tag:blogger.com,1999:blog-26087005.post7376570300598222523..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: எழுத்தின் அரசியலும் அரசியல் எழுத்தும்...மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-26087005.post-11876479021774155102007-07-09T04:52:00.000-07:002007-07-09T04:52:00.000-07:00a well written detailed analysis, though one or tw...a well written detailed analysis, though one or two lines could be carefully revised - overall a well written article.<BR/><BR/>Regarding "parai naai" if i am correct it was not used as a translation of a street dog rather a dog was used as a symbol of particular caste and also several animals were used as a representation of different caste in the same story.<BR/><BR/>but the usage of a particular animal which by default gives a different impression have to be critisized severly irrespective of the public fame a writer has or had.<BR/><BR/>one also have to take into the happenings at the time of the release of such old stories (sama kaalathaya nihazhvuhal), which can be useful to uncover the underlying purposes of those stories. - ranjithகையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-36141740124603618942007-07-06T06:16:00.000-07:002007-07-06T06:16:00.000-07:00Regarding puthumaipitthan,Eppothum mudivil enra si...Regarding puthumaipitthan,<BR/><BR/>Eppothum mudivil enra siru kathai-il. annal atthu translation illai -<BR/>melum antha kathai-il athu sariagave theriyum - ella jathiyum anth kathai-il kindal adithu erupparAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-32188845017809426172007-07-06T05:43:00.001-07:002007-07-06T05:43:00.001-07:00ஆழியூரான், சரியாக நினைவில் இல்லை. சரிபார்த்துச் சொ...ஆழியூரான், சரியாக நினைவில் இல்லை. சரிபார்த்துச் சொல்கிறேன்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-66963903448005482932007-07-06T05:43:00.000-07:002007-07-06T05:43:00.000-07:00ஆழியூரான், சரியாக நினைவில் இல்லை. சரிபார்த்துச் சொ...ஆழியூரான், சரியாக நினைவில் இல்லை. சரிபார்த்துச் சொல்கிறேன்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-19367100224106365452007-07-06T05:41:00.000-07:002007-07-06T05:41:00.000-07:00/அப்படியானால் தாங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என்பத.../அப்படியானால் தாங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொள்ளலாமா/<BR/><BR/><BR/>கொள்ளலாமே! தெரிந்துகொண்டு சுகுணாதிவாகர் இன்னசாதியைச் சேர்ந்த நாதாறி/பன்னாடை என்று நீங்கள் எழுதலாமே!மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-4278748510731205562007-07-05T07:43:00.000-07:002007-07-05T07:43:00.000-07:00விரிவான தரவுகள் கொண்ட மிக நல்ல கட்டுரை. செயலிலும் ...