வனம்

நீயுமற்று நானுமற்று நீண்டுகிடக்கும் பெருவெளி
பெருவெளியின் பரப்பெங்கும் பெய்துகிடக்கும் பேரமைதி
அமைதியை கொத்தித் தின்னும்
பறவைகளின் கீச்சொலி.
பல்கிப்பெருகும் வண்டுகளின்
அளவற்ற காமத்தால்
நனைந்தது வனம்
.உருகி வழியும் மாம்சம்
எரிந்துகொண்டிருக்கும் தீயில்
வீழ்ந்த வேளை
தேவதூதர்களின் வருகையால்
அதிர்ந்தது வனம்
பின் எப்போதும்காடு அலறிக்கொண்டேயிருந்தது

0 உரையாட வந்தவர்கள்: