tag:blogger.com,1999:blog-26087005.post2472625298535722945..comments2023-10-24T01:24:12.955-07:00Comments on மிதக்கும் வெளி: பெரியாரின் போராட்ட முறைமைகளும், அரசு ஆதரவு மற்றும் வன்முறை குறித்த கேள்விகளும்மிதக்கும்வெளிhttp://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-26087005.post-65079785330859366612007-11-11T19:29:00.000-08:002007-11-11T19:29:00.000-08:00nice post informative and thought provokingnice post informative and thought provokingமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-4190927949581549302007-10-30T02:52:00.000-07:002007-10-30T02:52:00.000-07:00Suguna Diwakar avargalukku, View my profile engira...Suguna Diwakar avargalukku, View my profile engira idathil Marx matrum Jenny-in photo-vai vaithirukkeereergale ! Adharkku artham enna? Marxisathin abimani enra? Vungal blog-il idhu varai naan Marxistha patri naan padithadhillai.bhushanhttps://www.blogger.com/profile/03076494072820692476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-26922338255577315142007-10-16T04:55:00.000-07:002007-10-16T04:55:00.000-07:00தோழர் ராஜிக்கு,உங்களது வாசகத்தை குறித்துள்ளேன். த...தோழர் ராஜிக்கு,<BR/><BR/>உங்களது வாசகத்தை குறித்துள்ளேன். தாங்கள் வாசகத்தின் பொருள் இப்படி ஒரு தவறான அர்த்தத்தை தருவதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். மற்றபடி நீங்கள் நேரடியாக மிருக வெறி பற்றிக் குறிப்பிடவில்லை.<BR/>ஆணால், ஒர வர்க்கத்தின் மக்களை கொழுத்துவதால் ... என்கிற வாசகம் இந்த வன்முறையை வெளிப்படுத்தவில்லையா?ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-18954728614614606712007-10-14T05:11:00.000-07:002007-10-14T05:11:00.000-07:00தோழர் ஜமாலன்,என் பின்னுட்டத்தை வாசித்ததற்கு மிக்க ...தோழர் ஜமாலன்,<BR/>என் பின்னுட்டத்தை வாசித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் என்னுடைய எந்த கருத்து நீங்கள் குறிப்பிட்ட மிருகத்தன்மை வாய்ந்த செயல்களை நியாயப்படுத்துகிறது என்று புரியவில்லை. <BR/><BR/>- ராஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-49833651571661343622007-10-13T16:02:00.000-07:002007-10-13T16:02:00.000-07:00//ஒரு வர்கத்தின் மக்களை கொளுத்துவதால் வர்கம் அழிந்...//ஒரு வர்கத்தின் மக்களை கொளுத்துவதால் வர்கம் அழிந்துவிடாது என்ற உண்மையை அறிந்து வைத்திருந்தவர் பெரியார். //<BR/><BR/>கீழ்வெண்மனி பிரச்சனையில் பெரியார் மெளனம் சாதித்தது என்பதும் கண்டிக்காததும் பெரியரின் ஜனநாயகம் குறித்த பார்வை அடிப்படையிலானது. யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்தான் அதனையும் இப்படி நியாயப்படுத்தலாமா? அது பாசிச கொலைவெறி. இனச்சுத்தகரிப்பு. மனிதகுலத்திற்கு எதரானது. காஷ்மீரில் 36 பூஜாரிகளை தீவிரவாதிகள் கொன்றதையும் இப்படி நியாயப்படுத்தலாமா?ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-77293280421522395482007-10-13T06:49:00.000-07:002007-10-13T06:49:00.000-07:00Suguna,Very good article. It should be read with R...Suguna,<BR/>Very good article. It should be read with Rosavasanth's article to understand Periyar's position on non-violence.<BR/><BR/>In one of his last essays in 'layam' or 'meeRal', Pramil wrote about Periyar's adherence to non-violent methods to achieve his objectives. Pramil claimed that Periyar's meeting with J. Krishnamurthy had a stong influence. I don't have those magazines handy.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-84619890037736761102007-10-12T07:11:00.000-07:002007-10-12T07:11:00.000-07:00http://rozavasanth.blogspot.com/2006/06/blog-post_...http://rozavasanth.blogspot.com/2006/06/blog-post_04.htmlROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1295268478193130502007-10-11T05:40:00.000-07:002007-10-11T05:40:00.000-07:00ஒரு வர்கத்தின் மக்களை கொளுத்துவதால் வர்கம் அழிந்து...ஒரு வர்கத்தின் மக்களை கொளுத்துவதால் வர்கம் அழிந்துவிடாது என்ற உண்மையை அறிந்து வைத்திருந்தவர் பெரியார். <BR/> இதயப்பூர்வமாக ஒரு உன்னதமான சமுதாயத்தின் நிர்மாணத்தில் நாட்டம் இருக்குமானால் நாம் ஒருவர்க எதிர்ப்பில் வலுவில்லை என்பதை உணர்ந்திருப்போம். பார்ப்பனீயத்தை நாம் ஏசுவதாயினும் அது ஒவ்வொறு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் "நான் மேதாவி, என்னை வணங்குங்கள்" என்ற விகாரத்தின் வெளிப்பாடே என்பதை அறிந்து அந்த விதத்தில் நம் "போர்" முறை அமைந்திருக்கட்டும். "நீ தவறு, நான் சரி" என்ற போர் முரசுகள் "மனநோயாளிக்கு" நம்பூதிரி சிகிச்சை போலது. <BR/><BR/>- ராஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-1440955836650085572007-10-10T21:02:00.000-07:002007-10-10T21:02:00.000-07:00தோழர் சுகுணாவிற்கு,முக்கியமான உரையாடலை துவக்குவதற...தோழர் சுகுணாவிற்கு,<BR/><BR/>முக்கியமான உரையாடலை துவக்குவதற்கான ஒரு நீண்ட கட்டுரையை பதிவாக இட்டிருக்கிறீர்கள். நான் தங்கள் அளவிற்கு பெரியாரை வாசித்தவன் இல்லை. அதனால், தாங்கள் தோகுத்துளள பெரியார் பற்றிய பல செய்திகள் எனக்கு புதியவை. இருப்பினும் தங்களது கட்டுரை உருவாக்கிய சில கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.<BR/><BR/>//போராட்டம் என்னும் வார்த்தைக்குப் பதிலாக அவர் 'கிளர்ச்சி' என்னும் வார்த்தையையே பாவித்தார். 'புரட்சி' என்னும் சொல்லாடலின் இடத்தை 'தலைகீழாய்க் கவிழ்ப்பது' என்று நிரப்பினார். 