விரிவான தரவுகள் கொண்ட மிக நல்ல கட்டுரை. செயலிலும் பேச்சிலும் வெளிப்படையான பார்ப்பனராக மாறிவிட்ட நல்லி குப்புசாமி ஷெட்டிக்கு இந்த இலக்கிய வர்த்தகர்கள் சொரிந்து விடுவதும், புத்தகக் கண்காட்சியில் அந்தப் பார்ப்பன ஷெட்டியாரை பேருரை ஆற்றவிட்டு உவகையடைவதும் மகாக்கொடுமை. <BR/><BR/>எனக்கு ஒரு சந்தேகம். புதுமை பித்தன் street dog என்பதை பறைநாய் என மொழி பெயர்த்தது எந்த நூலில்..?பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-11826723678041502262007-07-05T06:00:00.000-07:002007-07-05T06:00:00.000-07:00//லீனாமணிமேகலையின் ஒரு கவிதையைப் படித்து அதிர்ந்து...//லீனாமணிமேகலையின் ஒரு கவிதையைப் படித்து அதிர்ந்துபோனேன். அவை சல்மாவின் ' எல்லாப்புரிதல்களுடனும் விரிகிறதென் யோனி' என்னும் வரியை முதலாய்க்கொண்டு பிரதியெடுத்ததாய் இருந்தது.//<BR/><BR/>என்ன கொடுமை சார் இது? :-(((((லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-39769578827019929192007-07-04T23:06:00.000-07:002007-07-04T23:06:00.000-07:00பிறப்பினடிப்படையில் ஒரு கலைஞனை/படைப்பாளியை மதிப்பி...பிறப்பினடிப்படையில் ஒரு கலைஞனை/படைப்பாளியை மதிப்பிடலாமா என்பது ஒரு மய்யமான கேள்வி.கலைஞன் மட்டுமல்ல, அரசியலாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியவர்கள் குறித்தும் முன்வைக்கப்படும் இக்கேள்வி அடித்தட்டுமக்களிடமிருந்து எழும் பலகேள்விகளை மவுனப்படுத்தும் தந்திரம் கொண்டது. இதன்மூலம் சுலபமாக எதிர்த்தரப்பைச் சாதியவாதியாக நிறுத்திவிட முயலும் வசதியும்கொண்டது.<BR/><BR/><BR/>//'ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது' என்றார் பேராசான் கார்ல்மார்க்ஸ். இந்தியச்சமூகம் வர்க்கம் மற்றும் சாதியச்சமூகமாக விளங்குவதால் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கம் மட்டுமல்ல சாதியின் முத்திரையுமிருக்கிறது. //<BR/><BR/>அப்படியானால் தாங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொள்ளலாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-47186344950030768842007-07-04T22:26:00.000-07:002007-07-04T22:26:00.000-07:00பின்தொடரும் வால்...(வால்தான்ப்பா பின்தொடரும். நிழல...பின்தொடரும் வால்...<BR/><BR/>(வால்தான்ப்பா பின்தொடரும். நிழல்கூட நைட்டானா மறைஞ்சுடும்.((-...)<BR/><BR/>இது வெறுமனே அய்யனார்க்கான எதிர்வினை மட்டுமில்லை. எனது 'பெண் எழுத்தாளர்களிடம் சில கேள்விகள்' பதிவில் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். ஆனால் மய்யமான பல கேள்விகளை விடுத்து 'காலச்சுவடு மற்றும் உயிர்மையில் ஏன் எழுதக்கூடாது' என்கிற ஒற்றைக் கேள்வியிலேயே விவாதமானது மய்யங்கொண்டிருந்தது. அப்போது விரிவாக எழுதமுடியாத சூழல். இப்போது இதனைப் பயன்படுத்திக்கொண்டமைக்காக இந்த வாய்ப்பையளித்த நண்பர் அய்யனார்க்கு நன்றி.<BR/><BR/>அய்யனார் ஏதோ எனது பதிவைப் படித்துப் பலர் சு.ராவின் பிரதிகளைப் படிக்காமலே போய்விடும் என்று தன் அச்சத்தைத் தெரிவித்திருந்தார். தேவையற்ற பயம். எனது எழுத்துக்கள் அந்தளவிற்கு செல்வாக்கு செலுத்துபவை என்று நான் கருதவில்லை. அத்தகைய மயக்கமும் எனக்கில்லை. நான் அய்யனாரைப் போல ஒரு சாதாரணமான சகபதிவர்தான். பல கருத்துக்களோடு இந்தக் கருத்துக்களை முன்வைக்கிறேனே அல்லாது சு.