடுகிறது. விருந்தினர் வருகிறார். 'வாங்க, எப்படியிருக்கீங்க?' என்று ஒரு கேள்வியை வீசிவிட்டு போகோவின் மாயக்குகைக்குள் மறைகிறோம். அன்றொருநாள் தேவதைக்கதைகள் சொன்ன கிழவி மூலையில் முடங்கிக்கிடக்கிறாள். சொல்லப்படாத தேவதைக்கதைகள் வழிந்துகிடக்கின்றன வெறும் உமிழ்நீராய்...

சில பின்குறிப்புகள்:

1. எம்.டி.எம்மை நேர்காணல் எடுத்தவர் அரசின் குரலே பாடத்திட்டங்களாய் மாறுகின்றன என்கிறார். ஆனால் நாற்பதாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பாடத்திட்டங்களிலிருந்து பக்தி இலக்கியங்கள் எடுக்கப்பட்டதில்லை. மேலும் சீறாப்புராணம், யேசுகாவியம், ரட்சண்ய யாத்திரீகம் போன்ற இந்து அல்லாத புறச்சமய இலக்கியங்களும் இடம்பெற்றன. வேண்டுமானால் புலவர்.குழந்தையின் ராவணகாவியம், பாரதிதாசனின் கண்ணகிபுரட்சிக்காப்பியம் ஆகியவை இடம்பெற்றிருக்கலாம்.

2. பெரியாரின் பகுத்தறிவு வெறுமனே தர்க்கபூர்வமானது மட்டுமில்லை என்பதை புதியகோடங்கி இதழில் அ.மார்க்சின் 'பெரியார்?' நூலிற்கான விமர்சனத்திலும் புத்தகம்பேசுது மற்றும் விடுதலை ஞாயிறுமலரில் மீள்பிரசுரமான 'பெரியாரில் மிளிர்ந்த கவித்துவ அறம்' என்னும் கட்டுரையிலும் சற்று விரிவாக விளக்க முயற்சித்திருக்கிறேன்.

3. திராவிட இயக்கத்தினரின் ஆண்மய்யச்சொல்லாடல்களை அண்ணாவின் 'ரோமாபுரிராணிகள்', கருணாநிதியின் பலபிரதிகள், பெரியார் இயக்கத்தவரின் புராண ஆபாசம் குறித்தவிமர்சனப்பேச்சுகள், பாரதிதாசனின் குடும்பவிளக்கு, இருண்டவீடு முதலான நூல்கள் தொடங்கி, வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், ஏன் நமது திராவிட இயக்க ஆதரவுப் பதிவாளர்களான விடாதுகருப்புவின் எழுத்துக்கள் மற்றும் தோழர்.செந்தழல்ரவி 'ஆம்பளையாயிருந்தா நேரா வா, நீ என்ன பொட்டையா?' என்று அவரது ஆழ்மனதில் புதைந்துபோன ஆண்மய்யச்சொல்லாடல்களை உதிர்த்தது எனப் பல்வேறு உதாரணங்களை வரிசைப்படுத்தலாம்.

4. எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணல் சமீபத்தில் தீராநதியில் வந்த நேர்காணல்களில் முக்கியமானது. ஆனால் எம்.டி.எம்மின் பிரதிகளில் வெளிப்படட் சைவவெள்ளாளக் கருத்தியல் குறித்துக் காத்திரமான விமர்சனங்கள் தமிழ்ச்சூழலில் முன்வைக்கப்பட்டன. அதுகுறித்து எந்தக் கேள்வியுமில்லை.மேலும், அவர் நகுலனைத் 'திராவிட இயக்கத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட விளிம்புப் பிராமண மனமாய்'ப் பார்ப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இது 'பிராமணர்கள் தலித்துகளைப் போல நடத்தப்படுகிறார்கள்' என்றலறும் அசோகமித்திரனின் குரலோடு பொருந்திப்போவது கவனிக்கத்தக்கது.

மேலும் நகுலனும் தான் திராவிட இயக்கத்தால்தான் தனிமைப்பட்டுப் போனதாக சொல்லிக்கொண்டதாகத் தெரியவில்லை. சு.ரா மற்றும் ஞானக்கூத்தன் போன்றோரின் பிரதிகளில் காணப்படும் திராவிட இயக்கவெறுப்புமனோநிலையை நகுலனின் எழுத்துக்களில் காண இயலாது.

சாரு தனது நகுலன் அஞ்சலிக்கட்டுரையில், 'முதல் சந்திப்பில் 'நீங்க பார்ப்பானா' என்று நகுலன் கேட்டதாகவும் இல்லையென்றவுடன், 'ஏன் அவர் முகத்தில் அவ்வளவு திருப்தி என்றும் எழுதுகிறார். ஒருவேளை இதே கேள்வியை நகுலன் எம்.டி.எம்மிடம் கேட்டிருந்தால் 'ஆமாம்' என்றிருப்பாரோ என்னவோ?

ஒரு பெண்ணைக் கொலைசெய்தோம்




பொங்கிப்பெருகும் கருணையே
முலைகளாய்த் ததும்பிற்றுப்
பெண்ணிடம்.
முலைகளற்ற வெற்றுக்காம்புகள் திருகி
குறிதுழாவி அலைகிறது
ஆண் என்னும் திமிர்மிருகம்.

- சில்வியாகுண்டலகேசி ( பெண், பெண் மற்றும் பெண் மட்டுமே தொகுப்பிலிருந்து...)

சமம் என்கிற வார்த்தையை வெறுக்கிறேன் நான். ஆணும் பெண்ணும் சமம் என்பது முட்டாள்தனமான உளறலின்றி வேறில்லை. ஆண் எப்போதும் பெண்ணிற்குச் சமமாக முடியாது. நான் ஆணாயிருக்கிறேன். அதனால் அவமானப்படுகிறேன். எப்போதும் எந்தக் கணமும் ஒரு பெண்ணின் கையால் கொலைசெய்யப்பட விரும்புகிறேன், அன்பும் கருணையுமுள்ள பெண்ணின் கைகளால்..

- சுகுணாதிவாகர் (20.11.1978க்குப் பிறகு... (அச்சில் ஏற்றப்படாத பிரதியிலிருந்து...)

மறக்கமுடியாதவர்கள் என்னும் பட்டியலில் பெண்களே எப்போதும் நிரம்பிக்கொள்கிறார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுமளவிற்கு ஆண்கள் முக்கியமானவர்கள் அல்ல. அன்பும் தோழமையும் கொண்ட ஒருசில ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் நினைவிற்கு வந்துபோவதெல்லாம் அறிவின் திமிர், வன்மம், குரோதம், இரக்கமற்ற துரோகம் இவற்றிற்காகத்தான். - அப்படியாக வாழ்க்கையில் மறக்கமுடியாத பெயர்களிலொன்று கார்த்திகா.

கார்த்திகா ஒவ்வொரு புத்தாண்டையும் கலைத்துப்போடுகிறாள். புத்தாண்டுக்கொண்டாட்டங்களுக்கிடையே கார்த்திகாவின் நினைவு தவிர்க்கவியாமல் உறுத்துகிறது விரலிடுக்கில் சிக்கிக்கொண்ட மணல்துகளைப் போல...

முதல்முதலாக ஒரு நண்பனை வழியனுப்புவதற்காக ரயில்வேஸ்டேசன் சென்றபோதுதான் கார்த்திகாவைச் சந்தித்திருக்கிறான் ஜெகன். நாங்கள் ஓராண்டுகாலம் நடத்திய பத்திரிகையில் என்னோடு இணைந்து ஆசிரியர்குழுவில் பணியாற்றியவன். அவ்வப்போது கவிதைகள் எழுதி, ஓஷோ மீது பிரியம் கொண்டு குழந்தைத்தனமும் மாறாத நேசமும் கொண்டு வாழ்பவன். ஜெகன் சந்தித்தபோது கார்த்திகா தற்கொலை செய்துகொள்வது, வீட்டைவிட்டு ஓடிவிடுவது ஆகிய இருவழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாயிருந்தாள்.

கார்த்திகா ஒரு தலித்பெண். குறிப்பாக பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பெண். அவளது தந்தை அரசு மருத்துவமனை ஊழியர். அரசு ஊழியர் காலனியில் அவளது வீடு அமைந்திருந்தது. பதினொன்றாவதோ, பன்னிரண்டாவதோ படித்துக்கொண்டிருந்தாள் கார்த்திகா. எல்லோருக்கும் வருவதைப் போலவே அவளுக்கும் காதல் வந்தது. ஒருநாள் காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போனாள்.

காதலனுக்கோ காதலைவிடவும் கார்த்திகா மீதுதான் நாட்டமிருந்தது. ஆனால் கார்த்திகாவிற்கு அது இல்லை. காதல் என்பது பாலியல் உறவிற்கு அப்பாற்பட்டது என்பது அவள் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். மீண்டும் வீடுதிரும்பினாள் தனியாக.

