வா.மணிகண்டன் முதலான பார்ப்பன அடிவருடிகளும் சுஜாதா விசுவாசமும்















சுஜாதா இறந்துவிட்டார். எனக்கு அதில் ஒரு வருத்தமுண்டு. இன்னும் ஷங்கர் உயிரோடிருக்கிறார். பூங்காக்களில் படுத்துறங்குபவர்கள், ரயிலில் சரக்கடிப்பவர்கள் இன்னும் அச்சப்படுவதற்கான நியாயங்கள் உள்ளன. இன்னமும் தெருவோரங்களில் ஒண்ணுக்கு போகிறவர்களைக் கொலை செய்வதற்கான கதைகள் உருவாகவே செய்யும்.

சுந்தரராமசாமி இறந்தபோது என்னென்ன விபரீதங்கள் நிகழ்ந்தனவோ அத்தனையும் சுஜாதா விவகாரத்திலும் நடக்கின்றன. கடந்துபோன புத்தகக்கண்காட்சிக்கு நானும் நண்பர் ஜ்யோராம்சுந்தரும் போயிருந்தோம். காலச்சுவடு ஸ்டாலில் அறியப்படாத சு.ராவின் புத்தகங்களைக் கண்டேன். ஒருவேளை இறந்தபிறகும் சு.ரா எழுதுகிறாரா என்று ஆச்சரியமாகவும் பயமாகவுமிருந்தது.

பிறகுதான் தெரிந்தது. அவரின் சிறுகதைத் தொகுப்பில் 30 கதைகளிருக்கின்றன என்றால் மாற்றி மாற்றி அந்த சிறுகதைகளின் தலைப்பை வைத்து புத்தகங்கள். பிரசாதமா, அது ஒரு புத்தகம், பிள்ளைகெடுத்தாள்விளையா அது ஒரு புத்தகம். இப்படியாக சுராவின் பிணத்தை விற்றுக் காசு பார்த்தது காலச்சுவடு.

ஆனால் சுரா விசயத்தில் கா.சு மட்டும் திதி, கருமாதி எல்லாம் தொடர்ந்துநடத்துகிறது. மற்ற பத்திரிகைகள் இழவுக்கட்டுரைகளை வெளியிட்டதோடு சரி. ஆனால் சுஜாதா விசயத்திலோ அந்த கிருமி வெகுஜனப் பத்திரிகைகளையும் விடவில்லை.

ஏற்கனவே அச்சான உயிர்மை இதழின் அட்டையின் மீது சுஜாதா புகைப்படத்தோடு கூடிய அட்டையைப் போட்டு தன் விசுவாசத்தை நிரூபித்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன். குங்குமத்திலோ பாதிக்குமேல் சுஜாதா, விகடனிலும் சுஜாதாபுராணம். குமுதத்திலோ கொடுமை உச்சகட்டம்.

அய்.ரா.சுந்தரேசன் எழுதிய அஞ்சலிக்கட்டுரையில் சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலுக்கு நாடார்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து எழுதும் பகுதியில் 'அதுகள், இதுகள்' என்றே எழுதியிருக்கிறான். ஒரு பார்ப்பார நாய் செத்ததிற்காக இன்னொரு பார்ப்பன நாய் போட்ட அஞ்சலிக் குரைச்சலில் நாடார்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சமத்துவமக்கள் நாயகன்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஜெயமோகன் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சன் டி.வியில் இழவுச்செய்தி வாசிப்பதற்கென்றே மாலன் என்னும் ஒரு நபர் இருந்ததைப் போல 'எமக்குத் தொழில் இழவுக்கட்டுரைகள் எழுதுவது' என்று குறிக்கோளாயிருக்கிறார் ஜெமோ. யாராவது ஒரு எழுத்தாளர் கொஞ்சம் சீரியசென்று மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு ஜெமோவிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். 32 பக்க அஞ்சலிக்கட்டுரை உத்திரவாதம். ஆனால் அது ஒருபகுதி மட்டும்தான். எழுத்தாளர் இறந்து 16ம் நாள் கருமாதி நடத்துவதற்குள் அவரைப் பற்றிய புத்தகம் உயிர்மையின் சார்பாக வெளியிடப்பட்டுவிடும்.

அப்படியென்ன சுஜாதா சாதித்தார்? நிச்சயம் இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளை அவர் தந்ததில்லை. வெகுஜன எழுத்தாளர் என்ற வரிசையிலும் அவரை வைத்துவிட முடியாது. ஏனெனில் ராஜேஷ்குமாரையும் சுஜாதாவையும் ஒரே தட்டில் நிறுத்திவிடமுடியாது. நான் 'தரம்' என்னும் அளவில் பேசவில்லை.

எனக்கு ராமராஜனின் படங்கள் பிடிக்கும். ஆபத்தில்லாத கிராமப்படங்கள். அவற்றில் பெரியளவிற்கு நிலப்பிரபுத்துவக்கூறுகள் இருக்காது. ஆனால் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமாரின் படங்களிலோ நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மதிப்பீடுகளே நிறைந்திருக்கும். ராமராஜனை விட ரவிக்குமார் ஆபத்தானவர். சுஜாதா இரண்டாம் வகை.

அவர் அறிவியல் விசயங்கள் குறித்து வெகுமக்களிடம் சேர்த்தார் எனலாம். ஆனால் பாலியல் என்பதும் அறிவியல்தானே, ஆனால் மாத்ருபூதம் இறந்ததற்கு யாரும் இவ்வளவு வருத்தப்பட்டதில்லை. சுஜாதா அறிவியல் என்ற பெயரில் ரிலேட்டிவிட்டி தியரியில் நாரதபுராணத்தை நுழைத்து பார்ப்பனியத்தை திணித்தார்.

அவர் 'பூக்குட்டி' போன்ற குழந்தைக்கதைகள் எழுதியதற்காக அவரைப் பிடிக்கும் என்றார் ஒரு நண்பர். நான் படித்ததில்லை. ஆனால் சுஜாதா போன்றவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் எழுதியது குறித்து நாம் தீவிர மறுவாசிப்பு செய்யத்தானாக வேண்டும். அது பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் முயற்சியாகவும் இருக்கலாம்.

என்னளவில் அறிவியல் புனைகதை எழுத்தாளர் என்ற முறையில் அவர்மீது மரியாதை உண்டு. அவருக்கு முன்னும் பின்னும் இன்னும் கூட அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் தமிழில் இல்லை. ஆனால் அவர் சிறுகதை, நாவல், சினிமா, அறிவியல் என அனைத்திலும் பார்ப்பனீய ஆணாதிக்க மதிப்பீடுகளைத் திணித்த ஒரு ஆபத்தான வலதுசாரி எழுத்தாளர்.

ஆனாலும் அவரை இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய அவசியமென்ன இருக்கிறது, அதுவும் புதுமைப்பித்தனை 'தூ, அவன் கதையைச் செருப்பாலடிக்க வேண்டும்' என்று எழுதியவர்கள் கூட. எல்லாவற்றிற்கும் காரணம் அறமும் அரசியல் நேர்மையுமற்ற அற்பவுணர்வு, பிழைப்புவாதம் என்பதெல்லாமல் வேறென்ன சொல்வது?

இந்த தந்திரம் மனுஷ்யபுத்திரனிடமிருந்து முந்தாநாள் சிறுபத்திரிகையில் ஒரே ஒரு கவிதை எழுதியவர் வரை யாரையும் கைவிடவில்லை.

ஞாநியின் திமுக எதிர்ப்புக் கருத்திற்காக அவரின் பார்ப்பனீயம் குறித்து விமர்சித்தவர்கள், சுஜாதாவிற்கு மட்டும் புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.

வா.மணிகண்டனின் கீழ்க்கண்ட பதிவைப் படியுங்கள். சுஜாதா இறந்ததற்கு முன்னும் பின்னுமான அவரது புகழ்பாடும் புராணங்களையும் படியுங்கள்.

http://pesalaam.blogspot.com/2007/10/blog-post_21.html

என்னளவில் சுஜாதாவையும் ஞாநியையும் ஒப்பிட முடியாது. ஞாநி மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் சுஜாதா அளவிற்கான ஒரு அடிப்படைவாதப் பார்ப்பனர் கிடையாது. ஆணிய மதிப்பீடுகள்ளுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வருபவர். ஆனால் சுஜாதா ஒரு கடைந்தெடுத்த ஆணாதிக்க பார்ப்பன வைதீகர்.

ஞாநிக்கு எதிரான கண்டனக்கூட்டம் குறித்த மணிகண்டனின் பதிவில் ஒருவரி,

/பார்ப்பனீயம் என்பது சகித்துக் கொள்ளவியலாத ஒன்று என்பதனை தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்துவது மன நிறைவைத் தருகின்றது./

என்னால் வாயால் மட்டும் சிரிக்க முடியவில்லை மணி.

விவகாரம் வெரி சிம்பிள். மணிகண்டனின் கவிதைத்தொகுப்பை வெளியிட்டது உயிர்மை. உயிர்மை சுஜாதாவின் விசுவாசிகள் மன்றம். ஞாநியை எதிர்த்துக் கூட்டத்தில் பேசியவர்களில் மனுஷ்யபுத்திரனும் ஒருவர். ஆக மணிகண்டனின் சுஜாதா விசுவாசத்திற்கும் ஞாநியின் 'பார்ப்பனீயத்திற்கு' எதிரான ஆவேசத்திற்கும் என்னவெல்லாம் பின்னணியாக இருக்கிறது, இலக்கியவாதிகளின் இலக்கியச்செயல்பாடுகளையும் அபிப்பிராயங்களையும் எதுவெல்லாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது, ஹூம்......