ராவைப் படிப்பதைத் தடுக்கிற நோக்கமோ, காலச்சுவட்டின் வியாபாரத்தைக் கெடுக்கிற நோக்கமோ எனக்கில்லை.<BR/><BR/>பிரேமிளைப் 'படிமத்தின் தந்தை' என்று குறிப்பிடும் அய்யனார் அவர் மீது தேவையற்ற அவதூறுகளைத் தெளித்த ஞானக்கூத்தனின் நூலையே தூக்கியெறிந்துவிட்டேன் என்றும் எழுதுகிறார். அப்படியானால் அய்யனார் முதலில் தூக்கியெறிய வேண்டியது சு.ராவின் நூற்களைத்தான். அவரது நடுநிசிநாய்களில் பல கவிதைகள் பிரேமிளைப் பற்றியது. பிரேமிள் வாழும்போது வைத்த விமர்சனங்களுக்கு தனது இயல்புப்படியே கள்ளமவுனம் சாதித்த சு.ரா அவர் இறந்ததும் அவரைப் பற்றி எழுதித் தன் அரிப்பைத் தீர்த்துக்கொண்டார். இறந்துபோன சு.ராவை விமர்சிக்கலாமா என்று பலர் பதைபதைப்பதையும் நினைவுபடுத்தி இதை டைமிங் ஜோக்காக ரசிக்கலாம்.<BR/><BR/>மேலும் இறந்துபோனவர்களை விமர்சிக்கக்கூடாது என்றால் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ முதல் சாவர்க்கர், ஹெட்கேவர், 'தீண்டாமை என்பது ஷேமகரமானது' என்று சொன்ன கிழபாடு சங்கரன், ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், நாளைக்குச் சாகப்போகும் கருணாநிதி அப்புறம் அய்ம்பது ரூபாய்க் கடன்வாங்கித் தராமலே செத்துப்போன பக்கத்துவீட்டு இருளாண்டி வரை யாரையும் விமர்சிக்கமுடியாது என்பதால் எனக்கு அந்த சென்டிமெண்டில் நம்பிக்கையில்லை என்பதையும் நண்பர் அய்யனார்க்குப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<BR/><BR/>பிறப்பினடிப்படையிலேயே யாரும் இங்கு எந்த எழுத்தாளரையும் விமர்சிக்கவில்லை. சு.ரா மீது கடும் விமர்சனங்களை வைக்கும் எழுத்தாளர்கள் பார்ப்பனச்சாதியில் பிறந்த ஜி.நாகராஜன், நகுலன் ஆகியோரையும் கொண்டாடத்தவறவில்லை. வெள்ளாள ஆதிக்கச்சாதியில் பிறந்த ஜெயகாந்தன் அவ்வப்போது வெளிப்படுத்தும் பார்ப்பன அடிமைமனோபாவத்தை விமர்சிக்கும் எழுத்தாளர்களும்கூட ஜெயகாந்தன் தனது ஆரம்பகாலப் பிரதிகளில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ததைச் சுட்டிக்காட்டுவதையும் தயங்குவதில்லை.<BR/><BR/> பாரதியின் பிரதிகளில் வெளிப்படும் பார்ப்பனீய மனோபாவம் குறித்து எனக்குக் கடுமையான விமர்சனங்கள் இருப்பதைப் போலவே பாரதியின் பல கவிதைகளும் எனக்குப் பிடிக்கும். ஆனால் சு.ராவின் எந்தப் படைப்பும் என்னை ஈர்த்ததில்லை.<BR/><BR/>வைரமுத்து பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். பொதுவாக சாகித்ய அகாதெமி விருது போன்றவற்றில் அக்கறை இல்லாததைப் போலவே சு.ரா போன்ற 'நவீன' எழுத்தாளர்கள் காட்டிக்கொள்வர். ஆனால் வைரமுத்து போன்றவர்களுக்கு அந்த விருது கொடுக்கப்பட்டால், 'விருது கொடுப்பதில் அரசியல்', 'இது கொடுக்கப்பட்ட விருது அல்ல, வாங்கப்பட்ட விருது' என்று குய்யோமுய்யோ என்று கூக்குரலிடுவார்கள்<BR/><BR/>வருடாவருடம் இந்த விருது வழங்கும் வைபவத்தின்போது இந்த நவீன எழுத்தாளர்கள் அலறுவதைப் பார்த்தால் படு காமெடியாக இருக்கும். காலச்சுவடில் 'சாகித்திய அகாதெமி விருதுக்குத் தகுதியானவர்கள் யார்?' என்று எழுத்தாளர்களிடம் 'கருத்து' கேட்பார்கள். அவர்களும் மாய்ந்து மாய்ந்து பட்டியல் கொடுப்பார்கள். சமயங்களில் அவற்றில் அ.