'வன்முறை' என்னும் சொல்லாடலைப் 'பலாத்காரம்' என்னும் சொல்லாடலின் மூலம் பதிலீடு செய்தார்//<BR/><BR/>வன்முறை போன்ற சொற்களை சொல்லாடல் என்று கூறமுடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை. பெரியார் ஒரு புரட்சியாளர் இல்லை. அவர் ஒரு கலகக்காரர். இவ்வேறுபாடு உங்களுக்கு புரியும். அடிப்படை சமூகமாற்றம் குறித்து அவர் சிந்திக்கவில்லை. அதற்கான முன்நிபந்தனையாக சுயமரியாதை அதாவது சுயமாக சிந்திக்கக்கூடிய ஒரு தன்னிலை உருவாக்கத்தின் தேவையை அவர் உணர்ந்தார். அல்லது ஒரு புரட்சிகர தன்னிலை உருவாக வேண்டுமென்றால் முதலில் அத்தன்னிலை கட்டுண்டு கிடக்கும் ஆதிக்க கருத்தியல்களில் இருந்து விடுபடவேண்டும். அல்லது புரட்சி என்கிற கருத்தை தனக்கு அடிப்படை மாற்றம் தேவை என்பதை உணரக்கூடியதான அல்லது சிந்திக்கக்கூடியதான மனிதனாக மாற்ற வேண்டும். இதனை பெரியார் செய்தார். மத, புராண குறியீடுகளின் ஆதிக்கத்திலிருந்து தன்னிலையை விடுவிக்க முயன்றார். இதன் பொருள் பெரியார் புரட்சிகுறித்த சிந்தனையுடன் இதனை செய்தார் என்பதல்ல. பெரியாரின் செயல்பாடு தன்னறிவின்றி இதனை செய்தது. அல்லது பெரியார் அன்றைக்கான கருத்தாக்கச் சட்டமாக அதாவது அறிவுககுவியமாக இருந்த பார்ப்ணீயத்தை எதிர்த்து சிதைத்து பகுத்தறிவு என்கிற அறிவுக்குவியத்தை கட்டமைத்தார். <BR/><BR/>//'அழிவுவேலை' என்பதை நிறுவனங்கள், பிரதிகள் மற்றும் குறியீடுகளை அழித்தொழிப்பதாய் அர்த்தப்படுத்தினாரேயல்லாது தூலமான வன்முறையை அவர் ஆதரித்தாரில்லை. //<BR/><BR/>பெரியார் கருத்தியலையும் பெரியார் நடைமுறைகளையும் நாம் பிரித்துணர்வது அவசியம். பெரியாரின் கருத்தியல் முன்குறிப்பிட்ட அறிவுக் குவியத்துடன் தொடர்பு கொண்டது. அவரது போராட்ட மற்றும் இயக்க வடிவங்களோ ஆதிக்கத்தின் அதிகார விளையாட்டுடன் உறவு கொண்டது. கருத்தியல் புரட்சிகரமான உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும், போராட்ட இயக்க வடிவங்கள அதிகாரத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிகழ் பரப்பிற்குள் நிகழ்த்தப்படுகிறது. அதனால் வன்முறையை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் குறியீட்டுரீதியலான போராட்டத்தில் வன்முறை என்பது உடலியல் தளத்தில் நடைபெறுவதில்லை, உளவியல்தளத்தில் நடைபெறுகிறது. இதனை பெரியார் சரியாக செய்தார். பார்ப்னீயர்கள் உளவியலில் ஒரு இருப்பியல் பயத்தை கட்டமைத்தார்.<BR/><BR/>//' காந்தியைக் கொன்றது ஒரு துப்பாக்கி, அவ்வளவுதான்'//<BR/><BR/>இதில்துவங்கி கீழவென்மனிவரை பெரியாரின் கருத்துக்கள் மிகவும் சமரசத்தன்மை வாய்ந்தவை. இச்சமரசம் அவரது போர்த்தந்திர யுத்தியைச் சார்ந்த சமரசமா? அல்லது அவரது கொள்கை அளவிலான சமரசமா? என்பதற்கான ஆதரங்களை பெரியார் குறித்த ஆழ்ந்த வாசிப்பின் மூலமே அறியமுடியும்.<BR/><BR/>//அவரது முதலும் முடிவுமான அரசியல் செயற்பாடுகளின் அடிநீரோட்டமாக சாதியழிப்பும் பார்ப்பன எதிர்ப்புமே அமைந்திருந்தன என்பது வெளிப்படை//<BR/><BR/>உங்களின் இந்த பார்வை சரியானதுதான். இது அவரது கருத்தியல் சார்ந்த செயற்பாடு. ஆனால் அதிகாரத்துடன் ஆன அவரது வினை என்பது மிகவும் கெள்விக்குரியதாகவே உள்ளது.