ஆனால் வீடு அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவளை ஒரு வேண்டத்தகாதவளாகவே நடத்திவந்தது. காலனியில் வசிக்கும் பையன்களோ கார்த்திகாவை 'எதற்கும் தயாரானவளாகப்' பார்த்தனர். தண்ணீர் எடுக்கக் குழாய்க்குச் செல்லும்போதெல்லாம் அவளைக் கிண்டல் செய்தனர். கிட்டத்தட்ட 'வர்றியா' என்று அழைத்தனர்.

இந்த நிலையில்தான் அவள் எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் அவளை ஒரு பெரியாரியக்கத் தோழர் ஒருவரின் வீட்டில் தங்கவைத்திருந்தோம். ஆனால் அதற்குள் தோழர் அவள் வீட்டிற்குத் தகவல் அனுப்பியிருந்தார். வீட்டார் வந்தபோது அதிர்ச்சியடைந்த கார்த்திகாவின் கண்களில் ஒரு விபரிக்கமுடியாத ஏமாற்றமும் குற்றம் சாட்டுகிற கோபமும் நிறைந்திருந்தது.

வீடு அவள், குடும்பக் கௌரவத்தைக் கெடுத்துவிட்டதாகப் புலம்பியது. பிறகு கார்த்திகாவை மறந்துபோனோம். ஆனால் இரண்டு வாரங்களில் அவள் மீண்டும் எங்களிடமே வந்து சேர்ந்தாள். இப்போது நாங்கள் உதவிநாடியது முன்னாள் மார்க்சியலெனினிய அனுதாபியும் இந்நாள் கலகக்காரமுமான நண்பர் ஒருவரை .

நல்லபோதையிலிருந்தபோதும் அவர் கார்த்திகாவின் தந்தைக்குப் போன் செய்யத் தவறவில்லை. ஒரு தீயணைப்புநிலையத்தின் அருகில் கார்த்திகாவை அவளது தந்தையிடம் 'ஒப்படைத்து' பொறுப்பாற்றினோம்.

டிசம்பர்31 காலை கார்த்திகா தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு நண்பரின் மூலம் தகவல் வந்தது. இரவு கார்த்திகாவை நானும் ஜெகனும் போய்ப்பார்த்தோம். கார்த்திகா இல்லை, எரிந்து கருகிப்போயிருந்த ஒரு பிண்டமே இருந்தது. பாலிதீன் துண்டுகளில் கட்டப்பட்ட மீன்துண்டங்களாய்ப் போல வெள்ளையாய் அலைந்துகொண்டிருந்தன அவளதுகண்கள்.

'தனியாகப் பேசவேண்டும்' என்று விருப்பம் தெரிவித்த கார்த்திகா, என்னைப் பார்த்துக் கேட்டாள், 'நீங்கள் எங்கள் வீட்டிற்குப் போன் செய்து கார்த்திகாவுடன் பேசவேண்டுமென்றீர்களா?'. நான் பேசவில்லை. ஆனால் எங்களது குழுவிலிருந்து எனது பெயர் கொண்ட இன்னொருநண்பன் பேசியிருக்கலாம். அந்த அழைப்பினால் வீடு மீண்டும் குழப்பத்தையும் கலகத்தையும் சந்தித்தது. கார்த்திகாவிற்கு மரணத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறுவழியில்லை. சரியாக ஜனவரி 1 - கார்த்திகா செத்துப்போனாள்.

நாங்கள் கம்யூனிசம் பேசினோம், பெரியாரியம் பேசினோம், பின்நவீனத்துவம் பேசினோம், இலக்கியம் பேசினோம். எல்லாம் பேசி ஒருபெண்ணைக் கொலைசெய்த திருப்தியோடு வெளியேறினோம்.

--------------------------- குடும்பவெளிகளிலிருந்து வெளியேறும் பெண்களுக்கான தனிவெளியை இந்தியப்பொதுவெளி உருவாக்கவில்லை, உருவாக்கப்போவதுமில்லை.. வீட்டைவிட்டு ஓடிப்போவது, தற்கொலைசெய்துகொள்வது என்னும் வாழ்வின் எந்தச் சந்தர்ப்பத்திலாவது எல்லோருக்கும் தோன்றும் உந்துதல்களில் பெரும்பாலும் இரண்டாவது வழி மட்டுமே பெண்களுக்குத் திறந்திருக்கிறது. ஒருவேளை வீட்டைவிட்டு ஓடிப்போனால்கூட அவள் யாராவது ஒரு ஆணுடன்தான் ஓடிப்போகவேண்டும். உலகமெங்கும் நிகழும் சாதி/மத/இனக் கலவரங்களில் பாலியல்பலாத்காரங்கள் நிகழ்வது ஒரு செய்தியே அல்ல. அது வெறுமனே பாலியல் விழைவு மட்டுமல்ல. மாற்று இன/மத/சாதிப் பெண்ணுடல் என்பது ஆணின் அதிகார வெற்றியை நிலைநாட்டிக்கொள்வதற்கான நிலம்தான். தனது வெற்றிக்கொடியை இறுக நாட்டிவிட்டுத் தனது குழுப்பெருமையைக் காப்பாற்றிய திருப்திகொள்கிறது ஆண்மனம். பெண்ணுடலோ யோனிகிழிந்து சிதைந்துகிடக்கிறது. உலகின் சாதிய, மதவாத, இனவாத, தேசியச் சொல்லாடல்களின் பின்னெல்லாம் ஆணாதிக்க மற்றும் ஆண்மய்ய நோக்கங்களே நிறைந்திருப்பதைப் புரிந்துகொள்வது கடினமானதா, என்ன?

------------------ எங்களுக்கு அதேமாதிரியான வேறொரு வாய்ப்பும் அமைந்தது. வேறுபெண். வேறு ஊர். வேறு சூழல். வேறு நண்பர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணை எங்களால் கொலைசெய்யமுடியவில்லை.

இசையால் நிரம்பிய அறை

நௌபல்,
உனை விடவும் காதல் இனிதில்லை.
மதுவில் நனைத்த உன் முத்தங்கள்
தேங்கிப்புழுத்த கவிதைகளைவிடவும்
பிரியமிக்கவை.
பீடிப்புகையும் சாராயநாற்றமும்
உன் இசையுமாய் நிரம்புகிறது அறை.
புகைகளுக்குள் ஊருருவும்
லாவகமானதுன் இசை.
கைவிடப்பட்ட கணங்களிலும்
ஆறுதலுக்காய் முந்தும் வார்த்தைகளின்முன்
என்னைப் பிரித்துப் போட்டுவிடமுடியாதபடி
தடுக்குமென் வெட்கம் ரகசிய அறைகளைத்
தேடித்தவிக்கிறபோதும்
உன் மடியையே சரணடைகிறது.
நீ எப்படி எப்போதும்
நண்பனாயிருக்கிறாய் என்பது
ஆச்சரியமானதுதான்.
(என்னால் முடியாது அது.)
இப்போது குளித்த குழந்தை
ஈரத்தோடு கட்டிக்கொள்வதைப் போலவே
அணைக்குமுன் நேசம்
நீ கம்யூனிஸ்டாயிருந்ததால் இருக்கலாம்.
நௌபல்,
நடுத்தெருவில் செத்துநாறும் நாயைப்போலவேயான
இந்த கவிதையைப் புறக்கணித்துவிட்டு
இப்போது இந்த அறையை இசையால்நிரப்பு.
ஒரே ஒரு சிகரெட்டை முடித்துக்கொள்கிறேன்.
இதோ கம்பளி விலக்கி எழுகிறான் கத்தார்.
'இதி கொங்கணி ரஜம்..."

வாழ்த்து




உடைந்து சிதறும் நிலா
உன்வீட்டு முற்றத்தில் விழலாம்,
சிலநேரங்களில் எறிகற்களும்கூட.
சமயங்களில் உன் மனசைப் போலவே
பூக்கள் பூக்கலாம்.
முட்களின் சடாரென்ற விரல்கிழிப்பில்
பொசியும் குருதியை இக்
கவிதை கொண்டும் நீ துடைக்கலாம்.
எப்படியாயினும் மொழித்திமிர் காட்டும்
என் வார்த்தைகளையும்
தாண்டியதாயிருக்கிறது வாழ்க்கை.
எங்கோ வேறிடத்தில்
கண்ணீரோடு நாட்குறிப்பில்
எழுதிக்கொண்டிருக்கும் உனக்குச்
சொல்லவிரும்புவதெல்லாம்
நிர்வாணம் பொது எனினும்
உனக்கான ஆடையை நீ அணிந்துகொள் என்பதே.

*பெண்மோகியும் குடிகாரனுமான கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு தன் சிறகுகளைத் தொலைத்த வித்யாவின் நினைவிற்கு...

உடை




மறுக்கப்பட்டதே விதிக்கப்பட்டதாயும்
விதிக்கப்பட்டதே மறுக்கப்பட்டதாயும்
நகரும் வாழ்க்கையில்
சாலையோரத்தில்
சில கண்ணாடிகளை உடைப்பது
தவிர்க்கமுடியாததாகிறது
உடைந்துசிதறும் கண்ணாடித்துண்டுகளில்
கேட்கிறதா
மறுப்பின் இசையும்
கொண்டாட்டத்தின் வேட்கையும்.

உண்மை மற்றும் போலி நண்பர்களுக்கு...