குறிப்பு :சுஜாதாவின் ஆபத்தான முகங்கள் குறித்து விரிவாக அறிய விரும்புவோர் அ.மார்க்ஸ் எழுதிய 'சோவுக்கு மீசை முளைத்தால் சுஜாதா' கட்டுரை, ரவிக்குமார் நிறப்பிரிகையில் இந்தியாடுடே இதழில் வெளிவந்த சிறுகதையொன்றை கட்டுடைத்து எழுதிய கட்டுரை (சிறுகதை மற்றும் கட்டுரை தலைப்பு இரண்டுமே ஞாபகமில்லை), வெற்றியழகனின் 'சுஜாதாவின் கோணல்பார்வைகள்' என்னும் சிறுநூல் ஆகியவற்றைப் படிக்கலாம்.

33 உரையாட வந்தவர்கள்:

  1. thiagu1973 said...

    சுஜாதா இறந்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன் என ஒரு தோழர் சொன்னார் அது சரிதான் போல இருக்கு

  2. Premkumar said...

    சுஜாதா ஒரு ஆணாதிக்க வைதீக பார்ப்பனர் என்பதையும் மீறி, அவர் அப்படி இருப்பதற்காக வாய்ப்புகள் அதிகம் என்பதை அவரது எழுத்துக்கள் மூலமாக உணர்ந்த பின்பும், அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட சில விஷயங்கள், அதாவது உங்கள் வாசிப்பு மனத்துக்கும், அறிவுத்தளத்துக்கும் எட்டாத வகையிலான சில விஷயங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

    ' அது என்ன தில்லாலங்கடி மேட்டர்? , சொல்லேன் பாப்போம்' என்று டேபிளைத் தட்டிக் கொண்டே கேட்கும் எகத்தாளம் வேண்டாம்.

    வாய்ப்பு இருக்கிறதா , இல்லையா?

    மூடு இருந்தால் விரிவான பின்னூட்டம் பிறகு தருகிறேன்.

  3. Anonymous said...

    hi..hi...try GELUSIL :-)

  4. Anonymous said...

    இதை மாதிரி ஒரு பதிவை எப்படி சுகுணா எழுதாமல் இத்தனை
    நாள் இருந்தார் என்பதுதான் என் வியப்பு.வழக்கமான ஜல்லியடி.
    சுஜாதா குரானை புகழ்ந்து எழுதினார் என்று நல்லடியார்(கள்) அவரைக்
    கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
    நீங்கள் இன்னும் சுஜாதா ஒரு
    இஸ்லாமிய,கிறித்துவ விரோதி,
    ஆர்.எஸ்.எஸ். ஆசாமி, மோடியின்
    வலதுகாரம் என்று எப்படி எழுதாமலிருகீறீர்கள் :).

  5. அசுரன் said...

    நல்லது நண்பரே.... :-)))

  6. Anonymous said...

    இலக்கியம் படிக்கிற ஒரே காரணத்தால் பிறரை மரியாதையின்றி விமர்சிப்பவர்களுக்கு:
    "இந்த மசிரான்கள் தான் தமிழிலக்கியத்தைப் படித்து, புரிந்து கொண்டவர்கள் என்றால் ஒக்காளி இந்தத் தமிழிலக்கியம் நாசமத்துப் போகனும்"
    (ஒரிஜினல் - அனாதை ஆனந்தன், ரீமிக்ஸ் - இளவெண்ணிலா)

    பேக்ரவுண்ட் மீசிக் (வா.மணிகன்டன்: அவ்வ்வ்வ்வ்வ்வ்...ஏங்கிட்டயே வர்றாய்ங்களே....)

  7. K.R.அதியமான் said...

    சுகுணா,

    சுஜாத்தாவின் அனைத்து படைப்புகளையும் நீங்கள் படிக்கவில்லை போலும்.
    ஆணாதிக்க‌வாதியாக‌ அவ‌ரை க‌ருத‌ முடிய‌வில்லை. எப்போதும் பெண், ம‌றுமணம், ரேணுகா போன்ற‌ க‌தைக‌ளை பார்க்க‌வும். சிறுநாடகங்களை வாசிக்கவும். சினிமாவிற்காக‌ அவ‌ர் எழுதிய‌தை பெருட்ப‌டுத்த‌ தேவையில்லை. (பார்க்க‌ : க‌ம‌லின்
    இற‌ங்க‌ல் குறிப்பு) ; ப‌ல‌ ஏற்றுக்கொள்ள‌ முடியாத‌ சொல்ல‌ட‌ல்க‌ளை எழுதியுள்ளார்தான்.
    compromises for cinema.
    நீங்க‌லும்தான் பல பின்‍னவீனுத்துவ பாணி சொல்லாட‌ல்க‌ள் உபயோக‌ப்ப‌டுதுகிறீர்க‌ள் !!

    பிர‌ப‌ஞ்ச‌த்தின் தோற்ற‌ம் ப‌ற்றியும், காஸ்மால‌ஜி ப‌ற்றியும் அவ‌ர் எழுதியுள்ள‌து 'பார்ப‌னீய‌' க‌ருத்துக்க‌ளாகத்தான் உங்க‌ளை போன்ற‌ ப‌குத்த‌றிவாதிக‌ளுக்கு தோன்றும். ஆனால் அவ‌ர் ப‌ல‌ அறிஞ‌ர்க‌ளையும்,விஞ்ஞானிக‌ளையும்,நூல்களையும் (The Tao of Physiscs, Dancing Wui Masters, Einestain, Hiesenberg, Stephan HAwking, etc)மேற்கோள்காட்டித்தான் அவற்றை இந்திய சூழலுக்கேற்ப எளிமையாக எழுதியுள்ளார். Those scietists were believers and their interpretations of cosmology was within the framework of religious concepts and the exixtence of a creator or God. See "The Tao of Physics' (a 1977 classic by Fritjof Capra, a nuclear physisit)

    ஒரு சராசரி இந்துத்வ, பார்பனீய வெறியாராக அவரை பார்க்க முடியவில்லை. நான் அவ‌ருட‌ன் ப‌ழ‌கியிருக்கிறேன். விவாதித்திருக்கிறேன். அவ‌ருக்கு ஜாதி உணார்வு, bias இருந்த‌தாக‌ தெரிய‌வில்லை. ம‌னித‌ நேய‌ம், ப‌குத்த‌றிவு உடைய‌ எளிய‌ ம‌னிதராக‌த்தான் தெரிந்தார்.

    a versatile genius and a gentleman indeed.

  8. முபாரக் said...

    சுகுணா,
    உங்களின் இந்தப் பதிவை வன்மையாக கண்டிக்கிறேன். குறிப்பாக வா.மணிகண்டனை பார்ப்பன அடிவருடி என்பதை.

    வா.மணிகண்டனின் எழுத்தில் எங்கே பார்ப்பனச் சார்பை கண்டீர்கள் என்று சொல்லமுடியுமா? ஒருவன் ஆரியபவன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தால் கூட ஆரிய அடிவருடி என்று சொல்வீர்கள் போல இருக்கிறது.

    உங்கள் இருவரின் அணுக்கமான வாசகன் என்ற நிலையில் இருந்து இதைச் சொல்லுகிறேன்.

  9. அசுரன் said...

    சுகுணா சுஜாத பத்தியும், வா. மணிகண்டன் பத்தியும் எழுதிருக்குறதுக்கு யாரெல்லாம் 'அய்யோ மனிதாபிமான்ம் போயிடுத்து போயிடுத்துன்னு' ஒப்பாரி வைச்சிருக்காஙக்ன்னு பாத்தா எல்லாவனும் இளக்கியத்துல மட்டும் முங்கி முத்தெடுக்குற கோமகன்கள். அதாவது ரீஜென்ட் பார்டிங்க.

    இவிங்க எவனுமே இதுவரை இந்தியாவே எழவு வீட கிடக்குறது பத்தியோ அல்லது மக்களோட வேற வாழ்க்கை பிரச்சினைகள் பத்தியோ எதுவுமே எழுதல, அட அது மாதிரியான இலக்கிய பதிவுகள் பத்தி கூட இவிங்க யாரும் பேசுற மாதிரி தெரியல. ஜயொராம், ஐயோர்ம் அப்படின்னு பேர் வைச்சிருக்குற ஜெண்டில்மேன் பதிவுல் பின்னுட்டியிருக்குறவங்க பதிவ எல்லாம் கொஞ்சம் வாசிச்சு பாத்தா அவன் கவுஜ எழுதுனான், இதுவன்றோ அழகியல் என்பது போல ஒரே இளக்கிய அனுபவங்கள்தான். இளக்கிய(அட இலக்கிய்தத்தான் அப்படி இளக்கியன்னு எழுதுறேன்) அனுபவங்கள் மட்டும்தான்.

    இவிங்கதான் நம்ம சுகுணா அண்ணாத்தேக்கு ரீஜெண்ட் கத்துக் கொடுக்குறானுவ.

    சுஜாத செஞ்சத ஏன் யா பெரிசு படுத்துற என்று அதை விவாததுக்கே எடுக்க மறுக்கும் விவாத சுரப்புலிகள்தான் சுஜாதா ஏதோ மிக ஆழமாக புரிந்து கொள்ள முடியாத அளவு நுட்பமாக எழுதி கிழித்துள்ளது போலவும் அதையெல்லாம் படிக்காமல் நாம் விமர்சனம் செய்வது போலவும் எழுதுகிறார்கள்.

    சு ராவுக்கே கூட புதிய கலாச்சாரம் வெளியிட்ட புத்தகம் என்பது(அவரது மரணத்தின் போது) அல்ப்வாத குட்டை என்ற அடிப்படையில் இருந்தது.