<BR/><BR/>காவல்துறைக்குறித்து பெரியாரின் கண்ணோட்டம் பொதுபுத்திசார்ந்தது அரசு, அரசாங்கம் மற்றும் அதிகாரம் குறித்த அவரது பார்வை சமரசம் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அரசையும் அரசாங்கத்தையும் அவர் ஒன்றாக குழப்பிக் கொண்டிருக்கிறார். பெரியார் ஒரு சீர்திருத்தவாதி என்பதையே இவை காட்டுகின்றன. அவர் அரசதிகாரத்தை இருக்கும் நிலையில் சீரமைக்க முனைந்தவராகவே காணப்படுகிறார். தங்களது குறிப்புகளில் இருந்து அந்த முடிவிற்கே வரவேண்டி உள்ளது. இக்கண்ணோட்டம் உத்தம்சிங் பாராளுமன்றத் தாக்குதல்வரை நீண்டுச் செல்கிறது. <BR/><BR/>//"இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், 'ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு 'அரசநாயகம்' ஏற்படவேண்டும் " //<BR/><BR/>இதுதான் பெரியாரியம் தர்க்கரீதியாக அடையும் இடம். இது பி.ஜே.பி-யின் தற்போதைய நிலைபாடு என்பது சொல்லாமலே புரியும். இத்தகைய முரண்பாடுகள் பெரியாரை மறுவாசிப்பு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. பெரியாரின் இத்தகைய முரண்பட்ட போக்குகளை அதன் காலத்துடன் இனைத்தே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவையெல்லாம் பெரியாரின் அளப்பறிய கருத்தியல் பணியை மறுப்பதாகிவிடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.<BR/><BR/>//கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது//<BR/><BR/>பெரியார் ரஷிய பயணத்திற்கு பிறகு 1924-ல் என்று நினைக்கிறேன் கம்யூணிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் கொண்டுவந்து கம்யூணிஸ்ட் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகவும் அதன்பின் அவர் காங்கிரஸில் சமசரமாகிக் காண்டதாகவும் அவரது வர்க்கப் பிண்ணனியைக் கொண்டு ஒரு ஆய்வைப்படித்த நினைவிருக்கிறது. எதில் படித்தேன் என்று நினைவில் இல்லை. அப்படிப்பட்ட பெரியார் மேற்கண்ட வாசகத்தை சொல்லியிருப்பதன் பிண்ணனி புரியவில்லை. தமிழ் ஓட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர் காலத்தில் பெரும்பாலும் பார்ப்பனத் தலைமையைக் கொண்டிருந்ததால் இருக்கலாம்.<BR/><BR/>//காந்தியின் போராட்ட வடிவங்கள் உடலை வருத்தும் முறைமைகளைச் சார்ந்தவை//<BR/><BR/>காந்தியின் போராட்டமுறை என்பது உடலியல் தளத்திலானது என்றாலும் அவரது குறி எதிரியின் உளவியல் தளத்தை குறிவைத்தே செய்யப்பட்டது. காந்தி ஆதிக்கத்துடன் வேறுவிதமான அதிகார விளையாட்டை நிகழ்த்தியவர். அவரது போராட்டம் என்பது கணவனுக்கு எதிரான மணைவியின் போராட்டத் தன்மையைக் கொண்டது. அதாவது உள்ளிருப்பு வேலைநிறுத்தம், உண்ணாவிரதம், ஆணைகள் மீறுதல் போன்ற செயல்கள் மூலம் கணவனின் உளவியல்தளத்தில் ஒரு அழுத்தத்தை உருவாக்கி போராட்டத்தில் வெற்றியடைதல். காந்தியின் இந்தவகை போராட்டம் பெண்தன்மை என்று சொல்லமாட்டேன் மணைவிதன்மை கொண்ட போராட்ட வடிவமாகும். வெள்ளையனின் ஜனநாயக உணர்வு காந்தியின் பேராட்டத்தை மனரீதியாக எதிர்கொள்ள சங்கடப்பட்டது. ஆணால், இன்றைய இந்திய அதிகாரவர்க்கம் காந்தியின் போராட்ட வடிவங்களை எந்த சங்கடமும் இல்லாமல் சாகடித்தவிடும். காந்தியை பட்டினிப்போட்டு கொன்றுவிடும்.