tag:blogger.com,1999:blog-26087005.post3331180545302924125..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: கலைஞரின் 'நெஞ்சுக்குநீதி'யும் வீரமணியின் 'உலகத்தலைவரும்'மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-26087005.post-51989897347749431352007-10-06T13:02:00.000-07:002007-10-06T13:02:00.000-07:00நண்பர் சுகுணாவிற்கு,தாமதமான பின்னோட்டம். தமிழ்மணம...நண்பர் சுகுணாவிற்கு,<BR/><BR/>தாமதமான பின்னோட்டம். தமிழ்மணம் வழியாகவே இதனை அடைந்தேன். திராவிட இயக்கங்கள் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகள் அவசியம் குறிப்பாக தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. <BR/><BR/>//இந்துத்துவவாதிகள் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள் என குற்றம் சாட்டுவதற்கு முன் திராவிட மற்றும் திராவிடர் இயக்கங்களின் தலைவர்கள் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டுமென்றே தோன்றுகின்றன//<BR/><BR/>வரலாற்றை திரித்தல் என்பதைவிட ஒரு அரசியல்சார்பு கதையாடலை கட்டமைக்க முயல்கிறார்கள். வரலாறு என்பதும் ஒரு புனைவுதான். அதிலும் எளிமையாக ஏமாற்றக்கூடிய உண்மை என்கிற முகமூடியை அவை அணிந்துள்ளன. திராவிட இயக்கம் அதற்கு விதிவிலக்கல்ல. கருணாநிதியின் வரலாற்றை புனைவாக முன்வைத்த மணிவண்ணனின் அமைதிப்படை அமாவாசை இப்பிம்பத்தை சரியாக புரிந்துகொள்ள உதவும். கோவிலில் தேங்காய் பொறுக்கியவன் ஒரு நாட்டின் முதல்வராவதற்கான அதிசயத்தக்க உழைப்பும் அரசியலும் அப்படத்தின் உள்ளியங்கும் கதையாடல். <BR/><BR/>தி.மு.க.-வை கண்ணீர்த்துளி இயக்கம் என்கிற பெரியாரின் உருவகம் மிகச்சிறந்த ஒரு அரசியல் சொல்லாடல். அதனை ஆய்ந்தாலே திராவிட உணர்வு எப்படி பண்பாட்டு மூலதனமாக திமுக -விற்கு மாறி உள்ளது என்பதை புரிந்து கொள்ளமுடியும். இக்கண்ணீர்துளிதான் அதன் உச்சத்தில் அதிமுக ஒப்பாரியாக மாற்றமடைந்து தமிழினத்தை பிற மொழியினரிடம் தலைகுனிய வைத்துள்ளது. பின்னோட்டம் விரிவாக செல்வதால்.. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதனை விவாதிக்கலாம். உங்கள் பதிவு அவசியமானது. நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-56536840742397148042007-10-06T01:52:00.000-07:002007-10-06T01:52:00.000-07:00மிதக்கும் வெளியாரே,உலகத்தலைவர் புத்தகத்தை நானும் ப...மிதக்கும் வெளியாரே,<BR/><BR/>உலகத்தலைவர் புத்தகத்தை நானும் படித்தேன். அதில் கொடி கருணாநிதியால் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிடபடவில்லை.<BR/> <BR/>"அம்முறையில் பார்க்கும்பொழுது இன்று நாம் உயர்த்தியிருக்கும் கொடி, இன்று நமது மாநாட்டுக்குத் தலைமை வகிக்கப் போகும் எனது நண்பர் தோழர் பி.ஷண்முக வேலாயுதம் அவர்களால் சித்திரிக்கப்பட்டதும், பல தோழர்களால் ஆமோதிக்கப்பட்டதுமாகும். (அப்போது ஈரோடு குருகுலத்திலே சண்முக வேலாயுதம், தவமணிராஜன், மு.கருணாநிதி, கருணானந்தம் முதலியோர் வாசம் புரிந்தனர். கொடிக்கு சிவப்பு நிறம் தேவைப்பட்டபோது முதல்வர் கலைஞர் தம் விரலைக் குண்டூசியால் குத்தி ரத்தத்தை பூசினார்)." பக்கம் 198. அந்த பக்கத்தில் பி.ஷண்முக வேலாயுதம் படமும் உள்ளது.<BR/><BR/>சிகப்பு நிறத்திற்காக ரத்தம் பூசியவர் எப்படி கொடிக்கு உரிமை கொண்டாட முடியும். இந்த விவகாரத்தில் தி.க. பெரியார் பிறந்த நாள் மலரில் விரிவாக விளக்கி இருந்தார்கள். எந்த ஆண்டு என்று நினைவில் இல்லை.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-28143313207122780182007-10-06T00:41:00.000-07:002007-10-06T00:41:00.000-07:00இன்னொரு திருத்தம்,சமீபத்தில் கலைஞரின் பவளவிழாமலரைப...