மார்க்சின் பெயரெல்லாம் கூட இடம்பெற்றிருக்கும். ஆனால் எல்லா எழுத்தாளர்களின் பட்டியலிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் பெயர் சுந்தரராமசாமி.<BR/><BR/>நான் நவீனகவிதை எழுதி நாசமாய்ப் போவதற்கு முன்பு வரை வைரமுத்துவின் ரசிகன். இப்போதும் அவரது திரைப்பாடல்களுக்கு ரசிகன்தான். உண்மையில் வைரமுத்துவிற்கு அவரது திரைப்பாடல்களுக்காக சாகித்ய அகாதெமி விருது கொடுத்தால் அதிலொன்றும் தவறில்லை. அவரின் பாடல்கள் சு.ராவின் கவிதைகளைவிட சிறந்தவை என்பது எனது கருத்து.<BR/><BR/>சுந்தரராமசாமியின் ரசிகைகளைத் துரத்தித் துரத்திக் கொலைசெய்பவன் என்று 'சிவப்புரோஜாக்கள் கமலஹாசனின்' பிம்பத்தை எனக்கு ஏற்றிவைத்துவிட்டார். அதை ஒரு கவிதை என்ற அளவில் எடுத்துக்கொள்ளுங்களேன். 'கொலைவாளினை எடுடா மிகுக் கொடியோர்செயல் அறவே' என்று பாரதிதாசன் சொன்னதற்காக அவரைக் கொலைமுயற்சி மற்றும் வன்முறையைத் தூண்டுதல் ஆகியபிரிவுகளில் எப்படிக் கைதுசெய்ய முடியாதோ, 'செகத்தினை அழித்திடுவோம்' என்றதற்காக பாரதியைத் (இந்து? பார்ப்பன?) தீவிரவாதி என்று பொடாவிலே எப்படிப் போடமுடியாதோ அதுபோலத்தான் இதுவும்.<BR/><BR/>பிள்ளைகெடுத்தாள்விளை பற்றி ஒரு வார்த்தை : பி.கெ.வி ஒரு தலித்விரோத நாவல் இல்லையென்றும் (அதுவும் எப்படி, அந்தப் பையனைக் கெடுத்த பெண் தலித்பெண்ணில்லை, நாடார்பெண்தான் என்கிற ரீதியில்...) தமிழின் நல்ல சிறுகதைகளில் ஒன்று என்றும் அதை ஆதரித்த ஒரே தலித் எழுத்தாளர் ரவிக்குமார்தான். வாழும்வரை அதன்மீதான கண்டனங்களுக்கு மௌனத்தாலேயே சிறகடித்துக்கொண்டிருந்தார் சு.ரா. அவர் இறந்தபிறகு காலச்சுவடு அதைப் பாராட்டி ரவிக்குமார், பஞ்சாங்கம், அ.ராமசாமி போன்ற அவரது ஆதரவாளர்கள் எழுதிய கட்டுரையைத் தொகுத்து 'பிள்ளைகெடுத்தாள்விளை- சில எதிர்வினைகள்' என்னும் தொகுப்பைக் கொணர்ந்தது.<BR/><BR/>நான் என்னுடைய கவிதைகளைப் பெரும்பாலும் சிறுபத்திரிகைகளுக்கு அனுப்பியது கிடையாது. கட்டுரைகளை மட்டுமே அனுப்பியிருக்கிறேன். கவிதைகள் சில நண்பர்களின் முயற்சியால் மட்டுமே இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. என்னுடைய கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை எந்த சிறுபத்திரிகையிலும் வெளிவராதவை. ஆனால் வானம்பாடி இலக்கியப்பாணியிலிருந்து 'நவீன'(?) கவிதைக்கு நான் மாறிய காலகட்டத்தில் இந்த அரசியல் எல்லாம் தெரியாத பாலகனாய்க் கவிஞர்.யவனிகாசிறீராமின் ஆலோசனையின் பெயரில் காலச்சுவடிற்குக் கவிதைகளை அனுப்பியிருந்தேன்.<BR/><BR/>அப்போது அதற்குப் பதிலாக 'உங்கள் கவிதைகளில் நுட்பம் போதவில்லை' என்று எழுதிக் கண்ணன் கையெழுத்திட்ட கடிதம் மட்டும் ஏனோ இன்னமும் என்னிடம் பத்திரமாகத் தங்கிவிட்டது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகள் கழித்து அவர் எனக்கு அனுப்பிய வக்கீல்நோட்டீஸ் மட்டும் என்னிடமில்லை.