'போலிகள் ஜாக்கிரதை', 'இன்னும் கொஞ்சநாட்களுக்குப் பின்னூட்டம் இடப்போவதில்லை', 'தமிழ்மணத்திலிருந்து விலகப்போகிறேன்' என்றெல்லாம் பதிவு எழுதக்கூடிய 'அதிர்ஷ்டம்' ஏனோ எனக்கு இன்னமும் வாய்க்கவில்லை.

தமிழ்நதியின் பெயரில் எனக்கு வந்த ஒரு போலிப்பின்னூட்டம் குறித்துச் சில வார்த்தைகள். சிலநாட்களுக்கு முன்பு அவரது 'ஆண்மை' என்னும் கவிதைக்கு நான் ஒரு பின்னூட்டமிருந்தேன். ஆனால் 'மிதக்கும்வெளியின் உணர்ச்சி போலி உணர்ச்சி' என்றும் 'கோட்பாடுகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டு உளறுபவர்' என்ற ரீதியிலும் அவருக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. (பிறகு அதைத் தமிழ்நதி எடுத்துவிட்டார்.)

அந்த 'உண்மை உணர்ச்சியாளர்' கோட்பாடு குறித்த முழுமையான புரிதலை விளக்குவதற்காக டியூசன் எடுக்க என் வலைப்பக்கமே வந்திருக்கலாம். அங்கே எதற்குச் சென்றார் என்று தெரியவில்லை. அப்படிச் சென்றவர் தனது வாசிப்புத் தகுதிக்காகவாவது தனது பெயரைப் போட்டு எழுதியிருக்கலாம்.

என்னுடைய பதிவுகளில்தான் பெரும்பாலும் எப்படிப்பட்ட பின்னூட்டங்களையும் அனுமதிக்கொண்டிருக்கிறேன் தானே! என்ன சமயங்களில் ஒரே கெட்டவார்த்தையில் திரும்பத் திரும்பத் திட்டும்போது போரடிப்பதால் அவற்றை மட்டும் மட்டுறுத்த வேண்டும் என்கிற 'அவசியம்' ஏற்படுகிறது.

அதிலும் எனக்கு வரும் பின்னூட்டங்கள் அலாதியானவை. 'என்ன பிரகாஷ், காலையில் காபி சாப்பிட்டீங்களா?' என்று யாராவது ஒரு நண்ப/பி பின்னூட்டம் போடுவார். அதாவது யாரேனும் பதிவர் நண்பருக்கு நீங்கள் போன் செய்கிறீர்கள் என்றுவைத்துக்கொள்வோம். அவரது போன் அவுட் ஆப் ஆர்டராக இருக்கலாம் (அ) அவுட் ஆப் சர்வீசாக இருக்கலாம் (அ) நீண்ட நேரம் பிஸியாக இருக்கலாம். அவரை மின்னஞ்சல் வழியாகவும் தொடர்புகொள்ள முடியவில்லை. என்ன செய்யலாம்?

உங்களது அந்த நண்பர் என்னுடைய வலைப்பக்கத்தை ஓரளவிற்கு ரெகுலராகப் படிக்கும் துன்பத்திற்கு ஆளாகுபவராக இருந்தால் என்னுடைய ஏதாவது ஒரு பதிவிற்கு 'என்ன அய்யனார், உங்கள் பையனுக்கு எல்.கே.ஜி அட்மிஷன் கிடைச்சாச்சா?' என்று பின்னூட்டம் போட்டுவிடலாம். எப்படியும் அய்யனார் ஓரிருநாட்களில் உங்களைத் தொடர்புகொண்டுவிடுவார்.

இப்படியாகவே பின்னூட்டங்கள் வருகின்றன. இந்த லட்சணத்தில் நான் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதில்லையென்று ஒரு தோழி மிகவும் வருத்தப்பட்டிருந்தார். 'பிரகாஷ் காபி சாப்பிட்டாச்சா?' என்ற கேள்விக்குப் பிரகாஷ்தானே பதில் சொல்லமுடியும்.

சரி, விதயத்திற்கு வருவோம். தமிழ்நதியைப் பொருத்தவரை ஒரு நல்ல படைப்பாளி, நல்ல நண்பரும்கூட. ஆரிய, திராவிட, ஆறிய, சூடான விவாதங்களில் தலையைக் கொடுத்து மாட்டிக்கொள்பவரில்லை. மார்க்சிஸ்ட், பெரியாரிஸ்ட், போஸ்ட்மாடர்னிஸ்ட்,டோண்டுஸ்ட், டூண்டுஸ்ட், உண்மைத்தமிழனிஸ்ட், லக்கிலுக்கிஸ்ட் என்று எந்த இஸ்ட்டும் கிடையாது. ஏதோ அவருக்குத் தோன்றிய விஷயங்களைப் படைப்பாகக் கொண்டுவருபவர்.

மேலும் அவருக்கென்றுள்ள குடும்பப்பொறுப்புகள், புலம்பெயர்ந்து வாழ்வதால் இயல்பாகவே ஏற்படும் வாழ்வியல் நெருக்கடிகள், அடையாளச்சிக்கல்கள் என்று ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. இதில் யார் போலி, யார் உண்மை என்றெல்லாம் கண்டுபிடிக்க வைத்து ஏன் கஷ்டப்படுத்தவேண்டும்?

வேண்டுமானால் நண்பர்கள் விரும்பினால் என்னுடைய அய்.டி மற்றும் பாஸ்வேர்ட் கூட தருகிறேன். விருப்பம்போல கமெண்டோ அல்லது 'வடைகறி பிரியாணி செய்வது எப்படி/' என்பது போன்ற 'சுவையான' பதிவுகளையும் கூட போட்டுக்கொள்ளலாம். ஏற்கனவே ஒரு பதினைந்துபேருக்கு என்னுடைய பாஸ்வேர்ட் தெரியும். பாலபாரதி கூட என் பக்கத்தில் இரண்டு பதிவு போட்டிருக்கிறார். (சும்மா சொன்னேன் தல, நீங்கபாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு மருந்தைக் குடிச்சுடாதீங்க. அப்புறம் தமிழ்நாடு 'தல'சிறந்த சிந்தனையாளரை இழந்துவிடும்.)

அதனால் போலி அபிமான நண்பர்கள் யோசியுங்கள். யாருக்கும் தீங்கிழைக்காத பிள்ளைப்பூச்சியின் பெயரில் எல்லாமா பின்னூட்டம் போடுவீர்கள்?

பின்னங்கழுத்தருகில் மூச்சுக்காற்று



நேற்றிரவு தொலைபேசியில் அழைத்தாய்
உன்னோடு பேசமுடியவில்லை தயாள்.
என் தசைகளைச் சிலபாம்புகளுக்குத்
தின்னக்கொடுத்திருந்தேன். மன்னி.
முதல் வார்த்தையிலேயே
என்னைக் கொலைசெய்ய விருப்பம்தெரிவித்தாய்.
நல்லது. ஆயுதங்களின் தேவைக்கு அணுகு.
என்னைக் கர்வி என்றும் யாருடைய கேள்விகளுக்கும்
பதில்சொல்வதில்லையென்றும்
குற்றம்சாட்டினாய். இருக்கலாம்.
கோப்பைகளை நிரப்புவதைவிடவும்
உடைக்கவே விரும்புகிறேன் தயாள்.
உனது வரவேற்பறை எப்போதும்
தயாராயிருப்பதாக முகமன் கூறினாய்.
விருந்தினர்களின் புழுக்கம்நிறைந்த
வரவேற்பறைகள் எனக்கு
உகந்ததல்ல தயாள்.
என்னை நினைக்கும்போதெல்லாம் ஒரு
குத்துச்சண்டைக்காரனின் பிம்பமே
விரிவதாய்ச் சொன்னாய்.
கலகக்காரனாகவும் மனநோயாளியாகவும்
சமயங்களில் பிதற்றும் குழந்தையாகவும்
அறியப்பட்டவனின் வாழ்க்கை
உண்மையில் சாதாரணமானது,
சமயங்களில் அற்பமானதும் தயாள்.
என் கவிதைகளில் நெளியும்
தேவதைகளின் முகவரிகேட்டுத்
தொந்தரவு செய்கிறாய்.
நான் புனைவை வைக்கிறேன்.
நீ உண்மையைத் தேடுகிறாய்.
நான் எழுதுவது கவிதைகள் என்று நம்புகிறாய்.
எனக்குக் கவிதைகளில் நம்பிக்கையில்லை தயாள்.
வார்த்தைகளில் என்னைத் தேடியலைவதைவிடவும்
ஒரு புன்னகையிருந்தால் வீசிவிட்டுப்போ.
புலனாய்வுசெய்து என்னைக் கண்டுபிடிப்பதைவிட
என்னைக் கொலைசெய்துவிடு தயாள்
அல்லது என் கவிதைகளைப் புறக்கணி.