இன்னொரு திருத்தம்,<BR/><BR/>சமீபத்தில் கலைஞரின் பவளவிழாமலரைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு கட்டுரை எழுதியுள்ள திருவாரூர் தென்னன் என்பவர் கலைஞரின் பள்ளித்தோழர். தனது பெயர்தான் தட்சணாமூர்த்தி என்றும் கலைஞர்தான் அதை மாற்றித் தென்னன் என்று வைத்தார் என்றும் ஆனால் பலர் கலைஞரின் இயற்பெயர் தட்சனாமுர்த்தி என்று குழப்புவதாகவும் எழுதியுள்ளார். மேலும் ராம. அரங்கண்ணல் எழுதிய ஒரு கட்டுரையில் பள்ளியில் தான் நடத்திய 'மாணவநேசன்' கையெழுத்துப்பிரதியில் 'அருட்செல்வன்' என்ற பெயரில் கருணாநிதி எழுதியுள்ளதாகவும் ஒருகுறிப்பு உள்ளது.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-62797475727615110542007-10-05T06:02:00.000-07:002007-10-05T06:02:00.000-07:00பெரியார் என்ற பெயரில் ஒரு படம் எடுத்து, இளம் தலைம...பெரியார் என்ற பெயரில் ஒரு படம் எடுத்து, இளம் தலைமுறைக்கு பெரியார் இவ்வளவுதானா என்ற ஒரு தவறான பார்வையையும், புரிதலையும் தந்த வீரமணியின் வரலாற்று சிந்தனை, நிகர்நிலை பல்கலைகழகம் தந்த நன்றிக்கடனோ? என்னவோ.<BR/>இவரெல்லாம் வரலாறு எழுதவில்லை என யார் கேட்டது. வாயை மூடிக்கொண்டு ஒழுங்காக வியாபாரத்தைக் கவனிக்கலாம்.இரா.முருகப்பன்https://www.blogger.com/profile/16970253728420016873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-39042080367850831692007-09-26T02:55:00.000-07:002007-09-26T02:55:00.000-07:00பிரபுராஜதுரை,எனக்குத் தெரிந்தவரை கருணாநிதியின் இயற...பிரபுராஜதுரை,<BR/><BR/>எனக்குத் தெரிந்தவரை கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். தட்சிணாமூர்த்தி, கருணாநிதி அனைத்துமே வடமொழிப்பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-77415233038843541912007-09-25T11:45:00.000-07:002007-09-25T11:45:00.000-07:00"பெரியாரியக்கத்திலிருந்தவரை கருணாநிதியும் சரி, அண்..."பெரியாரியக்கத்திலிருந்தவரை கருணாநிதியும் சரி, அண்ணாதுரை போன்ற திமுகவின் முன்னோடிகளும் சரி மொழிப்போராட்டங்களிலேயே பங்கெடுத்திருக்கின்றனரே தவிர எந்த சாதியொழிப்புப் போராட்டங்களிலுமல்ல"<BR/><BR/>ஆராயத்தகுந்த ஒரு குறிப்பு!<BR/><BR/>கருணாநிதியின் இயற்பெயர் அருட்செல்வன் என்று படித்ததாக நினைவுPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-18552227285322927702007-09-20T06:38:00.000-07:002007-09-20T06:38:00.000-07:00//கருணாநிதியின் இயற்பெயர் தட்சணாமூர்த்தி என்றும் அ...//கருணாநிதியின் இயற்பெயர் தட்சணாமூர்த்தி என்றும் அதையே கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார் என்றும் பலரும் சொல்கின்றனர். ஆனால் அப்படியான குறிப்புகளெதுவும் நெஞ்சுக்கு நீதியில் இல்லை. //<BR/><BR/>இப்படி ஒரு தகவலை வலையில் ஒருவர் பரப்பியிருந்தார்.குழப்பத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-56526311210973446712007-09-20T06:32:00.000-07:002007-09-20T06:32:00.000-07:00இந்துத்துவவாதிகள் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக...இந்துத்துவவாதிகள் வரலாற்றைத் திரிக்கிறார்கள், மறைக்கிறார்கள் என குற்றம் சாட்டுவதற்கு முன் திராவிட மற்றும் திராவிடர் இயக்கங்களின் தலைவர்கள் தன்னைத்தானே சுயவிசாரணை செய்துகொள்ளவேண்டுமென்றே தோன்றுகின்றன<BR/>:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-76529392461181976072007-09-20T06:09:00.000-07:002007-09-20T06:09:00.000-07:00hi pls add my googlepages in your blog frends list...hi pls add my googlepages in your blog frends list or favorites <BR/><BR/>its a page for tamil ebooks , free downloads.<BR/><BR/>thanks for addding<BR/><BR/>url - http://gkpstar.googlepages.com/கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.com