<BR/><BR/>தன் அதிகாரத்தை விமர்சிப்பவர்களுக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்புவது, மேலிடத்துச் செல்வாக்கைப் பயன்படுத்திப் போலீஸ் ஸ்டேசனில் லாடம் கட்டுவது, அவர்கள் வேலை செய்யும் பத்திரிகை அலுவலகங்களுக்கே போன் செய்து அவர்களின் வேலையைக் காலிபண்ண முயற்சிப்பது, வெளிநாட்டில் வசிக்கும் எழுத்தாளர்கள் என்றால் அவர்கள் இந்தியா வரும்போது அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் மேற்கொள்வது<BR/>இவையெல்லாம் காலச்சுவடிற்குப் புதிதில்லை.<BR/><BR/>காலச்சுவடின் அதிகாரத்தைத் தொடர்ந்து விமர்சித்த பலரில் தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான குமாரசெல்வா போன்ற சிலர் எழுதுவதையே நிறுத்தி ஒதுங்கிக்கொண்டனர். ஒருசிலர் காலச்சுவடு முகாம்களிலேயே தஞ்சமடைந்துவிட்டனர். மிஞ்சியிருக்கும் நேர்மையான ஒருசிலரே காலச்சுவடு மற்றும் உயிர்மையில் பங்குபற்றாமல் தனித்தியங்குகின்றனர். காலச்சுவடு மற்றும் உயிர்மையிலிருந்து ஒதுங்கிப் 'பனிக்குடம்' என்னும் இதழை நடத்தி வரும் கவிஞர்.குட்டிரேவதி போன்றவர்களையும் இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம்.<BR/><BR/>சு.ரா மற்றும் காலச்சுவடிடமிருந்து சில தனிப்பட்ட காரணங்களால் விலகிவந்த பலருக்கும் (ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், சங்கரராமசுப்பிரமணியன், லட்சுமிமணிவண்ணன் என்று இந்தப் பட்டியல் நீளும்.) இலக்கியக் கோட்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சு.ரா மற்றும் காலச்சுவட்டின் நிலைப்பாட்டிலிருந்து பெரிதும் மாற்றமில்லை.<BR/><BR/>கவிஞர். தமிழ்நதி எனது முந்தைய பதிவான சுந்தரராமசாமி: உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும் என்னும் பதிவிற்கு ஒரு பின்னூட்டமிருந்தார். ஒரு சில காரணங்களால் அவற்றை வெளியிடமுடியவில்லை. ஆனாலும் அதன் சாரங்களாக நான் கருதுவதற்கு மட்டும் சில வார்த்தைகளைச் சொல்லிக்கொள்ளலாமென்று விரும்புகிறேன். 'உங்களைப் பற்றிய வலைப்பக்கத்தில் அதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரல்' என்று போட்டுவிட்டு இன்னாரைத்தான் படிக்க வேண்டும் இன்னாரைப் படிக்கக்கூடாது என்று நீங்கள் சொல்வதும் ஒரு அதிகாரமில்லையா என்று கேள்வியெழுப்பியிருந்தார்.<BR/><BR/>பொதுவாக படிக்கக்கூடாது என்று சொல்வதே பார்ப்பனீயம்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகளை மட்டுமே வாசிப்பின் முன்நிறுத்துவது என்பது அதிகாரம் மட்டுமல்லாது வன்முறையும் கூட. மேலும் சு.ராவைப் படிக்காமலே எப்படி அதை விமர்சிக்கமுடியும்? எனவே அத்தகைய தொனி என் வார்த்தைகளில் தட்டுப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.<BR/><BR/>அதேபோல 'ஈழத்தமிழராயிருப்பதால் தமிழ்ச்சிறுபத்திரிகை அரசியல் குறித்த பரிச்சயமற்றிருந்திருக்கலாம்' என்பதையும் 'ஈழத்தமிழர்கள் அறிவிலிகள் அல்லர், அவர்களுக்கும் சிறுபத்திரிகை அரசியல் பரிச்சயம்தான்' என்கிற ரீதியில் மறுப்பு எழுதியிருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் வாழும் இலக்கிய உயிரிகளால் இந்த அரசியல் வெப்பத்தை அண்மையிலிருந்து உணரும் வாய்ப்பு அதிகம் என்னும் பொருள்படவே எழுதியிருந்தேன். எப்படி என்னால் ஈழத்து இலக்கியச்சூழலை வெறுமனே பிரதிகள் வழியாகவே அறியமுடிகிறதோ அதைப்போல என்ற கருத்தினடிப்படையிலேயே அது அமைந்திருந்தது. மற்றபடி ஈழத்தமிழர்களை இழிவுசெய்வதற்காக அல்ல.