<BR/><BR/>தாங்கள் இதில் குறிப்பிடும் எதிர்அரசியல் எனபதை தூலமாக விளக்கினால் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். புத்தர், கம்யூனிஸம், அம்பேத்கர். பெரியார் ஆகிய இயக்க்ங்களை எதிர் அரசியல் என்கிறீர்கள், அதாவது எதிர்ப்பு அரசியல் என்கிற அர்த்தத்திலா? அல்லது மாற்று அசியல் என்கிற அர்த்தத்திலா?<BR/><BR/>//கம்யூனிச சமூகத்தில் அரசு உலர்ந்து உதிரும் என்றது மாக்சியம் ஆனால் பல் கம்யூனிஸ்டு கட்சிகளின் அரசுகளோ புரட்சிக்குப் பின் இறுகி நிறுவனமயமாகின //<BR/><BR/>இதில் சில முரண்பாடுகள் உண்டு. கம்யூனிஸ சமூகம் என்கிற ஒன்று இதுவரையில் வரலாற்றில் இல்லை. சோஷலிஸ மற்றும் மக்கள் ஜனநாயக அரசுகள்தான் உள்ளன. இவை இறுகுவதற்கும் நிறுவனமயமாவதற்கும் பல காரணங்கள் உள்ளன. ஆணால், அக்காரணங்கள் மார்க்ஸ் மற்றும் கம்யூனிஸ சித்தாந்தங்களில் இருந்து வரவில்லை. ஒருவேளை கம்யூனிஸம் என்பதே ஒரு உடோப்பியா அதாவது கற்பணார்த்தமான சமூகம் என்று கூறலாம். அது வேறுதளத்திலான விவாதம். அரசு உலர்ந்து உதிரும் என்கிற லெனினியக் கோட்பாடு அதன் சாத்தியமாவதற்கான காலகட்டத்தை அல்லது அதற்கான நிபந்தனையை இன்னும் அடையவில்லை. <BR/><BR/>அம்பேத்கரால் வெற்றிகரமாக பாராளுமன்ற அரசியல்வாதியாக முடியாமைக்கு காரணம் இந்திய பாராளுமன்றம் என்பது முதலாளிய ஜனநாயக உணர்வை அடிப்படையாகக் கொண்டதல்ல அது பார்ப்பனீய வர்ணதர்மத்தை உளளார்ந்த நிலையில் கொணட ஒரு அமைப்பாகும். <BR/><BR/>//எப்படி இருந்த போதிலும், அரசு ஆதரவு, எப்படி ஒரு அரசை கையாளுவது அல்லது பயன்படுத்துவது (How to handle the state?) என்ற கேள்விகள் இன்னமும் தொடர்கின்றன//<BR/><BR/>மேற்கண்ட கேள்விகள் எந்தவகையில் எதிர் அரசியலுடன் தொடர்பு கொண்டது என்பதை விரிவான அலசலுக்கு உட்படுத்த வேண்டும். அரசையும், அரசு ஆதரவையும் கையாளுவது அல்லது பயன்படுத்துவது நெர்மறையாகவா? அல்லது எதிர்மறையாகவா? நேர்மறையாக என்றால் அது கம்யூணிஸ்ட் அல்லாத பாராளுமன்றக் கட்சிகளாகவும் எதிர்மறையாக என்றால் ஓட்டுவாங்கி வலது இடது கம்யூனிஸ்ட் கட்சிகளாகவும் மாற வேண்டும். இரண்டும் ஒன்றுதான். புரட்சி என்பது மேற்கண்ட கேள்வியை தூக்கி எறிவதுதான். <BR/><BR/>// 'எல்லா அதிகாரங்களும் வன்முறையுடனேயே தோன்றின, அவை வன்முறையாலேயே நிலைபெற்றன, அவை வன்முறையாலேயே அழிக்கப்படும்' என்கிற புரட்சிகரச் சூத்திரத்தை அப்படியே இந்தியச் சூழலுக்குப் பொருத்திவிட முடியாது. ஏனெனில் இந்திய ஆதிக்கக் கருத்தியலாகிய பார்ப்பனியம் தூலமான வன்முறைகளை விடவும் கருத்தியல் சார்ந்த வன்முறைகளையே பெரிதும் நம்பியிருக்கிறது.