    எந்தவகையில் பார்த்தாலும் சுஜாதா சுரா எனும் பெருங் குட்டையைவிட சின்ன குட்டைதான். என்ன ஒரே வித்தியாசம் கொஞ்சம் ஞனரஞ்சக பன்றிகளின் குட்டை. சுராவுடையது இளக்கிய பன்றிகளின் பெரிய குட்டை அவ்வளவுதான் வித்தியாசம்.

    சுஜாத குறித்து ஆன பூன என்று எழுதும் இளக்கிய நண்பர்கள் குறைந்த பட்சம் அவரது சாதனைகளை லிஸ்ட் போட்டால் நாமும் கிண்டி கிழங்கு எடுத்து சுட்டு சாப்பிடலாம். சுகுணாவுக்கும் லாங் கேப்புக்கு பிறகு ஒரு என்ட் ரி சாங் மாதிரி இருக்கும்.

    அத செய்யிற நேர்மை கூட இல்லாத இவர்கள்தான் கொய்யோ முறையோ என்று கூவுகிறார்கள்.

    தமது சொந்த சுகம் தவிர்த்து எதையும் சிந்திக்க தெரியாத அல்பைகளான இவர்கள், நாடே இழவு கொண்டாடிய தருணங்களில் எல்லாம் தலைமறைவாக இருந்த இவர்கள் இன்று வரை மக்களின் கஸ்டங்களுக்கு மனிதாபிமானமாக உணர்வெழுச்சி பெற்று வினை புரியாத இவர்கள், சுஜாதாவின் மரணத்தையும், அதனையொட்டி அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தையும் மனிதாபிமானத்தின் துணை கொண்டு அலசுவது நல்ல டாரஜி காமெடி.

    இவர்களின் வியாக்கியானங்களை தொகுத்து 'பின் தொடரும் பீதி' என்று நாவல் எழுதலாம்.

    அசுரன்

  10. Karthikeyan G said...

    சுஜாதா அவர்களுக்கு கிடைத்துள்ள தகுதி இல்லாத பாராட்டுக்கள், மிகை படுத்தப்பட்டுள்ள அவரது இலக்கிய பங்களிப்புகள் உங்களை எரிச்சல் படுத்தி உள்ளன போல. (Same here for me too.)

    வா.மணிகண்டன் அவர்கள் பேசியது தனிப்பட்ட பாசம் காரணமாக. தன் முதல் புத்தகத்தை வெளியிட்ட சுஜாதா மீது மணிகண்டனுக்கு பிரியம் இருப்பது இயல்பானதே. ஆக சுஜாதாவின் மரணம் அவரை பாதித்து இருக்கலாம். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்னால் எழுதிய கட்டுரை என்று தோன்றுகிறது. இதில் நீங்கள் குற்றம் காண ஏதுமில்லை.

    மேலும் பார்பனர்களையும், போலி பார்பன எதிர்பாளர்கள் என நீங்கள் கருதுபவர்களையும் சாட ஒருவரின் மரணத்தை பயன்படுத்தி இருக்க வேண்டியதில்லை.


    நன்றி.

  11. K.R.அதியமான் said...

    ////அய்.ரா.சுந்தரேசன் எழுதிய அஞ்சலிக்கட்டுரையில் சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலுக்கு நாடார்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து எழுதும் பகுதியில் 'அதுகள், இதுகள்' என்றே எழுதியிருக்கிறான். ஒரு பார்ப்பார நாய் செத்ததிற்காக இன்னொரு பார்ப்பன நாய் போட்ட அஞ்சலிக் குரைச்சலில் நாடார்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சமத்துவமக்கள் நாயகன்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.////

    சுகுணா,

    நீங்கள் சுஜாத்தாவை நாய் என்று வருணிப்பதால் கோபம் அடைந்த அவரின் ரசிகர்கள், கூட்டமாக உங்கள் வீட்டை சூழ்ந்து, இதே போல் கல்லால் தாக்கினால், அந்த கூட்டத்தை நீங்கள் எவ்வாறு வர்ணிப்பீர்கள் ? மிகவும் மரியாதையாகவா ? ஃபாசிச‌த்தை நியாப்ப‌டுத்த‌ முடியாது.
    இங்கு ஜாதி துவேசத்தால் ஜா.ரா அவ்வாறு எழுதவில்லை. பாஸிஸ்டுகளைதான் அவ்வாறு வர்ணிக்கிறார். ஒரு நாடார் இன‌ ந‌ண்ப‌ர்தான் அன்று சுஜாத்தாவை ப‌த்திர‌மாக‌ பெங்க‌ளூர் அனுப்பினார்.

    ஆதிக்க‌ வெறி, ஏகாதிப‌த்திய‌ம் என்றேல்ல‌ம் எழுதுவ‌து என்ன‌ வெறும் ஜ‌ல்லிய‌டித்த‌லா அல்ல‌து பின் ந‌வீனுத்த‌வ‌ பாணியா ? :))))

  12. Anonymous said...

    //(The Tao of Physiscs, Dancing Wui Masters, Einestain, Hiesenberg, Stephan HAwking, etc)//

    அது என்ன அங்க ஒரு etc..

    அதுக்கும் மேல ஐன்ஸ்டீனை creator or God ஐ நம்புனதா சொல்றதுலேருந்தே தெரியுது உங்களோட தகிடுதத்தம்.


    // Those scietists were believers and their interpretations of cosmology was within the framework of religious concepts and the exixtence of a creator or God. See "The Tao of Physics' (a 1977 classic by Fritjof Capra, a nuclear physisit)//

    போகிற போக்கில அள்ளித்தெளிச்சுவுடுங்கய்யா.. வுட்டாக்கா creator or God ஐ நிரூபிக்கத்தான் இவங்கெல்லாம் படைக்கப்பட்டாங்கன்னு சொல்லி இவங்களோட தமிழக அவதாரம்தான் சுஜாதான்னு சொல்லிட்டுப் போங்க 200,300 வருசம் கழிச்சு யாரு கேக்கப்போறாங்க உண்மையா பொய்யான்னு..

    //their interpretations of cosmology was within the framework of religious concepts and the exixtence of a creator or God.//
    இப்படியே சொல்லி சொல்லிதான் புழைப்ப ஓட்றீங்க..ஓட்டுங்க..

  13. Anonymous said...

    சு.ராவும்,சுஜாதாவும் குட்டை
    என்றால் சுகுணா, அசுரனெல்லாம் கிணற்றுத் தவளைகள், பெரியார் தி.க, ம.க.இ.க போன்றவை
    தூர்வாரப் பெறாத நாற்றமெடுக்கும்
    கிணறுகள்.

  14. சுழியம் said...

    வீரவேல் ! வெற்றி வேல் !

    அசுரன் மற்றும் நீங்கள் சுஜாதாவை கேவலமாக எழுதியதற்கு நன்றிகள்.

    குணத்தால் இழிந்தவர்களால் இகழப்பட்டவர் சுஜாதா என்கிற புகழும் அவருக்குச் சேர்ந்தது.

    வந்தே மாதரம் !

  15. K.R.அதியமான் said...

    ///அசுரன் said...

    /////தமது சொந்த சுகம் தவிர்த்து எதையும் சிந்திக்க தெரியாத அல்பைகளான இவர்கள், நாடே இழவு கொண்டாடிய தருணங்களில் எல்லாம் தலைமறைவாக இருந்த இவர்கள் இன்று வரை மக்களின் கஸ்டங்களுக்கு மனிதாபிமானமாக உணர்வெழுச்சி பெற்று வினை புரியாத இவர்கள், சுஜாதாவின் மரணத்தையும், அதனையொட்டி அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தையும் மனிதாபிமானத்தின் துணை கொண்டு அலசுவது நல்ல டாரஜி காமெடி./////

    பொய். என்ன‌மோ 'அச‌ர‌ன் அன்ட் கோ' ம‌ட்டும்தான் ம‌க்க‌ளை ப‌ற்றியும், வ‌றுமை ம‌ற்றும் ப‌ல‌ கொடுமைக‌ளைப்ப‌ற்றியும் க‌வலை‌ப்ப‌ட்டு, க‌ள‌ப்ப‌ணி ஆற்ற 'சோல் ரைட்ஸ்' வாங்கியிருக்க‌மாதிரியும் ஜெர்க் உடுராக‌. ச‌ரியாக‌ சொல்ல‌ப்போனால் சரித்திர‌ உண்மைக‌ளை ச‌ந்திக்காம‌ல் த‌ங்க‌ளை தாங்க‌ளே ஏமாற்றிக்கொள்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்.

    சுகுணா, நாம் நேரில் உரையாடிய‌ போது சோவிய‌த் ர‌ஸ்யாவில் ஸ்டாலின் கால‌த்தில் ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக‌ளை, கொடுமைக‌ளைப்ப‌ற்றிய‌ உம‌து சொந்த‌ க‌ருத்துக்க‌ளை இவ‌ர்க‌ளுக்கு எடுத்திய‌ம்புங்க‌ளேன் !! :)))

    அதெல்லாம் முத‌லாளித்துவ‌ க‌ட்டுக‌தைக‌ள், பொய் பிராச்சார‌ங்க‌ள் என்று முழு பூச‌ணிக்காய‌யை சேற்றில் ம‌றைக்க்கும் இவ‌ர்க‌ள் 'ம‌னிதாபிமான‌ம், அறச்சீற்ற‌ம்' ப‌ற்றி பேசுகிறார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு மாற்று க‌ருத்து உடைய‌வ‌ர்க‌ள் எல்லாம் ம‌னிதாபிமான‌ம‌ற்றா சுர‌ண்ட‌ல்வாதிக‌லாம். Nonsense. as if those who differ with them have no sense of responsiblity or compassion or alternative paths to solve problems and poverty.