சீதாபாலம்


அணிலைத் தடவித் தடவி
மரத்துப்போன
ராமனின் விரல்கள்
சமைத்த பாலம்
வானரங்களின் துணையோடு மீட்டுவந்து
விட்டுப்போனானொரு பாம்புகள் நெளியும் வனாந்திரத்தில்.
நேற்று முதல்நாள் பார்த்தேன்
பாலத்தில் பிளாஸ்டிக் குப்பைகளைப்
பொறுக்கிக்கொண்டிருந்தாள் சீதா.
"குரங்கை வைத்துப் பாலம் சமைத்தவனைவிட
புஷ்பகவிமானத்தில் கடத்திப்போனவனையே நம்பியிருக்கலாமே"
என அழுதாள் பெருங்குரலெடுத்து.
மீட்பிற்கும் கடத்தலுக்குமான
வித்தியாசங்கள் மங்கும் புள்ளியில்
அசோகவனத்தில் கண்ணீரில் நனைந்த
பெருமுலைகளை வர்ணித்த கம்பனையும்
'சாண்டையக்குடிக்கி' என்று திட்டத்தவறவில்லை அவள்.
அவள் யோனியில் பெருக்கெடுத்த
உதிரத்தில்
உடைந்துவிடும்போலிருந்தது பாலம்.
சில நாவற்பழங்களைத் தந்து
ஆறுதல்படுத்திச் சொன்னேன்.
"சீதா இந்தா
உன் கணவனின் பெயரெழுதிய பிரதிகள்.
துடைக்க
வைத்துக்கொள்".


அலைகளையும் நீலத்தையும்
எடுத்துவிட்டால்
கடல் என்பது
வெறும் தண்ணீர்ப்பரப்புதான்.
குழாயைத் திறந்தால்
கொட்டுகிறது கடல்.
சீறும் அலைகளின் ஓசையைக்
குழாயில் கேட்கவில்லையா சௌகத்?

கீற்றுக்கு உதவுங்கள்






தமிழின் பல மாற்று சிறுபத்திரிகைகளையும் ஒருசேர வாசிக்கும் தளமாக விளங்குவது 'கீற்று' இணையத்தளம். மார்க்சியம், பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், மனித உரிமைகள் என பல்வேறு அரசியல் பார்வைகளை அடிப்படையாகக் கொண்ச இத்தளத்தை நடத்திவருபவர் இளைஞரான தோழர்.ரமேஷ். இந்தத் தளத்தின் மூலம் எந்த ஆதாயமும் பெறாத அதேநேரத்தில் கடுமுழைப்பையும் செலுத்திவருபவர். இப்போது கீற்று இணையத்தளத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களையும் சமகால இலக்கிய மற்றும் அரசியல் நூற்களையும் ஏற்றவுள்ளார் ரமேஷ். ஆனால் இதற்கென ஒரு நபரை நியமித்து அவருக்கான சம்பளம் மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு செலவுகள் அவரை எதிர்நோக்கியுள்ளன. மேலும் கீற்று இணையத்தளம் குறித்த அறிமுகத்தையும் அனைத்துத் தமிழர்களுக்கும் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளையும் வேண்டுகிறார் தோழர்.ரமேஷ். மாதம் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தங்களால் இயன்ற அளவில் மாதம் ஒரு தொகையைப் பகிர்ந்துகொள்ளலாம்.



மேலும் தொடர்புக்கு ரமேசின் தொலைபேசி: 9940097994, அவரது மின்னஞ்சல் : editor@keetru.com

ரமேஷின் வங்கிக் கணக்கெண் : 603801511669

iciici bank, chennai branch.

எழுத்தின் அரசியலும் அரசியல் எழுத்தும்...




மார்க்யெஸிற்கு
காஸ்ட்ரோ நண்பர்.
எங்களூர் இலக்கியவாதிகளுக்கோ
நல்லிகுப்புசாமி
(செட்டி)
- சில்வியாகுண்டலகேசி ( தேவதைகளின் மாதவிடாய்க்காலம் தொகுப்பிலிருந்து..)



பிறப்பினடிப்படையில் ஒரு கலைஞனை/படைப்பாளியை மதிப்பிடலாமா என்பது ஒரு மய்யமான கேள்வி.கலைஞன் மட்டுமல்ல, அரசியலாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியவர்கள் குறித்தும் முன்வைக்கப்படும் இக்கேள்வி அடித்தட்டுமக்களிடமிருந்து எழும் பலகேள்விகளை மவுனப்படுத்தும் தந்திரம் கொண்டது. இதன்மூலம் சுலபமாக எதிர்த்தரப்பைச் சாதியவாதியாக நிறுத்திவிட முயலும் வசதியும்கொண்டது.

'ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது' என்றார் பேராசான் கார்ல்மார்க்ஸ். இந்தியச்சமூகம் வர்க்கம் மற்றும் சாதியச்சமூகமாக விளங்குவதால் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கம் மட்டுமல்ல சாதியின் முத்திரையுமிருக்கிறது. இந்தியச்சமூகத்தில் வாழ நேர்ந்த எந்தவொரு உயிரியும் சாதியக்கூறுகளிலிருந்து தப்பமுடியாது. படைப்பாளியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை அழுத்தமாய்ச் சொல்ல விரும்புகிறேன்.

அதேபோல உலகின் எச்சமூகத்தில் பிறந்த ஆணும் முற்றுமுழுதாக ஆணாதிக்கக்கூறுகளை அகற்றியவனல்ல. வேண்டுமானால் சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றை மீறுவதற்கான, கடந்துவருவதற்கான எத்தனங்களை மேற்கொள்ளலாம். அத்தகைய எத்தனங்கள் செயற்படும் தளங்களே அரசியலும் கலை மற்றும் இலக்கியமும். அதிலும் ஒரு கலைஞன் என்பவன் தான் வாழும் சமூகத்தில் நிலவும் ஆதிக்கக்கருத்தியலைக் கேள்விக்குட்படுத்துபவனாக மட்டுமில்லாது அதிகாரம் குறித்து சதா விழிப்பும் அதிகாரக்கூறுகளை அகற்றும் மனோநிலை கொண்டவனாகவும் விளங்கவும் வேண்டும்.

சமூகத்தில் 'சிறந்ததாக'க் கட்ட,மைக்கப்படுவது அனைத்தும் தேர்ந்தெடுப்பின் அரசியல் வழிச் செயல்படுபவையே. இந்தத் தேர்ந்தெடுப்பு மற்றும் தொகுப்பு என்பது நிலவும் ஆதிக்கக் கருத்தியலினடிப்படையிலானதே. நிலவும் அதிகார மய்யங்களுக்கெதிரான எதிர்ப்பு மற்றும் மாற்றுச் செயல்பாடுகள் என்பவை அதற்குமுன் பீடத்தில் ஏற்றப்பட்ட புனிதங்களையும் மூளையிலேற்றப்பட்ட கருத்தியல்களையும் விசாரணை செய்வதும் மய்யங்களால் கண்டுகொள்ளப்படாத செயல்பாடுகளை முன்வைப்பதுமாகும்.

நவீன இலக்கிய உலகின் பிதாமகர்களாக விளங்கிய புதுமைப்பித்தன், மௌனி ஆகியோர் 80 மற்றும் 90களில் நிகழ்ந்த அமைப்பியல்வாதம், பின் அமைப்பியல்வாதம் மற்றும் பின்நவீனம் போன்ற புதிய கோட்பாட்டு அறிமுகத்தின் வெளிச்சத்தில் மறுவாசிப்புச் செய்யப்பட்டனர். அவர்களது பிரதிகள் முன்மாதிரிகளாகவும் உன்னதப்பிரதிகளாகவும் கொண்டாடப்பட்டிருந்த நிலையில் அவர்களது பிரதியின் வழி செயற்படும் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

உன்னத இலக்கியம், படைப்புத்தூய்மை, படைப்பாளியின் புனிதம் ஆகிய அனைத்தும் தகர்க்கப்பட்டன. ஒரு பிரதி படைக்கப்பட்டதும் ஆசிரியன் இறந்துவிட்டான். அப்போது வாசகனே உயிர்த்தெழுகிறான். படைப்பிற்கான அர்த்தங்களை வாசகனே உண்டுபண்ணுகிறான். எனவே படைப்பாளி என்பவன் புனிதமானவன் அல்ல, ஒரு படைப்பில் அர்த்தம் உண்டாவது வாசகனின் பங்கேற்பையும் உள்ளடக்கியே என்னும் புரிதல்கள் முன்நகர்ந்தன.

கடவுள் இறந்துவிட்டார் என்னும் நீட்சேயின் வாக்கியம் எப்படி மத அதிகாரங்களின் மத்தியில் கேள்வியை எழுப்பியதோ அதுபோல ஆசிரியன் இறந்துவிட்டான் என்னும் ரோலன்பார்த்தின் கூற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் அதிர்வுகளை உண்டுபண்ணியது. ஆசிரியனே இறந்துவிட்டான் என்னும் போதில் படைப்பாளிக்கான ஒளிவட்டம், கவித்திமிர், கலைப்பெருமிதம் எங்கிருந்து வரும்?