<BR/><BR/>கவிஞர்.தமிழ்நதி தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என்றே கருதுகிறேன். அவர்மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் அன்பும் மரியாதையும் உண்டு. பொதுவாக பெண் எழுத்துக்கள் மற்றும் தலித் எழுத்துக்கள் சில வரையறுக்கப்பட்ட அரசியல் சூத்திரங்களால் இயங்குவதால் அவை போலச்செய்த எழுத்துக்களாக மாறிவிட்டன என்று கருதுகிறேன்.. மூன்று தீராநதிகளுக்கு முன்னிருக்கலாம், லீனாமணிமேகலையின் ஒரு கவிதையைப் படித்து அதிர்ந்துபோனேன். அவை சல்மாவின் ' எல்லாப்புரிதல்களுடனும் விரிகிறதென் யோனி' என்னும் வரியை முதலாய்க்கொண்டு பிரதியெடுத்ததாய் இருந்தது. ( இந்த 'போலச்செய்தல் விமர்சனம்' என்னுடைய கவிதைகளென்று நம்பியிருக்கக்கூடிய வஸ்துக்களையும் சேர்த்துத்தான். என்னுடைய கவிதைகள் கூட கெட்டவார்த்தைகள் நிரம்பிய கொள்கலனாக மாறிவிட்டனவோ என்கிற அய்யமும் எனக்குண்டு).<BR/><BR/>ஆனால் அப்படிப்பட்ட எழுத்துக்களைத் தமிழ்நதியின் பிரதிகளில் காண ஏலாது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் எல்லா எழுத்துக்களும் தேங்கி முடைநாற்றமெடுத்தும் கூறுவதுகூறல் என்னும் குற்றத்திற்கும் ஆளாகவும் செய்கின்றன. அதேபோல தமிழ்நதியின் எழுத்துக்களும் ஆகுமா என்பது குறித்த ஆருடம் எதுவும் சொல்லமுடியவில்லை. இருந்தபோதும் ஒரு சில பிரச்சினைகளூடே (இதுவும்கூட என்னுடைய தனிப்பட்ட கருத்து, இங்கு பிரச்சினைகள் என்று குறிப்பிடுவது என்னுடைய பிரச்சினைகளாக - வாசிப்பு, புரிதல் மற்றும் முன்தீர்மானங்கள் குறித்ததாகக்கூட இருக்கலாம்.) அவை தனித்துவமிக்க எழுத்துக்களென்றே கருதுகிறேன்.<BR/><BR/>அத்தகைய படைப்பாளியை ஒரு சாதாரண இலக்கிய வாசகனாகிய நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக என் மன்னிப்பைக் கோருகிறேன்.<BR/><BR/>நண்பர் அய்யனார் எனக்கு அறிமுகமான விதமே ஒரு சுவாரசியம்தான். அவரது பதிவுகளில் இருந்த சிறுபத்திரிகை வாசிப்புச்சாயலைக் கண்டு 'நீங்கள் காலச்சுவடு அய்யனாரா?' என்று ஒரு பின்னூட்டமிருந்தேன். (அய்யனார் காலச்சுவடின் தீவிர ஆதரவாளராயிருந்தவர். தற்போது பவுத்த அய்யனார் என்ற பெயரில் எழுதிவருகிறார். 'மேன்ஷன்கவிதைகள்' என்பது அவரது தொகுப்பு. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு குழாமிலிருந்து விலகினார். அதன்பிறகு கா.சுவின் ஆசிரியர் 'அய்யனார் ஒரு பிரெஞ்சுக்காரரிடம் 'காப்கா படித்திருக்கிறீர்களா என்று கேட்டுத் தொந்தரவு செய்ததாக ஒரு பத்தியில் எழுதி அய்யனாரின் அறிவின் ஒளிவட்டத்தை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தனது மேதாவித்தனத்தையும் எவரையும் கழுத்தறுக்கத் தயங்காத பார்ப்பனக்கீழ்மைக்குணத்தையும் காட்டியிருந்தார்) உடனே அய்யனாரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, 'இல்லை. ஆனால் நானும் காலச்சுவடின் வாசகன்தான்' என்று. இந்த உம்மையில் என்னையும் காலச்சுவடின் வாசகனாக்கியிருந்தார் அய்யனார்.<BR/>காலச்சுவடைப் படிப்பதனால் காலச்சுவடின் வாசகன் என்றால் நானும் காலச்சுவடின் வாசகன்தான். காலச்சுவடிற்கு மட்டுமல்ல விஜயபாரதம், சில சமயங்களில் விருந்து போன்ற பத்திரிகைகளுக்கும் கூட.