    விவாசாயிக‌ளின் நில‌ங்க‌ளை அரசு ப‌றிமுத‌ல் செய‌த‌ போது ந‌ந்திகிராமில் என்ன‌ ந‌ட‌ந்த‌தோ அதே போல்தான் 1930க‌ளில் உக்ரேனிலும் இத‌ர‌ இட‌ங்க‌ளிலும் வ‌ன்கொடுமை, கொலை ந‌ட‌ந்த‌து. இன்றும் உக்ரேனில் நினைவுச்சின்ன‌ங்க‌ளிம், கொடும் ப‌ஞ்ச‌த்தில் ம‌டிந்த‌ ம‌க்க‌ளில் த‌ப்பி பிழைத்த‌வ‌ர்க‌ளின் ச‌ந்த‌திக‌ளும் வாழ்கின்ற‌ன‌ர். பார்க்க‌ :

    http://en.wikipedia.org/wiki/Holodomor

    proverbs :

    'One who refuses to learn from history is condemned to repeat it'

    'power corrupts ; absolute power corrupts absolutely'

  16. Anonymous said...

    பாகிஸ்தானின் பரம் எதிரி இந்தியாதான் என்று மூளை சலவை செய்யப்பட்ட தீவிரவாதிக்கும் உன் ஊசிப்போன் எழுத்தை எவனும் படிக்காதற்கு காரணம் பார்ப்பான் தான் என்று காண்டெடுத்து கதறும் உனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

  17. அசுரன் said...

    வா மணீகண்டன் பதில் என்கிற பெயரில் எதோ எழுதியுள்ளார்.

    அதில் வழக்கமாக சுஜாதாவுக்கு பல்லக்கு தூக்கும் மனிதாபிமானம்(நெம்ப ரீஜெண்ட் அண்டு மனிதாபிமானமுள்ள இளகிய மனம் படைத்த பேருந்தகையாளர்கள்) ஊறித் திளைத்தோடும் பதிவர்களின் அதே வாதங்கள் இÇக்கிய செழுமையான வார்த்தைகளினுடாக பரிமாற்ப்பட்டுள்ளது. வா மணிகண்டன் இளக்கியவாதியல்லவா(சும்மா லுலுவாய்க்கி) அப்படித்தான் இருக்கும்.

    அவர் சொல்லுவதிலிருந்து தெரியவருவது, சுஜாதாவை அவரது படைப்பின் ஊடாக நாம் விமர்சிகக்வில்லையாம்(அவரது எதிர்வினை குறிப்பாக யாரை நோக்கியுள்ளது என்று சொல்லவில்லையெனும் போது அது சுஜாதாவின் மரணத்தை ஒட்டி அவரது அரசியலை அம்பலப்படுத்திய எல்லாரையும் குறிப்பதாகவே படிக்கும் வாசகன் கருத இடமுள்ளது. மேலும் அவர் சுரா சாவு சமயத்தில் அவரை விமர்சித்தையும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் இதற்கு நாமும் எதிர்வினை புரிய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். §ÁÖõ ஒரேயொரு இடத்தில் பி.ந என்று குறிப்பிடுவது படிப்பவ்ர மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால் நாமும் வா மணிகணடனுக்கு பதில் சொல்லும் பொறுப்புடையவராகிறோம்).

    படைப்பின் ஊடாக சுஜாதாவை நாம் விமர்சிக்கவில்லை மாறாக அவ்ரது தனிமனித குணாம்சத்தின் ஊடாக் நாம் விமர்சித்துள்ளோõ என்று இவர் கூறுகிறார். படைப்பின் ஊடாக அவரை நாம் விமர்சிக்கவில்லையெனில் அவர் எப்போ கோப்பி குடிப்பார், குளிப்பார், எப்படியெல்லாம் எளீமையாக பழகுவார்(இது மாதிரி ஒருத்தர் எழுதிருக்கார் அவர் பழைய மரத்தடி ஜோசியர் என்று வேறு தெரிகிறது), அவர் என்னமாதிரியான பெருசுனாலிட்டி(Personality) இது மாதிரயெல்லாம் நாம் அவரை விமர்சிக்கவில்லை. இது மாதிரி விமர்சிக்கும் வகையில் அவருடன் நெருங்கிப் பழகும் துரதிருஷ்டவசமான நிலை நமக்கு கிட்டவில்லை. மாறாக அவரது அரசியல் செயல்பாடுகள், பொது மேடைகளில் அவரது அப்பட்டமான மக்கள் விரோத அரசியல். வெகுசன இளக்கியம் என்ற பெயரில் அவர கடை விரித்துள்ள குப்பைகள் இவற்றை முன்னிட்டே அவரை விமர்சித்தோம். ஒட்டுண்ணியின் சாவுக்கு ஒப்பாரி ஏன் என்றோம். அய்யா நாம்தான் அவரை படைப்பின் ஊடாக விமர்சித்துள்ளோம் நீங்களோ அவரது தனிமனித குணாம்சத்தின் ஊடாக அவருக்கு ஒளிபிம்பம் கட்டத் துணிந்தீர்கள்.

    அவரது இளக்கிய(இளக்கியம்தான்.. þÄ츢ÂÁøÄ) பங்களிப்பு தவிர்த்து அவரது சமூக முக்கியத்துவம் என்னவென்பதை இன்றுவரை அவருக்கு சட்டி தூக்கிய எவனும்(±ÅÛõ...) முன் வைக்கவில்லை.

    அதை செய்யுங்கள் அல்லது அவரது சமூக, இளக்கிய அரசியலில் உள்ள மனித குல விரோத போக்குகளை வைத்து நாம் அம்பலப்படுத்தியவற்றை மறுத்து வாதிடுங்கள் அதை விடுத்து இளக்கியத்தின் செழுமையான வார்த்தை மேகங்களில் ஒளிந்து விளையாடப்படும் கள்ளன் போலிஸு விளையாட்டு நமக்கு ஒத்து வராது.

    ஒருவேளை ஜெமோ போன்ற இளக்கிய சுய சொறியல் கும்பலிடம் இந்த குழந்தை விளையாட்டுக்கள் பாராட்டை பெற்று சிலாகிக்கப்படலாம். நமக்கு இளக்கிய அரிப்பும் இல்லை அறிவு அஜீரணக் கோளாறும் (அதாவது அறிவு அதிகமாக வழிந்து, சிந்தித்து செறிப்பதில் ஏற்படும் அஜீரணக் கோளாறு வாய் மற்றும் ஆசனவாய் வழி வாயுவாக வெளியேறும் பிரச்சினை) இல்லை.

    அசுரன்

  18. Anonymous said...

    "அவரது இளக்கிய(இளக்கியம்தான்.. þÄ츢ÂÁøÄ) பங்களிப்பு தவிர்த்து அவரது சமூக முக்கியத்துவம் என்னவென்பதை இன்றுவரை அவருக்கு சட்டி தூக்கிய எவனும்(±ÅÛõ...) முன் வைக்கவில்லை"

    உங்களுடைய சமூக முக்கியத்துவம்
    என்ன?சுகுணா வின் சமூக முக்கியத்துவம், மருதையனின்
    சமூக முக்கியத்துவம், இரண்டிற்குமான ஆறு வித்தியாசங்கள்
    குறித்து எழுதுங்கள்.

  19. அசுரன் said...

    வளர்மதி அவர்களே(திராவிட பேச்சாளர்கள் எபெக்டில் படிக்கவும் அல்லது தோழர் தியாகு(மூலதனம் மொழிபெயர்ப்பு) ஸ்டைலில் படிக்கவும்),

    எனக்கு எச்சப் பொறுக்கி சுகுணா திவாகர்(மன்னிக்கவும் சுகுணா, இது வளர்மதி அவர்கள் உபயோகப்படுத்திய வார்த்தை. எனது கருத்தல்ல) குறித்து ஆய்வு செய்வதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. தற்போது தேவையும் இல்லை. இங்கு நான் சுகுணா திவாகருக்காக எதுவும் பேசவில்லை. சுஜாதாவுக்கு சட்டி தூக்கும் அல்பவாத அரசியலைத்தான் அம்பலப்படுத்தி பேசி வருகிறேன்.

    ஒருவேளை எனக்கு ஏதாவது உருப்படியான அறிவுரை அல்லது எனது கருத்துக்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனம் வைக்கும் எண்னமிருந்தால் அதை இங்கு நான் சுஜாத குறித்து வைத்துள்ள வாதங்களை முன்னிட்டு வையுங்கள்.

    எனது விவாதம் என்பது சுகுணாவின் தளத்தில் இது வரை சுஜாதாவின் மக்கள் விரோத அரசியலையும் அதற்க்கு சட்டி தூக்குகிறவர்களின் போலி மனிதாபிமானத்தை குறிப்பிட்டுமே உள்ளதேயன்றி, எந்த தனிமனிதரையும் பாதுகாக்கும் அம்சத்தில் அல்ல. எனவே அந்த அம்சத்திலான கருத்துக்கள் இலக்கு தெரியாத அம்புகள்.

    உங்களது ரீஜெண்டுக்கு பின்னால் உள்ள கோபம் சரியானது எனில் அந்த ரீஜெண்டுதான் நான் எதிர்பார்த்த ரீஜெண்டும்.

    அசுரன்

  20. K.R.அதியமான் said...

    //////(The Tao of Physiscs, Dancing Wui Masters, Einestain, Hiesenberg, Stephan HAwking, etc)//

    அது என்ன அங்க ஒரு etc..

    அதுக்கும் மேல ஐன்ஸ்டீனை creator or God ஐ நம்புனதா சொல்றதுலேருந்தே தெரியுது உங்களோட தகிடுதத்தம்.////

    Annoy (why annoy form by the way?),

    Read Sujtha's Kadavul, oru vingaana paaraviyilinthu for full details. He was an agnostic until recently.

    and reg Einstein :

    http://en.wikipedia.org/wiki/Einstein#Religious_views

  21. அசுரன் said...