//<BR/><BR/>இறுதியாக, இக்கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். இதுதான் இந்திய புரட்சிக்கான குறிஇலக்காக அம்பேதகர் முன்வைத்த பார்வை. முதலளிகளுடன் பார்பனியமும் அழித்தொழக்கப்படாமல் இந்தியப் புரட்சி சாத்தியமில்லை. அம்பேத்கர் யுத்ததந்திரரீதியாக இதனைப் பார்த்தார். போர்த்தந்திரரீதியாக தலித் பிரச்சனைகளை முன்வைத்தார். பெரியாரிடம் யுத்ததந்திரம் இல்லை அதனால் அவரது பார்ப்பனீய எதிர்ப்பு என்கிற போர்த்தந்திரம் இலக்கற்ற ஒன்றாக மாறியது என்பதே வரலாற்றின் சோகம். <BR/><BR/>பின்னோட்டம் உரையாடலுக்கானது என்பதால் நீண்டுவிட்டது. <BR/><BR/>அன்புடன்<BR/>ஜமாலன்ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-83964138315668863252007-10-10T05:30:00.000-07:002007-10-10T05:30:00.000-07:00then what is the alternative to parliamentary demo...then what is the alternative to parliamentary democracy ? oligraphy, millitary dictatorship,<BR/>communist regimes ?<BR/><BR/>it takes centuries for a proper evolution of basic and full democracy. Switzerland evolved into a most decentralised democry from being a feudal oligarchy thru the centuries. but first for that people's ethics and participation is a must.<BR/><BR/>In this blooging world i rarely find sensible and balanced posts about anti-brahminsim like yours.<BR/>most of the posts are personal attacks and induce hatred and revulsion and solve nothing.<BR/><BR/>Can you compare the present state of Andhra or Kerala which did not have any Periyar or DK movments ?<BR/>industrialisation (and abolition of feudalism), literacy, and media, combined with reservation has transformed these states like in TN, without any overt 'hatred' for 'paarpanarhal' as it seems in TN..(as opposed to anti-brahminsim)<BR/><BR/>and the rise of BJP in TN, esp in Coimbatore and Kanyakumari regions ? <BR/><BR/>Periyar statue in Srirangam was damaged by non-brahmin OBCs of Hindu munnani of Coimbatore. unimaginable a few decades ago ?<BR/>how did it happen ?K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-67026567762341318992007-10-10T05:03:00.000-07:002007-10-10T05:03:00.000-07:00தோழர் பைத்தியக்காரன், (நீங்கள் பெயர் வைத்திருக்கிற...தோழர் பைத்தியக்காரன், (நீங்கள் பெயர் வைத்திருக்கிறீர்கள், நாங்கள் வைக்கவில்லை, அவ்வளவுதான் ((- )<BR/><BR/>யோசிப்பதற்கான விசயமும் நேரமும்கூட/ தொடர்ந்து உரையாடுவோம்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-50222737048167884442007-10-09T22:57:00.000-07:002007-10-09T22:57:00.000-07:00நன்றாக இருக்கிறது.இன்னும் நிறைய எழுதுங்கள்.நன்றாக இருக்கிறது.