இத்தகைய வாசிப்புமுறைகள் உலகமெங்கும் நிகழ்ந்தன. அதற்குமுன் உன்னத இலக்கியங்களாக முன்நிறுத்தப்பட்டவை அனைத்தும் மறுவாசிப்பு செய்யப்பட்டன. கட்டவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டு பிரதியில் தொழிற்பட்ட அதிகாரம் மற்றும் வன்முறை வெளிக்கொணரப்பட்டன. ஆல்பெல்காம்யூவின் புகழ்பெற்ற இலக்கியப்பிரதியான 'அந்நியனை' எட்வர்த்செய்த் மறுவாசிப்பு செய்து அதனுள் நுட்பமாக செயற்பட்ட அரேபிய வெறுப்புமனோநிலையைக் கொணர்ந்தார்.

அப்படித்தான் இங்கும் புதுமைப்பித்தன், மௌனி ஆகியோர் மறுவாசிப்பு செய்யப்பட்டனர். அவர்களது பிரதிகள் கட்டவிழ்ப்பு செய்யப்பட்டன. புதுமைப்பித்தன் street dog என்பதை பறைநாய் என்று மொழியாக்கம் செய்தது, அவரது பிரதிகளில் கிறித்துவப்பாதிரிகள் மற்றும் தலித்துகள் ஆகியோரின் சித்தரிப்பு குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மௌனியின் ஒடுங்கிய தனிமைக்குள் தந்திரமாய்ச் செயற்படும் சனாதனக் கருத்தியல் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது 'உன்னத' எழுத்தாளர்களை கலவரப்படுத்தியது

சுந்தரராமசாமியின் 'புளியமரத்தின்கதை' சிறுகதையில் செயற்பட்ட முஸ்லீம் எதிர்ப்பு மனோநிலை மற்றும் பார்ப்பனீய மனோநிலை குறித்து ராஜன்குறை விரிவான ஒரு கட்டுரையை (விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க்கதையாடல்களும் - நிறப்பிரிகை வெளியீடு) எழுதினார்.

தொடர்ச்சியாக சு.ராவின் பிரதிகளில் வெளிப்பட்ட அரசியல் குறித்து அ.மா, ராஜன்குறை, வளர்மதி, சாருநிவேதிதா போன்ற பலரும் எழுதியிருக்கின்றனர். அவரது தோட்டியின் மகன் மொழிபெயர்ப்பு நாவல் குறித்துத் தலித் எழுத்தாளர் மதிவண்ணன் தலித்திய நோக்கில் மறுவாசிப்பு நிகழ்த்தியிருக்கிறார்.

சுந்தரராமசாமி, மௌனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்ற உயர்சாதி எழுத்தாளர்கள் இலக்கியமே படைக்கக்கூடாது என்றில்லை. ஆனால் அவர்களின் பிரதிகளில் மற்றமைகளாகிய பார்ப்பனரல்லாத சாதிகள், தலித்துகள், பெண்கள் ஆகியவர்கள் குறித்த சித்தரிப்புகள் எங்கனம் அமைகின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வி.

சு.ராவின் கடைசிக் கதையாகிய 'பிள்ளைகெடுத்தாள்விளை' கதையையே எடுத்துக்கொள்வோம். தங்கக்கண் என்னும் பத்திரிகையாளர் ஒருவர் பிள்ளைகெடுத்தாள்விளை' என்னும் ஊர்ப்பெயருக்கான காரணத்தை விபரிப்பதாக அந்தக் கதை விரிகிறது.

ரவிக்கை போடுவதற்கும் அனுமதியற்ற ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் பல 'உயர்சாதியினரின் கருணையால்' படித்து முன்னேறி பள்ளியின் தலைமையாசிரியையாகிறாள். அவள் உயர்சாதியைச் சேர்ந்த ஒரு சிறுவனைத் தன் பாலியல் தினவைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்கிறாள். அதன்பின் அவள் ஊரைவிட்டு அடித்துத் துரத்தப்படுகிறாள். அப்போது துரத்துபவர்களில் ஒருவர் 'சீலையை உரிஞ்சுட்டு அனுப்பிடலாமா?' என்கிறார். இன்னொருவரோ 'வேண்டாம் ரவிக்கையைக் கிழிச்சிட்டு விட்டுடு' என்கிறார். ஆக மீண்டும் ரவிக்கையற்றளாகிறாள் அந்தப் பெண்.

இந்தச் சிறுகதை 'படித்து உயரத்திற்கு வரும் தலித்துகள் வக்கிரத்துடனே நடந்துகொள்வர்' என்னும் கருத்தைப் பதிப்பதாகத் தலித் எழுத்தாளர்கள் உணர்ந்தனர். அழகியபெரியவன், ஆதவன்தீட்சண்யா, யாழன் ஆதி போன்ற தலித் எழுத்தாளர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். தலித்முரசு இதழ் 'சுந்தரராமசாமியை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியது.

சாருநிவேதிதா சு.ரா தன் இனவெறியை வெளிப்படுத்திவிட்டார் என்று எழுதினார்.(தீராநதி, மே 2005). அ.மார்க்ஸ் அந்தக் கதையில் காணப்பட்ட பார்ப்பனீய மனோநிலையையும் பிரதிகளில் மலிந்துகாணப்பட்ட தொழில்நுட்பப்பிழைகளையும் சுட்டிக்காட்டினார். (தீராநதி ஜீன் 2005). இத்தகைய மறுவாசிப்புகளோ கட்டவிழ்ப்புகளோ தவிர்க்கமுடியாதவை. இதில் படைப்பாளியை அவமதிக்க ஒன்றுமில்லை. பிரதி என்பது பொதுவெளிக்கு புழக்கத்திற்கு வந்ததன்பிறகு அதுகுறித்தான வெவ்வேறான பார்வைகள் முன்வைக்கப்படுவது என்பது இயல்புதான்.

நிறப்பிரிகைக் குழுவினர், மற்றும் அதைச் சாராத சில எழுத்தாளர்கள், தலித்முரசு போன்ற தலித் இதழ்கள், புதியகலாச்சாரம் இதழ்களில் அவ்வப்போது சு.ரா பிரதிகள் குறித்து வெளிவந்த கட்டுரைகள் ஆகிய எவற்றிற்கும் சு.ரா பொறுப்பான பதில் சொல்லியதுகிடையாது. அதை எதிர்கொள்ளும் மனப்பக்கவமோ அதற்கான பதில்சொல்லும் நேர்மையோ அவரிடம் எப்போதும் காணப்பட்டது கிடையாது.

பிரதிகளுக்கு வெளியே சுந்தரராமசாமி:

சுந்தரராமசாமியின் பிரதிகளில் மட்டும்தான் இத்தகைய பார்ப்பனீய மனோபாவம் செயற்பட்டது என்று சொல்லமுடியாது. சு.ராவே பார்ப்பனீயத்தின் மொத்த உருவமாகத்தானிருந்தார். ஒரு கலைஞன் புதியசிந்தனைகள், கோட்பாடுகள் மற்றும் எழுத்துமுறைகளின் வெளிச்சத்தில் கண்கூசக்கூடாது. ஆனால் சு.ரா புதிய கோட்பாடுகளையும் சிந்தனைமுறைகளையும் எழுத்துமுறைமைகளையும் எவ்வாறு எதிர்கொண்டார்?

1992 பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையட்டி இங்கு தலித் இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைமை உண்டானது. தலித்துகள் தங்களது அனுபம், வாதை, வலி, துயரம், கொண்டாட்டம் ஆகியவற்றைத் தங்கள் எழுத்துக்களில் பதியத்தொடங்கினர். அதுவரை அழகியல் குறித்து நிலவிவந்த பார்வைகள் மறுபரீசீலனை செய்யப்பட்டன. தலித் பிரதிகளின் கதையாடல்கள் மட்டுமல்ல, அவற்றின் மொழியும்கூட முற்றிலும் வேறானதாக இருந்தது.

இலக்கியப் பிதாமகர்களில் ஒருவரான சு.ரா தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என நிராகரித்தார். அது முன்வைத்த எதிர் அழகியலை ஒத்துக்கொள்ளத் தயாராயில்லை. ஏனெனில் அவரது மனசின் ஆழத்தில் தேங்கிப்போனவையெல்லாம் பார்ப்பன அழகியலே. மேலும் சு.ரா மற்றும் அவரது ஜெயமோகன் போன்ற சீடர்களும் முன்வைக்கும் உள்ளளி, தரிசனம் ஆகியவைகளை இரக்கமின்றிப் புதிய கோட்பாடுகள் கேள்விக்குள்ளாக்கின.

அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவம் ஆகியவை முன்வைத்த கட்டவிழ்ப்பு, மறுவாசிப்பு, பிரதி ஆகியவையும் அவருக்கு உவப்பாயில்லை. அனைத்துமே பிரதிகள்தாம். பிரதிகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டவையே. சு.ராவின் ஒரு கவிதையும் கட்டமைக்கப்படட் பிரதிதான், வைரமுத்துவின் ஒரு திரைப்பாடலும் கட்டமைக்கப்பட்ட பிரதிதான். இதில் சு.ராவின் பிரதி சூப்பர், வைரமுத்துவின் பாடல் மோசம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாப்பிரதிகளுக்கும் பல்வேறு வாசிப்புகள் உண்டு. பல்வேறு பார்வைகளில் கட்டவிழ்ப்பு செய்ய இயலும் என்கிற 'அபாயம்' அவருக்கு உறைத்தபோது அவரிடம் இயலாமையுடன்கூடிய ஆத்திரமே வெளிப்பட்டது.