<BR/><BR/>அந்த அய்யனார் இந்த அய்யனார் இல்லை என்று எனக்கு 'விளங்கிற்று'. ஆனாலும் தோழர்.அசுரன் ஒரு பதிவில் 'அய்யனார் குடுமியா?' என்று கேட்டிருந்தார். அய்யனாரும் 'இல்லை' என்று பதிலளித்திருந்தார். நான் அறிந்தவரை இந்த பதிவர் அய்யனார், பவுத்த அய்யனாரில்லை. ஆனாலும் ஒரு அனானி நண்பர் அவர்தான் இவர் என்று விடாப்பிடியாய்ச் 'சாதிக்கிறார்'. (எனக்கு இப்போது அய்யனார் 'நீயா நீயா' என்று எழுப்பப்படும் கேள்விக்கு ' நானா, நானா, நோ, நோ, நான் அவனில்லை' என்று பாடுவதாய் மனக்கண்னில் பிம்பம் விரிகிறது. என்ன அய்யனார் பக்கத்தில் சினேகா, நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்திரெட்டி போன்ற தேவதைகள்தான் இல்லை.). அப்படியே இவர் பவுத்த அய்யனாராய் இருந்தால்தான் என்ன பிரச்சினை? மேலும் பவுத்த அய்யனார் ஒரு பார்ப்பனர் அல்ல.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-32957784513271253302007-07-04T20:54:00.000-07:002007-07-04T20:54:00.000-07:00வெகு விரிவான,மிகவும் அவசியமான கட்டுரை திவாகர்.இக்க...வெகு விரிவான,மிகவும் அவசியமான கட்டுரை திவாகர்.இக்கட்டுரையில் ஒரு விதயம் உறுத்தலாக இருக்கிறது.<BR/><BR/>/ஒரு வெள்ளாளன் எழுதிப் பார்ப்பான் மொழிபெயர்த்தது தலித் இலக்கியம் என்றால் 'நெஞ்சுபொறுக்குதில்லையே'/<BR/><BR/>தோட்டியின் மகன் படைப்பு ரீதியிலாக விளிம்பின் வலிகளை சரியாய் முன்நிறுத்தியது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.ஒரு தலித் இதை எழுதியிருந்தால் ஒரு வேளை இந்த நாவல் பரவலாய் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம்.இருப்பினும் தலித என்கிற தகுதி மட்டுமே போதுமானதாகி விடாது.அதே சமயம் விளிம்பின் மொழி விளிம்பு மக்களால் மட்டுமே பேசப்பட வேண்டும் என்கிற வாதமும் எனக்கு சரியாய் படவில்லை.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-86759549414402055622007-07-04T13:58:00.000-07:002007-07-04T13:58:00.000-07:00கட்டுரைக்கு பின்னால் உள்ள உங்கள் தெளிவான பார்வை அர...கட்டுரைக்கு பின்னால் உள்ள உங்கள் தெளிவான பார்வை அருமை!! <BR/><BR/>பூணுல் அறுப்பு சம்பவத்தைக் கொண்டு சுஜாதா எழுதிய ஒரு சிறுகதையை விமர்சித்த கட்டுரையை எங்கேயோ படித்த ஞாபகம் (கீற்றில் என்று நினைக்கிறேன்).<BR/><BR/>வாழ்த்துக்கள்!!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-48610207261026159982007-07-04T06:54:00.000-07:002007-07-04T06:54:00.000-07:00உள்ளேன் அய்யா...எப்போதிலிருந்து சாருவை காப்பியடிக்...உள்ளேன் அய்யா...<BR/><BR/>எப்போதிலிருந்து சாருவை காப்பியடிக்க கற்றூக் கொண்டீர்கள்?<BR/><BR/>முழுசும் படிக்கலை...காத்தால ஓசீ ப்ரிண்ட் எடுத்து படிச்சுட்டு நாங்களும் விமரிசையாக விமரிசனம் செய்யறோம்<BR/><BR/>வர்ர்ர்ரோஓஓஓஓம்Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-3580565181872670972007-07-04T05:17:00.000-07:002007-07-04T05:17:00.000-07:00நீண்ட சுவராசியமான கட்டுரை. கட்டுரை வரிகளை கட்டுடைப...