    அதியமான் மாதிரி ஆளுங்களுக்கு எத்தன முறை வாயில புண்ணோட போக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூட சூடு சொரனையில்லாம திரும்ப வந்து ஊதார் விடுற பழக்கம் பொவதேயில்லை.

    சமீபத்துல கூட இவர் விவாதம்க்ற பேருல பழைய மாவு கேள்விகள கேட்டு அதுக்கு பழைய/புதிய விவரங்களோட பதில் சொல்லியபிற்பாடு எஸ்கேப் ஆகி ஓடினார். அவர் ஓடும் போது போட்ட பின்னூட்டத்தை இங்க பார்க்கலாம்.
    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-6755496747824260674

    அதற்கான எனது பதில்
    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-3614813558675314544

    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-94667747200806080

    இவற்றுக்கும் பதில் சொல்லாமல் ஓடிவிட்டார மான் காராத்தே சித்தர் அதியமான்.

    இப்போ ஸ்டாலின் காலம் குறித்து கேட்டுள்ள கேள்வியும் கூட இதுக்கு முன்ன பல தடவ பல இடங்கள்ள கேட்டு அவற்றை தரவு/தர்க்க ரீதியாக மறுத்து வாதாடினால் மான் காராத்தே போட்டு ஓடிவிடுவதைத்தான் செய்துள்ளார். இப்பொழுதும் கூட அதுவே நடக்கும்.

    விக்கிபிடியாதான் இவர மாதிரி ஆளுங்களோட ஒரே ரிபெரென்ஸ் பாயிண்டாக இருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.

    விக்கிபிடியாவுல அதியமான் ஒரு அகில உலக சூப்பர் ஸ்டார்னு எழுதிகூட போடலாம் ஆனா அது உண்மையும் கிடையாது, ஆதாரம்னும் எடுத்துக்க முடியாது.

    ஸ்டாலின் குறித்த அவதூறுகளை நாம் மறுத்தும், ஸ்டாலின் காலத்து நிகழ்வுகள் குறித்தும் விரிவாகவே பல பதிவுகள் போட்டுள்ளோம். அவற்றில் ஒன்றீல் கூட வாதம் செய்யும் நேர்மையற்ற இந்த மான் காராத்தே சூரர்கள் சம்பந்தமில்லா இடத்தில் கேள்விகளை கேட்டு நியாயவான் போல காட்டிக் கொள்வது பரிதாபகரமான ஒரு முயற்சியே.

    இவர் ஒரு பொய்யர் என்பதையும் முன்பு நிரூபித்ததற்கு இன்று வரை இவரிடம் பதில் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். மேலே குறிப்பிட்டுள்ள அவரது பின்னூட்டம் இடம் பெற்றுள்ள கட்டுரையிலேயே இவர் முழுப் பொய்யன் பித்தலாட்டக்காரன் என்பதற்க்கான ஆதாரங்கள் உள்ளன. அவற்றுக்கு பதில் சொல்லாமல் ஓடி வந்தவர்தான் இவர் என்பது கூடுதல் தகவல்.
    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-7165237852068717838

    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-2806849811498036255

    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-1052202685340823957

    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-94667747200806080

    குறிப்பாக இந்த கடைசி பின்னூட்டம் இது போன்றவர்கள் எப்படி முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல் அதாவது நடைமுறையில் பெரும்பாலான மக்கள் மீதான கருத்தியல், பொருளியல் வன்முறைகள் நடைபெறுவது குறித்து பேசும் போது அங்கு வந்து தத்துவம் குறித்தும், ரஸ்யா குறித்தும் பேசும் கயமைத்தனத்தை செய்கிறார்கள் என்பதை இந்த கடைசி பின்னூட்டம் அம்பலப்படுத்துகிறது. இவர்களுக்காகவே ரஸ்யா குறித்தும், ஸ்டாலின் குறித்தும், கம்யுனிசம் குறித்தும் பதிவுகள் போட்டு அங்கு வந்து விவாதம் செய்யுடா என்று பல முறை பல இடங்களில் கூப்பிட்டுள்ல போதும் அங்கெல்லாம் ஓடிப் போய்விட்டு, மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்தும் இடத்தில் வந்து இவற்றை முன்னுக்கு கொண்டு வருவதன் மூலம் மக்கள் விரோதிகளை காக்கும் மாமா வேலையை செவ்வெனெ செய்கிறார்கள்.

    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-94667747200806080


    மனிதாபிமானத்துக்கு ஏதோ நாம்தான் சொந்தம் கொண்டாடுகிறோம் என்று எங்கும் சொல்லவில்லை. மாறாக மக்களின் பிரச்சினை குறித்து எழுதாத எவனும் சுஜாத பிரச்சினையில் மட்டும் மனிதாபிமானம் பேசுவது வக்கிரம் என்றே குறிப்பிடுகிறோம். ஆயினும் அதியமான் உள்ளிட்ட தரகு புரோக்கர் கும்பல் மனிதாபிமானம் குறித்து பேசுவது மிக வக்கிரமானது என்பதை இதே கருத்தை அவர் முன் வைத்த அந்த மேற்சொன்ன கட்டுரையில் விமரிசையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

    முதல்ல ஸ்டாலின் குறித்த அவரது பித்தலாட்டங்களுக்கும், எமது நிலைப்பாட்டை திரிப்பதற்க்குமான மறுப்புகள் கீழே. இதில் அவர் அந்த கட்டுரைகளில் வாதத்தை முன்னெடுக்கட்டும். இங்குதான் பேசுவேன் என்று அவர் பிடிவாதமாக இருந்தால் அப்புறம் அவரை ஒரு முழுமையான அம்பலப்படுத்தலுக்கு ஆட்படுத்தி அவரை ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாக்க நேரிடும் வ்கையில் எக்ஸ்ட்ர எவோர்ட் எடுத்து நான் அட்டாக் தொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்(அப்படி செய்வதை நான் விரும்பவில்லை ஏனேனில் எனக்கு ஏற்கனவே அடித்து போட்ட பாம்பை திரும்ப திரும்ப அடிக்க விருப்பமில்லை, நேரமில்லை). இன்னும் கொஞ்ச நாளைக்கு அவ்ரது முகமூடியை காப்பாற்றும் எண்ணமிருந்தால் குறிப்பிட்ட பதிவுகளில் விவாதத்தை முன்னெடுக்கட்டும்.

    இதோ ஸ்டாலின் குறித்த நமது கட்டுரைகள் இவற்றில் வந்து தனது வாதங்களை வைத்து நிரூபித்துச் செல்லட்டும் அதியமான என்ற நேர்மையாளர்.

    ஸ்டாலின் காலம் குறித்து இவர் போன்றவர்களுக்கு ஆதரசமாக இருந்த பெரிய மொள்ளமாறி இங்கிருந்து ஓடிப் போன நீலகண்டனுடைய மிகப் பெரிய பித்தலாட்ட கட்டுரைக்கான எதிர் கட்டுரை இதோ இங்கே

    சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
    ==> http://www.thamizmanam.com/forward_url.php?url=http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html


    தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
    ==> http://www.thamizmanam.com/forward_url.php?url=http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html

    ஸ்டாலினின் தவறுகள் குறித்து நமக்கு விமர்சனம் உள்ளது அதனையும் கூட நாம் கட்டுரைகளில் முன் வைத்து விவாதிக்கவே இவர்களை கூப்பிட்டோம். அதுவும் அதியமான் போன்றவர்களின் ஆதர்ச நாயகர்களான ஜாடாயு, நீலகண்டன், உள்ளிட்ட RSS பார்ப்பன பன்னாடைகள் இங்கு உலாவந்த நேரத்திலேயே இதனை செய்தோம் நாம். மேலேயுள்ள கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி:

    @@@@
    எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்க்கு அவரது எதிரிகளால் அவரை முதுகில் குத்திதான் பழி வாங்க முடிந்தது. அதுவும் அவர் இறந்த பிற்ப்பாடு. அவர் எதில் வேண்டுமென்றாலும் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ரஸ்ய உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் அவர் தோல்வியடையவில்லை. குறுகிய காலத்தில் சோசலிசத்தை அவர் எந்தளவுக்கு வலிமையாக கட்டியமைத்திருந்தார் என்றால் அதனை அவர்கள் உடைத்து சிதைப்பதற்க்கு 40 வருடங்கள் தேவைப்படும் அளவுக்கு. இதோ அவரது இந்த சாதனைக்கு நிரூபனமாக இன்று ரஸ்யா மக்களின் ஆதர்ச நாயகராக ஸ்டாலின் நிற்கிறார். ரஸ்ய மக்களின் வெல்லற்கரிய மன உறுதியின் அடையாளமாக ஸ்டாலின் இன்று நினைவு கூறப்படுகிறார். மாறாக, ஸ்டாலின் கால வன்முறை என்று போலி வருத்தத்தை வெளிப்படுத்தும் கும்பலோ, அவரது சிலையை உடைத்து அவமானப்படுத்திய கருங்காலி கும்பலோ நாட்டை கூட்டிக் கொடுப்பதில் வெகு சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
    @@@@


    ஸ்ராலின் மீதான அவதூறுகளிற்கான பதிலாக கட்டுரைகளின் தொகுப்பு:
    -----------------------------------
    ஸ்டாலின் அவதூறுகள் - அமெரிக்க உளவாளிகளா அல்லது நிரூபர்களா?
    http://www.tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_25u.html

    கிட்லரை வரலாற்றில் உருவாக்கியவர்கள் யார்?
    http://tamilcircle.net/unicode/general_unicode/189_general_unicode.html

    ஸ்ராலின் ஏன் மறுக்கப்பட்டார்?, ஏன் தூற்றப்பட்டார்?, இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்?
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_02.htm

    யூகோஸ்லாவிய பற்றி ஸ்ராலினின் மார்க்சிய நிலைப்பாடும்;, டிரொட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும்
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_03.htm