தீராநதியில் வெளிவந்த கேள்விபதில் ஒன்றில் புதிய கோட்பாடுகளை அறிமுகப்படுத்துபவர்களை 'மேலைக்கோட்பாட்டை வாந்தியடிக்கும் நாய்கள்' என்று திட்டினார். (பிரேமிளிலிருந்து 'கோட்பாட்டு எதிரிகள்' வரை திட்டுவதற்கு சு.ராவிற்கு பிரியமான வார்த்தை 'நாய்'.).

கவிதையில் வழங்கிவந்த இருண்மை, படிமம், குறியீடுகளைக் களைந்து தலித்கவிதைகள் நேரடியான அரசியல்மொழியில் பேசின. நாவல்கள் மற்றும் சிறுகதைகளிலும் சு.ரா நம்பிவந்த எதார்த்தவகை எழுத்துமுறையை நிராகரித்து அ-நேர்கோட்டு எழுத்துமுறை, மாய எதார்த்தவாத எழுத்து ஆகிய எழுத்துமுறைகளை எழுத்தாளர்கள் கையாளத்தொடங்கினர்.

படைப்பாளியின் புனிதத்தில் மற்றவர்களுக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த உயர்சாதி எழுத்தாளர்கள் செயற்கையாக உருவாக்கிவைத்திருந்த மனத்தடைகளை விலக்கி ஏராளமான பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட எழுத்தாளர்கள் எழுதத்தொடங்கினர். ஆனால் ஒருபோதும் சு.ராவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சு.ராவால் சிறந்த தலித் நாவல் எனக்கொண்டாடப்பட்டது இமையத்தின் 'கோவேறுகழுதைகள்' என்பதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அது புரதைவண்ணார் சாதியினரைப் பிற தலித் சாதியினர் எவ்வாறு ஒடுக்குகின்றனர் என்பதான கதையாடல். ஆகமொத்தம் ' எங்குதான் சாதியில்லை, தீண்டாமையில்லை, ஒடுக்குமுறையில்லை' எனத் தனது பார்ப்பனீய மனோநிலையைச் சமன்செய்துகொள்ளவும், தனது சாதியின் அதிகாரவிருப்பத்தை நியாயப்படுத்தவும் தலித்துகளின் உள்முரண்பாடுகளை பெரிதுபடுத்திக்காட்டுவதன் மூலம் சாதிய எதிர்ப்புக்குரல்களுக்கு ஒரு தடையரண் போடவுமே சு.ரா முயன்றார்,

அவரது பத்திகள் மற்றும் தனிப்பட்ட கட்டுரைகளில் வெளிப்பட்ட அமெரிக்க மோகம் குறித்து புதியகலாச்சாரம் வெளியிட்ட 'சுந்தரராமசாமி: கனவின் ஓடை, நனவின் குட்டை' நூலில் காண்க.

காலச்சுவடு ஒரு இலக்கியத்தினமலர்:

ஆதிக்கக் கருத்தியலும் ஆளும் வர்க்கமும் எப்போதுமே புதிய சிந்தனைகளையும் தங்கள் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மாற்று இலக்கிய மற்றும் அரசியல் தளங்களையும் செயல்பாடுகளையும் சில தந்திரமான வழிகளில் எதிர்கொள்கிறது.

முதலில் அவற்றை இலக்கியம் அல்லது அரசியலே அல்ல என்பது

பின் அவற்றில் அழகியல் இல்லை, மெய்யியல் இல்லை என்று நிராகரிப்பது,

பிறகு இதையெல்லாம் நாங்கள் எப்போதோ செய்துவிட்டோம் என்று 'ஊத்திமூடுவது'.

இறுதியாக செல்வாக்கு பெற்ற இலக்கிய மற்றும் அரசியல் கோட்பாடுகளை அரவணைத்து வீழ்த்துவது. இப்படியான எல்லாத் தந்திரங்களும் இந்தியாவின் ஆதிக்கக் கருத்தியலான பார்ப்பனீயத்திற்குத் தண்ணீர்பட்ட பாடு.

பெரியார் மொழியில் சொல்வதென்றால் 'சங்கராச்சாரி பஞ்சமனைப் பார்த்தால் குளிப்பார்: சில பார்ப்பனர்கள் தொட்டால் தீட்டு என்பார்கள். சிலசமயம் ராஜாஜி காந்தியின் மகனுக்குப் பென்கொடுப்பார்: பலித்தவரைப் பார்ப்பனீயம்'. இன்னும் புரிகிற மாதிரி சொன்னால், கம்யூனிசம் மனிதகுல, தேசவிரோதத் தத்துவம் என்று பிடிவாதம் பிடிக்கலாம். பிடி தளரும் நிலைவந்தால் வேதத்திலேயே கம்யூனிசக்கூறுகளைக் 'கண்டுபிடிக்கலாம்'.

அப்படித்தான் தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என்று நிராகரித்த சு.ரா பிறகு அவர் மொழிபெயர்த்த 'தோட்டியின் மகன்' நாவல் மூலம் தலித் இலக்கியத்திற்குச் சொந்தம் கொண்டாடினார். (ஒரு வெள்ளாளன் எழுதிப் பார்ப்பான் மொழிபெயர்த்தது தலித் இலக்கியம் என்றால் 'நெஞ்சுபொறுக்குதில்லையே').

காலச்சுவடு ஒரு தலித் அறிவுஜீவி மற்றும் எழுத்தாளரைத் தனது ஆசிரியர்குழுவில் அமர்த்தியது. என்.டி.ராஜ்குமார் போன்ற தலித் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டது. (ஆனால் நான் வாசித்தவரை இன்றளவிலும் காலச்சுவடில் ஒரு தலித் அரசியல் கவிதையும் இடம்பெற்றதாய் நினைவில்லை.) ஆனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் காலச்சுவடின் பார்ப்பனப் பயங்கரவாத மூளைத் தன் விஷக்கொடுக்கை நீட்டத் தவறுவதில்லை. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியுமென்றாலும் ஒரு சில உதாரணங்கள்.

ஆஸ்திரேலியப் பாதிரியார் ஸ்டெயின்கிரகாம் சங்பரிவார் இந்துத்துவக் குண்டர்களால் கொலை செய்யப்பட்ட நேரம். அவர் பழங்குடிகளை மதமாற்றம் செய்ததால்தான் இந்துக்கள் கோபம்கொண்டு கொலைசெய்தனர் என்று வாதிட்டது பரிவார். அப்போதைய இந்தியப் பிரதமர் பா.ஜ.க வாஜ்பாய் 'மதமாற்றம் குறித்த தேசியவிவாதம் தேவை' என்கிறார். அதேநேரத்தில்தான் காலச்சுவடு ஒக்காங்கோவின் 'சிதைவுகள்' நூலை மொழிபெயர்த்து வெளியிட்டது. சிதைவுகள் நாவலின் கரு 'ஆப்பிரிக்கக் கிராமங்களில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் பண்பாடுகள், நம்பிக்கைகள், சமயங்கள் ஆகியவற்றை எப்படி காலனியக் கிறித்துவம் சிதைத்தது என்பதே.

மதச்சார்பின்மை குறித்துக் காலச்சுவடு ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. அதில் வெளியான இரண்டு கட்டுரைகள் இந்துத்துவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தின. ஒன்று ரவிக்குமார் தர்மாகுமார், சஞ்சய்சுப்பிரமணியம் ஆகியப் பார்ப்பன வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களை முன்வைத்து மதச்சார்பின்மை குறித்து எழுதிய கட்டுரை. இதில் பார்ப்பனர்களும் பவுத்தர்களாக மாறினர் என்று 'வலிந்து' நிரூபித்தார் ரவிக்குமார். இக்கட்டுரை மற்றும் மேற்குறிப்பிட்ட பார்ப்பன வரலாற்றாசிரியர்களின் வரலாற்றுப்புரட்டுகளை அம்பலப்படுத்தியும் மத்தியகால இந்தியாவில் நிலவிய மதநல்லிணக்கமுயற்சிகள் குறித்தும் எழுத்தாளர்.திரு.வளர்மதி 'நினைக்கத்தெரிந்தமனமே' என்னும் தலைப்பில் கவிதாசரண் இதழில் தொடர்கட்டுரை எழுதினார். ஆனால் வழக்கம்போல கா.சுவிடமிருந்தோ ரவிக்குமாரிடமிருந்தோ பதில் இல்லை. பொய்களை விதைப்பதுதானே முக்கியம்? 'வசனமாடா முக்கியம், படத்தைப் பாருடா' என்றது காலச்சுவடு.