இன்னும் நிறைய எழுதுங்கள்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-57951260478736806122007-10-09T05:12:00.000-07:002007-10-09T05:12:00.000-07:00தக்க சமயத்தில் வந்திருக்கும் உரையாடலுக்கான பதிவு இ...தக்க சமயத்தில் வந்திருக்கும் உரையாடலுக்கான பதிவு இது.<BR/> <BR/>ஆனால், சில கேள்விகள் எழுகின்றன. <BR/>//இந்திய ஆளும் வர்க்க வன்முறை கட்புலனாகா வன்முறை (invisible violence) வன்முறையைக் கைக்கொண்டு பார்ப்பனியத்தை அழித்தொழித்த முன்மாதிரிகளும் நமக்கில்லை //<BR/><BR/>இதை நான் ஏற்கவில்லை. பார்ப்பனீயம் தோன்றிய விநாடியே அதற்கான எதிர்வினையும் தோன்றிவிட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு ஆதிக்க சாதியின் தோளை தொற்றிக் கொண்டுத்தான் பார்ப்பனீயம் பயணம் செய்திருக்கிறது. செய்தும் வருகிறது. எனவே அந்தந்த காலகட்டத்து சூழலையும், பார்ப்பனீயர்கள் அப்போது வகித்த பங்கையும் கருத்தில் கொண்டே அந்தந்த காலகட்டத்து 'போர்' முறைகள் அமைந்தன.<BR/><BR/>பெரியாரின் காலகட்டத்தில் சட்டமும், நீதியும், அரசும் பார்ப்பனீயமாக இருந்தன. இன்றும் உச்சநீதி மன்றம் உச்சிக் குடுமி மன்றமாக இருப்பதை பார்க்கும்போது பெரியாரின் காலகட்டத்தை நினைவில் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது.<BR/><BR/>அதனால்தான் அந்த மூன்று இடங்களிலும் கொட்டமடித்த பார்ப்பனீயத்தை அப்புறப்படுத்த நடவடிக்கைகளில் இறங்கினார். அதில் உணர்ச்சிகளுக்கு அவர் இடம் தரவில்லை. தந்திருந்தால் இப்போது 'தமிழ்மணம்' இருந்திருக்காது. 'அவாள்மணம்'தான் இருந்திருக்கும். கும்மியடிக்க பஞ்சகச்ச மாமாவும், மடிசார் மாமியும்தான் வந்திருப்பார்கள். லக்கிலுக்கின் டவுசர் கிழியாமலேயே போயிருக்கும். நிதானத்தை கடைப்பிடித்ததுதான் அவரது பலம்.<BR/><BR/>//ஜெயிலை இடித்து சிறை மீட்கப் போகிறீர்களா? அதெல்லாம் மகாமகா முட்டாள் தனம்.//<BR/><BR/>//தடை உத்தரவைச் சர்வ சாதாரணமாக மக்களுக்கு பயமின்றி மீறுவதென்பது வெறும்வீரர் பட்டத்தையோ அதன்மூலம் ஓட்டு பெறுவதற்கு அல்லது பதலி பெறுபவர்களுக்குச் சுலபமாயிருக்கலாம். அதுவே அவர்களுக்குக் கொள்கையாகவும் பிழைப்பாகவுமிருக்கலாம். ஆனால் நமக்கிருக்கும் பொறுப்பும், லட்சியமும் மிகமிக இன்றியமையாததாகும்//<BR/><BR/>என்ற பெரியாரின் இந்த கருத்துக்களை அந்தவகையில்தான் புரிந்து கொள்கிறேன். <BR/><BR/>இப்போதைய காலகட்டத்தில் பெரியாரின் அணுகுமுறையை மட்டுமே ஆயுதமாக கொள்ள முடியாது. உடன் வேறொரு 'போர்'முறை அவசியம். அது எந்தமாதிரி என்பதற்கான உரையாடலாக இந்தப்பதிவு அமையும் என நம்புகிறேன்.கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26087005.post-28151256420982366192007-10-09T03:48:00.000-07:002007-10-09T03:48:00.000-07:00உ.த. ஸ்டைலில் கொஞ்சம் பெரிய பதிவாக இருப்பதால் நேரம...உ.த. ஸ்டைலில் கொஞ்சம் பெரிய பதிவாக இருப்பதால் நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு பின்னூட்டம் போடுகிறேன்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com