    இன்று வரையான ஸ்ராலின் அவதூற்றின் அரசியல் எது?
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_06.htm

    யார் இந்த ஸ்டாலின்
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_16.htm

    ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடரவும் அதைப் பாதுகாக்க போராடிய ஒரு வர்க்கத்தின் தலைவர்
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_15.htm


    ஸ்டாலின் பற்றிய அவதூறுகளின் தோற்றமும், அதன் உள்ளடக்கமும்
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_18.htm


    பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், ஸ்டாலின் இழைத்த தவறுகள் என்ன?, ஏன்?, எப்படி? இழைக்கப்பட்டது
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_17.htm

    சோவியத் மக்கள் தொகை புள்ளிவிபரம் அவதுறை நிர்வாணமாக்கின்றது
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_24.htm

    மார்க்சியத்தின் பெயரில் ஏகாதிபத்திய கைக்கூலிகள்
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_25.htm

    இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - முழுவதும்
    http://www.tamilcircle.net/Bamini/books/book_05/book_05_total.htm

    இதையெல்லாம் விட ஒரு சின்ன சுலபமான கேள்வி கேட்க்கலாம். 300 வருடம் உலகை சுரண்டிய பிரிட்ட்ன இரண்டாம் உலகப் போரில் பிச்சைக்காரனாக வெளி வந்த போது ஐரோப்பாவின் சிக்காலியாக(சேரி) இருந்து தொடந்து 16 வருட யுத்தம், இடையில் இரண்டு புரட்சிகள், பஞ்சம், ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பு யுத்தம், உள்நாட்டு யுத்தம், பிறகு இரண்டாம் உலக யுத்தம் இப்படி தொடர்ந்து 40 வருடங்கள் படு பயங்கரமான நெருக்கடியில் இருந்த நாடு, இரண்டாம் உலகப் போரில் வேறெந்த நாட்டையும் விட ஒப்பிட முடியாத அளவு பெரிழப்புக்கு ஆளான நாடு எந்த நாட்டையும் சுரண்டாமல் வல்லரசாக இரண்டாம் உலக் போரின் முடிவில் வெளிவந்ததே எப்படி அதியமான்? ஒருவேளை ஸ்டாலின் தனது சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்ததனாலேயா? இந்த கேள்வியும் கூட அவரிடம் இருமுறை முன்பு கேட்க்கப்பட்டுள்ளது. அவர் எப்பொழுதும் போலவே பதில் சொல்லாமல் மான்கராத்தே போட்டு ஓடினார். ஸ்டாலின் ரஸ்யா வன்முறையற்ற காந்தி தேசம் என்று எங்கும் யாரும் சொன்னதில்லை. ஆனால் அங்கு அடிவாங்கியவர்கள் யார் என்பதும் இங்கு இந்தியாவில் அடி வாங்குவது யார் என்பதிலும் உள்ள் வித்தியாசம்தான் அதியமான் போன்ற் மொள்ளமாறிகள் நேற்றைய ரஸ்யாவில் கஸ்டப்பட்ட அவரது வர்க்கக்காரர்களுக்கு கண்ணீர் வடிக்கவும், இன்றைய இந்தியாவில் இதோ இன்று கூட அடிவாங்கி, தற்கொலை செய்து நித்தம் அவலமுறும் பெரும்பான்மை மக்கள் குறித்து பாராமுகமாக இருப்பதற்க்கும், இத்தனையும் செய்து விட்டு கொஞ்சம் கூட வெட்கமின்றி மனிதாபிமானம் பேசுவதற்க்கும் வழி செய்கிறது. இந்த பொழப்புக்கு வேறாதவது செய்யலாம் என்று கூட அவரை முன்பொருமூறை திட்டியாகிவிட்டது. அவருக்குத்தான் சுத்தமாக உரைப்பதில்லை.


    இரண்டாவது இந்த சுகுணாவின் கட்டுரையில் மனிதாபிமானம் குறித்த விசயத்தில் அவர் ஒரு மொள்ளமாறிதான் என்கீற பகுதி விலாவாரியாக பேசப்படும்.


    அந்த அம்சத்தில் அவ்ர ஒரு மக்கள் விரோதி, மனிதாபிமானம் என்று சுரண்டல்காரர்களின் கஸ்டங்களைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பதை அம்பலப்படுத்தும் அவருடானான முந்தைய விவாதங்களில் சில கீழே. இது போல பல விவாதங்கள் தரவுக்ள் உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறேன்.

    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-7702152601790494150

    @@@@@@@@@@@@
    அதியமான் எப்பொழுதுமே தனது வாய் இன்னபிற பிரதேசங்கள் தவிர்த்து வேறதைக் குறித்தும் சிந்திக்க தெரியாதவர்... அய்யோ பாவம். ஏற்கனவே சொன்ன மாதிரி சம்பந்தா சம்பந்தாமில்லாமல் பின்னூட்டமிடுவதை இதோ இந்த பின்னுட்டம் வரை செய்து வருகிறார்.

    இருந்தாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பதில் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

    இவர் கணக்கில் கம்யூட்டர் விலை கம்மியாப் போனதுனாலதான் விக்கமாட்டாம விவசாயி எல்லாம் லட்சக்கணக்குல தற்கொலை செஞ்சி செத்து போறான் போலருக்கு,

    இவர் விலை கம்மியாயிருக்கு கம்மியாயிருக்குன்னு சொல்ற இதே காலகட்டத்துலதான் அடிப்படை, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு விலையேறியுள்ளது.

    இதே காலகட்டத்தில்தான் விவசாய இடுபொருள்களின் விலை 200 முதல் 300 மடங்கு விலையேறியுள்ளது.

    இவர் சொல்ற அன்னிய செலவானிலிருந்து ஒரு நைய பைசாக்க்கூட எடுக்க முடியாது. ஏன்னாக்க அதில் பெரும்பகுதி US bondகளீலும் இன்னபிற பங்கு பத்திரங்களீலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு வேளை இந்தியாவுக்கு சிக்கல் அதிகமாகிறது என்றால் இனிமேக்கூடி அது உலக சிக்கலின் ஒரு அங்கமாகத்தான் இருக்கும். அதாவது இப்போ அமெரிக்க வீட்டுக் கடன் பிரச்சினை இருக்கீறது அல்லவா அது போல. அப்படியாப்பட்ட சூழல்ல இந்த பங்குகளையோ பாண்டுகளையோ வித்தா ஒரு நாய் கூட சீண்டாது.

    அதியமான் சொல்ற அன்னிய செலவானியோட கதை இதுதான்.

    1991லு இவர் சொல்ற டெரிபில் கிரிஸிச் அப்போ இந்தியாவுல 20 ரூபாய்க்கு வாழ்ந்தவுங்க எண்ணிக்கை எவ்வளவுன்னு தெரியல, அன்னைக்கு லட்சக்கணக்குல விவசாயிங்க தற்கொலை செஞ்சிட்டு செத்து போனாங்களான்னு அதியமான் ஆராய்ச்சி செஞ்சி சொன்னாக்க ரொம்ப புண்ணியமாப் போகும்.

    ஆனா அவர் கவலை இது இல்ல. நாடும் மக்களும் எக்கேடு கெட்டால் அவருக்கென்ன. அவர் கணக்கெல்லாம் 1991 கிரிஸிஸில் நஸ்டமான தரகு முதலாளி கும்பல் குறித்துதான். அந்த கும்பல் இன்று சந்தோசமாக வலம் வருவதால்தான் விவசாயியும், இன்னபிற ஏழை உழைக்கும் மக்களும் விலைவாசி உயர்வாலும், வேலையிலிருந்தும் வறுமையிலிருப்பதாலும், மருத்துவம், கல்வி இன்னபிற வசதிகள் தனியார்மயத்தால் மறுக்கப்பட்டுள்ளதாலும் வாழ்வாதாரம் தாழ்ந்து போயிருப்பது குறித்து அவர் பதில் சொல்வதே கிடையாது.

    அது ஏன் அதியமான் வல்லரசு இந்தியாவுலதான் உலகிலேயே அதிகப்படியா சதவீதத்துல குழந்தைகள் செத்து போறாங்க?

    உலகில் அடிப்படை வாழ்க்கைத் தரத்திற்க்கான சோசியல் இண்டிகேட்டர் எனும் தரப்பட்டியலில் இந்தியா சறுக்கிகினே போய் அதலபாதாளத்துல தொங்குது?

    வல்லரசாம் வல்லரசு மொபைல் போன்ல ஒரு கால் பன்ன ஒரு ரூபாய், கக்கூஸு போக ரண்டு ரூபாய் இதுதான் அதியமானோட வளரும் இந்தியா.

    குழந்தைகள் ஊட்ட்ச்சத்து குறைபாடு சப்சஹாரா பாலவனத்தவிட இங்க ரொம்ப அதிகமாம்?

    இந்த குழந்தைகளததான் உங்களோட அரசவை கோமாளி அப்துலகாலாம் கனவு காணச் சொல்றாரோ?

    இவரோட அன்னிய மூலதனத்தின் சங்கதி சிரிப்பா சிரிச்ச கதை யாருக்காவது தெரியுமா?

    கடந்த மாதங்களில் பங்கு சந்தையில் ஊக வணிகத்திற்க்காக மட்டுமே வந்து சென்றது இவர் சொன்ன அன்னிய மூலதனத்தின். உற்பத்திக்கானதாக வரவில்லை. இதனாலேயே உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் போன வருடம் குறைந்தும் போனது.