மற்றொரு கட்டுரை 'சிந்தனையாளர்' கண்ணன் இஸ்லாமிய மதவாதம் குறித்து எழுதியக் கட்டுரை. இந்துமதவாதமும் இஸ்லாமிய மதவாதமும் ஒன்றே என வாதிட்ட கண்ணன், இஸ்லாமிய மதவாதத்தை இடதுசஸ்ரீ மற்றும் மதச்சாற்பற்ற அறிவுஜீவிகள் கண்டிக்காதது குறித்துத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களால் தொகுக்கப்பட்ட 'சனதருமபோதினி' இதழில் வெளியான கோவைகுண்டுவெடிப்பு மற்றும் முஸ்லீம்களின் மனோநிலை குறித்து ஷாஜகான் என்பவர் எழுதிய கட்டுரையைக் குறிப்பிட்டு 'குண்டுவைக்கும் முஸ்லீம்களுக்கு இவர்கள் ஆதரவானவர்கள்:' என்று எழுதினார். (இந்த கண்ணன் இந்துத்துவ அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிசத்தின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது). பிறகு காலச்சுவடின் இத்தகைய அய்ந்தாம்படை வேலையைக் கண்டித்து நிறப்பிரிகை 'இலக்கியத்தில் இந்துத்துவம்: காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்' என்னும் வெளியீட்டைக் கொணர்ந்தது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் குண்டுவெடிப்பையட்டி 'நிறப்பிரிகை என்னும் பத்திரிகை தமிழ்த்தேசிய ஆதரவாளர்களுக்கு ரகசியச்சுற்றிற்கு விடப்படும் பத்திரிகை' என்று தினமலர் எழுதியது. ( இதில் முரண்நகை என்னவென்றால் அப்போதுதான் 'தேசியம் ஒரு கற்பிதம்' என்னும் பெனடிக்ட் ஆண்டர்சனின் கருத்தை முன்வைத்து நிறப்பிரிகை உரையாடலைத் தொடங்கித் தமிழ்த்தேசியர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தது.). இதுபோலப் பலரையும் போட்டுக்கொடுப்பதும் காட்டிக்கொடுப்பதும் தினமலரின் குலத்தொழில் மற்றும் குலதர்மம். காலச்சுவடும் இதையே செய்துவருவதால்தான் காலச்சுவடை இலக்கியத்தினமலர் என்கிறோம்.

காஞ்சி ஜெயேந்திரன் கைதையட்டிக் காலச்சுவடு எடுத்த நிலைப்பாட்டை ஆராய்ந்தாலும் அதன் பார்ப்பனீயத்தன்மையைக் கண்டுகொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. சங்கரன் கைதையட்டி தலையங்கம் தீட்டிய காலச்சுவடு பாரம்பரியம் காப்பாற்றப்படவேண்டும் என்று கவலைகொண்டது. இதை மறுத்துக் கடிதம் எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சனை 'கிணற்றுக்குள் தன் முகம் பார்த்த சிங்கம்' என்று வர்ணித்தது. (அதற்குமுன்தான் காலச்சுவடின் சென்னைக் கிளையைத் திறந்துவைத்து அதனோடு நெருக்கமாக இருந்தவர் பிரபஞ்சன் என்பது கவனத்திற்குரியது.)

தலித் எழுத்தாளர் ரவிக்குமார் தனது 'தொல்பதிநரகர்' என்னும் கட்டுரையில் ஜெயேந்திரனின் கைது பிற்படுத்தப்பட்டவர்கள் கொண்டாடப்படவேண்டிய விஷயம்தானே தவிர 'தலித்துகள் கூத்தாட அதில் ஒன்றுமில்லை' என்று எழுதி தனது பார்ப்பனப்பக்தியை நிரூபித்தார்.. (இக்கட்டுரையை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையைப் புதியகலாச்சாரம் 'அம்பலப்பட்டது ஜெயேந்திரன் மட்டுமல்ல, தலித்-பார்ப்பனத் தரகு அரசியலும்தான்' என்னும் வெளியீடாகக் கொண்டுவந்தது. அது அப்போதையப் புத்தகக் கண்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.)

இதற்கெல்லாம் உச்சம் காலச்சுவடு பெரியாரின் 125வது பிறந்தநாளையட்டி வெளியிட்ட பெரியார் 125 சிறப்பிதழ். நீலகண்டன் என்கிற ஆய்வுமாணவர் எழுதிய 'சுயமரியாதை இயக்கமும் பூனா ஒப்பந்தமும்' என்னும் கட்டுரையைத் தவிர மற்ற கட்டுரைகள் அனைத்தும் பெரியாரின் மீதும் அவரின் இயக்கத்தின் மீதும் சேறு வீசியது.

பி.ஏ.கிருஷ்ணன் என்ற டெல்லிப்பார்ப்பனரின் கட்டுரை ஒரு கருப்புச்சட்டைக்காரர் ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்து அடிவாங்குவதாய்த் தொடங்கியது. அதுமட்டுமல்ல, காலச்சுவடு ஆசிரியர் குழுவில் ஒருவரும் தலித் அறிவுஜீவியுமான ரவிக்குமாரின் 'திருமணம் என்கிற கிரிமினல் குற்றம்' என்னும் கட்டுரைதான் வக்கிரத்தின் உச்சமாய் அமைந்தது.

'திருமணம் என்பதைக் கிரிமினல் குற்ரமாக்க வேண்டும்' என்று பெரியார் 60களில் பேசியதைக் குறிப்பிட்டு அவர் 48ல் செய்த திருமணத்தைக் 'கட்டவிழ்த்தார்' ரவிக்குமார். பெரியார் சிறுவயதில் தாசிவீடுகளுக்குப் போனதையும் பெரியார் பின்னாளில் கற்பு உள்ளிட்ட கருத்தாக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கியதையும் ஜெர்மனியில் நிற்வாணச்சங்கத்தில் சேர்ந்து நிர்வாணமாய்ப் புகைப்படம் எடுத்தது, நிர்வாணச் சினிமாக்கள் பார்த்தது ஆகியவற்றிற்கெல்லாம் காலங்களைத் தாண்டி ஒரு முடிச்சு போட்டு பெரியார் ஒரு பொம்பளைப் பொறுக்கி என்று எழுதினார். (காலச்சுவடின் இந்த பார்ப்பனக் கயமையைக் கண்டித்த இடதுசாரி எழுத்தாளர்களில் சிலர் காலச்சுவடில் எழுதுவதைப் புறக்கணிக்க வேண்டுமென தமிழ் எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினர். மேலும் தோழர்.கணகுறிஞ்சி இப்பிரச்சினையையட்டி 'இந்துத்துவச் சூழலில் பெரியாரின் தேவை' என்னும் கட்டுரைத் தொகுப்பொன்றையும் வெளிக்கொணர்ந்தார்.)

இந்தியச்சூழலில் தோன்றிய சாதி எதிர்ப்பாளர்கள் வள்ளலார் முதல் பாபாசாகேப் அம்பேத்கர் வரை பார்ப்பனீயம் தின்று செரித்தது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை இந்து வரையறைக்குள் கொண்டுவந்து தனது கொடூரமான இந்துத்துவ அரசியல் திட்டத்தை நிறைவேற்றவும் தயங்கவில்லை.

ஆனால் பார்ப்பனீயத்தாலும் இந்துத்துவத்தாலும் ஜீரணிக்கமுடியாத ஒரே அரசியல் ஆளுமை தந்தை பெரியார்தான். 'பார்ப்பான் என்னும் அழகிய தமிழ்ச்சொல்லை வசைச்சொல்லாக மாற்றியது பெரியாரின் மகத்தான சாதனை' என்பார் பேராசிரியர்.தொ.பரமசிவன். 'பெரியார் மட்டுமில்லையென்றால் பார்ப்பான் தமிழனைத் தன் பூணூல் கயிற்றாலேயே தூக்குப்போட்டுத் தெங்கவிட்டிருப்பான்' என்னும் ஒரு கவிஞரின் கூற்று மிகையானதல்ல.

சாகும்வரை பார்ப்பனர்களுக்கு சிம்மசொப்பனமாகவும் கெட்ட சொப்பனமாகவும் வாழ்ந்த அந்த ஈரோட்டக்கிழவனின் மேல் 'பொம்பளைப்பொறுக்கி' என்று சேறை வாரி இறைத்து தனது பார்ப்பன வக்கிரத்தையும் அரிப்பையும் தீர்த்துக்கொண்டது காலச்சுவடு என்னும் இலக்கியத் தினமலர்.

ஈழத்தமிழர்கள், தலித்துகள், முஸ்லீம்கள், தமிழ்த்தேசியர்கள், மய்யநீரோட்ட மார்க்சியர்கள், நக்சல்பாரிப் போராளிகள் என அனைவருக்கும் எதிரானது பார்ப்பனத் தினமலர். அதனுடைய ஒரே அடிப்படை திமிர்கொழுத்த பார்ப்பன நலனன்றி வேறில்லை. ஆனால் இந்தப் பார்ப்பனத்தினமலர் மற்றும் சிறீராம் சிட்ஸ் போன்ற பார்ப்பன நிறுவனங்களோடு காலச்சுவடு மற்றும் உயிர்மை கொண்டிருக்கும் தொடர்பு குறித்து கிஞ்சிற்றும் கேள்வியற்றுத்தான் சுயமரியாதையற்று சில ஈழத்தமிழர்கள், தலித்துகள், முஸ்லீம்கள் காலச்சுவடு, உயிர்மை இதழ்களில் எழுதிக்குவிக்கிறார்கள். புத்தகங்களை வெளிக்கொணர்கிறார்கள். தோழர்.பெரியார் சொல்வார், 'அர்ச்சகன் பொறுக்கித்தின்ன கோவில், அதிகாரம் பொறுக்கித்தின்ன அரசாங்கம், அரசியல்வாதி பொறுக்கித்தின்ன அரசியல்' என்று. அத்தோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். 'இலக்கியவாதிகள் பொறுக்கித்தின்ன இலக்கியம்'.