நீண்ட சுவராசியமான கட்டுரை. கட்டுரை வரிகளை கட்டுடைப்பு (:-))) செய்து விமர்சிக்க அவகாசமில்லை. ஆனால் இது ஒரு அவசியமான கட்டுரை. <BR/><BR/>தமிழக இலக்கிய சூழலில் பார்ப்ப்னியத்தின் ஆதிக்கத்தை விமரிசையாக அம்பலப்படுத்தியுள்ளது கட்டுரை.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-57916733632134858792007-07-04T04:31:00.000-07:002007-07-04T04:31:00.000-07:00அற்புதமான கட்டுரை சுகுணா திவாகர்.எழுத்தின் ஊடாக இய...அற்புதமான கட்டுரை சுகுணா திவாகர்.<BR/>எழுத்தின் ஊடாக இயங்கும் அரசியலை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறிர்கள். தமிழ் இலக்கிய உலகமே இரண்டு பதிப்பகங்களின் கோமணத்துணிக்குள் கட்டி வைக்க முயற்சிகள் நடைபெறும் வேளையில் சிறப்பானதொரு மாற்றுப் பார்வை. போரட்ட களத்தில் எதிர்தலைமையிலும் பார்ப்பனியத்தை நிறுத்திக் கொளவது பார்ப்பனியத்தின் ஒரு யுக்தி. சுந்தரா ராமசாமி. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து படித்து வருபவர்களை எல்லாம் நேர்மையற்றவர்களாக, வக்கிர மனம் படைத்தவர்களாக சித்தரிப்பதை என்பது தொடர்ந்து வரும் நிகழ்வுதான். ஏன் என்று கேட்டால் அது படைப்பாளியின் சுதந்திரம். அடுத்தவன் மீது சேறுபூச படைப்பு சுதந்திர முக்காடு போட்டுத் திரியும் பேடிகளே இவர்கள்<BR/><BR/>பேராசியர் சுப.வீ தன்னுடைய பெரியாரின் இடதுசாரித் தமித்தேசியம் நூலில் இது குறித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மிகப்பொருத்தமான வார்த்தைகள் அவை.<BR/><BR/>//ஒருவன் கொடுக்கும் நிலைமையில் இருக்கிறான், இன்னொருவன் வாங்கும் நிலைமையில் இருக்கிறான் என்னும் உணர்வற்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுதான் அது. //<BR/>மிக முக்கியமான செய்தி இதுதான்.<BR/><BR/>இந்த பதிவை எழுத நீங்கள் எடுத்து கொண்ட உழைப்பு பாரட்டத்தக்கதுமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-3420168644893264082007-07-04T04:27:00.000-07:002007-07-04T04:27:00.000-07:00//பிறப்பினடிப்படையில் ஒரு கலைஞனை/படைப்பாளியை மதிப்...//பிறப்பினடிப்படையில் ஒரு கலைஞனை/படைப்பாளியை மதிப்பிடலாமா என்பது ஒரு மய்யமான கேள்வி.கலைஞன் மட்டுமல்ல, அரசியலாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியவர்கள் குறித்தும் முன்வைக்கப்படும் இக்கேள்வி அடித்தட்டுமக்களிடமிருந்து எழும் பலகேள்விகளை மவுனப்படுத்தும் தந்திரம் கொண்டது. இதன்மூலம் சுலபமாக எதிர்த்தரப்பைச் சாதியவாதியாக நிறுத்திவிட முயலும் வசதியும்கொண்டது.//<BR/><BR/>நல்ல கட்டுரை சுகுணா, :)))))))))))<BR/><BR/><BR/><BR/> ஆனால் லேசாக உண்மைத்தமிழன் வலைப்பக்கம் போனது போல் இருக்கிறது நீளம். <BR/><BR/><BR/>இரவு கடற்கரையில் ஜமாவரவனையான்https://www.blogger.com/profile/18373577758026393085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-47982046997997148962007-07-04T03:50:00.000-07:002007-07-04T03:50:00.000-07:00என்னதான் முசுடா இருந்தாலும் :)உம்ம எழுத்து சும்மா ...என்னதான் முசுடா இருந்தாலும் :)உம்ம எழுத்து சும்மா அதிருதுல்ல<BR/><BR/>மன்றத்து சார்பா வச்சதுமுபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.com