    இவர் சொல்ற இதே அன்னிய மூலதனத்தீன் வருகையால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்றுமதி தொழில் நசிவும் ஏற்ப்பட்டு சிதம்ப்ரம் உள்ளிட்ட மொட்டை பாசு அல்லக்கைகள் எப்பாடுப்பட்டாவது இந்த அன்னிய மூலதனத்தை நிறுத்தனும்னு தலைகீழ நின்னு தண்ணி குடிச்சானுவ ஆனாக் கூட அது வந்து இங்க இருக்குறவன் அத்தனை பேரு பாக்கட்டையும் காலி பன்னிட்டுதான் ஓடிப் போனது.

    இப்படி அன்னிய மூலதனத்துக்கு இவர் ஒலிவட்டம் கட்டிக்கிட்டு இருக்கும் போதே, பன்னாட்டு கொள்ளக்கார கும்பல் நமக்கு ஸ்லைட்டா அட்வைஸ் கொடுக்குறானுவ...

    அதாவது இந்தியாவில் பொது நிறுவனங்களில் இருக்கும் மூலதனமே போதுமாம். அன்னிய மூலதனமே தேவையில்லையாம். இத்த் 12 வருசம் நோகமா நொங்கு தின்னதுக்குப்பிறகு சொல்றாங்க. அதுவும் மிச்சமிருக்குற நம்மோட உள்ளூர் மூலதனம் (PF, LIC, Post office saving etc) என்கிற உள்ளூர் நொங்கை தின்பதற்க்கு அடி போட்டுக்கிட்டு இருக்கும் போது பழைய ஆள் அதியமான் பல்லவியை மாத்திப் பாடுறாரு...

    அசுரன்
    @@@@@@@@@@


    அதியமானுக்கான பழைய பதில் #2
    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-571520785178821175
    @@@@@@@@@@@
    //and another point is that though the total employment in IT and ITeS may be a few (12)lacs across India, the secondary employment generation is about 1 : 7 ; that is about 7 jobs created for one IT job ; like drivers, electiricans, catering service workers, construction, and so on.//


    IT துறை ஒன்றுதான் மிகப் பெரிய அளவில் புரொபசனல்களுக்கான வேலை வாய்ப்பை தருகிறது. அதுவே இந்த 16 வருடத்தில் 16 லட்சம் வேலையைத்தான் உருவாக்கியுள்ளது.

    இவர் கணக்குப்படி செகண்டரி வேலை என்று எல்க்டிரிசியன், டிரைவர் வேலைகள்தான் உருவாகியுள்ளன.

    ஆனால் இந்தியாவில் ஒரு வருடத்தில் வெளி வரும் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்திற்க்கும் மேல்(இந்த 17 வருடத்தில் 1 கோடிக்கும் மேல்). இவனெல்லாம் டிரைவர் உத்தியோகம் பாக்கப் போக வேண்டும் என்று நான் சொல்லவில்லை அதியமான் சொல்கிறார்.

    இதே காலகட்டத்தில் இந்த பொருளாதாரம் விவ்சாயத்தில் ஏற்படுத்தி தாக்கத்தால் வேலையிழுந்தவ்ர்கள் கோடிக்கணக்கில் அவர்கள்தான் இன்று நகரங்களில் குறை கூலிக்கு கட்டம், ஓட்டல் தொழிலாளர்களாக படு மோசமாக சுரண்டப்படுகிறார்கள்.

    ஆக மொத்தத்தில் இவரது பொருளாதாரம் நிறைய பிச்சைக் காரர்களை உருவாக்கியுள்ளது. அதாவது Working poverty எனும் ஒரு பெரிய மக்கள் தொகையை உருவாக்கியுள்ளது.

    அசுரன்
    @@@@@@@@@@


    அதியமானுக்கான பழைய பதில் #3
    http://poar-parai.blogspot.com/2008/01/ibm-fresher.html#comment-9021785535329230975
    @@@@@@@@@@
    இதைச் செய்வதற்க்கு இந்த அரசிற்க்கு தகுதிகிடையாது. ஏனெனில் இதைச் செய்வது என்பதே சொந்த் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுதான். இந்தியாவின் சுதந்திரம் என்பது வெறும் அதிகார மாற்றம்தானேயன்றி அரசு என்பது மாறியதை குறிப்பதல்ல என்ற உண்மை புரிந்தால் 1990க்கு முன், 1990 பின் என்பது போல பேச வேண்டிய தேவையிருக்காது.

    அதனால் இதனை செய்ய இயலவில்லை என்ற காரணத்தை வைத்து இந்தியாவை கூட்டி கொடுப்பதை நியாயப்படுத்தும் முன்பு வேலை வாய்ப்பு குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் எனது பின்னூட்டத்திற்க்கு பதில் சொல்ல இயலுமா என்று பாருங்கள். அதை விடுத்து வழக்கம் போல சம்பந்தமில்லாமல் பீன்னூட்டுமிடுவதை செய்யாதீர்கள்.

    இந்தியாவில் இன்றூ விவாசாயம் அழிந்து வரும் பகுதிக்ளில் முக்கியமாக தற்கொலைகள் நடந்து வரும் பகுதிகளில் அதற்க்கான முக்கிய காரணமாக பசுமைப் புரட்சியைத்தான் சொல்கிறார். இன்று இரண்டாம் பசுமை புரட்சி என்ற பெயரில் கட்டாமனக்கையும், பூ விவசாயத்தையும் செய்ய வைத்து நாட்டை நாசமாக்க இருக்கீறார்கள். இப்படி உங்க ஆட்கள் முன்பு செய்த தவறை காரணம் காட்டி இன்று நீஙக்ள் ஒன்றை செய்யுங்கள் அப்புறம் இன்னொருத்தன் வ்ந்த் அவன் இன்னொன்று செய்யட்டும் நாங்க இப்படியே வாய் பாத்துக்கிட்டெ வாழ்க்கையை இழந்து நிற்கிறோம்.

    அதான் ஒன்றும் செய்ய முடியாது என்று 1990க்கு முன்பிருந்த நிலைமையைச் சொல்கிறீர்கள் அல்லவா? 1990க்குப் பிறகு நிலமை மோசமாகத்தானே போயிருக்கிறது. ஆக மொத்தம் உங்களது இயலாமை இப்படி பல்லிளிப்பதைத்தான் இவை காட்டுகின்றன. அதான் சொல்கிறோம் ஒதுங்கிக்கோங்க...

    அசுரன்
    @@@@@@@@@@@

    அசுரன்

  22. K.R.அதியமான் said...

    ஒரு நல்ல குறள் :

    'யாவாகராவினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்க பட்டு'

    ஒரு பழைய ஜோக் :

    In late 50s, TTK was the union finance minister in Nehru's cabinet while Feroz Gandhi (Nehru's son-in-law) was an MP.
    Once in a fit of anger, TTK called
    Feroz as 'prime minster's lap dog' ; soon after wards, TTK was accused in the infamous Mudhra-LIC
    corruption case and had to resign his post. Just before the starting of the parliament session in which TTK was about to be indicted, in which Feroz Gandhi was to open the debate, he met TTK in the parliament lobby ; and quipped to TTK : "..no doubt you consider yourself to be a pillar of the government. Now, i do what a dog does to a pillar." :))))

    சுகுணா,

    Do you consider yourself to be a "pillar" of anti-brahminsim/ rationalism ?

    :)))))))

  23. K.R.அதியமான் said...

    ஒரு நல்ல குறள் :

    'யாவாகராவினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்க பட்டு'

    ஒரு பழைய ஜோக் :

    In late 50s, TTK was the finance minister in Nehru's cabinet while Feroz Gandhi, who was Nehru's son-in-law was an MP. Once in a fit of anger, TTK called Feroz '..the prime minister's lapdog' ; soon afterwards, TTK was accused in the infamous Mudhra-LIC corruption case and had to resign. Just before his resignation, Feroz was to intiate the debate in the parliament about this matter. Feroz met TTK in the lobby of the parliament just before the debate and quipped "..no doubt you consider yourself to be a pillar of the government. Now,I do what a dog does to a pillar". :))))

    சுகுணா,

    Do you consider yourself to be a 'pillar' of anti-brahminsim and rationalism ?

    :)))))))))

  24. Anonymous said...

    Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Monitor de LCD, I hope you enjoy. The address is http://monitor-de-lcd.blogspot.com. A hug.

  25. Anonymous said...

    First i apologize with suguna to continue here with Mr.Athiyamaan and also for not typing in thamiz.

    To Mr.K.R.Athiyamaan,

    if i say my name is xyz or zyx, is it needed for our discussion about einstein. okk, my name is Thondaimaan, u can refer me as Thondaimaan.

    In first case wikipedia is never considered as a valid reference, especially regarding science.

    Inspite of this opinion i come to ur reference

    //http://en.wikipedia.org/wiki/Einstein#Religious_views//

    This page has been written based on a flurry of reference. take a look at reference 54 of the same link.

    Einstein has constantly said that he is a kind of a spritual man and he has never beleived in a God who was a creator of everything.

    //Those scietists were believers and their interpretations of cosmology was within the framework of religious concepts and the exixtence of a creator or God.//

    Can you show any scientific papers of the same scientists written on cosmology within the framework of relegious concepts and effectively concluding with the creator or god.

    Try to account for urself for those words u have said. Einstein himself speaks about such kind of accountability of an individual for his acts.
    i dont expect any reply or i have no intention to continue with u. i am just a passer by.

    Sorry Mr.Suguna for interfering.

  26. Anonymous said...

    athiyaman maathiri paarpana , muthalaalithuva adivarudikku een patil solkeereerkal asuran

    ivanellaam adivaankama pookamaattan

  27. அசுரன் said...