உலகத்தின் எல்லா ஆதிக்கத்திற்கெதிராகவும் எதிர்ப்புக்குரல் எழுப்பித் தங்கள் தார்மீக அறத்தை நிறுவும் காலச்சுவடு, உயிர்மை இலக்கியக்கம்பெனிகளுக்குத் தினமலர் தமிழ்ப்பொதுப்புத்தியில் திணிக்கும் பார்ப்பனக் கருதியல் குறித்துக் கேள்வியெழுப்பவதற்கு மட்டும் கேள்விகள் ஏதுமில்லை.

ஓராண்டிற்கு முன்பு என்று நினைக்கிறேன். சன்டிவியின் ஏகபோக ஆதிக்கம் குறித்துக் கட்டுரை எழுதித்தள்ளினார் கண்ணன். (அதேபோல உயிர்மையில் சாருநிவேதிதா). இதையும் தினமலரோடு இருபத்திரிகைகளுக்குமுள்ள உறவு மற்றும் கனிமொழியுடனான நெருக்கம் ஆகியவற்றை இணைத்துப் பார்த்தால் சில அரசியல் முடிச்சுகள் அவிழும். ஞாநி ஆனந்தவிகடனில் 'அதிமுகவில் சசிகலாவைப் போல திமுகவில் கனிமொழி' என்று எழுதியபோது கொதித்துப்போய்க் கட்டுரை வரைந்த கண்ணனின் மௌனம் கனிமொழி எம்.பி ஆனபிறகு சிறகடித்துப்பறக்கவில்லை. கொஞ்சமும் கூச்சமில்லாமல் மனுஷ்யபுத்திரனோ 'திமுகவில் நடக்கும் வாரிசு அரசியலால் கனிமொழி போன்ற படித்த பண்பானவர்கள் அரசியலுக்கு வருவது சாதகமானது' என்று எழுதுகிறார். மூன்றுபிணங்களின் மேல் ஏறிவரும் படித்த பண்பானவரின் அரசியல் பின்னணியில் வீசுவது கருவறை வாசனை இல்லை ஹமீது, பிணங்களின் வாசனை.



ஜெயமோகன் முதல் ஹியூபர்ட் சதீஷ் வரை:

எனது 'சுந்தரராமசாமி : உதிர்ந்த இலையும் குவிந்த குப்பையும்' பதிவில் சு.ராவின் படைப்புகள் குறித்து நான் எதுவும் விமர்சிக்கவில்லை. மாறாக அவரைப் புனிதத்திரு உரு(வீநீஷீஸீ) வாக்கும் முயற்சிகளையே விமர்சித்திருந்தேன். ஏனெனில் சு.ரா இறந்தபிறகு காலச்சுவடு மற்றும் உயிர்மையில் வந்திருந்த சு.ரா குறித்த கட்டுரைகளைத் தொகுத்துப்பாருங்கள்.

ஜெயமோகனின் கட்டுரையைத் தவிர மற்றனைத்தும் சு.ராவின் தனிப்பட்ட வாழ்க்கை நடவடிக்கைகள், மற்றும் அவருடனான உறவு ஆகியவை குறித்துப் பேசுபவையே ஜெயமோகனின் கட்டுரையும் சு.ராவின் படைப்பாளுமை குறித்துப் பேசும் பாவனையில் தானே உருவாக்கிக்கொண்ட இடைவெளியில் தனது பீடத்தை கட்டமைத்து நுழைத்துக்கொண்ட எத்தனமே.

நாகார்ஜீனன், தமிழவன் முதல் தமிழின் முக்கியமான அறிவுஜீவிகளின் உழைப்பெல்லாம் இந்த படைப்பாளிப் புனிதத்தை உடைப்பதிலும் பிரதிகளில் செயற்படும் அரசியல் மற்றும் உளவியலைக் கேள்விக்குள்ளாகுவதற்காக செலவழிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய காத்திரமான கோட்பாட்டுச் செயற்பாடுகள் கடந்த பத்தாண்டுகளில் பலவீனமாகியிருக்கின்றன.

இப்போது தமிழ் இலக்கியச்சூழலில் முதுகுசொறிதலும் புனிதத்திரு உருக்களை நிறுவ முயல்வதற்குச் செங்கல் எடுத்துக்கொடுக்கும் கரசேவையும்தான் நடைபெறுகிறது. ஒரு இலக்கியவாதி, தான் பேசும் உலக இலக்கியம் மற்றும் உலக சினிமாவிற்கு மாறாக ஏதேனும் குப்பைச் சினிமாவுக்குக் கூட வசனம் எழுதலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. பிற எழுத்தாளர்கள் நல்லிகுப்புசாமி, (30களில் சாதிப்பெயரைத் துரத்தி அடித்து சாதியைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதே அவமானகரமானது என்னும் நிலைக்குக் கொண்டுவந்த பெரியார் என்னும் கலகக்காரன் வாழ்ந்த பூமியில் கலகக்கார எழுத்தாளர்கள், தன் சாதிப்பெயரைக் கூட உதறுவதற்குத் தயாராயில்லாத ஒரு ஜவுளிக்கடை முதலாளியின் தலைமயில் நூல்வெளியீட்டு விழா நடத்த நேர்ந்தது ஒரு ராசலீலையே.) கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் போன்ற தமிழ்நாட்டு காண்ட், பூக்கோக்களோடுடனான சினேகிதத்தை வளர்த்துக்கொள்வதிலும் வருடத்திற்கொருமுறை காலச்சுவடு ஸ்டாலில் எழுத்தாளர் கண்காட்சியில் எழுந்தருளி சிறுபத்திரிகை வாசகர்கள் என்னும் சுயமரியாதையற்ற மந்தைகளுக்கு ஆட்டோகிராப் போட்டு அருள்பாலிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

அர்ப்பணிப்பும் தேடலுமுடைய சிறுபத்திரிகை மரபின் சிறுதன்மையைக் குலைத்து அதன்மேல் பிரம்மாண்டங்களையும் மாயக்கவர்ச்சியையும் எழுப்பி எல்லாவற்றையும் லாபநட்டக் கணக்காக மாற்றியதில் சுந்தரராமசாமிக்கும் காலச்சுவடிற்கும் பெரும்பங்கு இருக்கிறது..

எனது சுந்தரராமசாமி குறித்த முந்தையப் பதிவைப் படித்துக் கோபமுற்ற நெருக்கமான நண்பர்களில் ஒருவர் 'சுந்தரராமசாமி எத்தனை எழுத்தாளர்களை அரவணைத்திருக்கிறார், ஊக்கப்படுத்தியிருக்கிறார், வீட்டில் சாப்பாடு போட்டிருக்கிறார். அத்தகைய நல்ல மனிதரின் நற்குணங்களை எழுத்தாளர்கள் எழுதுவதில் என்ன தவறு? இந்த நல்ல குணம்தானே படைப்பாளிக்குத் தேவை' என்று வினவினார்.

'எம்.ஜி.ஆர் இடதுகைக்குத் தெரியாமல் வலதுகையால் தானம் செய்யும் வள்ளல், கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையவை' என்று கூறும் அவரது விசுவாசிகள் கூடத்தான் தமிழ்நாடு முழுக்க விரவியிருக்கிறார்கள். ஏன் ஒருவன் கொடுக்கும் நிலைமையில் இருக்கிறான், இன்னொருவன் வாங்கும் நிலைமையில் இருக்கிறான் என்னும் உணர்வற்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுதான் அது.

வர்க்கச்சுரண்டல் என்றால் என்ன என்பதே தெரியாத சுந்தரராமசாமியின் ஜவுளிக்கடை ஊழியர்கள் வேண்டுமானால், 'முதலாளி வருசாவருசம் போனஸ்ல்லாம் தருவாரு, எங்கமுதலாளி, தங்கமுதலாளி' என்று கொண்டாடலாம்.. எழுத்தாளர்கள் சுந்தரராமசாமியின் ஜவுளிக்கடை ஊழியர்களா, என்ன?

வா


மார்க்ஸ், அ.மார்க்ஸ்
கட்டவிழ்ப்பு, கோணங்கி
தெறிதா, பின்நவீனத்துவம்
தேசிய இனம், பெரியார்
என் வாசிப்புகளின் முடிச்சவிழ்ந்து
உன் கழுத்தில் சுருக்கிற்று.
அதிகாரமறுப்புப் பேசும்
என்னெதிரிலமர்ந்திருக்கும் உன்கண்களில்
நிழலாடுகிறது
என் சிரசில் முளைத்தகொம்புகள்.
விபத்தாய்க் கற்பிழந்த பெண்
வாழ்க்கையில் சோரம்போனதாய்
வசனம் பேசும் ஏதேனும்
அபத்தமான சினிமா போவோம் வா.