    அம்பி அதியமான்,

    இந்த சுகுனா 'பில்லர்தான்' நீ 'நாய்'தான். சுகுனா இங்கு தமிழமணத்தில் அரசியல் செயல்பாடுகளில் நேர்மையாகவே இருந்துள்ளார். வெறுமே இளக்கிய கிரகம் பிடித்த உளறல்களை அவர் அவ்வப்போது கொட்டி வந்தாலும் கூட(சுகுனா மன்னிப்பாராக நான் அதிகாரம் மையம் என்பதை உறுதியாக கூறிவிடுகிறேன்) அவரது எழுத்துக்கள் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பதில் என்றைக்கும் சுருதி இறங்கியதில்லை.

    அவரை பற்றி இன்று தனிமனித ரீதியாக எழுதுபவர்களில் யார் இந்த ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்தார்கள், எந்தளவுக்கு ஒலித்தார்கள் என்ற முடிவுகளை அவர்களின் எழுத்துக்களை படித்தவ்ரகளின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

    அவரது அரசியல் நிலைப்பாடுகளீன் மீது வாதிட முடியாது சொறிநாயாகிய நீ இன்று அவரது தவறான கோட்பாடு செயல்பாடுகளினால் அதி அற்பத்தனமானதொரு வாதத்தில் மாட்டிக் கொண்டுள்ள நிலையில் அதனை சாதகமாக்கிக் கொண்டு ஒழிந்திருந்து தாக்குகிறேயே... சூப்பருடா.....

    அதுவும் சம்பந்தமில்லாம இங்கு பார்ப்ப்னிய அரசியலையும் அற்பத்தனமான வாதத்தையும் பொருத்தி ஒனுக்கு அடிக்கிறாயே... அடடஅடஅடஅடடடடட... உண்மையிலே ஒரு அற்புதமான சொறிநாய்டா நீ...

    ""'யாவாகராவினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்க பட்டு'""

    இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ உனக்கு நல்லாவே பொருந்தும். ஏன்னா அதிகமா வாயில புண்ணு வாங்கி ஓடுனவறு யாருன்னு பாத்தா அது அதியமான் தான் (அட பேருலயே மான் இருக்கு அதான் மான் கராத்தே மன்னனாக இருக்கீங்க போலருக்கு... இந்த இழவ இத்தினி நாள் பாக்காம் இருந்துட்டேன்)

    அசுரன்

  28. dondu(#11168674346665545885) said...

    //அதான் ஒன்றும் செய்ய முடியாது என்று 1990க்கு முன்பிருந்த நிலைமையைச் சொல்கிறீர்கள் அல்லவா? 1990க்குப் பிறகு நிலமை மோசமாகத்தானே போயிருக்கிறது. ஆக மொத்தம் உங்களது இயலாமை இப்படி பல்லிளிப்பதைத்தான் இவை காட்டுகின்றன. அதான் சொல்கிறோம் ஒதுங்கிக்கோங்க...//
    ஒதுங்கிட்டு என்ன செய்யறதாம். தேசத்துரோகி கும்பலான கம்யூனிஸ்ட்டுங்க கையிலே எல்லாத்தையும் ஒப்படைக்கணுமா? அந்த தத்துவத்தாலேயே சோவியத் யூனியனையும் கிழக்கு ஜெர்மனியையுமே உலக மேப்பிலிருந்தே தூக்கிட்டாங்களே. கம்யூனிசத்தை சீனாவே கைகழுவி விட்டாச்சு. ஆனால் இன்னும் நம்ம ஊர் கம்யூனிஸ்டுங்க சீன நலனைப் பேணி நம்ம நலனை புறக்கணிக்கிறாங்களே. இன்னுமா அவங்களை நம்பறது? யாராவது காதுல பூவை வெச்சவன் கிட்டே போய் சொல்லுங்க.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  29. K.R.அதியமான் said...

    Thanks Asuran for your 'compliments' and lengthy reply. I guess i must have really delivered a haymaker punch for such a lenghty reply. :))))

    உக்ரேனல இறந்தவங்க எல்லாம் இயற்கையான பஞ்சத்திலதான் இறந்தாங்க. ம்ம்ம்.
    இப்ப அது பத்தி விக்கிபீடியவில் மாற்றாக‌, ஆதராத்துடன் எழுதியவர்கள் எல்லாம் கே.கூ கள்.
    உக்ரேனில் இன்னும் இது பற்றி இவ்வாறு நினைப்பவர்கள் எல்லாரும் லூசுகள். ஓ.கே யா ?

    யார் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லாமல் நழுவினார் என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும். ஓ.கே.

  30. K.R.அதியமான் said...

    சில மாதங்களுக்கு முன், எம்மை 'அருமையான' சொல்லாடல்களுடன் விளித்த அசுரன் பற்றியும், போலி கம்யுனிஸ்டுகள் பற்றிய அவரின் எதிர்வினைவுகள் பற்றியும் யாம் இயற்றிய பகடி :

    "சூரசம்காரம் அல்லது அசுரவதை.."

    அசுரரே,
    உண்மை கம்யுனிசம் வரவேண்டும் என்றால், அனைவரும் உம்மை போல் அசுரனாக வேண்டும்.
    மனித முயற்சியால் முடியாது என்று சரித்திரம் கூறுகிறது. எனவே பிரம்ம தேவனை வரம் வேண்டி கடுந்தவம் செய்யலாம். ஆனால் அதில் ஒரு டேஞ்சர் இருக்கிது. இந்திரலோகத்தில் இருக்கும் தேவர்கள், அசுர கூட்டம் பெருகுவதை பார்து பயந்து, லார்ட் பரமசிவனிடம் பெட்டிசன் இடுவர். அவரும் லார்ட் முருகனை அனுப்பி அசுரனை சூரசம்காரம் செய்வார். மக்கள் புது தீபாவளி கொண்டாடுவர். என்ன செய்ய ? மங்கலம் உண்டாகட்டும்...
    :))))

  31. K.R.அதியமான் said...

    சுகுணா,

    சுஜாத்தா அவர்கள் ஒரு பார்பனவாதி/ஏகாதிபத்திய ஆதரவாளார் என்று நீங்கள் குற்றம் சாட்டுவது வேறு ; அவரை ஒரு 'பார்பன நாய்' என்று வர்ணிப்பது வேறு. பார்பனவாதிக்கும்,'பார்பன நாய்' என்பதற்க்கும் மிக மிக அதிக வித்தியாசங்கள் இருப்பதை உமக்கு யாரும் கூறத் தேவையில்லை. சொல்லாடல்களில் இருக்கும் இந்த முரண்பாட்டிற்க்காகத்தான் இத்தனை கடுமையான எதிர்வினைகள். தந்தை பெரியார் யாரைபற்றியும் (முக்கியமாக அவரின் அரசியல் எதிரியான‌ ராஜாஜியை பற்றியும்) இவ்வாறு என்றும் கூறியதில்லை. அவர்தாம் பெரியார். பண்பாளர்.

  32. ROSAVASANTH said...

    http://pesalaam.blogspot.com/2008/03/ii.html

    வா.மணிகண்டன்,


    இந்த பதிவை படிக்க நேர்ந்து எனக்கு வந்த `உலகம் எவ்வளவு விநோதமனது' என்ற ஆச்சரியக்குறியுடனான புன்சிரிப்பிற்கு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த பதிவின் நேர்மையின்மை கலந்த சந்தர்ப்பவாதம் (அதாவது ஹிப்பாக்கரசி)பற்றி பேசும் அளவிற்கு எனக்கு சக்தியும் பொறுமையும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு அல்லது மற்ற யாருக்க்காவது விளங்கினால் பயனளிக்க கூடும் என்பதற்காக ஒரே ஒரு பாயிண்ட்.
    (சுஜாதா மீதான சுகுணாவின் தாக்குதல் எனக்கு ஒப்புதலில்லை என்பது வேறு விஷயம்).


    தங்கள் அடையாளத்தை விமர்சித்து கொள்ளாத, ஒருவகையில் பார்பனிய எதிர்ப்பு அரசியலை மறுக்கும்/எதிர்க்கும் சுஜாதா போன்றவர்களை தூக்கி பிடிக்கும் நீங்கள், எந்த தகுதியின் அடிப்படையில் தன் பார்பன அடையாளத்தை வெகுவாக சுய விமர்சனம் செய்துகொண்ட, பார்பனிய அரசியலை (தனது பாணியில்) எதிர்த்து வரும் ஞாநியை மிக கேவலமான முறையில் திட்டி எழுதினீர்கள் என்பது கேள்வி. மீண்டும் சொல்வதானால் சுஜாதா, சுராவுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், எந்த அடிப்படையில் ஞாநியை `கடைந்தெடுத்த சாதி வெறியர்' என்றீர்கள் என்பது கேள்வி. சுகுணாவின் பதிவில் உள்ளடக்கமாக இந்த கேள்வி உள்ளது. அதற்கு பதில் சொல்லாமல், எதோ எலக்கியவாதி ஆகிவிட்டது போன்ற, மேலோட்டமான வாசிப்பு கொண்டவர்களிடன் செல்லுபடியாகும் பாவனையை விட்டுவிட்டு, முடிந்தால் இந்த ஒற்றை கேள்விக்கு பதில் சொல்லுங்கள் - ஏற்கனவே இந்த பதிவில் சுகுணாவின் வசைகளை கண்டிக்கும் பாவனையில் நாகரீகமான பதில் வசைகளை வைத்தது போல் அன்றி, ஒரு தர்க்கரீதியான வரிகளில்.

  33. கார்க்கிபவா said...

    பார்ப்பன எதிர்ப்பு கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு பாருங்கள் நண்பரே!!! தமிழன் என்பதை ஒரு அடையாளமாக, பெருமையாக ஒருவர் நினைக்கும் போது வேரொருவர் தன்னை மத ரீதியாக பெருமை பட்டு கொள்வதில் என்ன முரண்பாடு இருக்க முடியும்? உலகம் பெரிது. உங்களை நீங்களே ஒரு கூட்டுக்குள் அடைத்து கொள்ளாதீர்.